இடுகைகள்

மக்களுக்கு துணையாக நிற்கும் இரு நண்பர்களின் வெட்டுக்குத்து கதை!

படம்
  மகாநந்தி ஸ்ரீஹரி, சுமந்த், அனுஷ்கா இயக்கம் வி சமுத்ரா ஒருவழியாக படம் முடிந்தபோது.... கதையின் கரு நண்பர்களுக்குள் வரும் முட்டல் மோதல், நம்பிக்கை தான் கதை.  ஆந்திராவில் உள்ள கிராமம். அங்கு தனது நிலபுலன்களை விற்று ஊர் மக்கள் வேலை செய்வதற்கு தொழிற்சாலை கட்ட நினைக்கிறார் சுவாமி நாயுடுவின் அப்பா. ஆனால், அதை ஊரில் உள்ள பணக்கார ர் ஏற்கவில்லை. அப்படி தொழிற்சாலைக்கு மக்கள் வேலைக்கு போனால் நமக்கு மதிப்பிருக்காது. நீ தொழிற்சாலை கட்டக்கூடாது என்று மிரட்டுகிறார். பிறகு ஒரு நல்லநாள் பார்த்து சுவாமி நாயுடுவின் பெற்றோரை வீடு புகுந்து தாக்கிக் கொல்கிறார்.  இதனால் சுவாமிநாயுடுவும் அவரது தங்கையும் அனாதை ஆகிறார்கள். படம் இப்படித்தான் தொடங்குகிறது.  பிறகு சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் எதிரிகளை பழிவாங்கிய சுவாமி நாயுடு ஊரில் பெரிய ஆளாக மாறியிருக்கிறார். அவருக்கு வலது இடது என இரு கரமுமாக இருப்பவன்தான் சங்கர். பார்த்தால் அண்ணன் தம்பி போல  தோன்றும் ஆனால் இருவரும் நண்பர்கள். சுவாமி நாயுடுவைப் பொறுத்தவரை அப்பாவின் கனவை நிறைவேற்றுவதுதான் பேஷன், ஆம்பிஷன், கனா எல்லாமே. இப்படி தொழிற்சாலை கட்டி முடிக்கும்போது எத

அலையாத்திக் காடுகளில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

படம்
  அலையாற்றிக்காடுகளின் சிறப்பம்சங்கள்! அலையாற்றிக் காடுகளிலுள்ள மரங்கள் எப்போதும் பசுமையாக உள்ள இலையுதிரா காடுகள் வகையைச் சேர்ந்தவை. இதன் காரணமாக கார்பன் டையாக்சைட் வாயுவை உட்கிரகித்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இம்மரங்கள் தம் வேர்கள் மற்றும் தண்டுகளிலுள்ள சிறிய சுவாசிப்பு துளைகள் மூலம் காற்றை உறிஞ்சுகின்றன. இத்துளைகளுக்கு லென்டிசெல்ஸ் (Lenticels) என்று பெயர்.  அலையாற்றிக் காடுகளிலுள்ள ரைசோபோராசீயே (Rhizophoraceae) இனத்தைச் சேர்ந்த தாவரங்களின் இனப்பெருக்க முறைக்கு தாயோட்டு விதை முளைத்தல் (Vivipary)என்று பெயர். விலங்கினங்களைப் போல, விதைகளைக் கன்று போல ஈன்று வளர்க்கின்றன. உலக வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, கடலோரப் பகுதிகள் நீரால் அரிக்கப்பட்டு வருகின்றன. அலையாற்றிக் காடுகள் உள்ள பகுதிகளில் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. இவை, இயற்கை அரணாக நின்று தம் வேர்களை நிலத்தில் படர்த்தி நிலப்பரப்பைக் காக்கின்றன.  அலையாற்றிக் காடுகளில் கடல் மீன், இறால், சுறா ஆகியவை ஆண்டு முழுவதும் வலசை வருகின்றன. இவை முட்டையிட்டு குஞ்சு பொரித்த பிறகே மீண்டும் கடலுக்கு செல்லும். இதன் காரணமாக

கரும்பருந்தின் வாழ்க்கை பற்றி அறியும் ஆய்வு!

