இடுகைகள்

டிஎன்ஏ சோதனை மூலம் தடகள வீரரை கண்டறிய முடியுமா?

  டிஎன்ஏ சோதனை மூலம் தடகள வீரரை கண்டறிய முடியுமா ? 2008 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸில் கட்டுரை ஒன்று வெளியானது . அதில் அட்லஸ் ஜெனடிக்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர் , டிஎன்ஏ மூலம் குழந்தைகள் எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களாக ஆவார்களா , இல்லையா என்பதை தங்களால் கண்டுபிடித்துச் சொல்லமுடியும் என்று கூறியிருந்தார் . இக்கட்டுரை வெளியானதற்கு பிறகு , உலகமே பரபரப்பானது . அப்படியும் இருக்குமோ என்று பலரும் டிஎன்ஏ எடுத்து ஒரே இரவில் தங்கள் குழந்தைகளை விளையாட்டு வீரர்களாக்கி விட துடித்தனர் . குழந்தைகளுக்கு உடனே டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து சோதித்தால்தான் பள்ளி , கல்லூரி முடியும் முன்னர் நீங்கள் அவர்களை விளையாட்டு வீரர்களாக்க முடியும் என்று அக்கறையும் பயமுறுத்தலும் கூட கட்டுரையில் இருந்தது . 2015 இல் வெளியான ஸ்போர்ட்ஸ் ஜர்னல் மெடிசின் இதழில் , மரபணுக்கள் விளையாட்டு வீரர்களின் திறனில் எந்த பங்கும் வகிப்பதில்லை என்று கூறப்பட்டது . இந்நிறுவனம் ஆக்ட்என் 3 என்ற மரபணு சோதனை மூலம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண முடியும் என கூறியது . விளையாட்டு வீரர்களின் உடலில் 9,900 ஆயிரம் பல்வேறு வ
  இந்தியாவை உயர்த்தும் கிராமப் பொருளாதாரம் ! கொரானோ நோய்த்தொற்று இந்தியாவை தாக்கி ஆறு மாதங்களாகின்றன . மத்திய அரசும் , மாநில அரசுகளும் பொதுமுடக்க தளர்வுகளை மெதுவாக அறிவித்து வருகின்றன . கொரானோ காரணமாக அனைத்து தொழில்துறைகளும் முடங்கிவிட்டன என்பது உண்மைதான் . அதேசமயம் கிராமங்களிலுள்ள வேளாண்மைத்துறை மெல்ல மீண்டெழுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன . கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மட்டும் 111.61 டன் உரம் விற்பனையாகியிருக்கிறது . மேற்குவங்கம் , உத்தரப்பிரதேசம் , பஞ்சாப் , தெலங்கானா , ஹரியாணா , சத்தீஸ்கர் , ஒடிஷா , ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வருமானத்திற்கு நெற்பயிரையே நம்பியுள்ளனர் . நெற்பயிர் பயிரிடும் பரப்பு கூட 17 சதவீதம் ( ஜூன் 24 படி ) அதிகரித்துள்ளது . விவசாயத்திற்கான டிராக்டர் விற்பனையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 27 சதவீதம் அதிகரித்துள்ளது . மத்திய அரசு வழங்கிய கடன் திட்டங்களும் , பருவகால மழையும் , இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதும் கிராம பொருளாதாரத்தை மீட்கும் என வேளாண்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர் . இந்தியாவின் பொருளாதார

நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை!

  நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை ! பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற்றோரின் எண்ணிக்கை 11.17 கோடியாக உள்ளது . இந்த திட்டத்தில் பயன்பெற ஒருவருக்கு விவசாயம் செய்வதற்கான சொந்த நிலம் இருப்பது அவசியம் . விவசாயிக்கான தகுதி இருந்தாலும் சில விதிகளால் அவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறாமல் போவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன . ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை விவசாய கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுகிறது . 2015-16 ஆம்ஆண்டு அறிக்கையில் நிலங்களை உரிமையாக வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14.6 கோடியாக அதிகரித்துள்ளது . 2010-11 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக இருந்தது . இவர்கள் அனைவருமே நிலங்களை உரிமையாக கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய விவசாயக்கொள்கை (2006) தகவல் தெரிவிக்கிறது . எனவே , இவர்கள் ஒருவரின் நிலத்தில் விவசாயக் கூலியாக பணியாற்றி வந்தாலும் கூட அவர்களையும் விவசாயிகள் பிரிவில்தான் சேர்ப்பார்கள் . நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் , அதில் பணியாற்றுபவர்கள் என பலரையும் ஆய்வு செய்யும் பணிக்கு முதலில் அரசு பெரிய முக்கிய

உடலின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் நடைபாணி!

