இடுகைகள்

அறிகுறிகளை வைத்து நோய்களை கணிக்கும் முறை - அவசர சிகிச்சை மருத்துவம்

படம்
  நோயாளியின் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. இவற்றை நாம் அறிந்தால் அவருக்கு எளிதாக சிகிச்சை செய்ய முடியும்.   குடும்ப விவரங்களை அறிவது எதற்கென்றால், நோயாளியின் குடும்பத்தில் பாரம்பரியமாக சில நோய்கள் உருவாகி வந்திருக்கலாம். அதை தெரிந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது எளிது. இதய நோய்கள், த்ரோம்போயம்போலிக் நோய், குடல்வால், பித்தப்பை நோய், புற்றுநோய் ஆகியவை குடும்ப ரீதியாக ஏற்படும் நோய்கள். எனவே, இவற்றை ஆராய நோயாளி கூறும் விவரங்கள் அவசியம்.   மதுப்பழக்கம், புகையிலை பயன்படுத்துகிறாரா, போதைப்பொருட்கள் பழக்கம், திருமணம் ஆனவரா, நரம்பியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் உள்ளதா என ஆராய்வதும் முக்கியமானது. இதையொட்டி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம். வலி எப்போது தொடங்கியது? வலி தொடங்கும்போது என்ன வேலை செய்துகொண்டிருந்தீர்கள்.? வலியின் உணர்வு எப்படி இருக்கிறது? இதற்கு முன்னர் இப்படி வலி ஏற்பட்டிருக்கிறதா? வலிக்கான அளவுகோலாக 0 லிருந்து பத்துக்குள் ஒரு எண்ணைச் சொல்ல முடியுமா? வலிக்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு

பட்டினி கிடப்பவருக்கு உணவு கொடுத்தால் அன்பாகாதா? ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்  வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்ன? வாழ்க்கைதான். நீங்கள் வாழ்க்கையை எப்படியாக உருவாக்கிக் கொள்ளவேண்டுமென நினைக்கிறீர்களோ அதுவேதான். ஒருவரின் வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்பது என்ன? அதாவது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி பேசவில்லை. பொதுவாக அனைவரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி கேட்கிறேன். லட்சியத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள். யார் அதை உங்களுக்கு காட்டுவார்கள்? வாசிப்பதன் மூலம் அறிந்துவிடமுடியும் என நினைக்கிறீர்களா?   ஒரு எழுத்தாளர் லட்சியம் என்பதை தான் புரிந்துகொண்ட முறையில் எழுதுவார். இன்னொரு எழுத்தாளர் இன்னொரு முறையை பின்பற்றுவார். கஷ்டத்தில் உள்ள மனிதனைச் சென்று லட்சியம் என்னவென்று கேட்டால் மகிழ்ச்சியாக வாழ்வது என்பான். பசியில் இருப்பவனைக் கேட்டால், வயிறு நிறைந்திருப்பது என்பான், பெண்ணைக் கேட்டால், குழந்தை பெற்றுக்கொள்வது என்பாள், அரசியல்வாதியைக் கேட்டால், முக்கியமான அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்பார். சன்னியாசியைக் கேட்டால் அவருக்கு கடவுளைக் காண்பது அடைவது லட்சியம் என்பார். லட்சியம்,

பெற்றோரை கவனித்துக்கொள்ளும் கடமை, கனவுக்கு தடையாகுமா? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நாம் வெற்றி பெற்றதும்   பெருமை என்ற உணர்வு உருவாகிறதே ஏன்? வெற்றி பெறும்போது பெருமை என்ற உணர்வு ஏற்படுகிறதா? வெற்றி என்பது என்ன? வெற்றிகரமான எழுத்தாளர், கவிஞர், ஓவியர்,   தொழிலதிபர் என்று கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன?   நீங்கள் உள்முகமாக குறிப்பிட்ட கட்டுப்பாட்டைப் பெற்று சாதித்திருக்கிறீர்கள். பிறர் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டார்கள் என்பதுதானே? நீங்கள் பிறரை விட சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம். நீங்கள் வெற்றி பெற்றவராக, பிறருக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இடத்தை அடைந்துவிட்டீர்கள். இப்படி நினைக்கும்போது மனதில் உருவாகும் உணர்வுதான் பெருமை என்பது. நான் சிறப்பானவன். நான் என்ற உணர்வுதான் பெருமைக்கு முக்கியமான காரணம். வெற்றிகள் பெறும்போது பெருமை உணர்வு வளருகிறது. ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து சிறப்பானவன் என்ற எண்ணதை பெறுகிறார். குறிக்கோள் கொண்டுள்ளவர் என்பது, ஒருவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் வலிமை, எதை நோக்கி செல்கிறோம், ஊக்கம் அளிக்கிறது. பிறரை விட நான் முக்கி

அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

படம்
    மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை   அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.   காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்   என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.     ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,   வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆதரவற்று தன்னை பராமரிக்க முடியாதவர்கள், ப

கனவை நிறைவேற்ற உதவியவர்களை தேடிச்சென்று நன்றி சொன்னால்... தேங்க்யூ - விக்ரம்குமார்

