இடுகைகள்

முதல் உலகப்போர் - சாதித்த தலைவர்கள்

படம்
முதல் உலகப்போரில் முக்கியமான தலைவர்கள்! கெய்சர் வில்ஹெய்ம்(2): ஜெர்மனியைச் சேர்ந்த கொடூரமான மன்னர். அதிகாரம், வட்டார அரசியல் விவகாரத்தைத் தொடங்கியவர் இவரே. ஆஸ்திரியா ஹங்கேரியா நாடுகளுடன் இணைந்து செர்பியாவின் மீது போர் அறிவித்தார். இதனை பின்னாளில் ஜெர்மனி அப்படியே பின்பற்றியது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் அமெரிக்காவுக்கு போரில் ஈடுபட விருப்பம் இல்லை என்று கூறி தேர்தலில் நின்று வென்ற ஆளுமை. இவரே. 1913 முதல் 21 வரை அதிபராக இருந்தவரின் போர் குறித்த முடிவை ஜெர்மனி மாற்றியது. அமெரிக்க வணிகர்களின் கப்பலை ஜெர்மனி தாக்க, அமெரிக்கா போரில் குதித்தது. டேவிட் லாய்டு ஜார்ஜ் இங்கிலாந்து முதலில் போரில் ஈடுபட வேண்டாம் என்றே நினைத்தது. ஆனால் ஜெர்மனியின் அதிகார வேட்கை இங்கிலாந்தின் அந்தஸ்தை குலைத்துவிடுமோ என்று நினைத்தவுடனே போரில் குதித்தது. அதனை தீர்மானித்தவர் பிரதமரான டேவிட்தான். ப்ரீமியர் ஜார்ஜஸ் கிலிமென்சியு பிரான்ஸ் நாட்டின் புலி என அழைக்கப்பட்ட தலைவர். பாரிஸ் மாநாட்டில் ஜெர்மனிக்கு எதிராக பல்வேறு முன்மொழிவுகளை கூறி அந்நாட்டை முடக்கியது இவர் சாதனை. ஜார் நிக்கோலஸ்

கலக்கும் யூட்யூப் குழந்தைகள்!

படம்
யூட்யூப் ஸ்டார்ஸ்! உங்கள் கையில் ஹெச்டி தரத்தில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பதிவு செய்து இணையத்தில் பகிரலாம். இணையத்தில் அப்படி பதிந்து யூட்யூபில் சாதனையாளர்களாக வளர்ந்தவர்களைப் பார்ப்போம்.  மேட்டி பிராப்ஸ் (Matty Braps) 2003 ஆம் ஆண்டு பிறந்து, யூட்யூப் தளத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைச் சம்பாதித்த, அமெரிக்க ராப் பாடகர். 2010 ஆம் ஆண்டு 'ஜஸ்ட் தி வே யூ ஆர் ' என்ற பாடலை வெளியிட்டார். 2014 ஆம் ஆண்டு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களின் மனங்களை வென்றார். இவரின் ஸ்பெஷல், புகழ்பெற்ற பாடல்களுக்கான கவர் பாடல்கள். இன்று யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. http://mattybraps.com/ ஈவன் (Evan) ஈவன் தன்னுடைய யூட்யூப் சேனல் (Evantube) மூலம் தன் வயதுக்கார பையன்களுக்கு நாயகனாகி இருக்கிறார்.  எப்படி? சந்தைக்கு வந்த புதிய பொம்மைகளை விமர்சிப்பது,  ஏன்? எதற்கு? எப்படி? வகையறா  வீடியோக்களை  பதிவிட்டு 60 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார்.  ஈவனின் தந்தை திரை

இதுதான் எங்க சென்டிமெண்ட்!

