இடுகைகள்

ஃபேஸ்புக்குக்கு வயசு 15 ஆச்சு!

படம்
ஃபேஸ்புக்குக்கு வயது 15 ஃபேஸ்புக் நம் வாழ்க்கைக்குள் நுழைந்த பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. மார்க் ஸூக்கர் பெர்க் ஃபேஸ்புக்கை மக்கள் வாழ்க்கையில் தொடர்புகளை ஏற்படுத்திய பெருமை கொண்டதாக கருதுவதாக கூறியுள்ளார். ஃபேஸ்புக் உண்மையில் பதினைந்தாம் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதே உண்மை. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பிரச்னையில் இருந்தே மார்க் இன்னும் வெளியே வரவில்லை. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றை கையகப்படுத்தியது நல்ல முடிவு. ஆனால் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் பிராண்ட் அடிபட்டுப்போய் செனட்டில் விசாரணை வரை வந்தது மார்க்கிற்கு பெரிய அடி. ஆனால் அதேசமயம் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக சொன்ன முதல் சமூக வலைதளம் ஃபேஸ்புக்தான். இதிலேயே பல்வேறு நண்பர்களின் குழுக்கள் ஆக்கப்பூர்வமும், பெரும்பாலோர் அக்கப்போர் செய்துவருவதும் உண்மைதான். கொலம்பியாவில் நடந்த வன்முறைகளை ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீட் அம்பலப்படுத்தியதை யாரும் மறக்கமுடியாது. மக்கள் குழுக்களாக தங்களுக்குள் பேச ஃபேஸ்புக் உதவியது.  மாற்றங்களைக் கொண்டுவரவு

காட்டுத்தீயை தவிர்ப்பது எப்படி?

படம்
காட்டுத்தீ இயற்கை வளத்திற்கு சாபக்கேடு! அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற காட்டூத்தீ அவலத்தால் வீடுகள், விவசாயம் ஆகியவற்றை இழந்தோரின் வேதனைகளை செய்தியாக படித்திருப்போம். அதைக்கடந்த இயற்கை பாதிப்பை பலரும் அறிவதில்லை. சிலசமயங்களில் இயற்கையாகவும் பல நேரங்களில் மனிதர்களின் இடையீட்டினாலும் பற்றிப் பரவும் காட்டுத்தீ, காடுகளின் இயற்கை வளங்களை எரித்து சாம்பலாக்குகிறது. இதன் பக்கவிளைவாக  உருவாகும் கார்பன் வாயுக்கள் ஓசோன் படலத்தை தாக்குவதோடு பனிமூட்டமாக மாசுக்களை காற்றில் கலக்கச்செய்து சூரிய ஒளியை தாவரங்கள் பெறமுடியாமல் தடுக்கின்றன. இதனால் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கமுடியாமல் தாவர இனங்கள் அழியும் நிலை உருவாகிறது.  ”காட்டுத்தீயினால் அழிந்த வீடுகள், பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். ஆனால் இதன் விளைவாக ஏற்படும் சூழல்கேடுகளை நாம் கண்டுகொள்வதில்லை” என்கின்றனர் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  பேராசிரியர் நாடைன் உன்கர் மற்றும் தட்பவெப்பநிலை இயற்பியல் கழகத்தின் பேராசிரியரான சூ யூ. காட்டுத்தீ குறிப்பிட்ட வனப்பகுதியை அழித்தாலும் இதன் விளைவாக உருவாக

மூளையைத் தின்னும் கிரேட் டிட்ஸ் பறவை: ஏன் இந்த கொலைவெறி?

