இடுகைகள்

கோல்ப் வரலாற்றில் மறக்கமுடியாத ஆப்பிரிக்க அமெரிக்க வீரர் - டைகர் வுட்ஸ்

படம்
  டைகர் வுட்ஸ் டைகர் வுட்ஸ்  எல்ட்ரிக் டான்ட் டைகர் வுட்ஸ் 1975ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சைப்ரஸில் பிறந்தவர். இவரது தந்தை எர்ல் வுட்ஸ் அமெரிக்க ராணுவத்தில் சமையல் பிரிவில் வேலை பார்த்தார். வுட்ஸின் அம்மா குட்டில்டா, தாய்லாந்து நாட்டு குடிமகள்.  டைகர் வுட்சிற்கு கோல்ப் அறிமுகமானது அவருக்கு வயது 2. விரைவில் விளையாட்டின் நுட்பங்களை கற்றவர், தன்னோடு விளையாடியவர்கள் அனைவரையும் வீழ்த்த தொடங்கினார். நேவி கோல்ஃப் கோர்ஸ் எனுமிடத்தில் நடைபெற்ற போட்டியில்தான் பல்வேறு சாதனைகளை செய்தார்.  ஜூனியர் கோப்பைக்கான பந்தயத்தை மட்டும் ஆறு முறை வென்ற சாதனையாளர் வுட்ஸ். இருபது வயதானபோது கோல்ஃபில் தொழில்முறை விளையாட்டு வீரராக மாறினார். 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று தனது 23 வயதில் முதல்முறையாக மாஸ்டர் டைட்டிலை வென்றார்.  ஒரே ஆண்டில் யுஎஸ் ஓப்பன், பிரிட்டிஷ் ஓப்பன், பிஜிஏ சாம்பியன்ஷிப் என முக்கியமான டைட்டில்களை வென்றெடுத்து சாதித்தார். இப்படி வென்ற ஒரே ஆளுமை இவர்தான். இந்த சாதனையை டைகர் ஸ்லாம் என்று பெருமையாக பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.  தொழில்முறை விளையாட்டு வீரராக டைகர் வுட்ஸ் செய்த சாதனை நூறாண்டுகளில் முக்க

எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! - மலையேற்ற பயணத்தின் வரலாறு

படம்
  எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! நூற்றாண்டு கண்ட இமயமலை பயணம் ! கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம், இமயமலைக்கு மக்கள் பயணம் செல்லத் தொடங்கி நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. இமயமலை 8,849 மீட்டர்கள் உயரமானது. உலகின் உயரமான மலை இது. 1921ஆம் ஆண்டு முதலே இமயமலையில் மக்கள் ஏறி சாதித்து வருகிறார்கள். இன்று, ஆண்டிற்கு 500 பேர் இமயமலையை எட்டிப்பிடிக்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறார்கள்.  இமயமலையின் எல்லைப்பகுதியில் நேபாளமும், திபெத்தும் அமைந்துள்ளன. இமயமலையின் திபெத்திய பெயர் கோமொலாங்மா (qomolangma). இதன் பொருள் புனித அன்னை. இந்த மலை, 2414 கி.மீ. தொலைவில்  ஐந்து ஆசிய நாடுகளைச் சுற்றிலும்  அமைந்துள்ளது. தொடக்கத்தில் நேபாளமும், திபெத்தும் அந்நியர்களை இமயமலை பயணத்திற்கு அனுமதிக்கவில்லை. 1921ஆம் ஆண்டு திபெத்  பகுதியினர், பிரிட்டிஷ் வீரர்களை இமயமலை ஏற அனுமதித்தது. இவர்கள் மலையை ஆராய சென்றனர். இக்குழுவை சார்லஸ் ஹோவர்ட் பரி (charles howard bury) என்பவர் வழிநடத்தினார். புவியியலாளர்கள், வரைபட ஆய்வாளர்கள் குழுவில் இருந்தனர்.   இப்பயணத்தைப் பற்றி கார்டியன் பத்திரிக்கை ”சார்லஸ் எவரெஸ்டில் ஏறியது மகத்தான சாதனை. து

உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டால் குஞ்சையே கொல்லும் நாமக்கோழி!