படம்
  தேங்க்யூ சைதன்யா அக்கினேனி, மாளவிகா நாயர், ராஷி கண்ணா தனது குறிக்கோளில் சமரசமே இல்லாமல் முன்னேறுபவன், அதற்காக உறவுகளை உதறித்தள்ளினால் என்னாகும் என்பதே தேங்க்யூ. படம் மனிதர்களைப் பற்றிய நல்லுணர்வுகளை ஏற்படுத்த முயல்கிறது. அந்த வகையில் பாராட்டத்தக்கது. அபிராம் வைத்யா என்ற ஆப் ஒன்றை உருவாக்குகிறார். அவர் அமெரிக்காவில் வேலையில் சேரவே வருகிறார். ஆனால் அங்கு வந்து ஸ்டார்ட்அப்பாக வைத்யா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி பெறுகிறார். இதற்கான முதலீட்டை அவரது   அபியின் காதலியும் எதிர்கால மனைவியுமான பிரியா கொடுக்கிறார். நாட்கள் செல்ல செல்ல நான்தான் அனைத்தையும் செய்தேன். இதில் பிறருக்கு எந்த பங்கும் இல்லை என்ற ஈகோ அபியிடம் தலைதூக்குகிறது. இதனால் நிறுவனத்தை தொடக்க காலத்தில் உருவாக்கிய   தன் நண்பர்களை வேலையில் இருந்து தூக்குகிறான். நாம் சாதித்தோம் என்பதை தான் சாதித்தேன் என மீட்டிங் ஹாலில் உள்ள போர்டில் மாற்றி எழுதும் அளவுக்கு தலைகனம் உச்சத்திற்கு செல்கிறது. இதனால் பிரியா அபியை விட்டு விலகுகிறாள்.   ஒன்றாக சேர்ந்து வாழ்வதால், உறவிலிருந்து விலகும்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறாள். அதைக்கூட அபியிட

கார் விபத்தில் இறந்த அம்மாவை காப்பாற்ற கடந்தகாலத்திற்கு செல்லும் மகனின் கதை! ஒக்கே ஒக்க ஜீவிதம்

படம்
  ஒகே ஒக்க ஜீவிதம் தெலுங்கு சர்வானந்த், ரீது வர்மா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி இயக்கம் - ஶ்ரீகார்த்திக்   நிகழ்காலத்தை நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு காரணமான இறந்தகாலத்தை நான்கு நாட்களில் மாற்ற முடிந்தால்…. அதுதான் ஒக்கே ஒக்க ஜீவிதம் படத்தின் கதை. படம் அம்மா, மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் டைம் மெஷின் வருகிறது. பார்க்க சரவணபவன் ஹோட்டல் டிபன் கேரியல் போல உள்ளது. நாம் இங்கு பார்க்க வேண்டியது அதை வைத்து காலத்தில் பயணித்து சென்று என்ன செய்கிறார்கள் என்றுதான். நிலவை சுட்டிக்காட்டும்போது எனது விரலைப் பார்க்காதே நிலவைப் பார் என ஓஷோ சொல்லுவார் அல்லவா? 2019ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டிற்கு கால எந்திரத்தில் பயணிக்கிறார்கள் மூன்று நண்பர்கள். அங்கு சென்று இறந்த காலத்தை மாற்ற முயல்கிறார்கள். இதற்கு நிகழ்காலத்தில் உள்ள பிரச்னைகளே காரணம். அவை என்னவென்று பார்க்கலாம். ஆதிக்கு இசைமேல் பைத்தியம். பாடல் பாடலாக வீட்டின் ஸ்டூடியோவில் பாடி கேசட்டாக அடுக்கி வைத்திருக்கலாம். அதெல்லாமே அவரது அம்மா காலத்திலிருந்து பாதுகாத்து வரும் சொத்து. அவரது அம்மாதான் இன்ட்ரோவெர்டான ஆதிக்கு ஒரு

தனது காணாமல் போன மாமாவைக் கண்டுபிடிக்க உயிரைப் பணயம் வைக்கும் புலனாய்வாளர் ரீயூனியன் - சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ்

படம்
  ரீயூனியன் – தி சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ் சீன டிவி தொடர் 2020 -july to  august 32 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் இயக்குநர் பான் அன் ஸி வூ குடும்பம் கலைப்பொருட்களை சீன தொல்பொருள் துறையுடன் அகழ்ந்து எடுத்து அதை வியாபாரம் செய்து வருகிறது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் வூசி இவன் தொல்பொருட்களை கண்டறிந்து புலனாய்வு செய்து மர்மத்தை கண்டறிபவன். இவன் எதிரிகளே இவனை சொல்லுவது போல கடவுளை நம்பாத நாத்திகன். கண்ணால் பார்ப்பது, அதிலிருந்து கற்றுக்கொள்வதை மட்டுமே நம்புவன். இவனது நண்பர்கள் குண்டு வாங், அதிரடி கைலன். இதில் வாங், பேசிக்கொண்டே இருப்பான். வூசி பேசுவது காரண காரியமாகத்தான். கைலன் பெரும்பாலும் பேசாத ஆள். தொடரில் அவனுக்கு வசனம் குறைவு. ஆனால் தன் இரு நண்பர்களுக்கு ஆபத்து வரும்போது யோசிக்கவே மாட்டான். எதிரிகளை மண்டை உடைத்து மாவிலக்கு ஏற்றிவிடும் தீரன். வூசியின் தாய்மாமாக்கள் மூவர். இதில் இரண்டாவது மாமா சொல்படி தான் வூசி கேட்டு நடக்கிறான். இவர்களுடையது பணக்கார குடும்பம். பெற்றோர் சிறுவயதில் இறந்துவிட்டதால் வூசியை இரண்டாவது, மூன்றாவது மாமா ஆகிய இருவரும்தான் பார்த்துக்கொள்கிறார்கள். இரண்ட