இடுகைகள்

36 நாட்களில்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல் (தமிழில்:லாய்ட்டர் லூன்)

படம்
மறுகட்டமைப்பு படமானது ஜெர்மன் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது தங்களுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.        உண்மைதான். ப்ரான்சில் அப்படம் விருதுபெறவும் அதுதான் காரணம். இங்கிலாந்தில் பிபிசியில் அப்படம் திரையிடப்பட்டது. கிரீஸ் எனும் சிறிய நாட்டில் இப்போது நான் முக்கியமான மனிதராக மாறி இருக்கிறேன் உலகளவிலான அங்கீகாரம் பெற்ற ஒருவரை நீங்கள் எந்தக்காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கமுடியாது. கிரீசில் கலாசார, பண்பாட்டு முயற்சிகளுக்கு இருக்கும் வாய்ப்பு, இடம் என்று இதனைக் கூறலாமா?        எந்தப்பணியிலும் நாங்கள் இதனை மனதில் கொண்டுதான் வேலை செய்கிறோம். எ.கா: சின்குரோனோஸ் கினிமாடோகிராபோஸ் எனும் சினிமா தொடர்பான பத்திரிகையில் நான் தனிப்பட்டரீதியாக அதில் பங்காற்றவில்லை. அது என்னை அடையாளப்படுத்தும்போது மிக எளிதாக இடதுசாரி பதிப்பகமாக அடையாளப்படுத்தப்படும் அபாயம் உள்ளது என்பதை நான் மறுக்கமுடியாது. உங்களுடைய திரைப்பட பாணி மிகவும் நீள்வடிவம் போலானது. திரையில் இருப்பதை புரிந்துகொள்ள பார்வையாளர்களும் பங்களிக்கவேண்டும் என்ற முறையில்தான் அது உள்ளது.

முகமூடிகளின் விலக்கம்: 36 நாட்களில்(தியோ ஏஞ்சலோ பவுலோஸ்)

படம்
எப்படி உங்களால் படத்தினைத் தயாரிக்க முடிகிறது? கிரீக் திரைப்படப் பள்ளியில் என்னுடைய நண்பர்கள் சிலர் ஆசிரியர்களாக உள்ளனர். அங்கே கல்வி கற்ற ஒருவரின் கணவர் பெரும் பணக்காரரும் மறுகட்டமைப்பு படத்தின் மீது பெரும் மரியாதை கொண்டவரும் ஆவார். அவர் என்னுடைய படம் ஒன்றினைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தார். நான் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன் அவ்வளவுதான். நாங்களிருவரும் நண்பர்களும், அரசியல்ரீதியிலான ஒத்த கருத்துகளைக் கொண்டவர்களும் கூட. நாங்கள் படத்தினை உருவாக்கி முடிக்கும்போது அவருடைய அரசியல் விழிப்புணர்வு முற்றிலும் மேம்பட்டு வேறு ஒன்றாகயிருந்தது. ‘‘ உங்களுடைய படத்தினால் நான் என்னுடைய பணத்தினை இழந்தாலும், இந்தப் படத்தின் மூலமாக  முன்னெப்போதும் அறியாத பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவங்கள் பெருமதிப்பானவை ஆகும்.’’ என்று கூறினார் அவர். ‘‘உங்களுடைய படத்தினால் ஒரு பென்னி கூட பெறவில்லை’’ என்று கூறும் வகையான தயாரிப்பாளர் அல்ல அவர். மறுகட்டமைப்பு படத்திற்கு பணியாற்றிய குழுவே இப்படத்திற்கும் இணைந்து பணிபுரிந்தோம். அதிகளவில் பணம் கிடைத்ததால் குழு சிறிது பெரிதாக மாறியது அவ்வளவுதான்.