படம்
  நாமக்கோழி தனது குஞ்சுடன் நாமக்கோழி (Euracian coot) அறிவியல் பெயர்  ஃபுலிக்கா அட்ரா (Fulica atra)  இனம்  F. atra குடும்பம் ராலிடே(Rallidae) சிறப்பு அம்சங்கள்  கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உடல் இருக்கும். கரையில் உள்ள மரங்களில் கூடுகட்டி வாழும். நீரில் நீந்திக்கொண்டே புழு, பூச்சிகளை உண்ணும். நெற்றி தொடங்கி மூக்குவரையில் உள்ள வெண்மை நிறம்தான் நாமக்கோழி என பெயர் வரக் காரணம். உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் தனது குஞ்சுகளை தானே கொன்று விடும் இயல்பு கொண்டது. கால் அமைப்பு, வலை போன்ற அமைப்பில் வேறுபட்டு அமைந்துள்ளது.  எங்கு பார்க்கலாம் புல்வெளி, சதுப்புநிலங்கள், கடல்பகுதிகள் பரவலாக வாழும் நாடுகள் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, சீனா, பின்லாந்து ஐயுசிஎன் பட்டியல் அழியும் நிலையில் இல்லாதவை (LC 3.1) ஆயுள்  7 ஆண்டுகள் மொத்த எண்ணிக்கை 53,00,000-65,00,000 எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  முட்டைகளின் எண்ணிக்கை  10 எழுப்பும் ஒலி குக்... குக் .. கிக் .. கிக் .. கீ  https://www.dinamalar.com/news_detail.asp?id=365376 https://www.iucnredlist.org/species/22692913/154269531

நுகர்வை குறைத்தால் சூழல் பிழைக்கும்!

படம்
  நுகர்வைக் குறைத்தால் சூழல் பிழைக்கும்! உலகளவில் வெப்பமயமாதல், சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நீர், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அளவு கூடுவது, சூழலின் சமநிலையை நிலைகுலைய வைக்கும். இந்த விளைவுகளை சமாளிக்க நாம், நமது நுகர்வைக் கவனித்து குறைத்தாலே போதுமானது.  மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்பது, இன்று நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. வீடு, வணிகம், தொழிற்சாலை என மின்சாரப் பயன்பாடு தடையில்லாமல் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முயன்று வருகின்றன. ஐ.நாவின் மனித மேம்பாட்டு தொகுப்பு பட்டியில் (HDI) கூட தனிநபர் செலவழிக்கும் அளவு 2000 - 3000 கிலோவாட்(kWh) என்று கணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தை வைத்து ஒருவர் செலவழிக்கும் தோராய மின்சார அளவு கணிக்கப்படுகிறது. இதன் வழியாக அவரது வாழ்க்கை எப்படி செழிப்பாக அல்லது ஏழ்மையாக உள்ளதா என கணிக்கிறார்கள்.   வளர்ந்த மேற்குநாடுகளில் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒருவரின் வருமானத்திற்கும், அவரின் மின்சார நுகர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவை எடுத்து

தேனீக்களை குணமாக்கும் தேன்!

படம்
  தேனீக்களை  காப்பாற்றும் வேதிப்பொருள்!  தேனீக்களை பூச்சிக்கொல்லி, பருவநிலை மாறுபாடு என பல்வேறு விஷயங்கள் பாதிக்கின்றன. கூடுதலாக வாரோவா எனும் ஒட்டுண்ணி(Varroa destructor) தேனீக்களை கடுமையாக தாக்குகிறது. இது, தேனீக்கூட்டிலுள்ள புழுக்களை உணவாக உண்பதோடு, உடலிலுள்ள  வைரஸ்களை தேனீக்களின் காலனிக்கும் தொற்ற வைக்கிறது. இதில் ஏற்படும் தாக்குதலால் தேனீக்களின் இறகு கடுமையாக பாதிக்கப்படுகிறது. வளரும் நிலையில் உள்ள பூச்சிகளுக்கு இறகு வளர்ச்சியில்லாமல் போய்விடுகிறது.  வைரஸ் தேனீக்களின் நினைவுகளையும் பாதிக்கிறது. இதனால் கூட்டை விட்டு தேனை தேட கிளம்பிய வேலைக்கார தேனீ, வீட்டுக்கு திரும்ப முடியாது. எப்படி வருவது என்பதை மறந்துவிடுவதுதான் காரணம். உணவு கிடைக்காததால், தேனீக்களின் கூட்டமே நிலைகுலைந்து அழியும் நிலை உருவாகும்.  தேனீக்களை தாக்கும் வைரஸ்களை அழிக்கும் வேதிப்பொருளை தேசிய தைவான் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சோடியம் பூடைரேட் (Sodium butyrate) எனும் வேதிப்பொருளை தினசரி தேனீக்களுக்கு கொடுக்கும்போது அவை வலிமையாகின்றன. மனிதர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் போலவே இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது. இதன்

