நூல் விமர்சனம்: காந்தியார் சாந்தியடைய
காந்தியார் சாந்தியடைய ப.திருமாவேலன் மாற்று வெளியீட்டகம் ரூ. 160 1900 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திரம் வரையில் நாட்டில் என்ன நடந்தது என்பதை காந்தி, நேரு, படேல் ஆகியோரின் எழுத்துக்கள் உரை வழியாக இந்நூல் பதிவு செய்துள்ளது. இது இன்றைக்கு எந்தளவு பிரயோஜனம் உண்டு என்றால், ராம ராஜ்யம் என ரதம் இழுத்து பிரிவினையை தூண்டும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பிரிவினை கட்சிகளின் நோக்கம் என்ன என்பதை துல்லிய துலக்கமாக அறிய ப.திருமாவேலனின் இத்தகைய வரலாற்று நூல்கள் அவசியம். ராமராஜ்யம் எனும் பகுதியில் சுதந்திரப்போராட்டத்தை பின்னுக்கிழுக்கும்படி முஸ்லீம்களும், இந்துக்களும் முட்டி மோதிக்கொண்டனர். இதனை காந்தி எப்படி பார்த்தார், என்ன எழுதினார் பேசினார் என்பதையும் இ்ந்நூல் பேசுகிறது. இந்துஸ்தான் பகுதியில் முஸ்லீம்களை முடிந்தளவு ஓரே நாட்டுக்குள் இணக்கமாக வைத்திருக்க காந்தி செய்த முயற்சிகளையும் அதனை உடைத்த காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும், அதனை விரைவுபடுத்தியா ஸ்வயம் சேவக் சாவர்க்கரின் பணியையும், பிரிவினை சக்திகளை மனதளவில் ஆதரித்த படேலின் செயல்பாடுகளையும் படிக்கலாம். கடைசிபகுதி காந்திஸ்தானில் காந்தி தான்