இடுகைகள்

டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகரிக்குமா?

படம்
பதில் சொல்லுங்க ப்ரோ? அருங்காட்சியகங்களில் ஃபிளாஷ் போட்டு போட்டோ எடுப்பதை எதற்கு தடை செய்திருக்கிறார்கள்? இந்தியாவில் எப்படியோ, வெளிநாடுகளில் ஃபிளாஷ் போட்டு புகைப்படம் எடுக்க கூடாது என்பதை உறுதியான விதியாக வைத்திருக்கிறார்கள். இதன்மூலம்,  அருங்காட்சியகங்களிலுள்ள தொன்மையான ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒவியங்களிலுள்ள வண்ணங்கள் வெளிச்சத்துடன் வினைபுரியும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளன. இவை ஃபிளாஷில் வரும் ஒளியோடு சேர்ந்து வினைபுரிவதால் ஓவியம் அழிய வாய்ப்புள்ளது. எனவே, புகைப்படம் எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக ஓவியம் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டை, புகைப்படங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள்.  டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகமாகுமா? இன்று டிவி மட்டுமல்லாது இணையம் கூட வேகமாக ஸ்ட்ரீமிங் சேவைகளை தந்து வருகிறது. சன்டிவி, விஜய், கலர்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றை ப் பார்த்தால் ஒரு மணிநேரத்திற்கு 56 கிராம் கார்பன் உருவாகிறது என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படியே தினசரி பார்த்தால் ஆண்டுக்கு 41 கி.கி அளவுக்கு கார்பன் வெளியாகிறது என கொள்ளலாம்.  சயின்ஸ் போகஸ்  

குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் மனநிலை!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துவர் கொல்லப்படுவாரா ஆங்கில திரைப்படங்களில் இப்படி காட்டுவார்கள். ஆனால் உண்மையில் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் நூலகத்தில் இருப்பார். அல்லது காவல் நிலையத்தில் குற்றம் பற்றிய புகைப்படங்களை ஆய்வு செய்துகொண்டிருப்பார்.  அதிகபட்சமாக சிறை சென்று சிலரை நேர்காணல் செய்துகொண்டிருப்பார். பொதுவாக கொலை செய்த இடத்திற்கு சென்று விசாரிப்பது காவல்துறையினரின் வேலை. அங்கு வேறுவழியில்லாமல் செல்லவேண்டிய நிலையில்தான் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் செல்வார்.  தான் திட்டமிட்டபடி கொலைகளை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கும் சீரியல் கொலைகாரர், காவல்துறையின் தொடர்பு கொண்டவரை கொல்வது அரிது. தேவையில்லாமல் எதற்கு மாட்டிக்கொள்ள அவர் நினைக்கவேண்டும்? குற்றங்களை செய்யும் மனம் குற்றங்களை ஆவணப்படுத்துபவர், பல்லாண்டுகளாக இதுதொடர்பான ஆய்வில் இருப்பவர். யாராக இருந்தாலும் கொலையைப் பார்த்தவுடனே சற்று மனம் அதிர்ச்சியடையவே செய்யும். ஆனால் பிறருக்கு ஏற்படும் அதிர்ச்சியை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதனால் கொலையைப் பார்த்தவுடனே கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பது என அவர்கள் யோசிப்பார்கள். தடயங்களை சே

கொலைகாரர்கள் மீது வரும் காதல்!

படம்
  கொலையை நிறுத்த முடியுமா? அதற்கு வாய்ப்பு குறைவு. ஒருமுறை கொலைகளை கற்பனை செய்து செய்யத் தொடங்கினால் அதனை நிறுத்துவது கடினம். கொலையாளிகளுக்கு உடல்நலக்குறைவு, சிறைக்கு செல்வது, வாய்ப்பு கிடைக்காத து என சில காரணங்கள் மட்டுமே கொலைகளை தடுத்து நிறுத்த முடியும்.  கொலைகளை செய்வதில் நிறைய பிரச்னைகள் உள்ளன. கொலைகளை திட்டமிட்டு செய்துவிட்டு உடலை மிகச்சரியாக மறைத்து வைக்க வேண்டும். தடயங்களை அழிக்க வேண்டும். வல்லுறவு செய்து பெண்களை உயிரோடு விடுவதிலும் சிக்கல் உள்ளது. அவர் எங்காவது சென்று உண்மையைச் சொன்னால் உப்புக்கண்டம் போட்டுவிடுவார்களே! இதனால்தான் பெரும்பாலும் வல்லுறவு செய்த பெண்களை கொன்றுவிட்டு சென்றுவிடுகிறார்கள். நம்மைப் பற்றி புகார் கொடுத்துவிடுவாளோ என்று எவ்வளவு நேரம் பயத்திலேயே வாழ்வது சொல்லுங்கள். இதனையும் சீரியல் கொலைகார ர்கள் யோசிக்கிறார்கள். இப்படி ஐன்ஸ்டீன் அளவுக்கு யோசிக்கும்போது கொலையின் இடைவெளி கூடலாம்.  கொலைகாரர்கள் மீது வரும் காதல் உலகமே வெறுக்கும் ஆண்களைக் கூட சில பெண்களுக்கு பிடித்துவிடுகிறது. எப்படி என்று பலருக்கும் தெரியாது. ஆனால் எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி

