நோய்த்தொற்றை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைவது முக்கியம்! - ரணில் விக்ரமசிங்கே
tnie அரசியல் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை முன்னாள் பிரதமர். தெற்காசியாவில் நோய்த்தொற்று பாதுகாப்பிற்காக நாடுகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். அவரிடம் பேசினோம். பல்வேறு நாடுகள் நிலப்பரப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்? பெருந்தொற்று பரவிவருகிறது. அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறந்த தலைமை கிடைத்திருந்தால் அனைத்து நாடுகளும் இதனை எளிதாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். சார்க் மாநாட்டில் பல்வேறு நாடுகளும் ஒன்றாக இணைந்து நிற்பது நல்ல நடவடிக்கை. இந்தியாவும் பிற நாடுகளும் தங்களுக்குள் மருத்துவ நடவடிக்கைகள் சார்ந்து உதவிகளைப் பரிமாறிக்கொண்டால் எளிதாக நோய்த்தொற்று விஷயங்களை சமாளிக்க முடியும். மேலும் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும். இலங்கையில் சிறப்பான அடிப்படை சுகாதார கட்டமைப்பு உள்ளது. அதேபோல இந்திய மாநிலமான கேரளத்திலும் உள்ளது. இவை இரண்டு பகுதிகளும் தங்களுக்குள் உதவிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு தங்களுடைய ஒத்துழைப்பை பலப்படுத்தலாம். சார்க் நாடுகளுக்கான அவசர