இடுகைகள்

சுதேசி பசுக்களை இப்படியும் காப்பாற்றலாம்- இந்திய அரசின் யூடர்ன்!

படம்
சுதேசி பசுக்களை பாதுகாக்கும் புது வழி! பிரேசில் நாட்டில் கிர் எருதுகளுக்கான  விந்தணுக்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பிரேசில் அரசிடம் ஒப்பந்தம் செய்து, விந்தணுக்களை உறைதல் செய்து வாங்க முடிவெடுத்தனர். ஆனால் உள்நாட்டில் இந்த விஷயம் தெரிந்து போராட்டம் வெடிக்க அரசு பின்வாங்கியது. தற்போது பிரேசில் அரசு மூலம் ஒரு லட்சம் விந்தணு ஊசிகளைப் பெற அரசு முடிவு செய்துள்ளது. கிர் காளைகள் விரைவில் இந்தியாவில் உற்பத்தியாகும் என கால்நடைத்துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் கூறியுள்ளார். கிர் எருதுகளுக்கான விந்தணுக்களை பாவ்நகர் ராஜா முன்னர் பிரேசில் நாட்டுக்கு பரிசாக வழங்கினார். அவர்கள் அதனைப் பாதுகாத்து வைத்தனர். தென் அமெரிக்க நாடுகளில் கிர் இன பசுக்கள் பல்வேறு தட்பவெப்ப சூழல்களுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொண்டு உள்ளன. மேலும் பாலும் அதிகம் கிடைக்கிறது. அதேசமயம் இந்தியாவில் மேற்கத்திய பசு இனங்கள் பிரபலப்படுத்தப்பட்டன. அதிக பால் என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டுப்பட்ட மக்கள், நாட்டு மாடுகளை மறந்தனர். காலப்போக்கில் நாட்டு மாடுகள் காணாமல் போயின. தற்போது 15.17 மில்ல

ஊட்டச்சத்து பற்றிய கவனத்தை இந்திய அரசு கைவிட்டுவிட்டது! - சுமன்த்ரா ரே!

படம்
வலதுபுறம் சுமன்த்ரா ரே இந்தியாவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. அதேசமயம் சில மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். அதில் தமிழ்நாடும் ஒன்று. போஷன் அபியான் எனும் ஊட்டச்சத்து திட்டத்தை நிறைவேற்றி அண்மையில் மத்திய அமைச்சரிடம் பரிசும் பெற்றாயிற்று. இதன் பொருள், இந்தியா இத்திட்டத்தில் வெற்றிபெற்றது என்பதல்ல. இதுபற்றி இங்கிலாந்திலுள்ள சுமன்த்ரா ரேயிடம் பேசினோம். இவர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையம் எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு என்ன? ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பது தனிப்பிரச்னையல்ல. நிறைய பிரச்னைகள் இதில் ஒன்றாக இழைகளாகப் பின்னிப்பிணைந்துள்ளன. பொதுவாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பதை புரதப்போதாமை என குறிப்பிடலாம். பல்வேறு வைட்டமின்கள் பற்றாக்குறை எனலாம். இதற்கு குழந்தைகள் பிறக்கும் குடும்பத்தின் வறுமையும் முக்கியக்காரணம். அங்கு சாப்பிட ஏதுமே கிடைப்பதில்லை. எனவேதான் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஒற்றைப் பிரச

சிறுகுறு தொழில்துறைக்கு என்னாச்சு? - அரசின் பாதகமான நிதி,பணக்கொள்கை!

 இந்தியாவிலுள்ள 6.3 கோடி சிறுதொழிலாளர்கள் ஆட்டோமேஷன், அல்காரிதம் என தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்றபடி தொழில்களை மேம்படுத்தி, வருகிறார்கள். நாட்டின் நாற்பது சதவீத ஏற்றுமதிக்கும், 28 சதவீத உள்நாட்டு உற்பத்திக்கும் உதவுவது இவர்கள்தான். தோராயமாக 11 கோடிப்பேருக்கும் மேலாக வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறுகுறுகுறுந்தொழில் துறை, விவசாயத்துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்குகிறது. மத்திய அரசு பதிவு செய்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக 350 கோடியை இரு சதவீத வட்டியுடன் வழங்குகிறது. கூடவே முத்ரா கடன் வசதியும் உள்ளது. ஆனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக இந்திய அரசு செய்த பணமதிப்பு நீக்க முயற்சியில் இத்துறையின் வளர்ச்சி முடங்கியது. இதன்விளைவாக, தொழில்துறை உற்பத்தி இண்டெக்ஸில் (IIP) 3.6 சதவீத வளர்ச்சி மட்டுமே இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது. இக்காலகட்டத்தில் வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வந்தது. இதைக் குறைக்க, ரிசர்வ் வங்கி கடன் தரும் முறைகளையும் மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதனால், சிறுகுறு தொழிலாளர்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தடுமாறினர்.  இதற்காகவே இந்திய அரசு, செபியின்