படம்
வன்முறைக்குப் பழகும் பறவைகள்!  பருவச்சூழல் மாற்றங்கள், பறவைகளின் குணநலன்களின் மாற்றத்தை ஏற்படுத்துவதாக உயிரியல் ஆய்விதழ் தகவல் தெரிவித்துள்ளது.  பருவச்சூழல் மாற்றங்களால் கடல்நீர் மட்டம் உயர்வது, குடிநீர் தட்டுப்பாடு, வெப்பம் உயர்வது ஆகியவை மனிதர்களை மட்டுமல்ல பறவைகளையும் பாதிக்கிறது. இதனை கரன்ட் பயாலஜி என்ற ஆய்விதழின் பத்தாண்டு கால ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச்சுழற்சி மாற்றம்! ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் அதிகம்  காணப்படும் பறவை கிரேட் டிட்ஸ்(Parus major).  வசந்தகாலத்தில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் பறவை, கிரேட் டிட்ஸ். இதைப்போன்றே, அங்கு வாழும் ஃபிளைகேட்சர் எனும் பறவை ஆப்பிரிக்காவுக்கு இனப்பெருக்கத்திற்காக இடம்பெயர்கிறது.  தற்போது பருவநிலை மாறுதல்களால் இருபறவைகளுக்கான உணவு ஆதாரங்கள் தட்டுப்பாடாகி வருகின்றன. இச்சூழ்நிலை இரு பறவை இனங்களுக்குமிடையே யார் பிழைத்திருப்பது என்ற பெரும் போரை ஏற்படுத்திவிட்டது. வெப்பமயமாதலால் பறவைகளின் இனப்பெருக்க காலம், கருவுறும் கால மாற்றம் ஆகியவை, அதன் வாழ்க்கை சுழற்சியிலும் திகைப்பூட்டும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள

புலிகளைப் பெருக்குவது எளிதான காரியமல்ல

படம்
நேர்காணல் ராஜேஷ் கோபால் (முன்னாள் வனத்துறை அலுவலர்) வேட்டையாடுதல் அதிகரிக்க காரணம் என்ன? புலிகள் காப்பகத்தில் வேட்டையாடுதல் அதிகரித்திருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. புலிகளை பாதுகாப்பதில் உள்ளூர் காரர்களின் ஆதரவும் தேவை. இல்லையெனில் அதனை சாத்தியப்படுத்த முடியாது. குளோபல் டைகர் ஃபாரம் இதற்கு என்ன திட்டம் வைத்துள்ளது.? தெற்காசிய நாடுகளில் புலிகளின் பாதுகாப்பை குளோபல் டைகர் ஃபாரம் உறுதி செய்கிறது. திட்டம், அதற்கான விஷயங்களை தீர்மானிப்பது ஆகியவற்றை எங்கள் அமைப்பு செய்கிறது. காட்டு விலங்குகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என கூறலாமா? இந்த வாதத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பதிமூன்று புலிகள் காப்பகத்தில் அதிக புலிகளை பாதுகாத்திருப்பது இந்தியாதான். ஏறத்தாழ 70 சதவீதம்தான். உலகிலுள்ள 60 சதவீத காடுகளில் இந்தியாவின் பங்கு 0.06 ஹெக்டேர்கள்தான். காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல்களை தவிர்க்க அரசு இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 2020 ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கிவிட முடியுமா? புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது இயற

கஞ்சா புகையில் சோதனை சினிமா - சிம்பா கதை என்ன?