அதிகாரத்தின் முகமூடி விலக்கம்: 36 நாட்களில் திரைப்படம்

படம்
அதிகாரத்தின் முகமூடி விலக்கம்: 36 நாட்களில் திரைப்படம் உல்ரிச் கிரிகோர் -1973 இப்படத்திற்கான வரலாற்றுப் பின்புலம் என்ன?        இது கூட அல்லது குறைச்சலாக சில உண்மையான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. துப்பாக்கியை பயன்படுத்தி குற்றவாளி ஒருவன் அவனைச் சிறையில் சந்திக்கவரும் வலதுசாரி உறுப்பினர் மூலம் பிணை பெறுகிறான். பிறகு இருவருக்குமான நீண்ட கால உறவு தெரிய வந்தாலும் அவர்களது உறவின் தன்மை தெளிவானதாக இல்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கும், குற்றவாளிக்கும்  ஏதேனும் ஒப்பந்தம் இருக்கிறதா? யாருக்கும் தெரியாது. குற்றவாளி தன் நண்பனுக்கு எழுதும் கடிதத்தில் ‘‘நான் அவனைக் கொல்லப்போகிறேன், பிறகு என்னையும் நானே அழித்துக்கொள்வேன். இனி எப்போதும் அவர்களை என்னை கைது செய்வதற்கான எந்தக்கோப்புகளும் கிடைத்து அவை நிரூபிக்கப்படப் போவதில்லை’’ என்று குறிப்பிடுகிறான்.        ஆனால் பிணை கொடுத்தவர் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு மனிதர் என்பதால் இந்த வழக்கு ஒரு சிக்கலான கட்டத்தை எட்டுகிறது. பிணை வழங்கியவர் வலதுசாரி குழுக்களில் ஒருவர் என்பதால் அவ்வட்டாரங்களில் வேதனையான வருத்தங்கள் எழுகின்றன.

நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா இறுதிப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
படங்களைத் தயாரிக்கும் முன்னணி பெரும் நிறுவனங்கள் திரையரங்கு குழுமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தாங்கள் தயாரிக்கும் படங்களை மட்டும் திரையிடக்கூறுகிறார்கள் என்கிறீர்களா?        திரையரங்குகளில் எனது படம் திரையிடப்பட நான் ஒரு விநியோகஸ்தரைக் கண்டுபிடித்து அவரிடம் படத்தை ஒப்படைக்கவேண்டும். ஆனால் எனது படம் அவர்களது தயாரிப்பான படங்களோடு போட்டியிடுவதாக அவர்கள் நினைத்தால் அதனை அலமாரியில் வைத்து விட்டு மறந்துவிடுவார்கள். மொத்தமாக அனைத்து படங்களுமாக சேர்த்து கிரீசில் எத்தனை படங்கள் உருவாக்கப்படுகின்றன?        ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுபவை மொத்தம் 120 படங்கள் தோராயமாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் ஏதேன்ஸில் வெளியிடப்படாது. அவை முறையான முதல் காட்சி என்பதைத் தவிர்த்து பொதுவான வெளியிடலாக வெளியிடப்படும். கிரீஸ் நாட்டில் சில விதிகள் உள்ளன. மக்கள் படங்களின் கீழ் வரும் சப்டைட்டில்களை வாசிக்க மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கிரீசில் குடும்பத்தோடு படம் பார்க்கச்செல்பவர்கள் அதிகம் என்பதால் எந்தப்படம் வயது வந்தவர்களுக்கானது என்று சா

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்: நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா

