இடுகைகள்

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான கவுகாத்தி காருண்ய தேவதை                  பிரசாந்தா மசூம்தார்                  தமிழில்: அன்பரசு சண்முகம்      கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆட்டிச பாதிப்பு கொண்ட மகனுடன் அரசு நிதியுதவி பெறும் மனநிலை குறைபாடுடைய குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்திவருகிறார்.      ரூபா ஹசாரிக்காவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே அவரை ஒரே ஒருவரை மட்டும் கொண்டு 2005 ஆம் ஆண்டு மனநிலை குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான காப்பகமான ‘டெஸ்டினேஷன்’ அமைப்பை தொடங்க தூண்டுகோலாக இருந்தது. இன்று இங்கு சமூகத்தின் ஒரு பிரிவான இம்மக்களில் 75 பேர் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.      பத்து ஆண்டுகளுக்கு முன்பு செரிப்ரல் பால்சி மற்றும் ஆட்டிச குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட தனது மகனை(ரிஷி) பள்ளியில் சேர்க்க கடுமையான முயற்சிகளை செய்திருக்கிறார் ஹசாரிக்கா. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னரே இத்தகைய குறைபாடு கொண்ட சிறுவர்களுக்கான மையம் ஒன்றினை தொடங்கும் எண்ணம் ஹசாரிக்காவிற்கு வந்திருக்கிறது. ‘’12 வயதான ரிஷியை பள்ளியில் சேர்க்க எண்ணற்ற பள்ளிகளுக்கு அலைந்து திரிந
மாறுதலின் கதை இது !                                            புனிதா மகேஸ்வரி                                 தமிழில்: அன்பரசு சண்முகம் கர்நாடகாவின் முதல் திருநங்கையாக உயர்கல்வி கற்க அனுமதி பெற்றிருக்கும் சுமா தனது கொடூரமான கடந்த கால உடல் வியாபாரத்திலிருந்து மீண்டு கல்லூரி செல்ல முடிந்தது குறித்த பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.      சுமா திருநங்கை என்பதால் அவரது குடும்பத்தினரே அவருக்கு இழைத்த சித்திரவதைகள், கொடூரமான சதை வணிகத்தில் மூன்று ஆண்டுகளாக பெற்ற உடல்ரீதியான தாக்குதல்கள், வன்புணர்வுகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட அவர் முடிவெடுத்தபோது அவர் வாழ்க்கை புதியதாக மீண்டும் தொடங்கியது. தனது கடந்த காலத்தை நினைவு கூறும்போது சுமாவின் உடலில் திகிலும் பயமும் விலக்க முடியாமல் படர்ந்துவிடுகிறது.      ‘‘எனக்கு இன்றும் எது போராட தைரியமளித்தது என்று தெரியவில்லை. என்னால் தாங்கமுடியாது என்று தோன்றியபோது உருவானது அது. ஆனால் தொடர்ந்து என்னை சரி செய்துகொண்டு அந்த அவலத்திலிருந்து என் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களிலிருந்து பாலியல் தொழிலிலிருந்து வெளியே வந்தேன்’’ என்று கூறிய

இனி என்ன?

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர் எப்படியோ எனக்குப் பிடித்த நவம்பர் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது மகிழ்ச்சி. இந்த எழுத்துக்கள் புத்தகமாக காகிதமாக மாறுமா என்று எனக்கு தெரியவில்லை. எந்த வாக்குறுதிகளை இப்போது நான் நம்புவதில்லை. நான் முடிந்தவரை மூலத்துக்கு நேர்மையாக இருந்திருக்கிறேன். என்னுடைய நோக்கமெல்லாம் இதில் பவுலோஸ் வெளிப்படவேண்டும் என்பதுதான். ஆனால் லாய்ட்டர் லூன் வெளித்தெரிந்தால் நிச்சயம் இது மலினமான மொழிபெயர்ப்புதான். ஐயமில்லை.           இனி இதுபோல நெடுந்தொடர்கள் சில காலம் எழுதப்போவதில்லை. தனிமனிதர்கள் குறித்த கட்டுரைகளின் மேல் கவனம் குவிக்க ஆசை. மேலும் வேறு வேலைக்கு வேறு நான் முயற்சி செய்யவேண்டும் என்கிற அலுவலக நெருக்கடி வேறு. தொடர்ந்து வலைப்பூ எழுதுவது கடினமாகி உள்ளது. என்னிடம் சொந்த கணினி கிடையாது. இந்நிலையில் அலுவலகத்திற்கு நேரமே சென்று தட்டச்சு செய்து பதிவிட்டதுதான் இந்த முழு நூலுமே. படித்த கருத்துக்களை கூறிய மெய்ஞானிகளுக்கு நன்றி. 

மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு]

16 மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு] உங்களது பெற்றோர்கள் தென் பகுதியைச் சேர்ந்த பெலோனிசஸ் மறும் க்ரேட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்றும் நீங்கள் கரும் மேகங்கள், கடும் மழை, கடும் குளிர்காலம் கொண்ட வட பகுதியில்தான் பெரும்பாலும் கவனத்தைக் குவித்திருக்கிறீர்கள்.      இக்கேள்வி எப்போதும் என்னை நோக்கி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு எவ்வித விளக்கமும் நான் அளிக்கப்போவதில்லை. இதற்கான விடையை கடந்த காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. உளவியால் ஆய்வாளர்கள் வேண்டுமானால் இதற்கான ஆதாரங்களை கண்டறிய முடியலாம். மறுகட்டமைப்பு எனும் எனது முழுநீளப்படத்தினை எடுப்பதற்கான சென்றிருந்த நிகழ்வை இங்கு கூற விரும்புகிறேன். அந்த நிலப்பரப்பு முழுக்க சாம்பல் நிறமாக இருந்தது. கருமையான மேகங்கள், கவர்ச்சியற்ற எளிய வீடுகள், பெரும் மலைகள் அவற்றின் பின்னணியில் இருக்க, மெல்லிய தூறலாய் மழை பெய்துகொண்டிருக்க பனி ஒரு திரைபோல மலையினை மூடிய சூழலில் கிராமமே வெறிச்சோடிக் கிடந்தது. 1950 இல் பெரும்பாலான கிரீக் மக்களைப் போல அவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மனிக்கு வேலை தேடி செ