இடுகைகள்

பெருந்தொற்று காலத்தில் உருவான எழுத்தாளர்கள்- கிருபா ஜி, ஜோதி பாண்டே லவாகரே

படம்
  கிருபா ஜி, எழுத்தாளர் சென்னை பெருந்தொற்று காலம் நிறையப் பேருக்கு உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு சிக்கல்களை அளித்துள்ளது. சிலர் அதில் சிக்கி பாதிக்கப்பட்டாலும் இன்னும் சிலர் எழுத்து, ஓவியம், படைப்பு, பல்வேறு ஆன்லைன் படிப்பு என மீண்டு வந்துள்ளனர். முன்பை விட இன்னும் சிறப்பான மனிதர்களாக தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.  இந்த பெருந்தொற்று காலத்தில் நிறைய புதிய எழுத்தாளர்கள் வந்துள்ளனர். இதற்கு பின்ஞ், பிரதிலிபி என நிறைய வலைத்தளங்கள் காரணம் என்றாலும் கூட சொந்த முயற்சியும் தளராத உழைப்பும் பின்னணியில் உள்ளதையும் மறுக்க முடியாது. தன்னறம் நூல்வெளியின் காணொலியில் எழுத்தாளர் தேவிபாரதி, புதிய இளம் எழுத்தாளர்களுக்கு தொடர்ச்சியாக எழுதுங்கள். அதன் வழியாக நீங்கள் என்ன கண்டடைய வேண்டுமோ அதனைக் கண்டுபிடிப்பீர்கள் என சொன்னார். பயணம் என்று கிளம்பிவிட்டால் இறுதியாக அனைவரும் வந்தடையும் இடம் ஒன்றுதான். தன்னைத்தானே அறிதல்தானே? அப்படிப்பட்ட சிலரைப் பற்றி பார்ப்போம்.  கிருபா ஜி  வாட் வீ நோ அபவுட் ஹெர் - வெஸ்ட்லேண்ட் புக்ஸ்  சென்னையைச் சேர்ந்த 35 வயதாகும் எழுத்தாளர் இவர். நாவலை எழுத வேண்டும் என்று தோன்றியதும் தனத

நீரெல்லாம் கங்கை - கடிதங்கள்- அன்பரசு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இந்த வலைத்தளத்தில் வெளியான பல்வேறு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைக் கொண்டுள்ள தொகுப்பு. இப்போது மின்னூலாக அமேசானில் வெளியாகியுள்ளது. உங்களுக்கு அமேசானில் கணக்கு இருந்தால், நூலை எளிதாக விலையின்றி வாசிக்க முடியும்.  நூலை வாசிக்க கிளிக் செய்யுங்க.... https://www.amazon.in/dp/B09QZR2NRT புகைப்படம் - வினோத் பாலுச்சாமி -Yaa studio அட்டை வடிவமைப்பு -WWW.Canva.com

எழுத்தை நம்பி சென்னைக்கு வரும் தஞ்சாவூர் இளைஞனின் போராட்டம்! - மிஸ்டர் வேதாந்தம் - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் - 1 தேவன் மிஸ்டர் வேதாந்தம் முதல் பாகம் தேவன் அல்லயன்ஸ்  வேதாந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கை, தடாலென ஒரேநாளில் கீழே விழுகிறது. அதற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறான் என்பதே நாவலின் மையம்.  தினந்தந்தியின் திரைவிமர்சனம் போல கதையின் கரு இதுதான் என்று சொன்னாலும் கூட நாவல் நெடுக வேதாந்தத்தின் மனநிலையை விவரிப்பது கடினமானது. சில பக்கங்களை வாசித்து விட்டு மெல்ல அவரின் மனநிலையோடு இணையும்போது நாவலை ரசிக்கத் தொடங்குகிறோம்.  தஞ்சாவூரில் வாழும் தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தம். இவரின் பணம், செல்வாக்கு காரணமாக ஊரில் பெரிய மதிப்பு உண்டு. ஆனால் அவரை உண்மையாகவே மதிப்பவர்கள் குறைவு என்பதை அவர் மறைவின்போது, வேதாந்தம் கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த சூழலில் ஆதரவு தருவது அவனது அத்தையும் அவளது பெண்ணான செல்லமும்தான். அத்தங்காள் செல்லம் என்றே கடிதங்களில் வருகிறது. அப்படியே வைத்துக்கொள்வோம் அழகாக இருக்கிறது அல்லவா? தேசிகாச்சாரிக்கு கிடைத்த பணம் அவரை ஆணவம் கொண்டவராக மாற்றுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பணத்தை செலவு செய்கிறார். குறிப்பாக அவரது மாமா கோபாலசாமி அய்

கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் தங்க விழா! - ஜப்பானில் நடைபெற்ற விளையாட்டுத் திருவிழா!

படம்
  பிப்ரவரி 3 1972ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி வெளியே நடைபெறத் தொடங்கின. முதல்முறையாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளுங்கள்.  இந்த விளையாட்டுகளில் பிப்.3 தொடங்கி பிப். 13 வரையில் நடைபெற்றன.  ஜப்பானின் ஹொக்கடைவில் உள்ள இன்சாப்ரோவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு, அதாவது 2022இல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கிலத்தில் கோல்டன் ஜூப்ளி என்கிறார்கள்.  ஜப்பான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றது. 1940ஆம் ஆண்டுக்கான போட்டி நடத்தும் வாய்ப்பு. ஆனால் அதற்குள் சீனாவுக்குள் உள்ளே படையெடுத்து சென்றதால் 1937ஆம் ஆண்டு தன் வாய்ப்பை இழந்தது. எனவே விளையாட்டுப் போட்டிகளை நடத்த லண்டன், ஹெல்சின்கி என்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாமா என்று நினைத்தது விழா கமிட்டி. போர் நடைபெற்றதால் இரு நகரங்களும் தேர்விலிருந்து விலகின.  சப்போரோ நகரம் பான்ஃப் லக்டி என்ற நகரங்களோடு போட்டி நடத்துவதற்கான தேர்ந்தெடுப்பு பட்டியலில் இடம்பிடித்தது. 1972ஆம ஆண்டுக்கான போட்டியை ரோமில் நடைபெற்ற கமிட்டி கூட்டம் முடிவு செய்தது. இவர் கூடிப் பேசி முடிவு செய்த

