இடுகைகள்

எலன் மஸ்கின் குணங்கள், பழக்கங்கள், சர்ச்சைகள், தொழில்நிபுணத்துவத்தை சொல்லும் நூல்! - புத்தக அறிமுகம்

படம்
  புத்தக அறிமுகம் பவர் பிளே டிம் ஹிக்கின்ஸ்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ் புத்தகம் முழுக்க நவீன தொழில்துறை மேசியாவான எலன் மஸ்கைப் பற்றி விவரிக்கிறது. அவர்ரை சிலர் ஜீனியஸ் என்றாலும் சிலர் மோசமான முதலாளி என்கின்றனர். தனது மனதில் தோன்றுவதை பேசி நிறுவனத்தில் பங்குகள் சரிந்தாலும் அதை அடுத்த ஐடியா மூலம் சரிக்கட்டும் திறமை கொண்டவர் எலன்மஸ்க். விண்வெளி ஆய்வு, மின்சார கார் ஆகியவற்றை நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.  மோத் மெலடி ரசாக் ஹாசெட் 1946ஆம் ஆண்டு மா, பப்பு என இரண்டு பேரும் உள்ளூர் பல்கலை ஒன்றில் ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களின் பதினான்கு மகள் அய்மாவுக்கு விரைவில் திருமணமாகவிருக்கிறது. அவளைப் பற்றியும் திருமணம் பற்றியும் அவளது சகோதரி ரூப் சொல்லும் கதைகளை நூல் கொண்டுள்ளது. இதயத்தின் கருப்பான பக்கங்களையும் காதல், இழப்பு ஆகியவற்றையும் விரிவாக பேசியுள்ளது.  டிஸ்கார்டன்ட் நோட்ஸ் 1 அண்ட் 2 ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டு பல்வேறு சிக்கலான, முரண்பாடுகளைக் கொண்ட வழக்குகளை நூல் இருபகுதிகளாக் பிரித்துப் பேசுகிறது. சட்டம் படிப்பவர்கள், வழக்குரைஞர்க

ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தார் என்று அறிய உதவும் நூல்! - நூல் அறிமுகம்

படம்
  சொல்லப்படாத கதை ஹிட்லர் அண்ட் இந்தியா வைபர் புரந்தாரே ரூ.399 வெஸ்ட்லேண்ட் இந்தியாவில் ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன கருத்துக்களை கொண்டிருந்தார் என்பதை அறியாமலேயே அவரை ஆராதித்து கொடி பிடிக்கும் ஆட்கள் அதிகம். ஹிட்லரின் எஸ்எஸ் படையை அடியொற்றியே ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்களை மையமாக வைத்து நூல் எழுதப்பட்டுள்ளது. ஹிட்லர் இந்தியாவை பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் என்ன கருத்துகளை கொண்டிருந்தார் என தெளிவுபடுத்துகிற நூல் இது.  --------------------------------- இந்தியன் பொட்டானிக்கல் ஆர்ட் மார்ட்டின் ரிக்ஸ்  ரூ.1495 ரோல் புக்ஸ்  பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட தாவரங்களை ஆவணப்படுத்துகிற நூல். இதிலுள்ள நிறைய படங்களை வேறு எங்குமே நீங்கள் பார்க்க முடியாது. தற்போது உயிரியல் சார்ந்து இயங்கும் கலைஞர்களின் பல்வேறு படைப்புகளோடு நூல் நிறைவடைகிறது.  -------------------------------------------------------------- வாட்டர்  எலிமெண்ட் ஆப் லைஃப் யுத்திகா அகர்வால், கோபால் கிருஷ்ண அகர்வால் 599, ப்ளூம்ஸ்பரி அரசியலமைப்புச் சட்டப்

ட்ரோன்களுக்கு அனுமதி! - மத்திய அரசின் புதிய முடிவு!

படம்
  மத்திய அரசு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான சான்றிதழை எளிமையாக அளிக்கும்படி விதிமுறைகளை மாற்றியுள்ளது. இந்தியா 2030ஆம் ஆண்டு உலகளவிலான ட்ரோன் மையமாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்துறைகளிலும் பொருளாதாரம் வளரும் என நம்புவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விரைவில் நாம் வானில் பறந்து வரும் ட்ரோன் டாக்சிகளை பார்க்க முடியும் என ஜோதிராவ் சிந்தியா கூறியுள்ளார். இவர்தான் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்.  500 கி.கி அதிகமுள்ள ட்ரோன்களை பயன்படுத்தலாம் என அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 300 கி.கி எடையுள்ள ட்ரோன்கள்தான் அனுமதிக்கப்பட்டது.  சரக்குகளை கொண்டு செல்வதற்கு இனி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட  வாய்ப்பு அதிகம்.  இதில் ஏற்படும் தவறுகளுக்கு அபராதம் ஒரு லட்சம் என்று விதிக்கப்பட்டுள்ளது. பிற விதிகள் மீறும்போது அபராதம் கூடுதலாக இருக்கலாம்.  ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான விதிகள் மஞ்சள், பச்சை, சிவப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் பகுதியில் 12 முதல் 45 கி.மீ வரையில் பயன்படுத்தக்கூடாது என்றும், பச்சை பகுதியில் 8 முதல் 12 கி.மீ தொலைவு வரை பயன்படுத்தக்கூடாத

உள்ளாடைகளைத் திருடும் சீரியல் கொலைகாரர்கள்!

