இடுகைகள்

தடம்புரண்ட டெக் கம்பெனிகளின் தயாரிப்பு!

படம்
மொபைல் வேர்ல்டு காங்கிரசில் எப்போது புது கண்டுபிடிப்புகளை ஆரவாரமாக அறிமுகப்படுத்துவார்கள். சிலதுதான் டெவலப் ஆகும். பிற கண்டுபிடிப்புகள் சீன பட்டாசாய் புஸ் ஆகும். அவற்றில் சில. பிளாக்பெர்ரி 2015 ஆம் ஆண்டு பிளாக்பெர்ரி  லீப் என்ற போனை மொபைல் வேர்ல்டு காங்கிரசில் வெளியிட்டது. பட்டன்களே இல்லாத முழு டச் ஸ்க்ரீன் போன் இது. ஆனால் பரிதாபமாக செல்ஃப் எடுக்காது தோல்வியைச் சந்தித்தது. ஓராண்டுதான். இந்த செல்போன்களை சீனாவின் டிஎல்சி கம்பெனிக்கு கொடுத்துவிட்டது பிளாக்பெர்ரி. மொசில்லா ஓஎஸ் டெலிஃபோனிகா என்ற கம்பெனி, ஃபயர்ஃபாக்ஸ் ஓஎஸ்ஸை வைத்து போனை வெளியிட்டு அடி வாங்கியது. டொனேஷனில் இயங்குவது மொசில்லா கம்பெனி. பின்னாளில் ஸ்பானிஷ் கம்பெனி , மொசில்லாவைப் புறக்கணித்து கூகுளின் க்ளவுட் சேவைகள் பக்கம் மாறியதுடன் போன் வெளியீடு முடிவுக்கு வந்தது. அலெக்சாவுக்கு எதிரி அனிட்ஏ என்ற ரோலிங் அசிஸ்டென்ட் அறிமுகமானது இங்குதான். ஆனால் டெமோவில் வாடிக்கையாளர்கள் ஈர்க்கவில்லை. அதே ஆண்டில் எல்ஜி, லேசர், கேமரா மூலம் நகரும் பூனை வடிவ பாட் ஒன்றை தயாரித்தது. ஆனால் இப்பொருள் வெற்றியா தோல்வியா என்றே தெரியவில்ல

லவ் இன்ஃபினிட்டி: யார்க்கும் கடன் கொடுக்க மாட்டேன்

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக், பிருந்தாஸ்ரீனி நீ என்னதான் பேச மாட்டேன்னு சொன்னாலும் என்னோட மனசு கேட்கவே மாட்டேங்குது. அப்புறம் Mahadevi கிட்ட Question Paper காசு நீ கேட்டே. அது என்கிட்ட கேட்டது. நான் தராமல் இருப்பேனா? சொல்லு. அது திருப்பிக் கொடுத்தது. நான் வாங்கலை. அன்னிக்கு கை நீட்டுன்னு விளையாட்டா மகா சொல்ல நான் வெகுளியாக நீட்டிட்டேன். டக்குன்னு காசை கையில வெச்சிருச்சு. ஏமாந்துட்டேன். நான் யார்கிட்ட கடன் வாங்கினாலும் கொடுக்க மாட்டேன். யாருக்காவது கொடுத்தாலும் திருப்பித்தான்னு கேட்க மாட்டேன்.  ஏன்னா Friends குள்ள Rs problem  வந்துடும். நான் இதுவரை உன்கிட்டே காசே கேட்டதில்லை. இப்பத்தான் கண்டுபிடிச்சேன். Jolly யா எதுவும் எழுத முடியலை. ஆடிப் பண்டிகைக்கு ஸ்ரீராம் என் வீட்டுக்கு வரணும்னு சொன்னான். So அன்னிக்கு ஸ்ரீராம் கூடத்தான் program. எங்க வீட்டுக்கு எல்லாரையும் கூட்டிப்போறது பள்ளிக்கூட,த்துல இருந்தே தொடங்கியிருச்சு. நான் ரொம்ப பேதம் பார்க்கிறது இல்ல. Monthly Test ல ஒண்ணுமே எழுதலை. செல்வா புக்கைப் பார்த்து எழுதிருவான். அவன் ப

நல்ல குணம் என்ன செய்யும்?

