இடுகைகள்

இணைய உலகை ஆளும் கருப்பு உலக ராஜாக்கள்! எதிர்கொள்வது எப்படி?

படம்
        பிக்சாபே   கருப்பு உலக ராஜாக்கள் ! இன்று நம்முடைய தினசரி நடவடிக்கைகள் பலவும் இணையம் சார்ந்ததாக , ஸ்மார்ட்போனிலேயே செய்துகொள்ள முடிவதாக மாறிவிட்டன . அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே இணையம் மூலம் செய்யமுடிகிறது . பல்வேறு கட்டணங்களை ஸ்மார்ட்போனிலிலுள்ள செயலிகள் மூலம் கட்ட முடிகிறது . அதேசமயம் , இதில்தான் பல்வேறு தில்லுமுல்லும் , மோசடிகளும் நடந்தேறுகின்றன . மார்ச் 11 அன்று , உலக சுகாதார நிறுவனம் கோவிட் -19 நோயை பெருந்தொற்றாக அறிவித்தது . இக்காலத்தில் மக்களுக்கு ஏராளமான ஸ்பாம் எனும் குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன . இவற்றை அவசர உதவி தேவை என்று திறந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டன . கணினியில் இருந்த தகவல்கள் அழிந்துபோயின . இதுபோன்ற சூழலைத் தடுக்கவே சீனா 1 லட்சம் , பாகிஸ்தான் 10 ஆயிரம் , இந்தியா 1000 பேர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கு எடுத்து தகவல்களை பாதுகாத்து வருகின்றனர் . இவர்களின் செயல்பாட்டை (Hackers as a service) என்று அழைக்கின்றனர் . பொருளாதார மந்தநிலை உள்ளபோதும் , ஹேக்கர்ஸ்களால் பல்வேறு இணையம் சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன அண்மையில் சீன ஹேக்கர்கள் ,

குளோனிங் முறைக்கு உருவாகும் எதிர்ப்புகள்!

படம்
      காணாமல் போன குளோனிங் முறை ! நம்மைபோல இன்னொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? இந்த எண்ணத்தை சாத்தியப்படுத்திய குளோனிங் ஆராய்ச்சிகள் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன . ஆனால் இன்றுவரை டிஎன்ஏ விஷயங்களில் நிறைய முன்னேற்றங்களை அடைந்தும் , ஆராய்ச்சியாளர்கள் அதனை பெரியளவில் தொடரவில்லை . இம்முறையில் உள்ள இடர்ப்பாடுகள்தான் இதற்கு காரணம் . 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறியாடு குளோனிங்கில் உருவாக்கப்பட்டது . இம்முயற்சி வெற்றியடைய 277 முறை ஆராய்ச்சியாளர்கள் உழைக்கவேண்டியிருந்தது . அதைத் தொடர்ந்து முயல் , எலி , குதிரை , நாய் பல்வேறு விலங்குகளும் உருவாக்கப்பட்டன . குளோனிங் முறையின் மூலம் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முடியும் என்றுதான் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன . ஆனால் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட செல்களால் உருவாகும் குளோனிங் நகலின் வாழ்நாள் குறைவாகவே உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது . தானம் பெறப்பட்ட குரோமோசோம்களை கருவில் வைத்தாலும் அதன் தன்மை , மனிதர்களுடையதைப் போல இயல்பாக இல்லை . தானம் பெறப்பட்ட முட்டையிலிருந்து மையக்கருவை எடுப்பதும் கடினமானதாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த

எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று யோசிக்கலாம் வாங்க!

