இடுகைகள்

தடைபடாத காலம்- முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
14 தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் ஜிடியன் பாச்மன் – 1997 ஆங்கில மூலம்: டான் ஃபைனாரு ஆண்டிற்கு ஒருமுறை நாம் சந்திக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் நாம் உரையாடலை பதிவு செய்து வருகிறோம். நவீன காலத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகளாக எதனை கூறுவீர்கள்? தக்காளிச்செடி வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு, தேனை அறுவடை செய்வது உள்ளிட்டவற்றை செய்யத்தெரியாத ஒருவரினால் படங்களை உருவாக்க முடியாது என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தீர்கள். இன்று உங்களைப் பார்ப்பதை பத்து ஆண்டுகளுக்கு முன் மிகவும் நம்பிக்கை கொண்டவராக படப்பிடிப்பு அரங்கில் வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்.  தனிப்பட்ட மனிதராக, இந்த 20 ஆண்டுகளில் என்ன மாதிரியான வளர்ச்சியை பெற்றிருக்கிறோம் என்று கூற முடியுமா?       மிகவும் உறுதியான கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கு சரியான நேரம் நீங்கள் படத்தினை முழுமையாக நிறைவு செய்து முடித்திருக்கிற காலம்தான். நீங்கள் உங்களது கருத்துகளை சரியான வடிவத்தில் உருப்பெறச்செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும்போது படப்பிடிப்பின் ஒரு பகுதியில் அதைப்பற்ற

அறிவின் பிரகாசம்: தயா - நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
தயா எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழில்: உதயசங்கர் - சசிதரன் பாரதி புத்தகாலயம் ப.64 விலை ரூ.25 தயா எனும் இந்த நூல் சிறுவர் குறுநாவல் வகைப்பட்டது. பல்வேறு திருப்பங்களுடன் அனைவரும் வாசிக்கும் வண்ணம் இருப்பதே இந்த நூலின் சிறப்பு என்று கூறலாம். கதை : கையில் இருக்கும் பொருளின் மதிப்பு இழந்துவிடும் போதுதான் தெரியும் என்பது இதன் மையச்சரடு. பெரும் செல்வந்தர் ஒருவர் பலருக்கு தான தர்மம் செய்து வாழ்ந்து வருகிறார் என்றாலும் தனக்கு பின்னால் தன் பெயர் சொல்லும் விதம் பிள்ளை என்று நினைக்க ஒரு பிள்ளை பிறக்கிறது. அந்த சந்தோஷத்தோடு மனைவி இறந்த துக்கத்தையும் எதிர்கொண்டு சமாளித்து அவனை நல்லமுறையில் வளர்க்க முயற்சிக்கிறார். ஆனால் அவனுக்கு(மன்சூர்) என்ன முயற்சி செய்தாலும் கல்வியில் கவனம் செல்வதில்லை. இந்த நிலையில் வயது முதிர்ந்து தன் உயிர் பிரியும் வேளையில் மன்சூரின் தந்தை அவனிடம்  வாழ்வில் தான் கண்டறிந்த அனுபவ சொல் ஒன்றைச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். இளம் வயதில் எல்லையில்லாத பணம் என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் மன்சூர் செய்கிறான். ஒரு நல்ல நாளில் அத்தனை பணமும் காலியாக குபீர் நண்பர்கள

