இடுகைகள்

பெருந்தொற்று ரகசியம் பொதிந்த கிருஷ்ண ஆபரணத்தை மீட்க செல்லும் மருத்துவர்! கார்த்திகேயா 2 - சந்து மாண்டெட்டி

படம்
  கார்த்திகேயா 2 இயக்கம் சந்து மாண்டெட்டி இசை கால பைரவா ஒளிப்பதிவு கார்த்திக் கட்டமனேனி தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவன் கார்த்திக். கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். அவன் அந்த மருத்துவமனையில் புகும் பாம்புகளை உயிருடன் பிடித்து அகற்றுவதில் திறமையானவன். இப்படி இருக்கும்போது ஒருநாள் அவன் செய்யும் செயலால், அவனுக்கு வேலை பறிபோகிறது. பிறகு, அவன் அம்மா கூறியதன் பேரில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற துவாரகா செல்கிறான். அங்கு சென்று விஷ்ணுவுக்கான நேர்த்திக்கடனை செய்ய நினைக்கிறாள் கார்த்திக்கின் அம்மா. இன்னொருபுறம், விஷ்ணுவின் மறைத்து வைக்கப்பட்ட மூன்று ஆபரணங்களைத் தேடி எடுத்தால் அதிலுள்ள விஷயங்களை வைத்து பெருந்தொற்று பிரச்னையை சமாளிக்க முடியும் என அகழ்வராய்ச்சியாளர்  நம்புகிறார். இவரை பின்பற்றி விஷ்ணுவின் ஆபரணங்களைத் திருடி அதை வைத்து மருந்து தயாரித்து லாபம் பார்க்க ரகசிய மருத்துவக்குழு ஒன்று முயல்கிறது.  கார்த்திக் எப்படி தனது அனுபவங்களின் வழியாக நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறுகிறான் என்பதே காட்சி ரீதியான கதை. ஆனால் இறுதிக் காட்சியில் பேசும்போது, அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுதான். நம்பிக்கையால்

அறிவியல் தகவல்களை வெளிப்படுத்தும் வழிகள் - பை சார்ட், அட்டவணை, டயகிராம்

படம்
  தகவல்களை எப்படி வெளியே கூறி விளக்குவது? அறிவியல் சம்பந்தமான தகவல்களை எழுத்துக்களாக பத்தி பத்தியாக எழுதி ரிசர்ச்கேட் வலைத்தள கட்டுரை போல விளக்கினால் படிக்கும்போதே பலருக்கும் தூக்கம் வந்துவிடும். இதை தடுக்கவே பல்வேறு படங்கள், அட்டவணைகள் உதவுகின்றன. பொதுவாக அறிவியல் சோதனைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள், அளவுகள் ஆகியவற்றை டேட்டா என்கிறார்கள். தமிழில் தகவல்.  பொதுவாக பங்குச்சந்தை, பணவீக்கம் ஆகியவற்றின்  ஏற்ற இறக்கங்களை கிராப் வடிவில் சொல்லுவார்கள். இந்த வடிவில் ஏற்ற இறக்கங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும். அனைத்து தகவல்களையும் இதே வடிவில் சொல்ல முடியாது.  பை சார்ட் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது ஒரு ரூபாயில் வரவு செலவுகளை இந்த வகையில் சொல்லுவார்கள். இதனை பார்த்தாலே எளிதாக ஆண்டின் நிதி அறிக்கை எந்த லட்சணத்தில் இருக்கிறது என அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக எந்த அளவு, சந்தையில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, வருமான அளவு ஆகியவற்றை பை சார்ட் மூலம் புரிந்துகொள்ளலாம். நோய்த்தாக்குதல் அளவு, வறுமையில் உள்ள மக்களின் அளவு ஆகியவற்றை சதவீத அடிப்படையில் எளிதாக புரிந்துகொள்ளலாம்.  நூறுகிராம்