படம்
  cc   எதிர்கால வாழ்க்கை இப்படித்தான் ! சுவர்கள் வீடியோகேம் பாத்திரங்களுக்கு மட்டும்தான் காயங்களை குணப்படுத்திக்கொள்ளும் திறன் இருக்குமா என்ன ? வீட்டுச்சுவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள கோட்டிங் மூலம் எளிதில் சரி செய்யலாம் . இதிலுள்ள மைக்ரோகேப்சூல்தான் இப்பணியைச் செய்கிறது . ஸ்டோலோடுசன் என்ற நிறுவனம் , நீரை உள்ளேவிடாத பெயின்டை உருவாக்கியுள்ளது . 500 நிறங்களில் கிடைக்கும் இந்த பெயின்ட் மூலம் வீடுகளின் சுவர்கள் , தலைமுறைகளுக்கும் பொலிவை இழக்காது . ஜன்னல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் ஜன்னல் அமைப்பை கண்டறிந்துள்ளனர் . அறைக்குள் வெளிச்சம் மூலம் கிடைக்கும் வெப்பத்தை தடுக்கமுடியும் . இதிலுள்ள நானோ கிரிஸ்டல்ஸ் அமைப்பு அறைக்குள் வரும் 90 சதவீத புற ஊதாக்கதிர்களைத் தடுக்கிறது . வெளிச்சத்தையும் , வெப்பத்தையும் தடுக்கும் வேளையில் , நானோகிரிஸ்டல் மின் அமைப்பு வெளிச்சம் மூலம் கிடைக்கும் வெப்ப சக்தியை மின்னாற்றலாக சேமித்துக்கொள்கிறது . பாதுகாப்பு இனிமேலும் பாதுகாப்பிற

ரத்த இழப்பைத் தடுக்கும் வேதிப்பொருள் கண்டுபிடிப்பு!

படம்
      cc ரத்த இழப்பைத் தடுக்கும் கண்டுபிடிப்பு விபத்து நேர்ந்த பிறகு ஒருவரை அரும்பாடுபட்டு அவசர ஊர்தியில் மருத்துவமனை கொண்டு சென்றாலும் கூட அவரின் உயிருக்கு நேரும் ஆபத்து , ரத்த இழப்பு காரணமாகவே நடக்கிறது . ரத்தம் உறைதலை வேகப்படுத்தினால் , ரத்த இழப்பை கட்டுப்படுத்தினாலே சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றிவிடலாம் .. காயங்களின் வழியாக ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க , அதிலேயே பிளேட்லெட்ஸ் செல்கள் உண்டு . சிறிய காயங்களில் வெளியேறும் ரத்தம் என்றால் இந்த அமைப்பு காப்பாற்றுகிறது . அதிக ஆபத்தான நிலைகளில் பிளேட்லெஸ் சிறப்பாக செயல்படுமா என்பது கேள்விக்குறிதான் . ‘’’ இந்த ஆராய்ச்சியின் முக்கியமான நோக்கம் , ஒருவருக்கு ஏற்படும் ரத்தக்கசிவை உட்புறமாக முடிந்தளவு தடுப்பதுதான் . இதன்மூலம் ரத்த இழப்பு நிறுத்தப்படும் . அவரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றலாம் '’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் மூத்த ஆராய்ச்சியாளரான சமீர் மித்ரகோத்ரி . ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள வேதிப்பொருளை நேரடியாக ஊசி மூலம் அல்லதூ சலைன் பாட்டிலின்

தனிநபராக பறக்கும் வாகனங்கள் பெருகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது! - ஹோவர்போர்டு முதல் ஜெட்பேக் வரை

