இடுகைகள்

லவ் இன்ஃபினிட்டி: காதல் இதயத்தை உடைத்தேன்!

படம்
monina moreno\pinterest 23 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக், விபானா arasyputri திருவண்ணாமலையில் கவிக்குமார் எனக்கு கற்றுக்கொடுத்தது பலரையும் எப்படி வேலை வாங்குவது என. பேசிப்பேசியே ஒருவரின் மனதைக் கரைத்து...அவரின் இயல்பை சின்னாபின்னமாக்கி இயற்கையே எல்லாம் என நம்ப வைப்பதை மிக இயல்பாக செய்து வந்தார். ஏறத்தாழ சதுரங்கவேட்டை நாயகனைப் போல என்று வைத்துக்கொள்ளுங்கள். திடீரென காலையில் பக்தி பெருகும்போது காக்கை அலுவலகத்திலிருந்து நடப்போம். பாதி தூரம் வந்ததும், நடக்க வேண்டாம். டைம் இல்ல என ஷேர் ஆட்டோ பிடிப்பார். இதெல்லாம் இரும்புக்கை மாயாவின் ஆக் சன் வேகத்தில் நடக்கும். அதேசமயம் கார்த்திக்கின் ஸ்க்ரீன் பிரிண்டிங் ஆபீசில் இருந்து சுமக்க முடியாத அளவு புத்தகங்களை, சரவணா ஸ்டோர் பையில் சுமக்க வைப்பார். அவரும் கூடவே சும ப்பார் என்று வையுங்கள். அப்போது ஆட்டோ நிச்சயம் தேவைப்படும் சூழல். ஆனால் நடந்தே போகலாம் என்பார். திருவண்ணாமலை பகலில் இருப்பது போல இரவில் இருக்காது. அதன் முக்கிய வருமானமே அண்ணாமலையார் கோவில்தான். நாள்தோறும் கூட்டம் குவிந்துகொண்டே இ

மெக்சிகோவில் #மீடு பூதம்! - ஊடகத்துறை பலி

படம்
குளோபல் வாய்ஸ் அமெரிக்காவின் திரைத்துறை தொடங்கி மீடு புரட்சி, இப்போது மெக்சிகோவில் மையமிட்டுள்ளது. அதுவும் ஊடகத்துறையில். அங்குள்ள பத்திரிகையாளர் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் லிஸ்ட்டை வெளியிட்டு அதிர்ச்சியூட்டி உள்ளார். இதன் விளைவு என்னாகும்? பாதிக்கப்பட்ட பெண், குற்றம் இழைத்தவர்களை உடனடியாக நிறுவனங்கள் வேலையை விட்டு விலக்கும். அதேதான் நிகழ்ந்துள்ளது. மார்ச் 23 தொடங்கிய இந்த ட்விட்டர் பூதம், மெக்சிகோவின் ஊடகத்துறையினரை கலங்கடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் எடுத்த நேர்காணலில் 43 சதவீதம் பேர் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. ரீபார்மா, சிலாங்கோ ஆகிய ஊடகங்கள், குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளன. 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மீடு விவகாரம், 2017 ஆம் ஆண்டில்தான் உலகின் கவனத்தை ஈர்த்தது. மிராமேக்ஸ் நிறுவனர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான புகார்களை நடிகைகள் அளித்தனர். ஆறில் ஒரு மெக்சிகோ பெண்ணுக்கு வன்முறை நிகழ்ச்சி நடைபெறுவதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.  41.3 சதவீத பெண்கள் பால

கறுப்பின எழுத்தாளர்களுக்கு கௌரவம் தேடித்தந்த பெண்மணி!

படம்
ozy தாளின் வெற்றுப்பக்கத்தை ஜெர்கின்ஸ் பார்த்து டெட்லைன் ஆச்சே என்று பதற்றம் கொண்டதில்லை. இருபத்தாறு வயது என்றாலும் வார்த்தைகள் தாளில் கொட்டுகின்றன. அத்தனையும் எளிய மனிதர்களுக்கான சொற்கள். அப்படியிருக்க கவலை என்ன? படைப்பு என்பது கதையோ, கட்டுரையோ, நாவலோ உழைப்பு ஒன்றுதான். ஜெர்கின்ஸூம் கட்டுரை சரியாக வரவேண்டுமென பசியோடு உணவை மறுத்து கணினியோடு போராடியவர்தான்.  திஸ் வில் பி மை அன்டூயிங்: லிவிங் அட் தி இன்டர்செக்ஷன் ஆஃப் பிளாக், ஃபீமேல் அண்ட் ஃபெமினிஸ்ட் இன் (வொய்ட் ) அமெரிக்கா என்ற இவரின் நூல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஏழாவது இடம் பிடித்து சாதித்த நூல். நான் என் எழுத்தின் வழியே விவாதங்களை உருவாக்க விரும்புகிறேன்.  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரஷ்யன், ஜப்பானிய மொழி இலக்கியங்களைக் கற்றவர் ஜெர்கின்ஸ். கிரியேட்டிவ் எழுத்துபற்றிய படிப்பை பெனிங்டன் கல்லூரியில் படித்தவருக்கு ஆறு மொழிகளை பேசத்தெரியும். வகுப்பில் ஒரே கறுப்பினப் பெண் மாணவி இவர்தான்.  தன் பதினான்கு வயதிலிருந்து நாவல்களை எழுதி வருகிறார் ஜெர்கின்ஸ். தெற்கு நியூ ஜெர்சியில் வாழ்ந்து வந்தவர், பிலடெல்பியாவுக