அறிவியல் முறைகளும், அதன் கண்காணிப்பும்! - அறிவியல் அறிவோம்

படம்
  அறிவியல் எப்படி வேலை செய்கிறது? அறிவியல் என்பது தகவல்களை சேகரித்து வைக்கும் தொகுப்பு என பலரும் நினைக்கலாம். அப்படியல்ல. புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அதனை சோதித்துப் பார்ப்பது அறிவியலின் முக்கியமான இயல்பு. அறிவியலாளர்கள் புதிய சிந்தனைகளை வைத்து கணிப்புகளை உருவாக்கி சோதிக்கின்றனர். அறிவியல் ரீதியாக சிந்தனைகளை சோதித்துப் பார்ப்பதை அறிவியல் முறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் சயின்டிஃபிக் மெத்தட். கவனித்தல் அல்லது கண்காணித்தல் அறிவியல் முறையில் அடிப்படையே, ஒன்றைக் கண்காணித்தல்தான். பூக்கள் தோட்டம் வைத்திருந்தால் இந்த முறையில் சூரிய வெளிச்சம் படுவதை எளிதாகப் பார்க்கலாம்.  இப்படி கண்காணித்தலை ஹைப்போதிசிஸ் என்று கூறுகிறார்கள். ஒரு பொருளை, தாவரத்தைக் கண்காணிப்பதை விளக்குவதுதான் ஹைப்போதிசிஸ். மண் சூரிய வெப்பத்தைப் பெற்று கதகதப்பாக இருப்பதை கண்டறிவது இந்த வகையில் சேரும்.  ஒரு தாவரம் வளருவதற்கு சூரிய வெளிச்சம் முக்கியமானது. அதை சூரிய வெளிச்சம் உறுதி செய்கிறது. தோட்டத்தில் மூடாக்கு போட்டு செடிகளை வளர்ப்பவர்கள் செயற்கையான முறையில் பல்புகளை எரிய விட்டு செடிகளை வளர்ப்பார்கள். குறிப்பிட்ட வெப்பநிலையி

சரியான கல்வியை பள்ளிகள் வழங்குகின்றனவா? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி எது? - ஜே கே 1 கல்வி கற்காத மனிதன் யார்? பள்ளி செல்லாதவன், தன்னை முழுக்க அறியாதவன்தான். பள்ளி சென்றாலும் நூல்களை மட்டும் படித்தவன் முட்டாளாக இருக்க வாய்ப்புண்டு. அவன் அரசு, அதிகார வர்க்கம் தரும் தகவல்களை மட்டுமே அறிந்திருப்பான். புரிந்துகொண்டிருப்பான்.  ஒன்றைப் புரிந்துகொள்ளுதல் என்பது சுயமாக கற்றல் என்பதன் வழியாக சாத்தியமாகிறது. இது ஒருவரின் மனதில் நடைபெறும் உளவியல் கற்றல் செயல்முறையைப் பொறுத்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்குள் தன்னை உணர்ந்துகொண்டு கற்பதுதான் கல்வி என்று கூறவேண்டும்.  புத்தகங்களைப் படித்து அதிலிருந்து நாம் பெறும் செய்திகள், தகவல்கள் ஆகியவற்றின் தொகுப்பைத்தான் கல்வி என்று சொல்லுகிறோம். இதை யார் வேண்டுமானாலும் பெறமுடியும். புத்தகங்களை வாசிக்கத் தெரிந்தால் போதுமானது. இப்படி பெறும் அறிவு மனிதர்களிடையே கொள்ளும் மோசமான உறவு, சிக்கல்கள், எடுக்கும் முடிவு ஆகியவற்றுக்கும் முக்கியமான காரணமாகிறது. ஏறத்தாழ ஒருவரை குழப்பத்திற்குள் ஆழ்த்தி அவரை மெல்ல அழிக்கிறது.  கல்வி கற்க ஒருவருக்கு உள்ள வாய்ப்பு பள்ளி மட்டுமேதானா? நமது சமூகம் ஒருங்கிணைக்கப்பட்டது. நாம் பிள்ளைகளை

இருள் மனிதர்களின் கொந்தளிப்பான வாழ்க்கை - உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் - எதிர் வெளியீடு

படம்
  உப்பு நாய்கள்  லஷ்மி சரவணக்குமார்  எதிர் வெளியீடு  மின்னூல்  இந்த நாவல் சென்னையில் இருளான, நிழல் வேலைகளை செய்யும் மனிதர்களைப் பற்றி துல்லியமாக சொல்லிச் செல்கிறது. வாசிப்பவர்களை நிறைய வன்முறை சம்பவங்கள் வாயடைத்து பீதி கொள்ளச்செய்யும். அந்தளவு காட்சிகள் வன்முறையை விவரிக்கின்றன.  நூலுக்கு வண்ணதாசன் முன்னுரை எழுதியிருக்கிறார். ல.ச.குவின் அனைத்து நூல்களையும் படித்துவிடுவதாக கூறியிருக்கிறார். நம்பிக்கையான மனிதர்கள் பற்றி மட்டுமே அதிக சிறுகதைகள் எழுதியுள்ளவர், ல.ச.குவின் கதை பற்றி முன்னுரை எழுதியுள்ளது ஆச்சரியமானது. உண்மையில் அவர் அப்படிப்பட்ட மனிதர்களையும் அறிய நினைப்பது இயல்பானதுதான். மணிரத்னம் எப்படி பாலா படங்களைப் பார்த்து அவரைப் பாராட்டுகிறாரோ அதேபடிதான்.  சென்னையில் சேரி அருகில் வாழ்பவர்களான சம்பத், மணி, சுந்தர் ஆகியோரின் வாழ்க்கைதான் முக்கியமான கதை. இதற்கடுத்து மதுரையில் பிக்பாக்கெட் அடிக்கும் செல்வி, தவுடு அவர்களின் கணவர்கள், விபச்சாரத்தை தொழிலாக செய்யும் முத்துலட்சுமி, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்து சென்னையில் வாழ்க்கையைத் தொலைக்கும் ஆதம்மா ஆகியோர் வருகிறார்கள்.  நாவலில் சற்று நம்பிக்

திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் ஏமாற்றம் கண்டு புத்தி தெளிந்த சம்பவங்களின் தொகுப்பு - வனவாசம் - கண்ணதாசன்

படம்
  வனவாசம்  கண்ணதாசன் கண்ணதாசன் பதிப்பகம் மின்னூல் வனவாசம், மனவாசம் என இரு நூல்களை கண்ணதாசன் எழுதினார். இதில் வனவாசம் அவரின் அரசியல் அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறது. அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் காலத்திலேயே எழுதிய நூல் என்பதால் வனவாசம் முக்கியத்துவம் பெறுகிறது. நூலைப்படித்தேன் என்று சொன்னபோது, நண்பர் ஒருவர், கண்ணதாசன் நம்ம ஊரு டால்ஸ்டாய் போல என்றார். டால்ஸ்டாயின் ஒழுக்க விதிகளைப்போலவே,  கண்ணதாசனும் பல்வேறு ஒழுக்க முறைகளை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூறியிருக்கிறார். அதுவும் தன்னையே மோசமான எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு....  அவர் அதற்கு வெட்கமெல்லாம் படவில்லை.  வனவாசத்திலும் ஒழுக்கம் தவறுகிற,செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் விடுகிற மாது விஷயங்கள் நிறைய உண்டு. சினிமா நடிகை, விபச்சார பகுதியில் விலைமாது, பிறகு அவரே ஏற்கும் இரண்டாவது ஏற்பாடு.... என நீள்கிறது.  கண்ணனை வணங்கும் கண்ணதாசனுக்கு இப்படி சலனமுறுகிற குணம் இருந்தாலும் கவி பாடுவதில் எந்தக் குறையும் எக்காலத்திலும் வரவில்லை. மது, மாது, போதை, அரசியல் பழகினாலும் கூட அவருக்கு வருமானம் ஈட்டித்தர தமிழ் தயங்கவில்லை. அ

ஆதரவற்ற பெண்களை கருமுட்டைக்காக கடத்தும் மாபியாவை வேட்டையாடும் இரு பெண்கள்! - சாகினி தாகினி - சுதீர் வர்மா

படம்
 சாகினி தாகினி  ரீமேக் - மிட்நைட் ரன்னர்ஸ்  சுதீர் வர்மா ரெஜினா, நிவேதா தாமஸ்  கொரிய படமான மிட்நைட் ரன்னர்ஸ் படத்தை ரீமேக் செய்து மாற்றி எடுத்து இருக்கிறார்கள். படத்தை தமிழில் பார்த்தால் அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. டப் படம் என்றால் படம் உள்ள பகுதி சார்ந்தே பெயரை சொல்லி படத்தை தமிழ் செய்தால் என்ன கெட்டுவிடப்போகிறது.... தெலுங்கானவை எப்படி மதுரை ஆக்க முடியும்..  போலீஸ் அகாடமிக்கு இருவர் தேர்வாகி வருகிறார்கள். ஷாலினி, தாமினி. இவர்கள்தான் சாகினி, தாகினி என்ற இரு பாத்திரங்கள். இருவரும்  தொடக்கத்திலேயே முட்டி மோதி பிறகு நடைபெறும் சம்பவத்தால் நண்பர்களாகிறார்கள். நட்பு என்றால்,  ஒருவர் கண் அசைத்தால் இன்னொருவர் அப்படியே செய்து முடிக்கும் அளவுக்கு நெருக்கமாகிறார்கள். ஒருமுறை பப்பில் மது அருந்திவிட்டு சாலையில் வரும்போது திடீரென பைக்கில் வேகமாக இளைஞர்கள் வர அவர்களை இளம்பெண் ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவளை திடீரென வேன் ஒன்றில் பிடித்து செல்கிறார்கள். அதைப் பார்த்து ஷாலினி, தாமினி என இருவரும் அவளை பின் தொடர்கிறார்கள். அதில், அவளை தூக்கிச்சென்றவர்கள் எப்படிப்பட்ட குற்றவாளிகள் என தெரிகிறது. இந்த நேரத்த