படம்
  கரும்பருந்து கரும்பருந்துக்குப் பாதுகாப்பு!  இயற்கைச்சூழலில் கரும்பருந்தின் (Milvus migrans) பங்கு,குப்பைகளைத் தூய்மைப்படுத்துவதுதான். டில்லியைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரி  இளைஞர்,நிஷாந்த்குமார். இவர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்குகளை அடிக்கடி பார்ப்பார். அங்கு இரைதேட வரும் கரும்பருந்துகள் வானில் வலம் வரும் காட்சி அவருக்கு பிடித்தமானது. ஆனால் இப்படி அவர் பார்வையில் படும்  கரும்பருந்துகளின்  எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. உண்மையில் கரும்பருந்துகளுக்கு என்னவானது என்ற கேள்வியே 2009ஆம் ஆண்டு,கரும்பருந்து பாதுகாப்பு திட்டத்தை (black kite project ) ஊர்வி குப்தா என்பவரோடு சேர்ந்து தொடங்கவைத்தது.  இந்த திட்டத்திற்கான உதவிகளை வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்குகிறது. பொதுவாக குப்பைக்கிடங்குகளில் காணும் சிறிய பருந்துகள்,(Small indian kites)  கரும்பருந்தின் இனத்தைச் சேர்ந்த துணைப்பிரிவைச் சேர்ந்தவை. டில்லியில் கரும்பருந்துகளுக்கான உணவில் குறையேதும் இல்லை. டில்லியின் தொன்மையான நகரப்பகுதிகளில் முஸ்லீம்கள், கரும்பருந்துகளுக்கென இறைச்சித்துண்டுகளை உணவாக வீசி வருகிறார்கள். இ

சிறுவயதிலிருந்தே பறவைகளை கவனிப்பது பிடிக்கும்!

படம்
  அதிதி முரளிதர் இயற்கை செயல்பாட்டாளர் உங்களைப் பற்றி கூறுங்கள். நான் மும்பையில் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இயற்கை, பறவைகள் பற்றியும் நான் எனது எர்த்தி நோட்ஸ் என்ற வலைத்தளத்தில் எழுதி வந்தேன். இப்படித்தான் மெல்ல இயற்கை பற்றிய செயல்பாடுகளுக்குள் நான் வந்தேன்.  பறவைகளைக் கவனிக்கத் (Bird watching) தொடங்கியது எப்போது? சிறுவயதில் அம்மாவுடன் உட்கார்ந்து, பறவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது நினைவில் உள்ளது. கல்லூரியில் படிக்கும்போது, உயிரியல் ஆய்வகத்தில் அதிக நேரம் செலவிடுவேன். அப்போதும் வெளியே உள்ள பறவைகளைத் தான் கவனித்துக் கொண்டிருப்பேன். ஹூப்போ (Hoopoe) என்ற பறவை எங்கள் கல்லூரிக்கு அடிக்கடி வரும். சிறுவயதில் பறவைகளின் ஒலிகளைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்.  உங்களுக்குப் பிடித்த பறவைகள் என்னென்ன? எனக்கு அனைத்து பறவைகளும் பிடிக்கும். ஆனால் சிறுவயதில், வால்க்ரீப்பர், ஆசியன் ஃபேரி ப்ளூபேர்ட், ஃபயர் பிரெஸ்டெட் ஃபிளவர்பெக்கர் (Wallcreeper, Asian Fairy-bluebird,  Fire-breasted Flowerpecker) ஆகிய பறவைகள் பிடித்தமானவை. இவையே அன்று என் கவனத்தை ஈர்த்தவை.  பறவை கவனித்

இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய சோனி வாக்மேன்!

படம்
  இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய வாக்மேன்! இன்று ஐபோன், இயர் பட்ஸ், ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன் என வாழ்க்கை மாறிவிட்டது. பாடல் கேட்கும் அனுபவத்தை இன்று ஜேபிஎல் ஹார்மன், இன்ஃபினிட்டி, ஸ்கல் கேண்டி, பிலிப்ஸ், போஸ் என நிறைய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடி ஒன்று உண்டு. அதுதான் சோனியின் வாக்மேன்.  இன்றுமே சில காமன்சென்ஸ் இல்லாத முட்டாள்கள், ஊருக்கே ரேடியோ வைத்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஜிஃபைவ், லாவா, கார்பன் என உருப்படாத போன்களை வைத்துக்கொண்டு முத்துக்கொட்டை பல்லழகி என ஊருக்கே தண்ணீர் தொட்டியில் பகவதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி போல பாட்டு போட்டுக்கொண்டிருந்தனர். இங்கே எங்கே பிரைவசி? அதைத்தான் சோனியின் வாக்மேன் கொண்டு வந்தது.  நான் ஒலிப்பெருக்கி என்றால் வெளிநாடுகளில் ரேடியோ, கிராம போன் என பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி வாக்மேனை அறிமுகப்படுத்தியது. இசை கேட்பதில் தனித்துவமான பொருளாகவே வாக்மேன் இன்றும் உள்ளது.  1978ஆம் ஆண்டு சோனியின் துணை நிறுவனர் மசாரு இபுகா, பாடல் கேட்பதை எளிமையாக்க நினைத்தார். இதற்காக டிசி டி5 ஸ்டீரியோ கேசெட்

சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஹாங்காங்!