எர்டோகனின் தோல்வி கூறுவது என்ன?

படம்
துருக்கி அதிபர் எர்டோகன்\ தி எகனாமிஸ்ட் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், அங்காராவில் தோற்றுப் போய் உள்ளார். 2003 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்து வருபவர், எர்டோகன். அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு மக்கள் கட்சி 51 சதவீத வாக்குகளுடன் வென்றிருக்கிறது.  நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி 47 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த கலகத்திற்கு பிறகு இது துருக்கி அதிபரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. எர்டோகன் இன்றும் 44 சதவீத ஆதரவுடன் வலுவாகவே இருக்கிறார். அண்மையில் நடந்த மேயர் தேர்தல், மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் என்பதையே உணர்த்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு எர்டோகனுக்கு எதிராக நடந்த கலகத்தை அவரே முன்னின்று ஒடுக்கினார். அதிலிருந்து அமெரிக்காவுக்கு எதிரான போரை நடத்தத்தொடங்கினார் இதனால், நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி சரிந்துள்ளது. எர்டோகனுக்கு இப்போது எதிரான மனநிலை உருவாகியுள்ளது. குர்தீஷ் மக்கள் ஜனநாயக கட்சி இதற்கான பலன்களைப் பெறப்போகிறது. இதன்விளைவாக, முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்யவே தயங்குகின்றனர். அரசியல்

மக்களிடமிருந்து மக்களுக்காக பணம் பெறலாம்!

படம்
மக்களுக்காக மக்கள் பணம் தரலாமா? தேர்தல் என்பது பெரும் பட்ஜெட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்துவதற்கு அரசுக்கு ஆகும் செலவைவிட கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிக செலவு பிடிக்கிறது. தொழிலதிபர்கள், நடிகர்கள் போட்டியிடும்போது, தொண்டர்களைத் திரட்டுவதற்கான செலவு, உணவு ஆகியவற்றை அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் சாதாரண நிலையில் உள்ள கம்யூனிஸ்டுகள் போன்றோர் போட்டியிடும்போது, உண்டியல் குலுக்கித்தான் நிலையை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. எனவே, தற்போது அவர் டெமாக்கிரசி என்ற இணைய வழி நன்கொடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கலாம். கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பொருட்களை வெளியிட்டு, அப்பொருள் உங்களுக்கு பிடித்திருந்தால் நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்களே அதே பாணிதான். தற்போது அவர் டெமாக்கிரசி நன்கொடைத் திட்டத்தில் 14 வகை நிதிகோரும் முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இதனை பிலால் ஸைதி தொடங்கினார். “எங்களுடைய திட்டத்தின் வெற்றியால், இன்று சர்வர் மீது சிலர் தாக்குதல் நடத்தி வலைத்தளத்தை மூட முயற்சிக்கின்றனர். டெ

செக்ஸ் மீது வெறுப்பு ஏன்?

படம்
northwest gift\pinterest போதும் போதும் செக்ஸ் போதும்..... அண்மையில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், பதினெட்டு முதல் 30 வயதான பெண்கள் கடந்த ஓராண்டாக பாலுறவில் ஈடுபடவில்லை என கருத்து தெரிவித்திருந்தனர். இதில் ஆண்களின் அளவு 28 சதவீதம். இதுபற்றிய ஆய்வு முடிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இதற்கு என்ன காரணம் என்று உளவியலாளர் லியோனார்டு சாக்ஸிடம் கேட்டோம்.  வீடியோகேம்சும், பாலியல் படங்களும்தான் இதற்கு காரணம் என ஒரே போடாக போட்டார்.  மற்றொரு உளவியலாளரான ஜீன் ட்விங்கே, டீனேஜ் பருவத்தில் காதலி இல்லாததும், அவர்களோடு ஒன்றாக வாழாததும் இன்று கலாசாரமாக மாறிவருகிறது.இந்நிலையில் பாலுறவு குறைந்துவருவதில் ஆச்சரியமென்ன? என்கிறார். 2014 ஆம் ஆண்டு 35 சதவீத ஆண்களும், 28 சதவீத பெண்களும் தங்களின் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் சராசரி வயது 18- 34. பாலுறவு குறைந்ததற்கு முக்கியக் காரணம், பெற்றோருடன் வசித்து வரும்போது காதலியை எப்படி வீட்டுக்கு கூட்டி வருவது என்ற தர்மசங்கடமான நிலையும், இளைஞர்களின் மாறிவரு

