மலேரியாவுக்கு புதிய மருந்து!
மலேரியாவுக்கு சிந்தடிக் ஊசி ! வேதிப்பொருட்களால் செயற்கைமுறையில் தயாரான சிந்தடிக் தடுப்பூசி இவ்வாண்டின் இறுதியில் மனிதர்களின் மீது சோதிக்கப்படவிருக்கிறது . Plasmodium falciparum எனும் ஒட்டுண்ணி ஏற்படுத்தும் மலேரியாவை இந்த ஊசிமருந்து தடுக்கிறது . தற்போது கொலம்பியா மற்றும் ஆப்பிரிக்காவின் கானாவில் இச்சோதனையை ஆராய்ச்சியாளர் மானுவேல் எல்கின் படாரோயோ முரில்லோ , அவரது மகன் அல்ஃபோன்ஸோ ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் . வேதிப்பொருட்கள் மூலம் ரெடியாகும் இந்த செயற்கை ஊசி மருந்து வளரும் நாடுகளுக்கு வரப்பிரசாதம் . குளிர்சாதன முறையில் மருந்தை பாதுகாக்க அவசியமில்லை . Plasmodium vivax எனும் ஒட்டுண்ணி இந்தியாவில் மலேரியாவுக்கு பரவக் காரணம் . 1987 ஆம் ஆண்டு FIDIC அமைப்பைச் சேர்ந்த மானுவேல் , தயாரித்த சிந்தடிக் மருந்தை உலகசுகாதார நிறுவனம் ஏற்கவில்லை . கடந்தாண்டு மட்டும் உலகின் 90 நாடுகளைச் சேர்ந்த 216 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 2016 ஆம் ஆண்டு மலேரியாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரம் . மருந்தோடு சுகாதாரத்தையும் பராமரிப்பது அவசிய