  உடலின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் நடைபாணி ! ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை அவர் நடக்கும் நடையை வைத்து கணிக்க முடியுமா என உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் . நடந்துசெல்வது ஆரோக்கியத்தைக் காக்கும் என்று முன்பிருந்தே மக்களுக்கு கூறப்படுகிறது . ஆனால் மனிதர்களின் கையிலுள்ள கைரேகை எப்படி தனித்துவமானதோ அதேபோல ஒருவரின் நடந்துசெல்லும் பாணியும் வேறுபட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . நடக்கும்போது உடலிலுள்ள பலநூறு தசைகள் இயங்குகி்ன்றன . பிரெஞ்சு நாவலாசிரியர் ஹானர் டி பால்சாக் , 1832 ஆம்ஆண்டு எழுதிய தி விகார் ஆப் டூர்ஸ் நாவலில் , பெண்ணுடைய நடைக்கும் அவளது ஆளுமைக்கும் இடையில் உள்ள தொடர்பை எழுதியிருப்பார் . இவரின் தியரி ஆஃப் வாக்கிங் என்ற நூலும் இந்த வகையில் முக்கியமானது . ’’ ஒவ்வொரு மனிதரின் நடைபாணியும் பிறரிடமிருந்து மாறுபட்டது . அவர்களின் கை அசைவு , மூட்டுகளின் நகர்வு ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறோம்’’ என்கிறார் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ஹெய்ன்செல் . சிசிடிவி கேமரா மூலம் ஒருவரின் நடைபாணியை பார்த்து குற்றவாளியைக்

கலாசார பிரதிநிதித்துவம் தேவை!

  கலாசார பிரதிநிதித்துவம் தேவை ! அசாமில் இடம்பெயர்ந்து வாழும் மியா முஸ்லீம்களுக்கான கலாசார அருங்காட்சியம் அமைப்பது தொடர்பாக பல்வேறுபட்டன கருத்துகள் உருவாகிவருகின்றன . அசாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஷெர்மன் அலி , குவகாத்தியில் உள்ள ஶ்ரீமந்தா சங்கரதேவா கலாஷேத்ரா மையத்தில் சார் சப்போரிஸ் பகுதியில் வாழும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று குரல் எழுப்பினார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கட்சி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா , அசாமின் கலாசாரத்தில் இப்படி தனி அடையாளங்களை உருவாக்க வேண்டியதில்லை . இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கூறினார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் அசாமை பாஜக பிளவுக்குட்படுத்துவதாக புகார் எழுப்பின . பிரம்மபுத்திரா நதிக்கரையோரமாக வசிக்கும் மக்களின் கலாசாரத்தை பிரதிநிதிப்படுத்துவதா வேண்டாமா என்றுதான் பிரச்னை உருவாகியுள்ளது . இப்பகுதியை சார் சாப்போரிஸ் என்று அழைக்கின்றன . 2002-03 படி இங்கு 24.80 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் . இவர்களில் 80 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்க

2021ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் -இதில் நிறைவேறியவை எவை என யோசியுங்கள்

          2021 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் சூழல் மாற்றங்கள் சூழல் கட்டிடங்கள் பயன்பாட்டிலுள்ள கட்டிடங்கள் பயன்படுத்தும் ஆற்றல் காரணமாக 30 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கின்றன . அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரம் உணவகங்கள் தவிர பிற நிறுவனங்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் பிறப்பித்துள்ளன . இதனால் ஜூன் 2021 முதல் அனைத்து வீடுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களையே பயன்படுத்த முடியும் . பிளாக்பவர் என்ற கட்டுமான நிறுவனம் , குறைவாக ஆற்றலைப் பயன்படுத்தும் வீடுகளை கட்டித்தருகிறது . இம்முறை பிற நாடுகளிலும் பிரபலமாக வாய்ப்புள்ளது . உள்ளூர் சந்தை உள்நாட்டில் விளையும் காய்கறிகளை , உள்நாட்டிலேயே சந்தைப்படுத்துவது தொடங்கப்படலாம் . பல நாடுகளில் பொதுமுடக்கம் தொடர்வதால் அங்கு சரக்குப் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது . உள்நாட்டு விற்பனை மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தலாம் . நோய்த்தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமத்திற்கு திரும்பியுள்ள தொழிலாளர்களால் விவசாயத்துறை வருவாய் கூடலாம் . பசுமை முதலீடு அமெர