படம்
  சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கை சீரியல் கொலைகார ர்களைப் பற்றி பொதுவாக கூறப்படுவதில் முக்கியானது, அவர்கள் தங்களின் அம்மாவுடன் வாழ்கிறார்கள் என்பது. ஆங்கில திரைப்படங்களில் நார்மன் பேட்ஸ் இதற்கு முக்கியமான உதாரணமாக காட்டப்பட்டது. பிறகு இந்த பாணியை அடுத்து வந்த ஹன்னிபால் லெக்சர் உடைத்தார்.  பெண்கள் எப்படி சீரியல் கொலைகார ர்களை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் இரக்கப்பட்டு தவறு செய்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறார்கள். இப்படி ஈர இதயம் கொண்டவர்களாக இருப்பதால்தான் சீரியல் கொலைகார ர்களைக் கூட தன்னை அறியாமல் காப்பாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். அம்மா என்ற இடத்தில் பையன் தவறு செய்தால் அதை மறைத்து அவனைக் காப்பாற்றுகிறவளாகவே இருக்கிறாள். இது உலகம் முழுக்க மாறாத விஷயம். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.  இந்த பெண்கள்தான் சீரியல் கொலைகார ர்களுக்கான அலிபியை உருவாக்குகிறார்கள். இவர்க்களின் மதநம்பிக்கை, குற்றவுணர்ச்சியை கொலைகா ர்கள் பயன்படுத்திக்கொண்டு பணம், வாகனம், தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெண்களோடு இணைந்து இருப்பதை விரும்பாதபோதும் கிடைக்கின்ற உதவிகளை எங்கே பெறு

சீரியல் கொலைகாரர்கள் ஏழையா, பணக்காரர்களா ? - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ டைரி ஆபாசப்படங்களும் மனநிலையும் இதற்கு பதில் சொன்னவுடன் நீங்கள் உங்களிடம் உள்ள பிளேபாய் இதழ்களையும், காமசூத்ரா படங்களையும் எரித்துவிடக்கூடாது. சீரியல் கொலைகாரர்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் எளிதாக அது சரிதான் என்ன தப்பு என்று வாதிடுவார்கள். எனவே இவர்களின் பதில்களை வைத்து நாம் எதையும் முடிவு செய்யமுடியாது.  இளைஞர்கள் வளரும் பருவத்தில் ஆபாச இதழ்களை படுக்கையில் வைத்து படிப்பது இயல்பான ஒன்றுதான். பெரும்பாலான படங்களில் பெண்கள் நிர்வாணமாக இருப்பார்கள். உறுப்புகள் சில இடங்களில் மறைந்தும் மறையாமலும் இருக்கும். இதெல்லாம் இயல்பானதுதான். இணையத்தில் விரல் சொடுக்கும் நேரத்தில் ஒருவருக்கு ஆபாசப்படங்கள் கிடைத்துவிடுகின்றன. அதனை ஒருவர் பார்ப்பது, ரசிப்பது பிரச்னையில்லை. இதில் ஹார்டுகோர், ரேப் என்ற பிரிவுகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்தால் உடனே எச்சரிக்கையாவது அவசியம். தனக்கு நடக்கும் கொடுமைகளை ஒருவர் ஏற்றுக்கொள்வது போல ஆபாசப் படங்கள் இந்த பிரிவுகளில் இருக்கும். இதனை பார்க்கும் ஒருவருக்கு பெண்கள் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சரியானவர்கள், நடத்தை கெட்டவர்களை இப்படித்தான் நடத்தவேண்டும