படம்
http://balamurugan1977.tumblr.com நல்ல குணம் தேவையா? திறமை உங்களை உயரே கொண்டு செல்லும். ஆனால் நற்குணம்தான் உங்களை அங்கே அமர வைக்கும். சுவடுகள் அடுத்தவர்களின் அடிச்சுவட்டிலேயே நடந்துகொண்டு இருந்தால், உங்கள் அடிச்சுவடுகளை ஒருநாளும் பதிக்க முடியாது. அனைவருக்கும் ஃப்ரெண்டு அனைவருக்கும் நண்பனாக இருப்பவன், ஒருவருக்கும் உண்மையான நண்பனாக இருக்க மாட்டான். நன்றி: ஆனந்த விகடன்

இரண்டும் ஒன்றுதானா டக்ளஸ் அண்ணே!

படம்
http://balamurugan1977.tumblr.com மிஸஸ் டக்ளஸ் இரண்டும் ஒன்றுதான் குடிகாரன் வெளியே உளறுகிறான் மற்றவர்கள் அதைத்தான் மனசுக்குள் நினைக்கிறார்கள்.  இடறு எங்கே விழுந்தாய்  என்று பார்க்காதே  எங்கே இடறியது என்று பார். யார் குற்றவாளி? ஏணிமேல் ஏறுகிறவன் மட்டும்  திருடனல்ல;  கீழே ஏணியைப் பிடித்துக்கொண்டிருப்பவனும் திருடன்தான்.  சின்ன தாமதம் உண்டா? தாமதத்தில் சிறிய தாமதம்  பெரிய தாமதம் என்று வித்தியாசம்  எதுவும் இல்லை.  யாரை நம்புவது?  எல்லோரையும் நேசியுங்கள். ஆனால் உங்களை மட்டுமே நம்புங்கள்.  சத்தமின்றி! மௌனமும் ஒருவகை விமர்சனமே! நன்றி: ஆனந்தவிகடன் 

காய்ச்சலின்போது உடல் நடுங்குவது ஏன்?

படம்
Pexels.com ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காய்ச்சலின் போது உடல் குளிருவது ஏன்? காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கிறது. அதாவது இயல்பு வெப்பநிலைக்கும் அதிகமாக. நீங்கள் கடினமாக புஷ்அப் எடுக்கிறீர்கள் என்றால் வெளிப்புற வெப்பநிலையை விட உடல் வெப்பநிலை அதிகரிக்கும். ஆனால் இயல்பு வெப்பநிலை என்பது 36.8 டிகிரி செல்சியசாகவே இருக்கும். உடற்பயிற்சியின்போது ஏற்படும் உடல் வெப்பநிலை தற்காலிகமானது. ஆனால் காய்ச்சலின்போது ஏற்படும் உடல்வெப்பநிலை இதிலிருந்து மாறுபட்டது. உடல்வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியசிற்கு கீழே குறையும்போது உடல் நடுங்கத்தொடங்கும். இதனால்தான் கைகள் அறுபது வயது தாத்தா போல நடுங்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, உடலின் வெப்பத்தை அதிகரிக்க காரணம், நோய் ஏற்படுத்திய பாக்டீரியாவின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி நோயை விரட்டவே. உடலின் கழிவுகள் வெளியேறினாலே காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஆனால் அதுவரை காய்ச்சலின் நடுக்கத்தை பாதிப்பை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. காரணம், உடலின் பலவீனமே ஆகும். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

எதைச்செய்தாலும் நம்பர் 1 ஆக இருக்கவேண்டுமா?

படம்
மிஸஸ் டக்ளஸ் வெற்றியாளன் நண்பர்கள் உள்ள எவனும்  தோற்றுப்போனவன் இல்லை. நம்பிக்கை பிரார்த்தனை உங்கள்  நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது. நம்பிக்கைதான் உங்கள் பிரார்த்தனைக்கு உயிர் கொடுக்கும். சிறப்பாக செய் எதைச் செய்தாலும்  அதில் முதலாவதாக இரு. அல்லது சிறப்பாக இரு.  அல்லது புதுமையாகவாவது இரு.  அக்கறை நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து யாரும் அக்கறைப்பட மாட்டார்கள்.  நீங்கள் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளும் வரை.  நன்றி: ஆனந்த விகடன் 30.4.20008

தமிழகத்தில் நடைபெறும் சாலைவிபத்துகளின் ஹாட்ஸ்பாட்!

