இடுகைகள்

new book release: wrapper

படம்

சாதியும் வர்க்கமும்

விவாதத்திற்காக…       நீண்ட காலத்திற்குப் பிறகு சாதியின் சமுதாய / பொருளாதார / அரசியல் பாத்திரத்தை அங்கீகரித்திருப்பதன் அடையாளமாக ‘’ சாதியும் வர்க்கமும் ’’ என்ற புத்தகம் தமிழ்நாடு புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தினரால் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் ஏற்கனவே சென்னையில் 15, 16.8.1987 தேதிகளில் அனைத்திந்தியப் புரட்சிப்பண்பாட்டு இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ‘’சாதியும் வர்க்கமும்’’ பற்றிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.      இப்புத்தகத்திற்காக பேராசிரியர் அ. மார்க்ஸ் முன்னுரை வழங்கியிருக்கிறார். அம்முன்னுரை பற்றி விமர்சிக்கும் போக்கில் வரலாற்றைப்பற்றி சில கேள்விகளை எழுப்புகிறார் திரு. கருணாமனோகரன்.      பேராசிரியர் தன் முன்னுரையில் ‘’ இந்தியாவில் பிறக்கிற ஒருவன் மத முத்திரை தவிர சாதி முத்திரையையும் தரித்துக்கொண்டு தான் இம்மண்ணில் கால்பதிக்கவேண்டியிருக்கிறது ‘’ என்று குறிப்பிடுகிறார். மேலும் ‘’ இந்தியப்புரட்சிக்கு ஒர் சவாலாய் இன்றளவும் சாதி நிலவி வருகின்றது ‘’ எனக்குறிப்பிடுகிறார். பொதுவுடமை இயக்கத்தினர் தங்களின் யுத்த தந்திரங்களில் , போர்த்தந்திர

கருணாமனோகரனிடன் நிகழ் இதழுக்காக நடத்திய நேர்காணல்.

      எங்கள் குடும்பம் , பார்ப்பனிய சனாதனத்தை வரம்புமீறிக் காப்பாற்றி வந்த குடும்பம். எங்கள் அப்பா அதில் வெறி பிடித்தவர். ஸ்ரீரங்கத்தில் நான் பிறந்தேன். கோவையில் பத்து ஆண்டுகள் இருந்தோம். ஒரு கட்டத்தில் அகோபில மட ஜீயர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தையாரிடம் உங்களுக்கிருக்கிற ஞானத்திற்கு கோவில் பணி செய்யலாமே என்றார். உடனே யாருக்கும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். எட்டு பேர் கொண்ட எங்கள் குடும்பம் அதன்பிறகு உருக்குலைந்து சிதைந்துபோய்விட்டது. ஸ்ரீரங்கத்திற்கு திரும்பினோம். எனக்கு வயது பத்து. திடீரென வாழ்வின் கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டோம். ஒரு ஆண்டு அங்குமிங்குமாக அலைந்தேன். பிறகு திருவானைக்காவல் சத்திரத்தில் சேர்ந்தேன். எங்கள் அப்பா ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தார். வீட்டோடு அவருக்கு உறவில்லை. அம்மாவுக்கு ‘மகோதரம்’ என்ற வியாதி. இப்படி ஐந்து, ஆறு ஆண்டுகள் சத்திரத்தில் கழிந்தன. சத்திரத்தில் எழுபதிலிருந்து எண்பது விழுக்காடு பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். அக்கிரகாரச் சூழ்நிலையில் இருந்து விடுபட்டவனாக நான் இவர்களோடு இருந்தேன். இது எனக்கு நல்ல வாய்ப்ப

new book for muruganantham

படம்

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது ஆளுமைகளின்          கடிதங்கள் இரா.முருகானந்தத்திற்கு எழுதியவை காப்புரிமை: இரா.முருகானந்தம்               All Rights Reserved. வலைப்பூவடிவ பதிப்பு உரிமை : ஆரா பிரஸ் நூல்தொகுப்பு: ஷான் ஜே, ஜோஸஃபின் ஆசிரியரின் அனுமதி பெற்று பிரசுரிக்கப்படுகிறது. வாசிக்கலாம் ஆனால் வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது. சுந்தர ராமசாமி                                            18.09.2001 அன்புள்ள திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு,      வணக்கம். உங்கள் 15.08.2001 கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உடல்நலம் சற்றுக்குறைவாக இருந்ததால் பதிலெழுதப் பிந்தி விட்டது. மன்னியுங்கள்.      இன்னும் ஐந்தாறு மாதங்கள் நான் இங்குதான் இருப்பேன். வசதி இருக்கும்போது நீங்கள் வரலாம். நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வருவதால் வருவதற்கு முன் தொலைபேசித்தொடர்பு கொண்டு என் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.(என் தொலைபேசி எண்: 223159) என்னை சந்திக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களை அதிகம் அசௌகரியப்படுத்திக்கொள்ளக்கூடாது. இந்தப்பக்கம் வர நேர்ந்தால் அவசியம் இங்க