இடுகைகள்

ஆலன்சேரி தம்பிரான்மார்களின் நட்பும், பிணக்கும்! - ஆலன்சேரி தம்பிராக்கள் - நெடுமுடி வேணு, திலீப்

படம்
  ஆலன்சேரி தம்பிராக்கள் - மலையாளம் - திலீப் ஆலன்சேரி தம்பிராக்கள் -மலையாளம் - திலீப் ஆலன்சேரி தம்பிராக்கள் திலீப், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன் ஆலன்சேரி என்ற கிராமம். அங்கு சட்டங்களைப் போடுவது இரண்டு தம்பிரான்மார்கள். ஒருவர் சங்கீதம் பாடும் பாகவதர். அடுத்து, களறி சொல்லிக் கொடுக்கும் சாத்தன் குருக்கள். இருவருமே நண்பர்கள். ஒருவர் சொன்னால் இன்னொருவர் சரி என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் புரிந்துணர்வும் நெருக்கமும் இருக்கிறது. இருவரும் தங்களுக்குத் தெரிந்த சங்கீதம், களறி பயட்டு என இரண்டையும்   தங்களது மகன்களுக்கு மட்டும் சொல்லித் தந்து வருகின்றனர். இவர்களின் நட்பை பார்த்து ஊரே வியக்கிறது. ஊர் முழுக்க தம்பிரான்மார்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. அதேசமயம். பாகவதருக்கு பிரச்னை என்றால் சாத்தன் குருக்கள் களறி கற்ற ஆட்களோடு அங்கு வந்து அடி பின்னிவிடுவார். அதேபோல் சாத்தன் குருக்களுக்கு சிக்கல் என்றால் பாகவதர் அங்கு செல்வார். தனித்தனி வீடுகளில் தத்தம் மகன்களோடு வாழ்ந்து வந்தாலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத நட்பு தம்பிரான்களுக்குள் உள்ளது. அதை குலைப்பது போல ஒரு பெண்ணொருத

இரு குடும்பங்களின் பகையைத் தீர்க்கும் காரியஸ்தன் - காரியஸ்தன் - திலீப், அகிலா சசிதரன், ஹரிஶ்ரீ அசோகன்

படம்
  காரியஸ்தன் - மலையாளம் -திலீப் அகிலா சசிதரன் - திலீப் - காரியஸ்தன் காரியஸ்தன் திலீப், அகிலா சசிதரன், சுரேஷ் வெஞ்சரமூடு, ஹரிஶ்ரீ அசோகன் நட்பாக பழகிய இரு குடும்பங்கள் பிரிந்துகிடக்கின்றன. குடும்பங்கள் பிரிவதற்கு காரணமான ