ஆள்மாறாட்ட கோல்மால்!
வரலாற்று சுவாரசியங்கள் 2 ஆள்மாறாட்ட கோல்மால்! ரா . வேங்கடசாமி தனது தாயிடமிருந்து ஆண்டிற்கு ஆயிரம் பவுன்கள் பயணப்படியாக பெற்ற கேஸ்ட்ரோ இங்கிலாந்துக்குத் திரும்பி , தனது டிச் போர்னே எஸ்டேட்டுக்கு இயல்பாக உரிமை கொண்டாடினார் . ரோஜரின் குடும்ப விவகாரங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டவர் , அறிமுகமான எல்லோரையும் நுணுக்கமாக ஏமாற்றியது மட்டுமின்றி , தான்தான் ரோஜர் என்று பகிரங்கமாகவே சொல்லத் தொடங்கினார் . அதற்கு ஸ்டோரி வேண்டுமே ? உயிர் தப்பியதை லாஜிக் நழுவாத கதையாக மாற்றி எல்லோரிடமும் சொன்னார் காஸ்ட்ரோ. கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருக்கும்போது , ஆஸ்திரேலியா கப்பல் தன்னைக் காப்பாற்றியது ; கவனக்குறைவால் தான் பிழைத்ததை வீட்டாருக்கு சொல்லவில்லை என கூசாமல் பொய் சொன்னார். இங்கிலாந்து போகும்போதுதான் காதலியோடு நெருங்கியதால் அவள் கர்ப்பிணியாகி விட்டதாகவும் கதை கட்டினார் . இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுப்பதற்கு நான்கு ஆண்டுகள் ஆனது . எஸ்டேட் நிலங்களை பகுதியாகப் பிரித்து 100 பவுன்கள் வீதம் விற்றதால் காஸ்ட்ரோ ஏராளமாக் கரன்ஸி பார்த்துவிட்டார் . போலியான ஒ