பேராசைக்கு எதிராக ஒரு குரல்: மயிலம்மா : போராட்டமே வாழ்க்கை

படம்
மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை ஜோதிபாய் பரியாடத்து தமிழில் - சுகுமாரன் எதிர் வெளியீடு விலை ரூ. 55 நாம் தொடர்ந்து இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றவேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. பெரிய நிறுவனங்கள், அவர்களுக்காக தரகு வேலை செய்யும் இந்திய நிறுவனங்கள், பேராசை கொண்ட தனிப்பட்ட முதலாளிகள், அறியாமை கொண்ட பேராசையின் சார்பில் நிற்கும் மனிதர்கள் என நாம் தொடர்ந்து இயற்கையை சீரழிக்கும் பல தீய எண்ணங்களுக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகிவருகிறது. ஆதிவாசிப் பெண்ணான மயிலம்மாவும் தனது கணவரற்ற சூழலில் ஆறு குழந்தைகளோடு வாழ போராடி அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையினை உருவாக்கி கொடுத்ததோடு நிற்காமல் தனக்கு ஆதரவளித்த இயற்கை தாயினை, அவளது மடியினை ஈரத்தை பிறரும் உணர வாய்ப்பு தரும் பொருட்டு பிளாச்சிமடை பகுதியில் தொடங்கப்பட்ட கோக கோலா நிறுவனத்தின் நீர் சுரண்டலுக்கு எதிராக நீதி கேட்டு போராடியதன் மூலம் புகழ் பெற்றவர். இந்த நூல் வெறும் போராட்ட வடிவத்தை மட்டும் பேசாமல் மயிலம்மா தன் வாழ்க்கை எப்படி இருந்தது என்று இயல்பான தன் மொழியில் கூறிச்செல்கிறார். அதனால்தான் இந்த எழுத்

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு நிறைவுப்பகுதி - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
யாரும் உங்களை நம்பிக்கையாளராக கூறுவதில்லை. படத்தில் சரஜீவோ காப்பகம் சார்ந்த இவோலெவி கூறுவதாக ‘ ‘ நீங்கள் ஏற்றுக்கொண்டு செய்யும் பயணமானது ஒரு துண்டு படச்சுருளுக்கானது. இதில் முழுக்க நம்பிக்கை கொள்ளலாம். அல்லது முழுக்க விரக்தியுள்ள நிலைமையில் வீழலாம் ’’ என்று கூறுகிறார். இந்த நயமற்ற காட்சி வரும் நூற்றாண்டின் இறுதியில் விரக்தி அல்லது நம்பிக்கை என எதனை இக்காட்சி குறைந்தபட்சம் வெளிப்படுத்துகிறது?             நான் இந்த நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற என்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமகாலத்தின் மீதான நேர்மையான பதிவுகளைத்தான் உருவாக்க முயற்சிக்கிறேன். நம்பிக்கையாளர்கள் உண்மைக்கு என்றும் முதுகு காட்டியே நிற்கின்றனர். நம்புகின்ற விஷயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தவறான காரணங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களின் இறுதி முடிவாக தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக உள்ளது. எனது படத்தின் இறுதியில் கதாபாத்திரங்களின் பயணம் முடிவுறாது தொடர்கிறது என்று கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவெனில் அவர்கள் தொடர்ந்து தமது வீட்டைத் தேடுவார்கள் என்

நூல்வெளி 2: புகழ்பெற்ற சிறுகதைகள்

உலகம் உங்கள் கையில் உலகப்புகழ் சிறுகதைகள் பேரா.கி.நடராஜன் பாவை பப்ளிகேஷன்ஸ் விலை ரூ. 70 இந்நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. அதனை டால்ஸ்டாய் செகாவ், மாப்பசாந், டாஸ்டாவ்ஸ்கி, சோமர்செட்மாம், ஓ ஹென்றி, ஆஸ்கார் வைல்ட், ஜேம்ஸ் தர்பர்,ஆர்.கே. நாராயணன் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர்.  முதல் கதையான மூன்று துறவிகள் கதை அனைவருமே வாசித்திருக்கக்கூடிய கதைதான். சடங்குகளை ஒழித்து தூய மனதோடு இறைவனை நினைத்திருந்தால் போதும் என்னும் டால்ஸ்டாய் எழுதிய கதை. தன்னலமிக்க அரசன், மேகிக்களின் அன்பளிப்பு போன்றவற்றை நீங்கள் நிச்சயம் உங்களது ஆங்கில துணைப்பாடத்திலேயே வாசித்திருக்கலாம். அதைப்பற்றி மாங்கு மாங்கு என்று பரீட்சையிலே விளக்கு விளக்கு என்று விளக்கிவிட்டதால் அக்கதைகள் குறித்து புதிதாக சொல்ல ஏதும் இல்லை. புள்ளிபோட்ட வளையம் - ஆர்தர் கானன்டாயில், நகைகள் - கைடி மாப்பசாந், தாயார் - சோமர்செட் மாம், ஜோஸியக்காரனின் வாழ்க்கையில் ஒரு நாள் - ஆர்.கே. நாராயணன்  என இக்கதைகள் புதிதான வாசிப்பனுபவத்தை அளித்தன என்று கூறமுடியும். புள்ளி போட்ட வளையம் கதையில் சுவாரசியம் என்னவென்றால் ஷெர்லாக் ஹோம்ஸ் அக