குறைந்த விலையில் சோலார் பேனல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன!

படம்
  குறைந்த விலையில் சுடச்சுட சூரியன்!  சோலார் தகடுகள் மூலம் சூரிய ஆற்றலை சேமிப்பது முன்னர் இருப்பதை விட விலை குறைவானது . அடுத்த இருபது ஆண்டுகளில்  சூரிய சக்தியே முக்கியமான ஆற்றல் ஆதாரமாக இருக்கும் என உலக ஆற்றல் முகமை (IEA) கூறியுள்ளது.  உலக ஆற்றல் முகமை, தற்போது அமைக்கப்படும் சூரிய ஆற்றல் தகடுகளால் இத்துறை அடுத்த இருபது ஆண்டுகளில் 80 சதவீதம் வளரும் என்று கூறியுள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கு மாற்றாக முக்கியமான ஆற்றல் ஆதாரமாக 2025இல் சூரிய ஆற்றல் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறைந்தவிலை என்பதால் முதலீட்டாளர்கள் இத்துறையில் முதலீடு செய்ய அதிகவாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கூடலாம்.  1883ஆம் ஆண்டு முதன்முதலாக சோலார் பேனல் கண்டறியப்பட்டது. அப்போது சூரிய ஆற்றலைத் தேக்கும் திறன் 1-2 சதவீதமாக இருந்தது. பல்லாண்டு கால ஆராய்ச்சிகளால் ஆற்றலைத் தேக்கும் திறன் மெல்ல முன்னேறி வருகிறது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம், சோலார் செல்களின் ஆற்றல் தேக்கும் திறன் 18.2 சதவீதமாக மேம்பட்டது. புதிய சாதனையாக 2019ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் இ

இந்தியர்களின் உயரம் மெல்ல குறைந்து வருகிறது!

படம்
  இந்தியர்களின் உயரம் குறைந்து வருவதாக இந்திய அரசின் தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவித்துள்ளன.  இந்தியர்கள் பொதுவாக உயரத்தை விட நிறத்தைப் பற்றிய கவனத்தை அதிகம் கொண்டுள்ளனர். ஆனால் ஒருவரின் உயரம், எடை என்பது உடல்நலத்தைப் பொறுத்தவரை முக்கியமானது. தற்போது தேசிய குடும்பநல ஆய்வுகளில் தெரிய வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவை. 1992 முதல் 2020 வரையிலான ஆய்வுகளில் இந்தியர்களின் உயரம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இரண்டாவது மற்றும் நான்காவது ஆய்வுகளில் உயர மாறுதல் தெரியவந்துள்ளது. இதில் பதினைந்து முதல் இருபத்துநான்கு வயது வரையில் உள்ள பெண்கள் 0.12 செ.மீ. உயரம் குறைவாகவும், இருபத்தாறு முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களின் உயரம் 0.13 செ.மீ. உயரமாக உள்ளனர். இந்த வகையில் ஆண்களின் உயரம் முதல் பிரிவில் 1.1 செ.மீ, இரண்டாவது பிரிவில் 0.86 செ.மீ. என குறைந்துள்ளது. இதில் நாம் கவலைப்படும் விஷயமாக உள்ளது, பட்டியலினப் பெண்களின் உயரம் 0.42 செ.மீ., ஏழைப்பெண்களின் உயரம் 0.57 செ.மீ. என குறைந்துள்ளதுதான்.  ஆண்களைப் பொறுத்தவரை ஏழையான ஆண்கள், வசதியான ஆண்கள் பிரிவு என இரண்டிலுமே அவர்களின் உயரக்க