அமெரிக்க மக்களை பயமுறுத்தும் குப்பைக்கடிதங்கள்! - டேட்டா கார்னர்

படம்
  குப்பைக் கடிதங்கள்  மின்னஞ்சல் சேவைகள் உருவாகத் தொடங்கியதிலிருந்தே குப்பைக் கடிதங்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் வரத் தொடங்கிவிட்டது. பல்வேறு இணையத்தளங்களில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து செய்தி மடல்களும் வருகின்றன. கூடுதலாக திடீரென வங்கி, தங்கநகைக்கடன், இ வணிக தளங்களிலிருந்து மின்னஞ்சல்கள் வரும். இவை எல்லாம் வணிகம் இணையம் சார்ந்து மாறிவிட்டதையே உணர்த்துகிறது. மேற்கு நாடுகளில்  அஞ்சலகங்கள் மூலமாகவே விளம்பரக் கடிதங்கள்  நிறைய அனுப்பப்படுகின்றன. இதில் விளம்பர கடிதங்களை யார் கொண்டு வந்து கொடுக்கிறாரோ அவருக்கு காசு கிடைக்கும்.  நாளிதழில் நேரடியாக விளம்பரம் கொடுத்தால் நாளிதழ் நிறுவனத்திற்கு விளம்பரக் காசு கிடைக்கும். ஆனால் அதை விட எளிமையாக குறைந்த காசில் பேப்பர் ஏஜெண்டிற்கு காசு கொடுத்து விடலாம்.  அவர் தான் பேப்பர் போடும் வீடுகளுக்கு விளம்பரங்களை நாளிதழின் இடையில் இணைத்துவிடுவார். இப்படிக் கொண்டு செல்லும்படி செய்தால் யாருக்கு லாபம்?  பேப்பர் ஏஜெண்டிற்கு காசு கிடைக்கும். விளம்பர நோட்டீசை கொடுக்கும் நிறுவனத்திற்கு காசு மிச்சம். மேற்குநாடுகளில் கூட அதேபோல்தான் நடைபெறுகிறது.  

டைம் இதழின் உலகின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் 2021! - கண்டுபிடிப்பாளர்கள்

படம்
  செல்வாக்கு பெற்ற மனிதர்கள் 2021 ஜென்சென் ஹூவாங் என்விடியா நிறுவன இயக்குநர் 2003ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்த நிறுவனம் கணினி விளையாட்டுகளை விளையாடுவதற்கான பொருட்களை தயாரித்து வருகிறது. இவர்  சிப் தயாரிப்புகளை நுட்பமாக்கி, அதில் செயற்கை நுண்ணறிவு சமச்சாரங்களை கூர்மைப்படுத்தினார். இதன் விளைவாக இன்று கணினியின் தொழில்நுட்பமும் நவீனமாகியுள்ளது. கூடுதலாக போன்  தானாகவே செயல்பட்டு பதில் கூறுவது, களைகளுக்கு மட்டும் பூச்சிமருந்து தெளிப்பது,  இந்த நோய்க்கு இந்த மருந்து என மருத்துவர்கள் பரிந்துரை செய்வது என பல்வேறு விஷயங்களுக்கும் சிப்களின் தொழில்நுட்பம் உதவுகிறது. இன்று உலகின் முக்கியமான தொழில்நுட்ப இயக்குநராக ஹூவாங் மாறியுள்ளார்.  டைம்  ஆண்ட்ரூ என்ஜி  எலன் மஸ்க் அமெரிக்க தொழிலதிபர் எலனை சுருக்கமாக தொழிலதிபர் என்று கூறிவிட முடியாது. இப்போதுதான் 2.9 பில்லியன்  மதிப்பிலான நாசாவின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். இவரை அமேசானின் ஜெப் பெசோஸ் விமர்சனத்தில் வறுத்தெடுத்தாலும் எலனைப் பொறுத்தவரை அதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. நான் தப்பு பண்ண பயப்பட மாட்டேன் என விஜய் ஆண்டனி பேசு