படம்
George Herald தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி? கடந்தாண்டு மாநில போக்குவரத்து திட்டக்குழுவும், மெட்ராஸ் ஐஐடியும் இணைந்து அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள், பகுதிகள் குறித்த அறிக்கையை தயாரித்தன. இதில் பதினொரு மாவட்டங்கள் முன்னணியில் நின்றன. அதிக விபத்து ஏற்படும் இடங்களாக 120 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. விபத்தைக் குறைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. 2017 ஆம் ஆண்டு 65, 562 ஆக இருந்த விபத்துகளின் அளவு இன்று 63, 920 ஆக குறைந்துள்ளன. 3% குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ஆம்புலன்ஸ் வசதிகளும், கோல்டன் ஹவரில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும்தான். இம்முறையில் இறப்பிலிருந்து பிழைத்தவர்களின் எண்ணிக்கை  16, 157(2017), 12,216(2018) இதன் அளவு 24.4%.  நெடுஞ்சாலையில் இருந்த 3,300 மதுபானக்கடைகள் அகற்றப்பட்டதும் விபத்துகளின் அளவு குறையக் காரணம். 2017 ஆம் ஆண்டு திருவான்மியூர் டூ முட்டுக்காடு ஏரியாவில் நான்கு மதுபானக்கடைகள் செயல்பட்டு வந்தன.  “இப்பகுதியில் சாலைத் தடுப்புகள் சரியான உயரத்தில் அமைக்கப்படவில்லை. இன்று அக்குறைகளை சரிசெய்துள்ளோம்” என்கிறார்

லவ் இன்ஃபினிட்டி: உன்னை என்ன சொல்லி திட்டுவேன்?

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கா.சி.வின்சென்ட், முரடன் செந்தில் நீ என்னை சந்தேகப்பட்டாலும் நான் விரும்புகிற ஒரே பெண் நீதான். என் அம்மாவை அடுத்துத்தான். சந்தேகமில்லை. நான் யுவராஜ் மாதிரி ஆளுகளோடு பழகினாலும் அவனோட Personal நானும், என்னோடதில அவனும் தலையிட மாட்டோம். அந்த Friendship சும்மா Just like that. ஆனால் செல்வா மாதிரி Friend எனக்கு இருக்கிறான்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் பெருமை.  நீ அர்ச்சனாவிடம் பழகு. எனக்கு பிடிக்கலை. நான் ஒதுங்கிவிட்டேன். அம்பிகா உன்னிடம் எத்தனை மேட்டர் என்னைப் பற்றி சொல்லியிருப்பாள்? அவ உங்கிட்ட சொல்லாம விட்ட நிறைய மேட்டர் பசங்களுக்குத் தெரியும். இப்படி நடக்கும்னு எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் அவகிட்ட போன வருஷத்திலிருந்தே நாங்க பேசறதில்லை. நான் செல்வா, ஸ்ரீராம் எல்லாம். இப்ப நான் மகாதேவிகிட்ட  கூட பேசறதில்லை. மோகனாகிட்டேயும்தான். நீயே பேச மாட்டேங்கிற. நீ ஏன் உன்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டு என்கூட பேசற. இந்த Lr எழுதியிருக்க மாட்டேன். ஆனால கிளாஸில் உன்கூட சண்டை போட முடியலை. அதான். அதனால் இப்போ திட்டி விடுகிறேன்.