லவ் இன்ஃபினிட்டி: சோறு முக்கியம் ப்ரோ!

படம்
etsy/pinterest 22 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: லவ் ரஞ்சன். சதீஸ் நிர்வானா வினோத் நல்லவர்தான். ஆனால் தான் இப்படி இருக்கிறோமே என்று நினைக்கும்போது பொங்கி விடுவார். கூட நாம் இருந்தால் எரிமலை லாவா நம்மீது கொட்டிவிடும் இல்லையா? அதேதான் நடந்தது. எனக்கு எப்போதும் சாப்பாடு என்பதைவிட படிப்பு என்பது மீது தனிக்கிறுக்கு இருந்தது. அதற்காக வேலராம மூர்த்தி, பூமணி என்று யோசிக்காதீர்கள். நண்பர்கள் கொடுப்பதை எனக்கு படிக்கலாம் என்று நம்பிக்கை தரும் நூல்களை படிப்பேன். இதனால் ஏற்படும் அவமானங்களை, கிண்டல்களைப் பற்றியெல்லாம் அணுவளவும் கவலைப்படாதிருந்தேன். அது அப்போது. அன்று நன்றாகத்தான் விடிந்தது. சரியாக வியாழக்கிழமைகளில் அதுவும் ஒன்று. நான் கையில் இருந்த வேலை செய்து கிடைத்த பணத்தை சாப்பிட்டு, டீ குடித்தும் கரைத்திருந்தேன். கூடவே தங்கியிருந்த வினோத் அண்ணாவின் நண்பர், சாரங்கிநாதன். என்ன வேலை, ஏதோ பிசினஸ் செய்து நஷ்டமாகி விரக்தியில் இருந்தார். அங்கே வினோத் அண்ணாவின் வீட்டில் ஒருவாரமாக டென்ட் அடித்துவிட்டார். என்னைப்போலவேதான். ஆனால் முடிந்தவரை ஒரு வார்த்தை பேசுகிறாரா

தாயிடம் பேசத் தயங்கிய விஷயங்கள் என்ன?

படம்
The Moment of Lift: How Empowering Women Changes the World by   Melinda Gates உலகின் மூன்றாவது செல்வாக்கான பெண்மணி மெலிண்டா கேட்ஸ். உலகம் முழுக்க கேட்ஸ் பவுண்டேஷன் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதுபற்றி பயணத்தை இந்நூலில் விவரித்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.  Maybe You Should Talk to Someone: A Therapist, Her Therapist, and Our Lives Revealed by   Lori Gottlieb உளவியல் மருத்துவரின் உலகைப் பற்றிய நேர்மையான பதிவுகளைக் கொண்ட நூல் இது.  நாம் நம் தந்தையிடமும், தாயிடமும் பேசத் தயங்கும் கூச்சப்படும் விஷயங்களை பதினைந்து எழுத்தாளர்கள் மெய்ப்பட எழுதியுள்ளனர். இதனை தொகுத்துள்ள மிச்செல் ஃபில்கேட், தனது தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர். இதனை சமூக வலைத்தளங்களில் எழுதும்போது உலகெங்கிலுமிருந்து ஆதரவு குவிந்தது. சிலர் இம்முறையில் தனது அனுபவங்களை, கருத்துகளை எழுதினர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இதோ இந்நூலில் உள்ளன.  நன்றி: குட் ரீட்ஸ்

கருப்பு காமிக்ஸ் நாயகன்!