படம்
எப்படி குறைந்த அளவிலான தொகையினைக் கொண்டு திரைப்படத்தினை உருவாக்குகிறீர்கள்?        நாங்கள் 9,000 மீட்டர் படம் எடுக்கத் தேவையான பொருட்களோடு உதவியாளர் இல்லாமல் சமாளித்துக்கொள்ளக்கூடிய ஒலிப்பதிவாளர் எங்களிடம் உள்ளார். அவர் ஒருமுறை தன்னுடைய அமைப்புகளை சரியாக ஒழுங்கமைத்துவிட்டால் மைக்ரோபோன், மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகளை யாரும் தனியாக மேற்பார்வை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தட்பவெப்பநிலை குறித்து கவலைப்படாமல் 25 நாட்களில் காட்சிகளை படமாக்குவோம் என்றாலும் மழை பெய்யும் காலத்தில் வேறு வழியே இல்லை. படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு கிராமத்தார்களின் வீட்டில் தங்குவோம். அங்கு உணவு, விளக்குகள் என எவையும் இருக்காது என்பதால் எங்களுக்கு அச்சூழல் பெரும் போராட்டமாகவே இருக்கும். கையில் பிடித்துக்கொள்ளக்கூடிய விளக்கு, 500 கி.வாட் மின்மாற்றி சாதனம், இரண்டு மின்கலன்கள், சிறிய எடுத்துச் செல்லும் படியான மின்சக்தி அளிப்பான்  ஆகியவற்றை இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது வாடகைக்கு எடுத்துக்கொள்வோம். மேலும் இப்பொருட்களை படப்பிடிப்புத்தளத்திற்கு  கொண்டு செல்லவும், சில சமயங்களில் நாங்கள் உறங்கப்

நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
குடியுரிமை தரப்படும் முன் எப்படி அயல்நாடுகளில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?        அது எளிதானதாக இல்லைதான். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவர்கள் அங்கே வாழ்ந்தார்கள். கிரீக் மக்கள் பெரும் திரளாக அயல்நாடு சென்று வாழவேண்டிய தேவை இருந்தது. நூற்றாண்டு பிறந்த காலத்தில் பெரும்பாலோர் அமெரிக்கா சென்று குடியேறினார். அமெரிக்காவில் ஒன்று அல்லது ஒன்றரை கோடி கிரீக் மக்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். ஜெர்மனியில் 3 லட்சம் மக்கள் முன்னமே குடியேறி வாழ்ந்து வருகின்றனர் . அவர்கள் அனைத்து இடங்களுக்கும் பரவி வாழ்ந்து உழைத்து ஈட்டும் பணத்தை தமது தாய்நாட்டிற்கு அளித்து பொருளாதார பங்களிப்பையும் ஆற்றுகிறார்கள். அமெரிக்கர்கள் இன்று கிரீஸ் நாட்டிற்கு வந்து அதனை தொழில்மயமாக்குவதாக கூறுகிறார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து செய்ய முனைவார்கள். கிரீஸ் இன்று பல மாநிலங்களைக் கொண்டதாக மாறியுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்னே இரு அமெரிக்கர்கள் 16 வயதான கிரீக் பெண்ணை வன்புணர்ச்சி செய்துவிட்டனர். அவ்வழக்கு விசாரணையில் அவர்கள் அச்சமயத்தில் கிரீஸ் நாட்டில் இல்லை, ஆனால் அமெ

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்: நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா

படம்
நிலத்தை கைவிட்டுச் செல்பவர்களுக்கான இரங்கற்பா: மறுகட்டமைப்பு ப்ளோரியன் ஹோப் – 1971 படம் பற்றி தங்களது கருத்துக்கள் மற்றும் முன்னுரையோடு தொடங்குவோம்.       கிரீக் நாளிதழ்களில் பெண்கள் தம் கணவர்களை கொலை செய்வது குறித்த செய்திகளை நிறையவே நான் கவனித்துவந்திருக்கிறேன் என்றாலும் குறிப்பிட்ட ஒரு வழக்கு என்னை ஈர்த்து சிந்திக்கவைத்தது. கிரீக் நாட்டின் ஏழ்மையான மிகவும் பிற்படுத்தப்பட்ட வளர்ச்சியடையாத பகுதியாக எபிரஸில் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்தன.  அக்கிராமத்திற்கு தொடர்ச்சியாக சென்று அண்மையில் நடந்த குற்றம் ஒன்றினை பத்திரிகையாளரின் புலனாய்வு பார்வையில் பதிவு செய்ய முடிவெடுத்தேன். நான் குற்றம் நடந்த இடத்தில் வசித்தவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களது குழந்தைகள், விசாரணைக்கு முன்னதாக பல விவரங்களைத் தெரிவித்த பிரதிவாதியின் வழக்குரைஞர் ஆகியோரிடம் உரையாடி பல்வேறு விவரங்களைச் சேகரித்தேன். இவைதான் எனது கதைக்கு அடிப்படையாக அமைந்தது. எபிரியன் கிராமத்தின் வாழ்க்கையை அக்குற்றச்சம்பவமான கொலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதற்கு மன்னிப்ப