படம்
இதுதான் எங்க சென்டிமென்ட்! அதிர்ஷ்டமான பேனா, தேர்வு எழுதும் இடம், தேர்வு எண் என சென்டிமெண்டாக சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் உண்டுதானே. அப்படி டி20 விளையாட்டில் கலக்கும் சில வீரர்களின் சென்டிமெண்ட் பழக்கங்கள் இதோ!... தோனி ராஞ்சி தலைவனான தோனி, சொல்லியடிக்கும் சென்னை அணித்தலைவர். ஹெலிகாப்டர் ஷாட் முதல் நொடியில் துல்லியமான ஸ்டம்பிங் வரை சாதிப்பவர், எப்போதும் ஏழாம் எண் ஜெர்சியை மட்டுமே அணிவார். இந்திய அணியிலும், டி20 யிலும் கூட ஏழு என்ற எண் மாறவே மாறாது. ஜூலை 7 அன்று பிறந்தவர் என்பதுவேறு சென்டிமென்டாக பொருந்த, ஏழு என்றால் 'தோனி' என குதூகலமாக ஆர்ப்பரிக்கிறது ரசிகர் படை. விராட் கோஹ்லி அணிவீரர்கள் சொதப்புகிறார்களா? அணியின் நம்பிக்கை சரசரவென சரிகிறதா? அத்தனை அவநம்பிக்கைகளுக்கும் பூஸ்ட் ஏற்றி, வெற்றி உரம் பாய்ச்சி வெல்வது பெங்களூர் கேப்டனான விராட் கோஹ்லியின் பாணி. அனைத்து ஆட்டங்களிலும் அவர் சென்டிமென்டாக கருப்பு பேண்ட் ஒன்றை அணிந்திருப்பார். முதலில் காப்பு ஒன்றை அணிந்திருந்தவர், இப்போது அணிவது கருப்பு பேண்ட் மட்டுமே. அசராம அடிச்சே ஜெயிப்பாரு எங்க தல என்பது ரசி

காதல் - கற்பழிப்பு - வல்லுறவு - காதல் மன்னனின் இருள் கதை!

படம்
அசுரகுலம் ஃப்யூசோஸி மட்சுனகா ஜப்பானின் யாங்காவா நகரில் பிறந்த  மட்சுனகா, தன் சுயநலத்திற்காக நம்மைப் போலத்தான் எதுவேண்டுமானாலும் செய்வார். 1961 ஆம் ஆண்டு பிறந்தவர், பள்ளியில் பல பஞ்சாயத்துகளைக் கொண்டு வந்தார். எல்லாம் காதல் லீலைகள்தான். தன் ஜூனியர் பெண்ணை காதலித்தேன் காதலி தேன் என கேப் கூட விடாமல் சைட் அடித்தார். அதற்காக முழுநேரமும் ரொமான்ஸ் கியரைப் போட்டு கிர் அடிக்கவில்லை. படிப்பிலும் பெயர் சொல்லும் ஆள்தான். ஆனால் என்ன மட்சுனகா செய்த ரொமான்ஸை யாரும் ரசிக்கவில்லை. என்னவாக இருக்கும் என நீங்கள் ரொம்ப யோசிக்காதீர்கள். பள்ளியில் மட்சுனகா செய்த காதல் பிரச்னைகளால் பல பள்ளிகளில் டிசியுடன் அலைந்தார். காதல் வேலி மட்சுனகா, பார்க்க அழகானவர் என்பதை நான் இங்கு சொல்லவேண்டியதில்லை. தன்னை வழிபடும் அடிமை கிடைத்தாலே பெண்கள் கிறங்கிவிடுவார்கள். இதில் கொஞ்சம் சாமுத்ரிகா லட்சணமும் சேர்ந்துவிட்டால் என்னாகும்? ஒரே நேரத்தில் பத்து பெண்களுடன் பழகி சல்லாபித்த தீராத விளையாட்டுப்பிள்ளை விஷாலின் கிராண்ட் ஃபாதர் மட்சுனகா. அதேநேரம் பத்தொன்பது வயதில் திருமணம் செய்துகொண்ட வேகத்தை  அவருடைய நண்பர்களே எ

குடிநீரில் மருந்து கலக்கிறார்களா?