இளம் வயதினருக்கான நூல்கள் 1993-2000

படம்
  தி கிவ்வர் லூயிஸ் லோவ்ரி பனிரெண்டு வயதான ஜோனாஸ் பிரச்னை, வெறுப்பு, வலி இல்லாத உலகத்தில் வாழ்ந்து வருகிற பாத்திரம். மெல்ல அவனுக்கு நினைவுகள் கிடைக்கும்போது அவனது வாழ்க்கை மாறுகிறது. வண்ணமும், காதலும் இல்லாத வாழ்க்கை பல கேள்விகளை எழுப்புகிறது. இதனை அவன் அறிந்துகொள்வதுதான் நாவலின் கதை. 1997 எல்லா என்சேன்டட் கெயில் கார்சன் லெவைன் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று கட்டுப்பாடுடன் வளர்க்கப்படும் எல்லா, எப்படி தன்னைத்தானே உணர்ந்துகொண்டு வாழ்கிறாள், தனக்கான அடையாளத்தை கண்டுபிடிக்கிறாள் என்பதுதான் கதை.  1998 ஹோல்ஸ்  லூயிஸ் சாச்சர் க்ரீன் லேக் எனும் பகுதியில் தவறு செய்த சிறுவர்களை அடைத்து வைத்துள்ளனர். ஸ்டேன்லி யெல்னட்ஸ் என்ற பதினான்கு வயது சிறுவன், தான் செய்யாத தவறுக்கு அங்கு தண்டனை பெற்று வருகிறான். அவனும் நண்பர்களும், அங்கிருந்து தப்பிக்க குழி ஒன்றை தோண்டுகின்றனர். அதன் வழியாக அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா இல்லையா என்பதுதான் கதை.  1999 ஆங்கஸ் தோங்க்ஸ் அண்ட் ஃபுல் ஃபிரான்டல் ஸ்னாக்கிங் லூயிஸ் ரென்னிசன் இளைஞர்களுக்கான கிளாசிக் நூல் இது. பதினான்கு வயது ஜார்ஜியாவின் காதல், பள்ளி வாழ்க்கையை பேசுகிற

குற்றங்களை ஃபேன்டசி கலந்து சொன்னால் எப்படியிருக்கும்?

படம்
  குற்றங்களின் விவரிப்பு கொலைகளை செய்தவர்களை கூட்டிச்சென்று எப்படி செய்தார்கள் சென்று செய்துகாட்ட வைப்பது காவல்துறையின் முக்கியமான பணி. குழப்பமான கொலை வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த முறையை அனைத்து கொலைகாரர்களிடம் செயல்படுத்த முடியாது. சீரியல் கொலைகாரர்கள், கொலைகளை பற்றி சொல்லுவார்கள். உண்மைதான். ஆனால் தங்களது மனதிலுள்ள ஃபேன்டசி விஷயங்களையும் சேர்த்து சொல்லுவார்கள். இதனால் அது உண்மையா, கனவா என்று கூட குழப்பமாகும் அபாயம் உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது. கொலைகளை பலமுறை தங்கள் மனதிலேயே அவர்கள் செய்து பார்த்து ரெடியாகிறார்கள். இதனால் நேரடியாக அதனை செய்யும்போதுகூட இல்லாத தகவல்களை விசாரணையில் கூறுவார்கள்.  ஸ்டான்லி குப்ரிக்கின் கிளாக்வொர்க் ஆரஞ்ச் படத்தில் வரும் அலெக்ஸ் எனும் சைக்கோபாத் பாத்திரம் முக்கியமானது. அதனை சரிவர பலரும் புரிந்துகொள்ளாமல் இதேபோல வன்முறை அதிகமாக இருக்கிறது. இயல்பாக பாத்திரம் அமையவில்லை என்றார்கள். சரிதான். நாம் பார்ப்பது அந்த பாத்திரம் சொல்லும் தனது கோணத்திலான கதையை என்பதை மறந்துவிடக்கூடாது.  விசாரணையில் சீரியல் கொலைகார ர்கள் பேசுவதுதான் அவர்களது

சீரியல் கொலைகாரர்கள் புத்தகம் எழுதுவது இதற்காகத்தான்!