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்(உலர்ந்த ஆப்பிள் நிறைவுப்பகுதி)

படம்
படத்தில் வரும் பெருமழைக்கான இடம் என்ன? பெருவெள்ளமாக வரும் படத்தில் மூழ்கடிப்பது போலான தன்மையை ஏற்படுத்துகிறது ? விழாவினைக் காப்பாற்றவே அம்மழை பெய்கிறது. மேலும் இதனை நீங்கள் உங்கள் விருப்பம் போல பலவகைகளிலும் புரிந்துகொள்ளமுடியும்: உவமை, உருவகம் கடலில் தனிமையில் இருக்கும் முதிய மனிதரைக் காட்டுகிற நாடகத்தனமான காட்சி என்றுகூட கொள்ளலாம். இதன் இயக்குநரான அலெக்ஸாண்டரை நாம் மறந்துவிடக்கூடாது. காட்சிகளை அமைப்பது, அரங்கமைப்பு உருவாக்குவது, சூழலை செம்மைப்படுத்துவது, எப்போது மழை, இரவுக்காட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்வது அவர்தான். இங்கே மற்றொரு காட்சியினை முன்னர் விவாதித்தோம். இயக்குநரும் அவரது காதலியும் சந்திக்கும் காட்சி குறித்து பேசுகிறேன்.        இங்கே நாம் முதல்நிலையான புனைவிற்குள் செல்கிறோம். படம் இயக்குநரின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாக பேசுகிறது. இது சில குறிப்பிட்ட மணி நேரங்களைக் கொண்டது. இயக்குநர் தன் வீட்டிற்கும் படப்பிடிப்பு நடக்கும் அரங்கிற்கும் செல்கிறார். அவர் அவ்விடங்களுக்கு நடந்து செல்லும்போது அவரது மனநிலையின் இருப்பு இசை

பன் கீ ஜாம் – மக்களோடு ஒரு உளறாடல்(வர்ஷன் 2.0)

படம்
                                                          பன் கீ ஜாம் – மக்களோடு ஒரு உளறாடல் ·          வின்சென்ட் காபோ எனதருமை நாட்டு வைக்கோலே மன்னிக்கவும் மக்களே! வணக்கம். இன்று பன்னின் குரலை ஒலிக்கச் செய்ய , எனது வயிறு இடம் கொடுக்கவில்லை , கனக்கிறது , வயிறு சுண்டல் தின்ற பொருமலில் ஆழ்ந்து கிடக்கிறது. கடந்த மாதம் நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது , சுஷ்மாவோடு இட்ட சண்டை, வசுந்தரா ராஜேவின் பேராசை, அயல்நாடு தப்பிச்சென்றும் லாட்ஜ் சரியாக அமையாதது, செல்ஃபி புகைப்படத்தில் வெளிச்சம் சரியாக ஒத்துழைக்காதது , காரக்குழம்பு ஏற்படுத்திய வயிற்றுப் பொருமலின்  பெருந்துயரம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. சில நாட்கள் முன்பாகக் கூட பீஹார் மாநிலத்தில் திடீரென்று பேய்க் காற்று வீசியது , அதில் பல பேர்கள் உயிரிழந்தார்கள் , கணிசமான லாபம் அரசுக்கு ஏற்பட்டது. நேற்று , சனிக்கிழமையன்று பயங்கரமான நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது. நான் பதவி ஏற்றதிலிருந்து ஏதோ இயற்கைப் பேரழிவுகள் சங்கிலித் தொடர் போல நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம் ….. இந்தியாவி