படம்
சிம்பா(தமிழ்) அர்விந்த் ஸ்ரீதர் விஷால் சந்திரசேகர் சினு சித்தார்த் தாத்தா இறந்த சோகத்தில் போதையில் மூழ்கி கிடக்கும் பரத்திற்கு (மகேஷ்)மாற்றம் கிடைப்பது, பக்கத்துவிட்டு விவாகரத்தான பெண் மது மூலம். நமக்கு உதவி செய்வது பெண்ணாக இருந்தால், என்ன வரும்? யெஸ் லவ்தான். இரண்டாம் உலகில் எப்போது ட்ராவல் செய்யும் பரத்திற்கு உலகில் என்ன நடக்கிறது என்பதே போதை தெளியும்போதுதான் தெரியும். இந்த லட்சணத்தில் காதல் கைகூடியதா? என்ன பிரச்னைகளை சந்தித்தார் என்பதே கதை. எக்ஸ்பரிமெண்டான கதை. உண்மையில் ஹீரோதான் எல்எஸ்டி, கஞ்சா அடித்திருக்கிறாரா இல்லை நாமே அப்படித்தான் இருக்கிறோமா என கிள்ளிப்பார்த்து படம் பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வகையில் கேமராமேன் சினு சித்தார்த் பாஸ் ஆகிவிடுகிறார். சிம்பா யாரு? தமிழகத்தின் நம்பர்1 காமெடியாக முயற்சிக்கும் பிரேம்ஜிதான். வேற யாரு? படத்தின் ஹீரோ சத்தியமாக பரத் என்றால் டைரக்டரே நம்பமாட்டார். அந்தளவு பிரேம்ஜியின் ஒன்லைனர்கள், நக்கல் படம் முழுக்க நம்மை காப்பாற்றுகிறது. அதுவும் பரத் பிலாசபியில் முழுகி அந்தப் பூச்சி எனக்கு கதை சொல்லுச்சு என சொல்லும்போது பிரேம்ஜ

பதப்படுத்தப்பட்ட உணவுகள் - பர்ச்சேஸ் வழிகாட்டி

ஃபிரிட்ஜில் வைக்க ஏற்றவை Dried Beans and Lentils அப்படியே பிரிட்ஜில் வைக்கலாம். சில பொருட்களில் விட்டமின்கள் இழப்பாகும் என்பது உண்மைதான். ஆனால் பத்து ஆண்டுகள் வரை தாங்கும் திறன் கொண்டவை ட்ரைடு பீன்ஸ்.  நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ஸ், விட்டமின்கள், மினரல்ஸ் ஆகியவை அப்படியே இருப்பதால் பல்க்காக ஷாப்பிங் செய்து சந்தோஷமாக இருக்கலாம்.  Frozen Berries காசு கொஞ்சம் அதிகம்தான். ஆனால் மதிப்புள்ள பொருள். நீங்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் பெர்ரிகளைப் போல தரத்தில் உறைந்த பெர்ரிகளை வாங்கலாம். சத்துக்கள் பெரியளவு குறையாது. யுஎஸ்டிஏ அறிக்கைப்படி ஆறு மாதங்களுக்கு பெர்ரிகளை பயன்படுத்தலாம். இதய நோய்களை குறைக்க, நீரிழிவை நசுக்கு, மனநலப் பிரச்னைகளை துரத்த பயன்படுத்த வேண்டிய பொருள்.   Frozen Meat and Poultry காய்கறிகளை விட இறைச்சி மிக விரைவாக பாக்டீரியாக்கள், பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டு விடும். எனவே அதனை உப்புக்கண்டம் போட்டு ஃபிரிட்ஜில் வைப்பதே சிறந்தது. கோழியின் இறக்கைகளை ஒன்பது மாதங்களும், கறியை ஒரு ஆண்டும் பயன்படுத்தலாம் என்று யுஎஸ்டிஏ பரிந்துரைக்கிறது. நன்றி: ecowatch.com