அரசு பொதுத்துறை பங்குகளை விற்பதே சரியானது! - அரவிந்த் பனகரியா

படம்
நியூஸ்கிளிக் வாகனத்துறை, நுகர்வுப்பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைத்துள்ளது. ஆனால் அரசு, பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பங்குகளை குறைத்துக்கொண்டால் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். வாகனத்துறை உற்பத்தி தேக்கமடையத் தொடங்கியதும், அரசு நிதியளித்து உதவ வேண்டும் என்ற குரல்கள் அத்துறையிலிருந்து எழத் தொடங்கிவிட்டன. உண்மையில் அரசு தாராளமயமாக்கல் கொள்கைக்காக இறக்குமதிக் கொள்கைகளைத் தளர்த்தியுள்ளது. ஆனாலும் உள்நாட்டு உற்பத்தியைக் காக்க, அதிகளவு சுங்கவரியை வசூலித்து வருகிறது. இதன்காரணமாகவே, இந்திய வாகனத்துறை உற்பத்தி தேக்கத்தால் பெரியளவு பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சொகுசு கார்களுக்கு 100 சதவீத சுங்க வரி உண்டு. அதிலும் 28 லட்சத்திற்கும் குறைவான கார்களுக்கு 60 சதவீத வரியும், பயன்படுத்திய கார்களுக்கு 125 சதவீத வரியும் இந்திய அரசு விதிக்கிறது. இதன் விளைவாக, சிறிய கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இந்தியாவில் இன்றும் மூடப்படாமல் இயங்கி வருகின்றன. பொருளாதார தேக்கம் என்பது

வங்கிகள் இணைப்பு- பலமா, பலவீனமா?

படம்
நியூஸ்18 வங்கிகள் இணைப்பு பொருளாதாரத்தை பலப்படுத்துமா? அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். இதில் முக்கியமானது, 27பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து 12 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஆகும். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் வங்கி இணைப்பு அறிவிக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் மாதத்தில் தேனா, விஜயா வங்கிகள் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதற்கு முன்பு, பாரத வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன.  ”பலவீனமான வங்கிகளாக தனித்தனியாக இருப்பதற்குப் பதில், ஒருங்கிணைத்தால் பலம் பொருந்திய ஒரே வங்கியாக மாறும் ”என மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார். இதில் கூறாத உண்மையும் ஒன்று உண்டு. அது கடன்சுமைதான். விஜயா வங்கி, வாராக்கடன் குறைவாகவும், லாபம் ஈட்டல் அதிகமும் கொண்டது. ஆனால் தேனா வங்கி, வாராக்கடன் விகிதம் அதிகம் கொண்டது. பரோடா, விஜயா ஆகிய இரு வங்கிகளும் தேனாவுடன் இணைக்கப்படும்போது, தேனா வங்கியின் வாராக்கடன் சுமையையும் மற்ற இரு வங்கிகள் பகிர வேண்டி வரும்.  வங்கிகள் இணைப்பு என்பது மின்னஞ்சல் இணைப்பு

நவீன தலைமுறையின் போராட்டக்குரல் - அலிசியா கார்ஸா!

படம்
out.com மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! அலிசியா கார்ஸா கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர். தி கார்டியன் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதியுள்ளார். தி நேஷன் பத்திரிகையில் செயற்பட்டவர், பெண்களுக்கான பல்வேறு அமைப்புகளில் செயல்பட்டுள்ளார். பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனும் அமைப்பின் துணை நிறுவனர் அலிசியா. சாண்டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலையில் படித்தார். அப்போதே, பெண்களுக்கான உரிமைகள், கருத்தடுப்பு விஷயங்களைப் பற்றிப் பேசினார். பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகள் பேசும் அமைப்பின் ஸ்லோகன் போன்றவற்றை இவரே உருவாக்கினார். தனது பாலின விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்தவர், சக பெண் துணையான திருநங்கையுடன் வாழ்ந்து வருகிறார். சான்பிரான்சிஸ்கோ கடற்புர பகுதியில் பல்வேறு மனித உரிமைச் சம்பவங்களை செய்தவர், இவர். இதற்காக சில விருதுகளையும் வென்றிருக்கிறார். ட்ரேவோன் மார்ட்டின் என்ற இளைஞர், ஜார்ஜ் ஸிம்மர்மேன் என்பவரால் அநீதியாக சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்காக நீதிவேண்டி போராடியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. மேலும் மாணவர் உரிமை, இயற்கை வளங்கள

மனதின் இருளைப்பேசும் படம்- மனு - துரத்தும் துயரத்தின் தடம்!

