இடுகைகள்

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ஏன் இப்படி என்று கே

கருத்துகளால் வேறுபட்டாலும் இந்தியாவுக்கான முன்நின்ற நேரு, காந்தி! - ஜவகரும் காந்தியும் - வெ.சாமிநாதசர்மா

படம்
  நேரு, காந்தி ஜவகரும் காந்தியும் வெ.சாமிநாதசர்மா இந்த நூல் கொஞ்சம் பழமையானதுதான். இதை இப்போது படிப்பதற்கு முக்கியமான காரணம், பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்கள் கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்று சில மதவாத கூட்டங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.  இதில் பாதி மட்டுமே உண்மை. ஒருவரின் சிந்தனை இன்னொருவருடன் ஒத்து வரலாம். ஆனால் அப்படியே பிரதி எடுத்தது போலவா இருக்கும்?சாமிநாத சர்மா இந்த நூலில் காந்தி, நேரு ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக பிரித்து எழுதி இருவரின் லட்சியம் எதை நோக்கியது என்பதையும் எழுதியுள்ளார்.  சுதந்திர இந்தியா என்பதுதான் காந்தி, நேரு ஆகிய இருவரின் லட்சியம். ஆனால் அதை நோக்கிய பயணத்தில் இருவரின் கருத்துகளும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மதம், அரசியல், வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை காந்தி, நேரு ஆகியோரின் வாழ்க்கைப் பார்வை வேறுபட்டது. இதனை நேரு காந்தியின் காலத்திலேயே அவரிடமே கூறியுள்ளார்.  ஒருவகையில் காந்தி, தனது கருத்துகளை அனுபவங்கள் வழியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார். ந

தமிழ் பிராமணர்களுக்கு வட இந்தியாவின் மணப்பெண்! - என்ன பிரச்னை?

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சங்கத்தினர், தமிழ்நாட்டில்  பெண்கள் கிடைக்காததால், பீகார். உ.பியில் பெண்களை தேடிவருகின்றனர். இந்த வகையில் 40 ஆயிரம் ஆண்களுக்கு பெண்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த தகவல்கள் சங்கம் வெளியிடும் இதழ் கூறியுள்ளது. இந்த நிலை இப்போது செய்தியானாலும் கூட பத்தாண்டுகளாக நிலை இப்படித்தான் போகிறதாம்.  முப்பது முதல் நாற்பது வரையிலான மாப்பிள்ளைகள் தங்களுக்கு ஏற்ற பிராமண பெண் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் உள்ளனர் என்று பிராமணர் சங்க தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.  இதற்கு என்ன காரணம் , பெண், ஆண்களின் பாலின விகிதம்தான் காரணம் என அறியவந்துள்ளது. பத்து பிராமண ஆண்களுக்கு, ஆறு பெண்கள்தான் உள்ளனர்.  குடும்பக்கட்டுப்பாட்டை பிராமணர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைபிடித்துள்ளனர். இதனை அவர்களின் ஆச்சாரியர்கள் எதிர்த்தாலும் கூட அவர்கள் கேட்கவில்லை. இதனால்தான் பெண்கள், ஆண்களின் விகிதம் மாற்றம் பெற்றுள்ளது.வட இந்திய மாநிலங்களில் இந்தி பேச தெரிந்த ஒருங்கிணைப்பாளர்களை பிராமண சங்கங்கள் உருவாக்கியுள்ளன. இப்படி நிலைமை மாறுவதற்கு ஆண்மைய கருத்தாக்கம் பிராமணர்களின் ஜாதியில் இருப்பதுதான் கார

உலக கோப்பை போட்டியை வெல்வது மட்டுமே எனது கனவு! - மிதாலி ராஜ், கிரிக்கெட் வீரர்

படம்
  மிதாலி ராஜ்  மிதாலி ராஜ் கிரிக்கெட் வீரர் அண்மையில்தான் கேல் ரத்னா விருதை மிதாலி ராஜ் பெற்றார். இந்திய கிரிக்கெட் அணிக்காக இருபத்திரெண்டு ஆண்டுகள் விளையாடிய அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர். அவரிடம் பேசினோம்.  இருபத்தி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விளையாடி வருகிறீர்கள். இப்படி ஊக்கமாக விளையாட என்ன காரணம்? இதற்கு ஒழுக்கமான விளையாட்டு பழக்கம்தான் காரணம். நான் வளர்ந்து வந்த இடத்தில் என் வாழ்க்கை குறிப்பிட்ட திட்டப்படி நடந்து வந்தது. இதனால்தான் என்னால் எளிதாக தோல்விகளிலிருந்து விடுபட்டு சவால்களை சந்திக்க முடிந்தது. நான் என்னை எப்போதும் பெட்டராக மாற்றிக்கொள்ள முயன்றுகொண்டே இருந்தேன். நான் எனது விளையாட்டை வேறு பரிணாமத்தில் மாற்ற நினைத்துக்கொண்டிருந்தேன்.  கேல்ரத்னா, ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக அதிக வெற்றி, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், உங்களது சுயசரிதை படமாக்கப்படுவது என பல்வேறு விஷயங்கள் நிறைவேறி வருகிறது. இதில் நிறைவேறாமல் இருப்பது என ஏதேனும் இருக்கிறதா?  உலக கோப்பையை வெல்வது எனது லட்சியம். 2022ஆம் ஆண்டு இதற்கான வாய்ப்பு உள்ளது. இதுதான் கேக்கின் மீதுள்ள செர்ரி போன்ற பெருமை. நாங்கள் வெற்ற