படம்
குடிநீரில் மருந்து கலக்கிறார்களா? ஆம். அமெரிக்காவில் நடந்த புவியியல் தொடர்பான ஆய்வில் அங்கு வரும் குழாய் நீரில் 80 சதவீதம் மருந்துகளின் எச்சங்கள் இருப்பது தெரிய வந்தது. இதில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, மனச்சோர்வைக் குறைக்கும் மருந்துகள் உள்ளடங்கும். இது அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் உண்டு. மருத்துவமனைகளிலிருந்து வரும் கழிவுகள், அல்லது கழிவறைகளில் தூக்கி எறியப்படும் மாத்திரைகள் நீர் போக்குவரத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு இது. முதலில் இப்படி கலந்து வருவதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குறைவாகத்தானே இருக்கிறது என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் ஆய்வுகள் சொன்ன உண்மை, இவை அதிக அடர்த்தியில் நீரில் கலந்து வருகிறது என்பதே. மனச்சோர்வை போக்கும் மருந்துகள் நம் மூளையில்  இயக்கத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தில் ந திப்படுகை அருகே வாழும் மக்களை சோதித்தபோது, அவர்களின் உடலில் கருத்தடை மாத்திரைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தது. இது அவர்களின் ஹார்மோன் சுரப்பை மட்டப்படுத்துகிறது. நன்றி: பிபிசி

க்ரௌடு பண்டிங் அவசியமா - அத்துமீறலா?

படம்
நோயாளிகளைக் காப்பாற்றும் மக்கள் பங்களிப்பு! நோயாளிகளைக் காப்பாற்றுங்கள் என பல்வேறு செய்தித்தளங்கள், நாளிதழ்களில் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நீங்களும் கூட உண்மையை உறுதி செய்து சிலருக்கு பணம் அனுப்பி வைத்திருப்பீர்கள். தற்போது இப்படி பணமற்ற நோயாளிகளுக்கு சிகிச்சைகளுக்கான பணம் திரட்டும் வலைத்தளங்கள் தோன்றியுள்ளன. இம்பேக்ட் குரு, கீட்டோ, மிலாப் ஆகிய வலைத்தளங்கள் இம்முறையில் செயல்படுகின்றன. இதில் எப்படி பணத்தைப் பெறுவது? உங்கள் உறவினருக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்த விபரம்,சிகிச்சை செலவு ஆகியவற்றை சுருக்கமாக எழுதவேண்டும். நிதி உதவி தேவை என கோர வேண்டும். அவ்வளவேதான். அவசர உதவி என்றால் அதனையும் குறிப்பிட்டால் நல்லது. இதில் மேற்சொன்ன வலைத்தளங்கள் ஏன் ஈடுபடுகின்றன. திரட்டப்படும் நிதியில் அவர்களுக்கு பங்கு 5- 10 சதவீதம். இதில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை என்பதால் கமிஷன் தொகைகளுக்கா க போலியாக ஒரு செய்தி உருவாக்கப்பட்டாலும் யாரும் அதனை கேள்வி கேட்க முடியாது. நோயாளியின் நோய் விவரங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இதில் வெளிப்படைத்தன்மை குறைவு. வர்

கொல், கற்பழி, தூக்கியெறி - யோசிரா கொடைரோ

படம்
அசுரகுலம் இவன் வேற மாதிரி - யோசிரா கொடைரோ யோசிரோ கொடைரோ மிகச்சிறந்த கற்பழிப்பு வல்லவர். 1945 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் தன் மாமனாரைக் கொன்றார். அதோடு பத்து பெண்களையும் கொன்று உப்புக்கண்டம் போட்டார். யோசிரோவுக்கு மிகச்சிறந்த கெட்டபழக்கம் ஒன்றுண்டு. கொன்ற பிணங்களோடு பாலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கம். அதனை ஆங்கிலத்தில் நெக்ரோபிலியா என்று அழைக்கின்றனர். தீராத அலைகழிக்கும் பாலுறவு ஆசை இப்படி யோசிராவை அலைகழித்து இன்று இதோ நான் எழுதும் கட்டுரையிலும் அவருக்கு அவமானத்தை தேடி தருகிறது. அவர் வெட்கப்பட ஏதுமில்லை. ஏனென்றால் உலகிலுள்ள சைக்கோ கொலைகாரர்களில் பெரும்பாலானவர்களுக்கு நெக்ரோபிலியா எனும் செக்ஸ் ஆசை உண்டு. இவர் செய்த ஐந்தாவது கொலையில் கர்ப்பிணியின் தொப்புள் வழியாக கத்தியைச் செருகினார். இதிலிருந்தே சார் எப்படிப்பட்ட  கொதிப்பான மனநிலையில் சம்பவங்களை செய்கிறார் என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். யோசிராவின் சமூக சேவைகளைப் பாராட்டி ஜப்பான் அரசு 1948 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது. பின் ஓராண்டுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. நன்றாக வளர்ந

இறைச்சி மட்டுமே உணவு! சரியா - தவறா?