படம்
  குற்றவுணர்ச்சி  சீரியல் கொலைகார ர்கள் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது குற்றவுணர்ச்சி பற்றி கேட்டால் என்ன சொல்வது? குற்றவுணர்ச்சி என்பதெல்லாம் அவர்களின் மூளையில் தேய்ந்துபோயிருக்கும். காவல்துறையில் பிடிபட்டு தூக்கு தண்டனை கொடுக்கும்போது மட்டுமே இனிமேல் கொலைகள் செய்ய முடியாது என கர்த்தரே, பாலாஜி, அல்லா என அலறுவார்கள். ஆனால் சாட்சிகள் கான்க்ரீட்டாக இருந்தால் என்ன செய்வது? உறுதியாக சாவுதான்.  மன்னிப்பு கூட கேட்கமாட்டார்களா என்றால் அதுவும் கூட கிடையாதுதான். அவர்கள் மன்னிப்பு கேட்பதே இன்னும் கொடூரமாக இருக்கும். உங்கள் மகள் இறக்கும்போது வலியாலும், பயத்தாலும் கத்தியது எனக்கு வேடிக்கையாக இருந்தது என சொல்லி மன்னிப்பு கேட்பார்கள். இதனை நீங்கள் மன்னிப்பாக ஏற்பீர்களா? குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விடுவார்கள். அந்தளவில் சிறைக்கு சென்றாலும் கூட நான்தான் அதனை செய்தேன் என்று ஏற்கமாட்டார்கள். அதனை கடவுள் வந்து கட்டளையாக செய்யச் சொன்னார் என புருடா விட்டு எரிச்சலை கிளப்புவார்கள். இதெல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பேசுவதுதான்.  புத்தக எழு

எரிபொருளுக்கான மத்திய அரசு வரியைக் குறைக்க முடியாது! - நிதியமைச்சர் நிர்மலா

படம்
  நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் பொருளாதாரம் மெல்ல நல்ல நிலைக்கு மீள்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? பொருளாதாரம் மீள்வதை நான் மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறேன்.  அனைத்து துறைகளிலும் நேர்மறையான விஷயங்கள், அறிகுறிகள் தெரிய வேண்டுமென நினைக்கிறேன். இதனை சிலர் சென்டிமென்ட் என்று கூறுவார்கள். சென்டிமென்ட் நேர்மறையாக இருக்கும்போது நிறைய மாற்றங்களை தரும் என நினைக்கிறேன்.  பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்? இரண்டுமே ஒன்றுபோலவே இருக்காது என்பது உண்மை. மக்களை பாதிக்காத அளவில் பணவீக்கம் இருப்பது பிரச்னையில்லை. இதை தடையாக நினைத்து வளர்ச்சிக்காக திட்டமிடாமல் இருக்கமுடியாது. வளர்ச்சிக்கான எங்களது செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.  கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலைகளை ஏன் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவில்லை? அப்படி கொண்டுவருவது மாநிலங்களின் முடிவுகளைச் சேர்ந்தது. எரிபொருள், மது தொடர்பான வரி விஷயங்களை மாநிலங்கள்தான் முடிவு செய்யவேண்டும். இதில் அவர்கள் வரிகளை குறைக்க அல்லது உயர்த்துவது பற்றி முடிவெடுக்கலாம்.  இந்த நேரத்த

மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

படம்
  மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும்.  சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை.  இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார்.  குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும்.  பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர்

டீன் ஏஜ் இளைஞர்களுக்கான நூல்கள் 2015-2017

படம்
  2015 சிக்ஸ் ஆப் கிரௌஸ்  லெய் பர்டுகோ புனைவுக்கதையில் நாயகர்களுக்கும் எதிர்மறை பாத்திரங்களுக்கும் இடையிலுள்ள குண வேறுபாடுகளை லெய் நூலில் விளக்கியுள்ளார்.  2016 சால்ட் டு தி சீ ரூடா செப்டிஸ் கிழக்கு ப்ருஸ்யாவில் நடைபெறுகிற கதை. கிழக்கு ஜெர்மனிக்கு படகு வழியாக மூன்று பாத்திரங்கள் எப்படி செல்கிறார்கள், இவர்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல்கள்தான் கதை. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பிறகு நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது.  2016 தி சன் ஈஸ் ஆல்ஸோ எ ஸ்டார் நிக்கோலா யூன் நியூயார்க்கில் நடைபெறும் காதல் கதை. எழுத்தாளர் டேவிட் யூன் மற்றும் நிக்கோலாவின் கணவர் ஆகியோருடனான காதல் சம்பவங்களை இந்த நாவல் தழுவியுள்ளது.  2016 வீ ஆர் தி ஆன்ட்ஸ் சாவுன் டேவிட் ஹட்சின்சன் பள்ளியில் கடுமையாக கேலி செய்யப்படும் ஹென்றி, உலகை காப்பாற்ற முயலும் கதை. உலகை ஹென்றி காப்பாற்றுவானா என்பதுதான் முக்கியமான அம்சம்.  2016 வென் தி மூன் வாஸ் அவர்ஸ்  அன்னா மேரி மெக்லெமோர் இரண்டு இளம் வயதினர் தங்களுக்குள் கொள்ளும் காதல் உறவுதான் கதை. உலகையே மறந்து இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் எதிர்கொள்ளும் சவால்கள்தான் முக்கியமான அம்ச