பிபிசி 100 பெண்தலைவர்களின் ஒருவர், விஜி பென்கூட்டு

படம்
நாற்காலிக்கான போராட்டம்! கேரளாவைச் சேர்ந்த தையற்கலைஞரான விஜி பென்கூட்டு, பிபிசி நிறுவனத்தின் 100 பெண் தலைவர்கள்  பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கேரளாவில் எளிய தையற்கலைஞராக பணிபுரிந்து வரும் விஜி பென்கூட்டு, போராடியது நாற்காலிக்காகத்தான்.  பதவிக்கான நாற்காலி அல்ல; பெண்களின் உரிமைக்கான நாற்காலி அது. கோழிக்கோட்டிலுள்ள  ஸ்வீட் மீட் தெருவில் தையற்கலைஞராக உள்ள விஜி, பெண் தொழிலாளர்கள் கடைகளில் அமர்வதற்கான  சட்ட உரிமையை கேரள அரசிடம் போராடிப் பெற்றுத் தந்துள்ளார். மற்றுமொரு மகிழ்ச்சிகரச் செய்தியாக, பிபிசி பெண்கள் பட்டியலிலும் இடம்பிடித்து நம்பிக்கை மனுஷியாக சாதித்துள்ளார் விஜி. ” 2009 ஆம் ஆண்டு பெண் தொழிலாளர்களுக்கான கழிவறைக்காக போராடி வசதிகளைப் பெற்றோம். தற்போது இங்கு பணியாற்றும் எண்ணிக்கையில் முன்பு பெண் தொழிலாளர்கள் பணிபுரிய வாய்ப்பு தரவில்லை. ” என்கிறார் விஜி. ஏஎம்டியூ(Asankhaditha Meghala Thozhilali Union - AMTU)  என்ற பெண் தொழிலாளர்களுக்கான சங்கத்தை தொடங்கி பெண்களின் உரிமைகளுக்காக மாநில அரசிடம் பேசத் தொடங்கினார் விஜி. 2014 ஆம் ஆண்டு மே 1 அன்று, இரிக்கல் சமரம் என்ற பெண்தொழில

குறைந்தபட்ச மாத வருமானம்(UBI) சாத்தியமா?

படம்
Government Yojana குறைந்தபட்ச மாத வருமானத்தை வழங்குவது சாத்தியமா? இந்திய அரசு, ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியை வழங்கவிருப்பதாக பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளது. அண்மையில் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் குறைந்தபட்ச  வருமானமாக வழங்க உள்ளது. ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. குறைந்தபட்ச மாத வருமானம் என்றால் என்ன? வறுமையைக் குறைப்பதற்கு இதில் என்ன வாய்ப்பு உள்ளது?  மக்களின் வேலை, சொத்து, வருமானம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அரசு, அவர்களுக்கு வழங்கும் குறைந்தபட்ச மாத வருமானம்(Universal basic income UBI) ஆகும். இதனை இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பின்பற்றிவருகின்றன. இந்தியாவில் இதனைப் பின்பற்ற முடியுமா? முடியாதா? என பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். குறைந்தபட்ச வருமானம் எதற்கு? அரசு மக்களுக்கு அளிக்கும் மானியமாக குறைந்தபட்ச மாத வருமானத்தை கருத முடியாது. அரசு வழங்கும் இத்தொகை, ஒருவரின் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே தீர்க்கும். நாட்டில் அதிகரிக்கு

வெனிசுலாவில் என்ன நடக்கிறது?

படம்
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அபகரிக்க அமெரிக்க போட்டி அதிபரை உருவாக்கியுள்ளது. இதை தீவிரமாக எதிர்த்துள்ள மதுரோ, “நீங்கள் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறும்போது, ரத்தக்கறையுடன் வெளியேறுவீர்கள்” என்று எச்சரித்துள்ளார். வியட்நாம் முடிவை அமெரிக்கா எதிர்கொள்ளப்போகிறது என்று ஸ்பானிய பத்திரிகையாளர் ஜோர்டி எவோலிடம் பேட்டி அளித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் தேர்தல் நடத்தக்கூறிய கோரிக்கையை மதுரோ நிராகரித்துவிட்டார்.  இனி தேர்தல் 2024இல்தான். ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைகளை நான் ஏற்கவேண்டியதில்லை என்று திடமாக கூறிவிட்டார் மதுரோ. "உலக அரசியல் என்பது இன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்கா செய்வது காலனிய ஆட்சியை நினைவுபடுத்துகிறது" என்றார் மதுரோ. தற்போது ஆயிரக்கணக்கிலான வெனிசுலா மக்கள் அதிபரை நாட்டை விட்டு வெளியேறக்கூறி காரகாஸில் போராடி வருகின்றனர். முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதிகளவு பணவீக்கம் அதிகரித்ததால் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆனால் எட்டு லட்சம் பேர்தான் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என சாதிக்கிறார் மதுரோ.