படம்
இறைச்சி மட்டும் உணவாக சாப்பிடலாமா? இறைச்சி மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் பல் விளக்க வேண்டியதில்லை. மாவுப்பொருட்களை சாப்பிடுவதால்தான் நாம் பற்களில் ஒட்டும் இறைச்சியை அகற்ற  பல்விளக்க வேண்டியிருக்கிறது. 1928 ஆம்ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சிப்படி இரு ஆண்களுக்கு உணவாக இறைச்சி மட்டுமே வழங்கப்பட்டது. இதில் ஆய்வு இறுதியில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப்படவில்லை. அதாவது நீண்டகால நோக்கில் நீங்கள் இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி

வீகன் பால்களில் சிறந்தது எது?

படம்
வீகன் பால்களில் எது சிறந்தது? பசு, எருமை பால்களைத் தவிர பிற பொருட்களிலிருந்து பெறப்படும் பால் அனைத்துமே சூழலுக்கு இசைவானவையே. குறைந்தளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன.  குறைந்த பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில் பாதாம் பால் முன்னிலை வகிக்கிறது. காரணம், இம்மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளடக்கி வளருகின்றன. ஆனால் இவற்றைப் பெற நாம் அதிக நீரை கொடுக்க வேண்டியிருக்கிறது. இவற்றின்படி பார்த்தால் சோயா பால் மட்டுமே குறைந்த நீரை எடுத்துக்கொண்டு வளருகிறது. எனவே சோயா பாலை நீங்கள் உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அலர்ஜி பிரச்னையை கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி:பிபிசி

வெயிலில் நின்றால் கொழுப்பு குறையுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சூரிய ஒளியில் நின்றால் கொழுப்பு குறையுமா? சூரிய ஒளி தோலில்பட்டால் உடல் விட்டமின் டி சத்தை தயாரித்துக்கொள்கிறது. இது கொழுப்பு குறைய உதவுகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். கோடையில் நீங்கள் தோட்டவேலை செய்தால் வியர்வை வரும். எடை குறையும். பனிக்காலத்தில் இதைச் செய்யமுடியாது. எனவே டயட்டில் இருந்து எடை குறைப்பதே சிறப்பு. கொழுப்பு குறைய வெயிலில் நின்று நீர்ச்சுருக்கம் ஏற்பட்டுவிடப்போகிறது. ஜாக்கிரதை நன்றி: பிபிசி

குழந்தைகளைக் கொன்றால் காசு!

படம்
அசுரகுலம் சைக்கோ கொலைகாரர்கள் மியூகி இஷிகாவா 1948 ஆம் ஆண்டு ஜனவரி  12. டோக்கியோவின் வசிடா பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் ஐந்து குழந்தைகள் இறந்துபோனதை விசாரித்து வந்தார்கள். குழந்தையை எதேச்சையாக பிரேத பரிசோதனை செய்தபோதுதான் குழந்தைகள் இயற்கையாக இறக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. அந்த குற்றத்திற்கு காரணம் என மியூகி இஷிகாவை கைது செய்த து காவல்துறை. ஐந்து குழந்தைகள் மட்டுமல்ல, நூறு குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்ட விவகாரம் அப்போதுதான் தெரிய வந்தது. 1897 ஆம் ஆண்டு இஷிகாவா பிறந்தார். இவரின் இளமைக்காலம் பற்றி அதிக விவகாரங்கள் தெரியவில்லை. ஜப்பானின் குனிடோமி நகரில் பிறந்தார். டோக்கியோ பல்கலையில் பிறந்தவர், டகேஷி இஷிகாவாவை மணந்தார். மியூகியின் வேலை, கோடோபுகி  மருத்துவமனையில் செவிலி. பின்னர்,  அம்மருத்துவமனையின் இயக்குநரானார். இம்மருத்துவமனை குழந்தைகள் பிறப்புக்கு புகழ்பெற்றது. அந்த காலகட்டத்தில் ஜப்பானில் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. பல தம்பதிகள் குழந்தை கருவாக இருக்கும் நிலையிலும், குழந்தை வளர்க்க முடியாதவர்களும் அந்த மருத்துவமனைக்கு வந்தனர். இந்த குழந்