படம்
மனு - தெலுங்கு இயக்கம் - பனிந்திரா நசரேட்டி ஒளிப்பதிவு - விஸ்வநாத் ரெட்டி இசை - நரேஷ் குமரன் கதைக்கரு: சொல்லமாட்டோம். கதையின் பாதையை வேண்டுமானால் சொல்லலாம். ஒரு பார். அங்கே ஒரு பெண் அமர்ந்து ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் பேச்சிலிருந்து ஆண், ஓவியர் என்று தெரிகிறது. அப்போது ஓவியரின் செய்கை அப்பெண்ணுக்கு எரிச்சலூட்ட அப்பெண் மதுவை அவரின் சட்டை மீது ஊற்றி விட்டு கோபமாக எழுந்து போகிறாள். பாரின் மூலையில் இருப்பவன், கையில் இருந்த தாளைப் படித்துவிட்டு ஆத்திரமுறுகிறான். அதில் அவன் பணத்தை கட்டாவிட்டால் இரண்டாவது சிறுநீரகமும் பிடுங்கப்படும் என்று எழுதியிருக்கிறது. பின் அப்பெண் கோபமாக நடந்துகொள்வதைப் பார்க்கிறான். மதுவைக்குடித்துவிட்டு மெல்ல எழுந்து அவளை பின் தொடர்கிறான். ஓவியர், பார் சர்வரிடம் மேலும் மது வாங்கி அருந்துகிறார். அப்போது அங்கு இன்னொரு வயதானவர் வருகிறார். தன் கையில் எதையோ ரசித்துப் பார்க்கிறார். திடீரென வாசல் பக்கம் பார்த்தால் மூவர் அந்த வயதானவரை வெறித்து பார்த்துவிட்டு அவரை நோக்கி வருகின்றனர். இதுபோதும்... காட்சிகளாக இவ்வளவு கூறினால் போதுமானது

என்னைக்கொல்பவன் யார்? - பியோம்கேஷை மிரட்டும் புதிய வழக்கு!

படம்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் அனிர்பன் பட்டாச்சார்யா, சுப்ரதா தத்தா, ரிதிமா கோஷ் சக்ரபோர்த்தி நடிக்கும் பியோம்கேஷ் சீசன் 2 இயக்கம் சௌமிக் சட்டோபாத்யாய இம்முறை வித்தியாசமான வழக்கை பியோம்கேஷ் எதிர்கொள்கிறார். தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தே அதனைக் கண்டுபிடிக்க காசு கொடுக்கிறார் ஊதாரி ஸ்த்ரீ லோலரான சத்ய காம்தாஸ். தான் இறக்கப்போகிறோம் என்பதை விட யார் மூலம் இறக்கப்போகிறோம் என்பதை அறியவே அவர் விரும்புகிறார்.  அப்போது பணத்தேவையில் இருந்த பியோம்கேஷ் ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு, துப்பு துலக்க சுசித்திரா எம்போரியம் செல்கிறார். அங்கு, அதன் முதலாளியான தாஸின் அப்பாவைச் சந்திக்கிறார். ஆனால் அவர்களின் வருகையைக் கண்டுபிடித்துவிட்ட தாஸ், அவர்களுக்கு அவராகவே கம்பளிக் கோட்டை தேர்ந்தெடுத்து 230 ரூபாய் பில்லை 100 ரூபாயாக குறைத்து தருகிறார். கூடவே என்னை பின்தொடர்ந்து வராதீர்கள் என எச்சரிக்கிறார்.  அப்போது தாஸின் காதலில் விழுந்து, கற்பைப் பறிகொடுக்கிறார் அன்னபூர்ணா தேவி. அவரின் கடையில் வந்து நின்று கல்யாணத்திற்காக கெஞ்சுகிறார். அங்கு கண்ணீர் மல்க நிற்பவருக்கு,  உடனே புடவை ஐந்தைக் க

பெலுடா கதைகள் - பம்பாய் கொள்ளையர் மற்றும் தங்கக்கோட்டை!