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
லெனினின் சிலையை சுமந்து செல்லும் ஊர்வலமானது உலகில் மதம் குறித்த பெரும் விஷயங்களைக் குறிக்கிறது. கம்யூனிச மதம் வீழ்ந்தது ஒருபுறமிருக்க, விவசாய குடியானவர்கள் லெனின் சிலையுடன் கம்பீரமாக ஆற்றைத்தாண்டி வருகிறார்கள் என்பது  ஒருபுறம் நிகழ்கிறது. விரக்தியுற்ற விவசாயிகள்  மதம் தேவை என்பதை அறிந்தும் ஆனால் அது எப்படி இருக்கவேண்டும் என்று அறியாது இருக்கிறார்களா?       மதம் குறித்த விஷயங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. வளம் குன்றிய விவசாயிகளுக்கு எரிச் ப்ரோம் கூறுவது போல மாய உதவி என்று மதம் குறித்து கூறலாம். ஒரு சிறு கப்பலில் பெரிய சிலையை துண்டுகளாக்கி செல்லும் காட்சியை நானே கண்டும் இருக்கிறேன். சிறு படகு ஒன்று கரும்கடலில் ரோமானிய துறைமுகமான கான் ஸ்டன்னாவினை கடந்து செல்கிறது. பேரளவிலான அழகற்ற லெனினின் உடைத்து போடப்பட்டிருக்கிற சிலைத்துண்டுகளை பார்க்கும் ஒருவன் திகிலடைந்து போகிறான். அவனைப்பார்த்து தானாக தன் நெஞ்சருகே படகோட்டும் பெண் சிலுவைக்குறி போட்டுக்கொள்கிறாள். இது போன்ற நிகழ்வுகளில் சிலுவைக்குறி போட்டுக்கொள்வது இயல்பானதாகவே உள்ளது. உங்களது அண்மைய படங்களில் நிகழ்காலத்தி

இதழாளர்களின் பைபிள் : நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
இதழாளர் கையேடு சிவந்தி ஆதித்தனார் ராணிமுத்து பதிப்பகம் விலை ரூ. 20 நூலின் பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது எது மாதிரியான நூல் என்று. அதேதான். ஆனால் மிக எளிமையான கையேடாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தினத்தந்தி நாளிதழை வாங்கி நீங்கள் வாசித்து பார்க்கலாம். ஆமாம். தினந்தந்தியை நிறுவி அந்நிய மாநிலத்தவர்கள் பலருக்கும் தினமும் ஐந்து ரூபாயில் தமிழ் பழக வாய்ப்பளிக்கும் பத்திரிகையை தொடங்கியவர் ஆதித்தனார்தான் புத்தகத்தின் ஆசிரியர்.  நூலில் கூறப்படும் விதிகளை அனைத்தையும் தன் வாழ்நாளில் அவர் பெற்ற அனுபவங்களின் வழியேதான் கூறுகிறார் என்பதை நூலின் பின்புறம் இருக்கும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்பை வாசிப்பவர்களுக்கு எளிதாக புரிந்துவிடும்.  இன்றும் தினத்தந்தி பல இணையதளங்கள், தொலைக்காட்சிகள் வந்தாலும் தினமும் ஒருகோடி வாசகர்களை பெற்று  எளிய மக்களின் செய்தி பத்திரிகையாக  முன்னணியில் நிற்க காரணம் ஆதித்தனார் சொன்ன விதிகளை அந்நிறுவனத்தார் தொடர்ந்து பின்பற்றி வருவதுதான் காரணம் என்று நிகழ்கால உதாரணமே காட்டமுடியும்.  கா