”நடிப்பை அனுபவித்து நடிக்கிறேன்”

படம்
The Week புலவாமா தாக்குதல், உரி படத்தினை மேலும் பேச வைத்திருக்கிறது. ஹவ் இஸ் ஜோஸ் என்ற வசனத்தை பேசி சில மாணவர்கள் போலீசிலும் கைதாகி உள்ளனர். அந்தளவு படம், பலரையும் சென்றடைந்திருக்கிறது. சரியான டைமிங் என்பதோடு விக்கி கௌசலின் அபார நடிப்பும் முக்கியக் காரணம். மாசான் டூ உரி பயணத்தை சொல்லுங்கள்? என்மேல் நம்பிக்கை வைத்து இயக்குநர்களால் இப்பயணம் சாத்தியமானது. நான் நடிகனாக திட்டமிட்டு திரைத்துறைக்கு வரவில்லை. 2015 ஆம் ஆண்டு மாசான் படம் வெளியானபோது அடுத்தடுத்த ஆண்டுகளில் என்ன படம் செய்வீர்கள்? என்று கேட்டால் திகைத்து போயிருப்பேன். அந்தளவு திட்டமிட்டு எதையும் செய்யவில்லை அவ்வளவுதான். இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் உரி என்று உங்கள் படம்தான்.... 2018 ஆம் ஆண்டு எனக்கு மகிழ்ச்சி கொடுத்த ஆண்டு. உரி படம் நன்றாக ஓடியது எனக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. என்னை விமர்சிப்பவர்கள், ரசிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரின்  உதவியின்றி இந்த வெற்றி சாத்தியமில்லை என்பதே உண்மை. உரிக்கு எப்படி தயாரானீர்கள்? கடின உழைப்பு இதற்கு தேவைப்பட்டது. ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு மேலாக நடிகர்கள், தொழில்நுட்ப

”சர்ஜிகல் ஸ்ட்ரைக்குகளை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை”

படம்
Outlook\SURESH K. PANDEY ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரம், எங்கிருந்தாலும் தன் எழுத்தில் கவனிக்க வைக்கும் திறன் கொண்டவர். தமிழில்:ச.அன்பரசு புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எப்படி எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும்? உதாரணத்துக்கு நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்தால் எப்படி செயல்பட்டிருப்பீர்கள்? புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பேன். இரண்டாவதாக, வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர். அவர் பாகிஸ்தானி ஆள் கிடையாது. ஜெய்ஸ் இ முகமது அமைப்பில் இணைந்து பணியாற்றியவர். உள்நாட்டிலுள்ள மக்களின் மனங்களை வெல்லாமல் காஷ்மீரின் தீவிரவாதத்தை  நம்மால் அழிக்க முடியாது. இந்த தாக்குதல்  இந்தியா பாகிஸ்தானை போர்முனையில் சந்திக்கவேண்டும் என்கிற குரல்களை அதிகப்படுத்தியுள்ளது. வலிமையான தலைவர் அதனை ஆதரிப்பார் என நினைக்கிறீர்களா? நிச்சயம் வலிமையான தலைவர், தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். அதாவது, போர் தேவை என்று குரல்களை அவர் ஆதரிக்க மாட்டார். நாட்டு எல்லையில் தீவிரவாதிகளை தடுப்பது, அதற்கான முயற்சிகள் என்பது அவசியம் தேவை. ஆ

உங்களால் முடியுமா? முடியாதா?

படம்
MovieCreedLive மிஸஸ் டக்ளஸ் நம்பிக்கைங்கிறது.. உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும், முடியாது என்று நினைத்தாலும் இரண்டுமே சரிதான். சிரிப்பு - அழுகை யாருடன் சேர்ந்து சிரித்தீர்களோ, அவர்களை நீங்கள் மறந்துவிடலாம். ஆனால் யாருடன் சேர்ந்து அழுதீர்களோ அவர்களை மறக்க முடியாது. அனுமதி அனுமதிக்கவில்லை எனில் உங்கள் குழந்தைகள் தவறான காரியங்களைச் செய்ய மாட்டார்கள். அனுமதிக்காதவரை சரியான காரியத்தையும் செய்ய மாட்டார்கள். உழைப்பு எவனொருவனும் தன் வியர்வையில் மூழ்கிவிட மாட்டான். ஏளன்னும் அங்கீகாரமும் மற்றவர்கள் முதலில் உன்னை அலட்சியப்படுத்துவார்கள் அடுத்து கேலி செய்வார்கள், பிறகு உன்னோடு சண்டை போடுவார்கள் இறுதியில் நீ வெல்வாய்