இந்தியாவின் எல்லைகளைப் பிரித்த ராட்கிளிப்! - இந்தியா 75

படம்
  1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி. நள்ளிரவு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. விதியுடனான சந்திப்பும் கூட நடந்தது. ஆனால் அதில் முக்கியமான பிரச்னை ஒன்று இருந்தது. இந்தியா எங்கே முடிகிறது, பாகிஸ்தான் எங்கே தொடங்குகிறது என்ற எல்லைப் பிரச்னைதான்.  அப்போதைய ஆட்சியாளரான மவுண்ட் பேட்டனுக்கு இருந்த பிரச்னை பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகளும் எல்லைக்காக மீண்டும் குற்றம்சாட்டி சண்டை போடக்கூடாது என்பதுதான். அவர் இதற்காக எல்லைகளை பிரிப்பதற்கான யோசனையை உருவாக்கினார்.  இந்திய அரசுக்கு, அமைதியான முறையில் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதற்கான காலத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்கெனவே இழந்துவிட்டது.  1942ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் கமிஷனும் தோல்வியுற்றது. 1946ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியும் இரு நாடுகளை பிரிப்பது அவசியம் என்று கூறிவிட்டது. இதில் முக்கியமாக எழுந்த பிரச்னை, துணைக்கண்டத்தை எப்படி பிரிப்பது என்பதே.  எல்லைகளை பிரிக்க அழைக்கப்பட்டவர் ஒரு வழக்குரைஞர். இவர் பெயர் சிரில் ராட் கிளிப். 48 வயதானவர் அதிக நாடுகள் பயணித்தது கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எ

முரண்டு பிடித்த மாநிலங்களை இணைந்து இந்திய ஒன்றியமாக்கிய வல்லபாய் படேல்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியா பிரிட்டிஷ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது, 500 மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த மாநிலங்கள் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டிய தேவையிருந்தது. மாநிலங்களுக்கு முன்னர் இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அவை, இந்தியா மற்றும் பாகிஸ்தான்  என்று இரு நாடுகள். மாநிலங்கள் யாருடன் சேர்கிறார்கள் என்பது அவர்களது விருப்பம். உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தனது சாதுரியத்தால் பெரும்பாலான மாநிலங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தார். ஆனாலும் சிக்கல் வந்த மாநிலங்கள் இருந்தன அவற்றைப் பற்றி பார்ப்போம்.  ஹைதராபாத் இந்தியா, சுதந்திரம் பெற்றபிறகு ஹைதராபாத் மாநிலம் அதனுடன் இணைய மறுத்தது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தபோது போலவே இறையாண்மை கொண்ட மாநிலமாக ஹைதராபாத் இருக்கவேண்டுமென அதன் நிஜாம் நினைத்தார். ஹைதராபாத் நிலப்பரப்பு ரீதியாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவிற்காக வாசல் என்பதால் இந்திய அரசு இதனை முக்கியமான மாநிலமாக பார்த்தது.  இந்திய அரசு மாநிலங்களுக்க சட்டரீதியான ஆவணங்களை வழங்கி அதில் கையெழுத்து போட்டு இந்திய ஒன்றியத்துடன் சேர்த்து வந்தது. ஹைதராபாத்

இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை! - பதினான்கு உறுப்பினர்கள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை ஜவகர்லால் நேரு பிரதமர் நவ.14, 1889 - மே 27, 1964 சர்தார் வல்லபாய் படேல் உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அக்.31, 1875 - டிச. 15, 1950 ஆர்.கே. சண்முகம் செட்டி நிதித்துறை  அக்.17, 1892 - மே 5, 1953 சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்புத்துறை  ஜூலை 11, 1902 - ஜூன் 29, 1961 ராஜேந்திர பிரசாத் விவசாயம் மற்றும் உணவு டிச.3, 1884 - பிப்.28, 1963 மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்வித்துறை நவ.11, 1888 - பிப்.22, 1958 ஜான் மத்தாய் ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை ஜன் 10, 1886 - நவ.2, 1959 பி.ஆர். அம்பேத்கர் சட்டம் ஏப்ரல் 14, 1891 - டிச.6, 1956 ஜெகஜீவன்ராம் தொழிலாளர் துறை  ஏப்.5, 19008 - ஜூலை 6, 1986 சிஹெச் பாபா வணிகத்துறை ஜூலை 22, 1910, ஜூலை 29, 1986 ரஃபி அஹ்மத் கித்வால் தகவல்தொடர்பு பிப்.18, 1894 - அக்.24, 1954 ராஜகுமாரி அம்ரித் கௌர் சுகாதாரத்துறை பிப்.2, 1887 - பிப்.6, 1964 சியாம பிரசாத் முகர்ஜி  தொழில்துறை மற்றும் விநியோகம் ஜூலை 6, 1901 - ஜூன் 23, 1953 என்வி காட்கில் மின்சாரம் மற்றும் சுரங்கம் ஜன் 10, 1896 - ஜன் 12, 1966 டைம்ஸ் ஆப் இந்தியா

பறவையின் மூளை இயக்கங்களை பாடல்களாக மாற்றி மனிதர்களுக்கு உதவலாம்! - புதிய ஆராய்ச்சி