படம்
      cc     பறக்கலாமா? ஸபாடா நிறுவனத்தின் ஜெட் ஹோவர் போர்டு மூலம் 3 ஆயிரம் மீட்டர்கள் உயரத்திற்கு பறக்கலாம். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பறக்கமுடியும் தன்மை கொண்டது இக்கருவி. இந்நிறுவனத்தின் ஃபிளைபோர்டு ஏர் என்பதில் டேங்கை நிரப்பினால் பத்துநிமிடங்கள் காற்றில் பறக்கலாம். அமெரிக்க ராணுவம் இந்நிறுவனத்தின் கருவிகளை பார்வையிட்டுள்ளது. பறக்கும் கார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பறக்கும் கார் பற்றிய ஆராய்ச்சிகள் நடப்பதாக தகவல் வரும். ஆனால் நடைமுறைக்கு வராது. இனிமேல் அந்தளவு தாமதம் நடக்காது. வகானா என்ற பெயரில் ஏர்பஸ்  நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை தயாரித்தது. கடந்த நவம்பரில் ஏர்பஸ் நிறுவனம், பரிசோதனை முயற்சியை தொடங்குவதற்கு சரி என்று சொல்லி கட்டைவிரலை உயர்த்திவிட்டது. துபாயில் ஏர் டாக்சியை சோதனை செய்வதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள். காரணம் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்தான். வோலோகாப்டர் என் ஏர் டாக்சியில் இருவர் முப்பது நிமிடங்கள் பறக்கலாம். இறக்கை இல்லாமல் பறக்கலாமே என்று கூறினால், அர்பன் ஏரோநாட்டின் ஃபேன்கிராப்ட் என்ற பறக்கும் காரைத்தான் அணுக வேண்டும். முதலில் பறக்கவும் இறங்கவும் ரன்வே

எதிர்காலத்தில் போர்க்களத்தில் அதிகம் பயன்படும் டிரோன் விமானங்கள்!

படம்
      இன்று மனிதர்கள் செல்லமுடியாத இடங்களுக்கு டிரோன்கள் செல்கின்றன. பணிகளை முடிக்கின்றன. தீவிரவாதிகளை கண்டறிந்து களையெடுப்பது, முக்கியமான இடங்களை கண்டறிவது, பாதுகாப்பு பணிகளை செய்வது, இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடங்களை பார்வையிடுவது ஆகியவற்றுக்கும் டிரோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். உளவாளி இங்கிலாந்தில் தரானிஸ் என்ற பெயரில் டிரோன் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதன் வேகம் 1,127 கி.மீ. இதனை ரேடார் மூலம் கூட பார்க்க முடியாது. விரைவில் போர்க்களத்தில் டிரோன்கள் நிறைய பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் 2015ஆம் ஆண்டு தொடங்கிவிட்டன. க்வாட்காப்டர் எனும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் மூலம் குறிப்பிட்ட ஆட்களை கூட திட்டமிட்டு கண்காணித்து கொலை செய்யமுடியும். இதுபற்றி எலன் மஸ்க், ஸ்டீவ் வோஸ்னியாக்கி ஆகியோர் இப்போதே எச்சரித்து விட்டார்கள். அமெரிக்கா இத்தகைய தாக்குதல்களை தீவிரவாதிகளிடம் சோதித்து பார்க்க தொடங்கிவிட்டார்கள். டிரோனை ஒருவர் அமெரிக்காவில் இருந்தே இயக்கினால் போதும். சேதம் குறைவு பாருங்கள். உடைந்தாலும் டிரோன் மட்டும்தான் போகும். இலக்கை சரியானபடி தாக்குவதும் எளிது.. விண்வெளி ஆய்வு நாசா ப

டீசல்கார்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு குறைவு! - ஹைபிரிட் கார்களுக்கு ஆதரவு பெருகலாம்!

படம்
  cc   எதிர்கால கார்கள் டீசல்கார்களை நகரங்களுக்கும் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்படலாம். டீசலுக்கான வரிகள் உயர்த்தப்படலாம் இதனால் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் டீசல் கார்களின் தயாரிப்பை கைவிடுவது உறுதி. மெர்சிடிஸ் நிறுவனம், டீசல் கார்கள் முழுக்க அழிந்துவிடாது என்று கூறியிருக்கிறது. மெர்சிடிஸ் சி300 போன்ற ஹைபிரிட் கார்கள் சந்தையில் வலம் வரலாம். இதற்கு நிறைய மவுசு பெறலாம். எலக்ட்ரிக் கார்கள் டெஸ்லா இந்த பிரிவில் சிறப்பான தலைவராக எலன் மஸ்கை கொண்டிருப்பதால் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்காக மற்றவர்கள் பின்தங்குகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஜாக்குவாரின் ஐ பேஸ் என்ற கார் இதற்கு போட்டி தரக்கூடியது. போர்ச், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறார்கள். இதில் ஹூண்டாயின் கோனா எலக்ட்ரிக் கார் சிறப்பாக இருக்கிறது. வேகம் வேகம் மணிக்கு 482 கி.மீ வேகத்தில் செல்லும் காரை கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? ஹென்னஸி என்ற கார் நிறுவனம் இந்த வகையில் கார்களை தயாரித்து வருகிறது. ஜான் ஹென்னசி என்பவர்தான் இந்நிறுவனத்திற்கு உரிமைய