படம்
  இங்கிலாந்து மிகவும் தந்திரமான காரிய க்கார நாடு. தனது நலனுக்காக பிற நாடுகளை அழித்து மக்களைக் கொல்லவும் அது தயங்கியதில்லை. இந்தியாவை காலனி நாடாக்கிய தன்மையில் இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை இந்த வகையில் சேர்க்கலாம்.  இங்கிலாந்து சீனாவில் இருந்து பீங்கான், தேயிலை, பட்டு ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தது. இதற்கு தொகையாக வெள்ளியை வழங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சீனர்களின் பொருட்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க வெள்ளி இல்லை. என்ன செய்வது? எனவே தந்திரமாக யோசித்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், வணிகர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதுதான், போதைப்பொருட்களை சீனாவில் கள்ளத்தனமாக விற்பது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து வெள்ளி வாங்கி அதனை இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுத்துவிடுவது....  இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை சீன பேரரசர் அறிந்து தடுத்தார். இதனால் ஓபியம் தொடர்பான போரை சீனாவும் இங்கிலாந்தும் நடத்தின. இந்த வகையில், 1839, 1856 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடைபெற்றன. சீனா படைக்கு அப்போது பெரிய படைகளும் கடற்படைகளும் இல்லை.எனவே இரும

முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

படம்
  பிரதிநிதி தெலுங்கு  இயக்கம் பிரசாந்த் மந்தரா நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல.  முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.  நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்திரமாகிறார். அவரின் பெயர

தேசியமொழியாக இந்தியே இருக்க முடியும்! - நமது மொழிப்பிரச்சினை - காந்தி- அ.லெ.நடராஜன்

படம்
  காந்தி நமது மொழிப்பிரச்னை காந்தி தமிழில்  அ.லெ. நடராஜன் இந்த நூல் காந்தி எழுதிய பல்வேறு கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளிலிருந்து பெறப்பட்டு கோவையாக்கி நூலாக்கப்பட்டுள்ளது. நூலின் தமிழாக்கம் சிறப்பாக உள்ளதை குறிப்பிட்டு கூறவேண்டும்.  பனியா சாதியில் பிறந்தவர் காந்தி. அவர், தன் வாழ்பனுவத்தில்  சமூகத்தில் உள்ள மக்களைப் பற்றி இறுதி வரை கற்றுக்கொண்டே இருந்தார். இந்த வகையில் அவர் தன் வாழ்வின் இறுதிக் காலகட்டம் வரை பல்வேறு விஷயங்களைக் கற்றும் கற்றதை பரிட்சித்தும் பார்த்து வந்தார்.  இந்த நூலில் முழுக்க மொழிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்தியாவின் தேசிய மொழியாக ஒரே மொழி. அது எதுவென்பதுதான் விஷயமே. இந்த வகையில் நாடு முழுவதையும் ஒருங்கிணைக்க இந்தி தான் உதவும் என தனது தரப்பு கருத்தை கூறுகிறார். ஒருகட்டத்தில் பிற மொழிகளைக் கூட தேவநாகரி லிபியில் எழுதிப்பழகலாம். இதனால் தாய்மொழி அழிந்துவிடாது என தன் கருத்தை கூறுகிறார்.  நூலில் முக்கியமான மொழிகளாக இந்தி வட்டாரத்தில் பேசப்படும் இந்தி, உருது ஆகிய மொழிகளில் எது சிறந்தது என வாதிடும் போக்கிலேயே நூல் பெரிதும் பயணிக்கிறது. இந்துஸ்தானி என்பது எந்த மொழியைக் குறிக்

உலகப்போரின் தொடக்கம்!

