இந்தியாவை குறிவைக்கும் ரஷ்யா!
பெற்றோர்களை கைவிட்டால் சம்பளம் கட் ! வயதான பெற்றோர்கள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கைவிடும் மாநில அரசு பணியாளர்களுக்கு சம்பளம் கட் என்று அசாம் அரசு இயற்றிய சட்டம் மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதல் பெற்று விரைவில் அமுலுக்கு வரவிருக்கிறது . பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் பிரணாம் (PRANAM) எனும் இச்சட்டம் கடந்தாண்டு தயாரிக்கப்பட்டது . " அரசு பணியாளர் தன்னை நம்பியுள்ள பெற்றோர்களை கைவிட்டால் , அவரின் ஊதியத்தில் 10% பிடிக்கப்பட்டு பெற்றோர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் " என அதிர்ச்சி தகவல் தருகிறார் அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா . அதேசமயம் பெற்றோர்களுடன் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் இருந்தால் இத்தொகை 15% ஆக உயரும் என அசாம் அரசு சட்டம் எச்சரிக்கிறது . அன்பு பிறந்தால் எதுவும் கட்டாயமில்லை என்பதை உணரவேண்டிய நேரமிது . குட்கா விபரீதம் ! உ . பியிலுள்ள மதுராவில் ஒருவரை உயிரோடு கொளுத்த முயற்சித்த இரு நண்பர்கள் பிடிபட்டனர் . குட்காவை ஷேர் செய்ய மறுத்ததற்காகத்தான் இந்த கொலைவெறி . மதுராவின் சம்போகா கிராமத்தை