கிழிந்த பட்டம் போல பறக்கும் காதல் கதை! - காதல் இது காதல்

படம்
       காதல் இது காதல்  அழகப்பன்   மலையாளத்தில் பட்டம் போலே என்ற பெயரில் வெளியான படம். தமிழில் காதல் இது காதல் என காதல் பேசியிருக்கிறது.    படத்தில் தொடக்கமும் முடிவும் ஒன்றுபோலவ இருக்கவேண்டும் என நினைத்திருப்பதைத் தாண்டி படத்தில் எதுவும் இயல்பாகவே இல்லை.  ஐயர் குடும்பத்து பையன் கார்த்திக்குக்கும், கிறிஸ்துவக் குடும்பத்து பையன் மன்னிக்கவும் பெண் ரியாவுக்கும் வரும் காதலும், ஈகோவும் இன்னபிற பஞ்சாயத்துகளும்தான் படத்தின் கதை.  எஞ்சினியரிங் படித்துவிட்டு அதற்கு தொடர்பில்லாத ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்பை படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறார் கார்த்திக். அதைப்போலேவே ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியில் வேலைதேடி கொண்டிருக்கிறாள் ரியா. இருவருக்கும் மனதிற்கு பிடித்திருக்கிறது. எனவே கல்யாணம் செய்துகொண்டு தனியாக வாழ்வோம் என கிளம்புகிறார்கள். வீட்டில் கலவரம் ஆகிறது. ஊட்டியில் சொகுசு ஹோட்டலில் தங்கும் கார்த்திக் ரியா ஜோடிக்கு பணம் பிரச்னையாக இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டு ஊர் வந்து சேர்கிறார்கள்.   கார்த்திக் ரோசாரியோ என்ற கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். ட

தானியங்கி கார்கள் உருவாக்கப்போகும் மாற்றம் இவைதான்! - டாக்சி இல்லாத காலமும் வரும்!

படம்
          ஓட்டுநர் இல்லாத கார்கள் உருவாக்கும் மாற்றம்! இப்போது வரும் கார்களில் பார்க்கிங் அசிஸ்டென்ஸ் வசதிகள் உண்டு. ஒட்டுநர் இல்லாத கார்களில் நீங்கள் எங்கு இறங்கவேண்டுமோ அங்கு இறங்கிக்கொள்ளலாம். பின்னர் கார் தானாகவே சென்று தேவையான இடத்தில் நின்றுகொள்ளும். அதனை நாமாகவே எடுத்துச்சென்று நிறுத்தவேண்டியதில்லை. பழகுவது அவசியம் சாதாரண கார்களில் வண்டியை ஓட்டிப்பழகுவது, நடைமுறைக்குவருவது என ஆறு மாதங்கள் பிடிக்கும். தானியங்கி கார்களை பழகுவதும் அப்படித்தான். உங்கள் குரல் காரில் உள்ள ஏ.ஐக்கு புரியவேண்டும். சென்று வரும் இடங்களின் மேப் பதிவாக வேண்டும். எனவே இக்கார்களை ஓட்ட நன்கு பயில்வது அவசியம். நோ டாக்சி சொந்த கார்களே இனி தானாகவே ஓடும்போது நிறைய வசதிகள் உண்டு. வாடகை கார்கள் ஓட்டும் டிரைவர்கள் இதற்கு தேவை இல்லை. உபர் கூட இந்த வழியில் யோசித்து செயல்பட்டு வருகிறார்கள். உடனே இல்லை என்றாலும் எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிறது. எனவே, ட்ரைவரிடம் பேசுவது, சண்டை போடுவது எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமைதியாக பயணிப்பது இனி நடைமுறைக்கு வரலாம். உறக்கமா, கலக்கமா? நீங்கள் தூங்கும்போது கூட காரை கவனிக்கவேண்ட