படம்
குளோபல் வாய்ஸ் கருப்பு கதாநாயகன்! காமிக்ஸ் ஆகட்டும், படங்கள் ஆகட்டும் கருப்பின நாயகர்கள் கதையை நடத்திச்செல்வது அரிது. காரணம்,  பதிப்பாளர், கதை எழுதுபவர் என பலரும் வெள்ளையர்களாக இருப்பதுதான். இதைத்தாண்டி கருப்பர்கள் இடம்பெற்றாலும் திருடர்களாக, நகைச்சுவை கதாபாத்திரமாகவே இருப்பார்கள். 1960 ஆம் ஆண்டு வெளியான துர்மா டா மோனிகா (மோனிகா கேங்) என்ற படக்கதையில் கதாநாயகன் ஜெர்மியா என்பவன். பிரேசிலில் வெளிவந்த காமிக்ஸ் இது. நான் வாழ்வதை உலகம் அறிய வேண்டும். நான் நானாக இருப்பதை அவர்கள் அறியவேண்டும் என்ற வசனம் இதில் வெகு பிரபலமானது. இக்கதை சிறுவர்களின் மத்தியில் பிரபலமாக, பதினான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.   இதனை உருவாக்கியர் மௌரிகோ டி சூசா. ஜெர்மியாஸ் என்ற சிறுவனின் நிறம் காமிக்ஸ் தொடங்கியபோதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனை எழுதிய எழுத்தாளர் ரஃபேல் கால்காவிடம் பேசினோம். இடது- ரஃபேல் கால்கா, ஜெபர்சன் ஜெர்மியாவின் சிறுவயது வாழ்க்கை, பாதுகாப்பற்ற சூழல் , இனவெறி ஆகியவற்றை பற்றி காமிக்ஸில் பேசியுள்ளீர்கள். இதன் தாக்கத்தைப் பற்றி கூறுங்களேன்.  ஜெஃபர்சன

மீன்களைக் காப்பாற்றிய கடல் சூழலியலாளருக்கு அங்கீகாரம்!

படம்
indian women blog கடல் சூழலியலாளருக்கு ஃப்யூச்சர் பார் நேச்சர் விருது! திவ்யா கர்நாட், தன் இணையதளத்தில் மீன் தொடர்பான பல்வேறு உணவு வகைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதோடு சீசனில்  கடலில் கிடைக்கும் மீன்வகைகளை அதி துல்லியமாக பதிவு செய்துள்ள அக்கறைக்குத்தான் அவருக்கு ஃப்யூச்சர் ஃபார் நேச்சர் விருது (2019) கிடைத்துள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், திவ்யா.  சிறுவயதிலிருந்து விலங்குகள் மீதான பிரியம், அவரை சூழலியலாளராக மாற்றியுள்ளது.  currentaffairsadda நான் முதலில் கால்நடை மருத்துவராகவே முயன்றேன். ஆனால் காட்டுயிர் சார்ந்த துறையில் காலூன்றி உள்ளேன் என புன்னகைக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது கடல் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்காக தமிழ்நாடு மற்றும் ஒடிஷாவில் பணியாற்றிவர் இவர். ஆமைகளை மீனவர்கள் அழிப்பது போல காட்சியை ஊடகங்கள் உருவாக்கினாலும் அதனை உண்மையில்லை என்று மறுக்கிறார் திவ்யா. சீசனில்லாத போது, மீன்பிடி தடைக்காலத்திலும அவர்களுக்கு வாழ்வாதாரமாக மாறுவது இந்த ஆமைகள்தான். இவற்றை விற்று வரும் பணத்தை, வாழ்வ

இந்திய தேர்தல் 2019: கறுப்பு பணத்தை ஒழிப்பது எப்படி?

படம்
இநியூஸ்ரூம்/கறுப்பு பணம் தேர்தலில் கறுப்பு பணம்! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும்போதும், இடைத்தேர்தலின் போதும் கறுப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது என்ற புகாரை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்த விவகாரத்தில் தொழில்நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகளின் பங்கு உள்ளது என தேர்தல் ஆணையம் கூறிவருகிறது. ஆனாலும் இதன் மீது அரசு பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இவ்வகையில் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்கு அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் தேவை என்று கூறின. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தல் பத்திரங்களையே வெளியிட்டு கல்லா கட்டிவிட்டது. இதில் முதலீடு செய்பவர்கள் யார் என்ற விவரங்கள் வெளிப்படையாக பேசப்படாமல் உள்ளது இதனை தீவிரமான பிரச்னையாக்குகிறது.. இன்று கட்சிகள் பெறும் 70 சதவீத பணம் யார் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் வந்து சேருகிற பணம். ஆனால் இந்த பணம் எங்கிருந்து வருகிறது என சட்டத்திற்கு தெரியாவிட்டாலும், மக்களுக்கு ஏறத்தாழ தெரிந்துவிட்டது போலத்தான். ஆனால் அரசு வெளிப்படையாக ஊழலை ஒழிப்போம் என்று கூறினாலும் அதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அதற்கு என்ன