கர்ச்சீஃபை விட டிஷ்யூ தாள்களே சிறந்தவை! - மிஸ்டர் ரோனி பதில்கள்
மிஸ்டர் ரோனி விலங்குகளின் கண்மணி மாறுபட்டிருப்பதற்கு என்ன காரணம்? விலங்குகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடும் பழக்கம் கொண்டவை. எனவே அதற்கேற்ப அதன் கண்கள் இரையைப் பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பாம்புகளுக்கு மட்டுமல்ல, எலிகளுக்கும் இதே போன்ற கண் அமைப்புகள் உண்டு. யார் விழிப்புணர்வாக இருக்கிறாரோ அவரே இந்த திறன் மூலம் வெல்வார். வென்றால் உலகில் வாழும் வாய்ப்பு கிடைக்கும். மனிதர்களின் கண்களில் இருக்கும் தசைகளை விட கூடுதலாக தசைகள் இதற்கு தேவைப்படுகின்றன. விலங்குகள் அதனால்தான் சிறப்பாக வேட்டையாட முடிகின்றது. தூங்கும்போது கனவில்தான் கிரியேட்டிவிட்டியான விஷயங்கள் கிடைக்குமா? பொதுவாக முக்கியமான கண்டுபிடிப்பாளர்கள், தங்களின் சாதனைகள் பற்றி பேசும்போது இப்படி சொல்லியிருக்க கூடும். கனவுகளில் வரும் விஷயங்களுக்கு பொதுவாக லாஜிக் கிடையாது. ஆனால் அதனை நீங்கள் லாஜிக்கோடு பொருத்தி யோசித்தால் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. எழுவதற்கும் தூங்குவதற்கும் இடைப்பட்ட ஹிப்னோஜோகிக் நிலையில்தான் பெரும்பாலும் கிரியேட்டிவிட்டி மடை உடைத்து பாய்கிறது. ஃபிராங்கன்ஸ்டைன் நாவல் எழுதிய மேரி ஷெல்லி கூட இந்த