நூறுவயது வரை வாழ என்ன செய்யலாம்?

படம்
          cc       நூறு வயது வாழ்வது எப்படி? சாப்பிடு குடி கொண்டாடு உதவியாக நண்பர்கள் ஆதரவாக குடும்பம் என்று இருப்பது நெருகடியாக சூழலில் மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பதாக பிரகாம் யங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக நண்பர்கள் உறவின்றி, உறவுகளின் அண்மையின்றி இருப்பவர்களை விட 50 சதவீதம் அதிக ஆயுளுடன் ஒருவர் வாழ சமூகத்தோடு பழகி வருவது முக்கியம். ஆயுள் நீள மனச்சோர்வை போக்குவது முக்கியமான அம்சம். சிந்தனைகள் முக்கியம் நூறுவயது ஆனவர்களின் இளமைப் பருவத்தை ஆராய்ந்தபோது அவர்கள் அனைவரிடம் பேசி பழகிய தன்மை கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. வாழ்க்கையில் குறிப்பிட்ட நோக்கம் என்று உழைப்பவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றாது. எனவே, பரபரவென உழையுங்கள். உழைத்து ஓய்ந்தபிறகு உறங்குங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஜாமா சைக்கியாட்ரி இதழ் ஆய்வு கூறுகிறது. ஓடினால் வாழலாம். ஒருமணிநேரம் டிவி பார்த்தால் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும். இதனால் ஆயுளில் 22 நிமிடங்கள் குறைகிறது என்கிறார்கள். 25 வயதுக்குப் பிறகு முடிந்தளவு காலை அல்லது மாலையில் சாலையில் ஓடுங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செ

எதிர்கால நோய் தீர்க்கும் மருத்துவமுறைகள்! - ஸ்டெம்செல், பாக்டீரியா, டிஎன்ஏ

படம்
          cc       எதிர்கால மருந்துகள், மருத்துவ முறைகள் முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து அவருக்கென மருந்துகளை தயாரிக்கலாம். இதனால் மருந்து வீணாகாமல் அவரின் உடலைச் சென்று அடையும், நோய் குணமாகும். இதனால் மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கும் மருத்துவர்கள் கூட தடாலடியாக இந்த பிராண்டு மருந்து சிறப்பாக வேலை செய்யும் முடிவெடுத்து மருந்துகளை வழங்க வாய்ப்புண்டு. முன்பே நோயைத் தடுக்கலாம். இதுவும் கூட மரபணு ஆராய்ச்சியில் பெறும் பயன்தான். இதில் ஒருவரின் தந்தைக்கு ஏற்படும் நீரிழிவுநோய், உடல்பருமன், புற்றுநோய் ஆகிய விஷயங்கள் ஏற்படுமா என்று பார்த்து அதை தடுக்கும் முயற்சிகளை செய்யலாம். புற்றுநோய் ஏற்படுபவர்கள் எந்தெந்த பாகங்களில் நோய் தாக்கும் என்று பார்த்து அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கி வருகிறார்கள். அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக வாழ்பவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டெம்செல் தெரப்பி இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி கொஞ்சம் காசு கூடியதாக இருக்கலாம். ஆனால், இதனை முயன்றால் பல்வேறு பிறப்பு குறைபாடுகளை முடிந்தளவு சரிசெய்ய முடியும் என்கிறார்கள். பா