யுபிஐ ஏற்படுத்தும் அதிவேக பிரிவினை! - சாதகங்களும் பாதகங்களும்

படம்
  யுபிஐ ஏற்படுத்தும் பிரிவினை! உங்கள் போன்தான் இனி வாலட்டாக இருக்கப் போகிறது என பில்கேட்ஸ் 1996ஆம் ஆண்டு சொன்னார். அப்போது அவர் அப்படி சொன்னது பலருக்கும் புரியாமல் இருந்தாலும் இப்போது நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்று போன்பே, பேடிஎம், வங்கி ஆப்களில் வாலட்டில் பணம் வைத்து இணையத்தில் பொருட்களை வாங்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறோம்.  பூம்பூம் மாட்டிற்கான தொகையை கூட யுபிஐயில் கொடுக்கலாம் என்றளவுக்கு நிலை மாறியதை, சிலர் பெருமையாக பேசுகிறார்கள். இடதுசாரிகள் பிச்சை எடுப்பதை நேரடியாக எடுத்தால் என்ன டிஜிட்டலாக எடுத்தால் என்ன என்று விமர்சிக்கிறார்கள். முதலில் சொன்னதை விட இரண்டாவது கேள்வியில் சற்று பொருள் உள்ளது.  யுபிஐ பிற வசதிகளை விட வேகமாக பணக்கார ர்கள் ஏழைகள் ஆகியோருக்கு இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், செக்கை ஒருவர் வங்கிக்கு சென்று மாற்றுவது கடினமானது. வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் போடுவது இதில் முக்கியமான அம்சம். இப்படி மாறும் பணம் சரியாக கணக்கில் வந்து விழ பதினைந்து நாட்கள் தேவை. இதில் வங்கி விடுமுறைகள் வந்தால் என்ன செய்வது? பொறு

நமது உடலில் தெரியும் நரம்புகள் நீலநிறமானவையா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மனிதர்களின் உடல் வெப்பநிலை வெப்பமயமாதலை கூட்டுமா? மனிதர்களின் உடல் வெப்பநிலை என்பது நூறு வாட் அளவுதான் இருக்கும். இதனை வழக்கொழிந்து போன குண்டு பல்பின் திறனோடு ஒப்பிடலாம். மக்கள்தொகை கூடினாலும் கூட வெப்பநிலை பெரிய பிரச்னையாக இருக்காது. பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புதான் சூரியனின் வெப்பம் பூமியில் அதிகம் படுவதற்கு காரணம். கரிம எரிபொருட்கள், பசுமை இல்ல வாயுக்களின் அளவுதான் வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம்.  நமது நரம்புகள் நீலநிறமாக இருப்பது உண்மையா? ரத்தம் சிவப்பாக இருக்க காரணம், ரத்த சிவப்பணுக்கள்தான். இதில்  ஆக்சிஜன் இருந்தால்  பளிச்சென சிவப்பாகவும், இல்லையென்றால் அடர் சிவப்பாகவும் மாறும். ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது. கையில் பார்க்கும்போது நரம்புகள் சிலருக்கு புடைப்பாக நீலநிறமாக, அல்லது பச்சை நிறமாக தெரியும். இது ஒளியின் சிதறல்களால் ஏற்படுகிறது.  சிவப்பு நிறம், நீளமான அலைநீளம் கொண்டது. எனவே அது உடலில் எளிதாக பயணிக்க முடியும். இதனால் ரத்த த்தில் உள்ள ஹீமோகுளோபினால் இந்த நிறம் கிரகிக்கப்படுகிறது. நீலநிறம் என்பது குறைந்த அலைநீளம் கொண்டது. எனவே உடலா

ராஜஸ்தான் அரசு பள்ளியை டிஜிட்டல் மயமாக்கும் ஜினெந்தர் சோனி! - மாற்றம் பெறும் அரசுப்பள்ளிகள்

படம்
  2019 ஆம் ஆண்டு ஜினெந்தர் சோனி தன்னுடைய வேலையைக் கைவிட்டார். வேலையை விடுவது பெரிய விஷயமல்ல. அதில் அவர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆன்லைன் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இப்போது அதே மாதிரியை பின்பற்றி ராஜஸ்தானில் ஜூன்க்ஹூனு எனும் மாவட்டத்தில் அரசு பள்ளியை சிறப்பாக்கியிருக்கிறார்.  பொதுமுடக்க காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை  வழங்க ராஜஸ்தான் அரசு யோசித்தது. அதில்தான் ஜினெந்தர் சோனி உள்ளே வந்தார்.  பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனது சொந்த நிதி என எட்டு லட்சம் ரூபாயை செலவழித்து  40 ஆசிரியர்களை வைத்து வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். வீடியோக்கள் மேல்நிலை வகுப்புகளை படிக்கும் மாணவர்களுக்கானவை.  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜினெந்தரின் செயல்பாடுகளைப் பார்த்து ஆன்லைனில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார். இப்போது இப்படி பயிற்சி எடுக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ரெஸ்யூம் கூட வீடியோக்கள்தான்.  முதலில் வீடியோக்களை உருவாக்கும் பணி ஆறிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தொடங்