படம்
  பறவைகளின் மூளையில் ஒரு பாடல் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், அதன் மூளை இயக்கத்தை ஆராய்ந்து அதனை பாடலாக மாற்றியிருக்கிறார்கள். பாட்டு எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் கேட்க கூடாது. எதற்கு இப்போது இந்த ஆராய்ச்சி என்று கேட்டால் கட்டுரையை நீங்கள் தாராளமாக வாசிக்கலாம்.  அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் மூளை இயக்கத்தை பாடலாக மாற்றும் ஆராய்ச்சியை செய்துள்ளனர். இதன்மூலம் பேச முடியாத மக்களுக்கு குரல் அமைப்புகளை வடிவமைக்க முடியும் என்பதுதான் அவர்கள் சொல்லும் சேதி.  தற்போதுள்ள மருத்துவக்கருவி மூலம் ஒரு நிமிடத்திற்கு இருபது வார்த்தைகளை பேச முடிகிறது.  யோசித்துப் பாருங்கள். நீங்கள் பேசுவதை கூறும் கருவியை விட என்ன பேசலாம் என்று நினைப்பதை பிராஸ்தெடிக் கருவி மூலம் பிறருக்கு தெரிய வைத்தால் பிரமாதமாக இருக்குமே என்கிறார் உளவியல் மற்றும் நரம்பு உயிரியல் பேராசிரியர் டிமோத்தி ஜென்ட்னர்.  ஸீப்ரா ஃபின்ச் என்ற பறவைகளின் உடலில் எலக்ரோடுகளைப் பொருத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் மூளை இயக்கங்களை படம்பிடித்துள்ளனர். இதன்மூலம் மூளை எப்படி குரல்  தசைகளை இய

மலேரியாவுக்கு புதிய முறையில் தடுப்பூசி தயாரிப்பு!

படம்
  மலேரியாவுக்கு புது மருந்து வெயிலுள்ள ப்ரூட் ஸ்மூத்தி குடிப்பது நல்லது என எலைட் இதழ்களில் எழுதுவார்கள். படித்திருப்பீர்கள். ஆனால் உடல் நலனுக்கு கொசு ஸ்மூத்தி வந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆராய்ச்சிகள் அப்படித்தான் அறிகுறிகளைக் காட்டுகின்றன.  லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களின் உடலிலிருந்து ஒட்டுண்ணிகளை எடுத்து அதனை சுத்திகரித்து தடுப்பூசியாக பயன்படுத்த முடியுமா என்பதை சோதித்து வருகின்றனர். இந்த முறையில் வேகமாக ஒட்டுண்ணிகளை சேகரித்து அதனை சுத்திகரித்து தரமான மலேரியா தடுப்பூசியாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர்.  பிளாஸ்மோடியம் என்பதுதான் மலேரிய ஒட்டுண்ணி. இதுதான் பெண் அனோபிலஸ் கொசுக்களின் உடலைத் தாக்கி அக்கொசு கடிக்கும் போது மனிதர்களின் உடலில் நோயை ஏற்படுத்துகிறது.  பிளாஸ்மோடியம் தற்போது மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்துகளை எதிர்கொள்ளும் சக்தியை பெற்றுவருகிறது. எதற்காக மலேரியாவுக்கென திடீர் ஆராய்ச்சி? மலேரியாவால் உலகமெங்கும் 4 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இதில் 61 சதவீதம் பேர் குழந்தைகள்தான். அதுவும் ஐந

அலர்ஜி ஏற்படுவதில் மரபணுக்களின் பங்கு!

படம்
            உடலில் அலர்ஜி பாதிப்பு ஏற்படும்போது ஹிஸ்டமைன் என்ற ஹார்மோன் உடலில் எரிச்சல் , வீக்கம் என சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது . இதன் பணி என்பது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதல்ல . அலர்ஜி ஏற்படும்போது மட்டும் இப்படி நட்டு கழன்றது போல நடந்துகொள்ளும் . இதயத்திலுள்ள மின்தூண்டல் அளவு , ரத்த அழுத்த அளவு , வயிற்றிலுள்ள சீரணிக்கும் அமில அளவு ஆகிய்வற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஹார்மோன் இதுதான் . ஹிஸ்டாமைன் என்பதற்கென தனி இடம் கிடையாது . அனைத்து இடங்களிலும் பரம்பொருள் போலவே பார்க்க கிடைக்கும் . அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் அனைத்து பொருட்களும் உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது . சில பொருட்கள் அலர்ஜி ஏற்படுத்துபவை என்றாலும் கூட அறிகுறிகளே இருக்காது . சில பொருட்கள் மட்டும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு சித்திரவதை செய்துவிடும் . பொதுவாக உடனடியாக அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் இரண்டு மணிநேரம் தேவை . அதிகபட்சமாக ஆறு மணிநேரங்களில் அலர்ஜி பாதிப்புள்ளவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கும் . ஆ்ஸ்துமா இந்த வகையில் சற்று தாமதமாக பாதிப்பைத் தொடங்கினாலும் அதி