அணைநீரில் சோலார் மின்சாரம்!

படம்
மின்சாரம் தயாரிக்க புதுமையான ஐடியா!  தமிழ்நாட்டின் மின் விநியோக நிறுவனமான டான்ஜெட்கோ(TANGEDCO) தமிழ்நாட்டிலுள்ள அணைகளில் சோலார் பேனல்களை நிறுவ உள்ளது. நிலம் இருக்க நீர் எதற்கு? சோலார் பேனல்களை நிலத்திலேயே நிறுவலாமே என்று நினைப்பீர்கள். இதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவது, வாடகை என செலவு எகிறுவதால் டான்ஜெட்கோ இந்த முடிவை எடுத்துள்ளது. நிலத்தை விட நீரில் வெப்பத்தைப் பெற்று மின்சாரம் தயாரிப்பது எளிது.  தமிழ்நாட்டிலுள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி சாகர் அணை ஆகியவற்றில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக பெருமளவில் சோலார் பேனல்களை டான்ஜெட்கோ நிறுவுவதற்கான முயற்சிகளைத் தொடங்கி உள்ளது. மொத்தம் 250 மெகாவாட் மின்சாரத்திற்கான திட்டம் இது. புதிய திட்டங்கள் தேவை! இந்தியாவில் முதன்முறையாக அணைநீரில் பிரமாண்ட அளவில் சோலார்பேனல்களை நிறுவி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு, ரிகாந்த் அணையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் 50 மெகாவாட் மின்சாரத்தை தனியார் நிறுவனம் யூனிட் ஒன்றுக்கு 3.29 ரூபாய்க்கு விற்கிறது. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம

அரசு பத்திரங்களை அறிவீர்களா?

படம்
அரசு பத்திரங்களை அறிவோம்! இந்திய அரசு வெளியிடும் அரசு பத்திரங்கள் குறித்த விளம்பரங்களை நாளிதழில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் அரசு பத்திரங்களின் பயன் என்ன? நிறுவனங்கள் வணிகத்தில் எளிதில் ஈடுபடுவதற்காக இந்திய அரசு, பத்திரங்களை வெளியிடுகிறது. அரசு பத்திரம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பத்திரத்தை வெளியிடுகின்றன. முதலில் பெருநிறுவனங்கள் வணிகத்திற்காக இப்பத்திரங்களில் முதலீடு செய்தன. தற்போது சிறு நிறுவனங்களும் இதில் முதலீடு செய்வது அரசின் விதிமுறைகளால் கட்டாயம் ஆகியுள்ளது. பத்திரத்தின் ஆயுள் அரசு வெளியிடும் பத்திரத்தின் கடன் பொறுப்புக்கு அரசு பொறுப்பேற்பதால் பயம் தேவையில்லை. இப்பத்திரங்கள்  குறைந்தது ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கொண்டதாக தேதியிட்டு வெளியிடப்படுகின்றன. இந்திய அரசு இவை தவிர தேசிய சேமிப்பு சான்றிதழ், சேமிப்பு பத்திரம் ஆகியவற்றை வெளியிடுகின்றன. சிறப்பு பத்திரங்களாக எண்ணெய் பத்திரங்கள், சக்தி பத்திரங்கள், உணவுப்பொருள் பத்திரங்கள், உரப்பத்திரங்களும் இவ்வகையில் சேரும்.  மேற்கூறிய அனைத்து பத்திரங்களையும் வணிகத்திற்கான பத்திரங்களாக கருத முடியாது.  ந