என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! -- வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.12.2021 அன்புள்ள வினோத் அண்ணனுக்கு வணக்கம்.  இன்று வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மனமும் அப்படித்தான் இருக்கிறது. திருவண்ணாமலை வர நினைத்தேன். சூழல் இசைவாக இல்லை. சிவனின் அனுகிரகம் கிடைத்தால்தான் அங்கு வர முடியும் என நினைக்கிறேன். புஷ்பக விமானம் என்று தெலுங்குப் படம் பார்த்தேன்.  தாமோதர் என்பவர் இயக்கி ஓடிடியில் வெளியான படம். திருமணமாகி சில நாட்களில் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். மனைவி போனதை வெளியில் சொல்ல முடியாமல் அரசு பள்ளி ஆசிரியரான கணவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார் என்பதே கதை.  படத்தின் கதை, அதிலுள்ள விஷயம் என்று பார்த்தால் சீரியசான விஷயம்தான். ஆனால் இயக்குநர் நகைச்சுவையை படம் நெடுக சேர்த்திருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக குறும்பட நடிகையாக வந்து போலி மனைவியாக நடித்து கலக்கியிருக்கிறார் ஷான்வி மேகனா.  இன்று காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது. மோகன் ராஜ் அண்ணா போன் செய்தார். மழை பெய்கிறது அடுத்தவாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.  அன்பரசு  12.12.2021

ஆத்மாவை பற்றி படரும் குரல்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
3.12.2021  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு , வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் வெயில் காய்கிறது. அறையின் சுவரின் பூஞ்சை வேகமாக பரவிவருகிறது. நான் வைத்திருந்த சமையல் பொருட்கள் ஈரத்தால் பூஞ்சை உருவாகி வீணாகிவிட்டன. இதனால் பொருட்களை வைக்க பிளாஸ்டிக் டப்பாக்களைத்தான் சேட்டா கடையில் வாங்கி வர வேண்டும். இப்போதுள்ள பாட்டில்களும் டீக்கடையில் விலையின்றி பெற்று வந்தவைதான்.  டெல் மீ வொய் என்ற குழந்தைகள் நூலை வாங்கினேன். இதுவும் முன்னர் நான் வேலை செய்த முத்தாரம் போன்ற இதழ்தான். மலையாள மனோரமா குழுமத்தின் தரமான தயாரிப்பு. பொது அறிவுத்தகவல்களைக் கொண்டது. இந்த மாத இதழ் பெண் சாதனையாளர்களை மையமாக கொண்டுள்ளது. ரூ.40க்கு வாங்கினேன்.  நாளிதழ் ஆசிரியருக்கு மகள் வயிற்றுப் பேரன் பிறந்துள்ளான். மனம் கொள்ளாத மகிழ்ச்சியும், முகத்தில் இதுவரை பார்த்திராத சிரிப்புமாக இனிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே சக உதவி ஆசிரியரும் ஒன்றிய அரசின் விருது பெற்ற எழுத்தாளருமான பி.பி சார் பிரியாணி என அடிபோட்டு இருக்கிறார்.  அன்பரசு 3.12.2021 ------------------------------------------------------

மொழிச்சோதனைகளை தொடர்ச்சியாக செய்த நாவலாசிரியர்! - ஜேம்ஸ் ஜாய்ஸ்

படம்
  இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கிய எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ். 1941ஆம் ஆண்டு குடல் புண் காரணமாக மறைந்தார்.  ஐரிஷ் நாட்டு நாவல் ஆசிரியரான ஜேம்ஸ் ஜாய்ஸ், நாவலை வழக்கமான முறையில் அல்லாமல் பல்வேறு பரிசோதனை பயன்படுத்தி எழுதுவதற்கு பிரபலமானவர்.  இவரின் மிகச்சிறந்த படைப்பு உலிசஸ். படிப்பவர்கள் உணர்ந்துகொள்ளும்படியான அங்கத நடை கொண்ட படைப்பு இது. ஒருநாளில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாக கொண்ட கதை. பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது. 1914ஆம் ஆண்டு டப்ளினர்ஸ் என்ற தலைப்பில்  சிறுகதைகளை எழுதினார்.  1916ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நாவல் உள்ளது. அதன் பெயர், எ போர்ட்ரைட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் ஏஸ் எ யங் மேன். ஜாய்ஸ் எழுதிய கடைசி நாவல்,  ஃபின்னகென்ஸ் வேக். 1939ஆம் ஆண்டு வெளியான இந்த நூலும் கூட மொழிச்சோதனைகள் நிறைய கொண்டதுதான். எழுதியவருக்கு அல்லது படிப்பவருக்கா யாருக்கு அதிக சோதனைகள் இருக்கும் என்று கேட்க கூடாது.  இப்படி எழுதியவருக்கு தொடக்க கல்வி என்பது சிறப்பாக அமையவில்லை. பொருளாதார பிரச்னைகளால் பத்து வயதில் தனது பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டி இருந்தது. கல்லூரிக்கு செல்வதைக் கூட ஓராண்டு ஒத்திவைத்தார்