படம்
  ஐரோப்பாவில் உலகப்போர் தொடங்கிய காலகட்டம் 1914 - 1918. இந்த வகையில் உலகப்போர் தொடங்கி 7 கோடிக்கும் அதிகமான படையினர் போரில் கலந்துகொண்டனர். இப்போர் நடைபெறுவதற்கான சூழல் படுகொலை ஒன்றால் உருவானது.   1914ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று, ஆஸ்திரிய ஹங்கேரிய அரசர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டார். காவ்ரிலோ பிரன்சிப் என்ற போஸ்னியா தேசியவாதி தான் கொலைக்கு காரணம். ஆஸ்திரிய ஆட்சியாளர்களிலிருந்து, போஸ்னியாவை மீட்பதுதான் காவ்ரிலோ பிரின்சிப் சார்ந்த  பிளாக் ஹேண்ட் அமைப்பின் நோக்கம்.  பிறகுதான் செர்பியா மீது ஆஸ்திரியா - ஹங்கேரி நாடுகள் போரை அறிவித்தன. 1914ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று போர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. போரில் இரு தரப்புகள் உருவாயின. ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் ஒரு தரப்பாகவும், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி ஆகியோர் ஒரு தரப்பாகவும் மாறி போரிட்டனர்.  ஜெர்மனியைப் பொறுத்தவரை இது ஐரோப்பாவை கையகப்படுத்த சிறந்த வாய்ப்பாக நினைத்தது. எனவே, பிரான்சை தாக்க படைகளை அனுப்பியது. படைகளை பெல்ஜியம் வழியாக கொண்டு சென்றது. ஆனால் பெல்ஜியம், போரில் நடுநிலை வகிக்க நினைத்தது. எனவே, ஜெர்ம

சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணு உலை!

படம்
  இகோர் குர்சாடோவ் முதல் அணுஉலை  இன்று வளர்ந்த நாடுகள் அமைதி என்று பேசுவதற்கு காரணமே, முதுகுக்கு பின்னால் வைத்துள்ள அணு ஆயுதங்கள்தான். யாராவது அமைதிக்கு மறுத்தால் அடுத்த அடி மரண அடியாக, அந்நாட்டின் மீது அணு குண்டுகளை வீசுவார்கள். இதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்க நாடு நடத்திய தாக்குதலைக் கூறலாம். அந்த நாட்டின் பல தலைமுறைகள் கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இரண்டு குண்டுகளை வீசி அந்நாட்டை முழுமையாக அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அமெரிக்காவைத் தாண்டி ஜப்பான் இன்று உழைப்பால் பல படிகள் உயர்ந்து நிற்கிறது.  இரண்டாம் உலகப்போர் சமயமே அணு உலை சார்ந்த முன்னேற்றங்கள் தொடங்கிவிட்டன. வெடிகுண்டுகள் தயாரிக்க மட்டுமல்ல. அணுசக்தியை பயன்படுத்தி அணு இணைப்பு, பிளப்பு முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  முதல் அணு உலை சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் ஆண்டு உலகில் முதன்முறையாக மின்சாரம் தயாரிப்பதற்கென நிறுவப்பட்ட அணு உலை இதுவே. இந்த ஆண்டோடு சோவியத் யூனியனில் அணு உலை நிறுவப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. இதன் செயல்பாடு 1954 தொடங்கி 2002 ஆம் ஆண்ட

மனிதர்களின் உடலில் எத்தனை விதமான மூட்டுகள் உள்ளன தெரியுமா?

படம்
   மூட்டுகள் பற்றி அறிவோம்... மனிதர்களின் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவை, உடலிலிருந்து நழுவாமல் இயங்க மூட்டுகள் உதவுகின்றன. இவற்றில் அசையும் மூட்டு, அசையா மூட்டு என இருவகை உண்டு. அசையும் மூட்டுகளுக்கு தோள்மூட்டு, இடுப்பு மூட்டு எடுத்துக்காட்டாகும். அசையா மூட்டுக்கு மண்டையோட்டு எலும்புகள் சான்று.    முழங்கால், முழங்கை ஆகியவை  கீல் மூட்டு இணைப்பைக் கொண்டவை. இவை கதவைப் போல திறந்து மூடுபவை. எலும்புகளை உறுதியான வளையும் தன்மை கொண்ட குருத்தெலும்பு (Cartilage) பாதுகாக்கிறது. முதுகுத்தண்டிலுள்ள எலும்புகளை குருத்தெலும்பு இணைக்கிறது. இதன் வளையும் தன்மை, அதிர்ச்சியை தாங்கும் ஆற்றலைத் தருகிறது. முதுகுத்தண்டில் ஏற்படும் அதிர்ச்சியை அதன் முள்ளெலும்புகளை இணைத்துள்ள குருத்தெலும்பு தாங்குகிறது.   முளை மூட்டு (Pivot Joint) மனிதர்கள் திரும்புவதற்கு உதவும் தாடைக்கு கீழுள்ள மூட்டு. ஆனால், இவை பக்கவாட்டில், முன், பின்பக்க இயக்கம் கொண்டவை அல்ல.  கீல் மூட்டு (Hinge joint) மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் முன்னே, பின்னே நகரும். ஆனால் பக்கவாட்டில் நகராது.  தகட்டு மூட்டு (Gliding joint) தட்டை எலும்புகளுக்கு இடைய