வேட்டையாடுவது எப்படி? சைக்கோ டைரி
இறப்பதே விதி! ஒருவரை ரத்தம் வெள்ளமாக பீய்ச்சியடிக்கும்படி வேட்டையாடிவிட்டு அதனை நியாயப்படுத்த முடியுமா? சீரியல் கொலைகார ர்கள் அதனை செய்வார்கள். நான் விலைமாதுக்களை கொன்றேன். அவர்கள் தெருக்களில் குப்பைகளாக கிடந்தார்கள். என்னால் முடிந்தளவுக்கு அவர்களை சுத்தப்படுத்தினேன் என்று சீரியல் கொலைகார ர் பீட்டர் சட்கிளிப் கூறினார். பெண்களை கடுமையாக வெறுப்பவர்கள் அவர்களை வெளிப்படையாக போலீசாரின் விசாரணையில் தேவடியாக்கள் என்று திட்டுவது உண்மை. இதற்கு மதரீதியான ஒட்டுதல் முக்கியமான காரணமாக இருக்கலாம். விலைமாதுக்களை கொல்லும் எண்ணம், அவர்களை எப்படி விதவிதமாக கொன்றார்கள் என்பதைப் பற்றியும் சீரியல் கொலைகாரர்கள் மகிழ்ச்சியே தெரிவித்துள்ளனர். சிங்கத்தின் வேட்டை சீரியல் கொலைகார ர்கள் பெரும்பாலும் சுகவாசிகள். அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கேதான் பெரும்பாலான குற்றத்தை செய்வார்கள். அயனாவரத்தில் உள்ளவர், கே.கே. நகர் சென்று குற்றத்தை செய்துவிட்டு வரமாட்டார். அது அவரின் இயல்பான சூழலை கெடுத்துவிடும். கே.கே. நகரிலுள்ளவர்களும் இவன் நம்ம ஏரியாவைச் சேர்ந்தவன் கிடையாதே என சந்தேகம் வந்துவிடும். மயிலாப்பூரில் 12 எக்ஸ