படம்
புத்தக விமர்சனம் பம்பாய் கொள்ளையர்கள் - தங்க கோட்டை சத்ய ஜித்ரே பெலுடா தொடர்கதை வரிசை தமிழில்: வீ.பா. கணேசன் பாரதி புத்தகாலயம் இரண்டு நாவல்களும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைகள்தான்.  பெலுடா, தபேஷ் என்ற இருவர்தான் இதில் நாயகர்கள். பெலுடா  எனும் பிரதேஷ் மித்தர் புகழ்பெற்ற உண்மை ஆய்வாளர். இவரின் உறவினர், சிறுவன் தபேஷ். பம்பாய் கொள்ளையர்கள் கதையில் எழுத்தாளர் லால்மோகன், ஒரு கதை எழுதுகிறார். அதில் மும்பையிலுள்ள சிவாஜி கோட்டை பற்றி பெலுடா தகவல் கொடுக்க, கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக எழுதிவிடுகிறார். இதனைப் படிக்கும் கடத்தல்காரர், அவரைப் பின்தொடர்கிறார். அப்போது, அதிர்ஷ்டவசமாக அவரது கதையை படமாக தயாரிக்க மும்பையைச்சேர்ந்த கோரே என்ற தயாரிப்பாளர் இசைகிறார். அதற்கு மும்பைக்குச் செல்லும்போது, அவரின் கையில் சன்யால் எனும் மற்றொரு படத்தயாரிப்பாளர் பார்சல் ஒன்றை கொடுக்கிறார். அதனை மும்பையில் சிவப்பு சட்டைக்கார ரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் இப்பணியை பெலுடா விரும்பவில்லை. எழுத்தாளர் லால்மோகன் சின்ன உதவிதானே, அடுத்த கதையை சன்யால் வாங்கிக்கொள்கிறார் என

மருத்துவர்களுக்கு எதற்கு விடுமுறை? - ஒடிசா பரிதாபம்!

படம்
தோல் பாதிப்புக்காக அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவமனை கூட வேண்டாம் என்று ஞாயிறு ராயப்பேட்டை கிளம்பினேன். பொதுவாக எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் மருத்துவமனைகள் உண்டு. கொடுமுடி, சிவகிரி என இரண்டு மருத்துவமனைகளும்தான். ஆனால் ராயப்பேட்டையில் அப்படியில்லை. ஞாயிறு ஒருநாள் மட்டுமே எனக்கு விடுமுறை. நான் மற்ற வேலைநாட்களில் வந்து பார்ப்பது நடக்காத விஷயம். மருத்துவமனையில் பாதுகாவலரை அடையாளம் காட்டச்சொல்லி யோகா இயற்கை வாழ்வியல் மையம் நோக்கிச் சென்றேன். கதவு திறந்திருந்தது. உள்ளே நோயாளிகளின் இருக்கையில் ஒருவர் அமர்ந்து அங்கு பணியாற்றும் பெண் ஊழியருடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தார். நான் நுழைந்து மருத்துவரைத் தேடினேன். ஏன் என்கிறீர்களா? சித்த மருத்துவரைப் போல அடக்கமான மனிதர்களை எங்குமே பார்க்க முடியாது. அமைதியாக அறையில் சம்மணங்கால் போட்டு அகத்தியர் போல அமர்ந்துவிடுவார்கள். நாள்பட்ட வியாதிக்கார ர்கள் மட்டுமே வருவார்கள். அவர்களும் ஆறு மாதங்களுக்குள் காலாவதி ஆகிவிடுவார்கள்.இவர்களுக்கு வைத்தியம் செய்து அவரும் விரக்தியாகி விடுவார். உடனே ஊழியர் கேட்டார். என்னப்பா வேணும்? சித்தா டாக்டரைப் பார

பொருளாதாரத்தை கிரிப்டோ கரன்சி ஆளும்! - இங்கிலாந்து கவர்னர் யூகம்!

படம்
அமெரிக்க அரசின் டாலர் என்பது வர்த்தக பொருள் என்பதோடு அரசியல் அதிகாரமாகவும் உள்ளது. ரூபாயில் வர்த்தகம் செய்யும்போது, இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம் டாலரில் வணிகம் செய்யும்போது கிடைப்பதில்லை. ஆனால் அதை கைவிட முடியாத தற்கு காரணம், அமெரிக்க மீதான பயம்தான். இதில் முஸ்லீம் நாடுகள், மிக தைரியமாக அமெரிக்காவை எதிர்க்கின்றன. காரணம், அங்கு நிறைந்துள்ள எண்ணெய் வளம், பொருளாதார பலம்தான். டாலர், பௌண்டுகளுக்கு மாற்றாக டிஜிட்டல் பரிமாற்றத்தில் கிரிப்டோ கரன்சிகள் வந்தபின் அனைத்தும் மாறியுள்ளன. குறிப்பிட்ட பணத்தை வணிகத்தில் பயன்படுத்தவேண்டும் என்ற நிர்பந்தம் இனி இல்லை. தற்போதைய பாங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னி, எதிர்காலத்தில் ஃபேஸ்புக்கின் லிப்ரா போன்ற விர்ச்சுவல் கரன்சிதான் உலகை ஆளும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இன்றுவரை வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலர் மட்டுமே ஏகபோகமாக உள்ளது. 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ்  ஒப்பந்தப்படி டாலர் உலகின் சக்திவாய்ந்த கரன்சியாக மாறியது. இதன் மதிப்பை தக்க வைத்து அரசியல் காய் நகர்த்தி முதன்மையான நாடாக மாறியது அமெரிக்கா. இன்று உலகம் முழுக்க பல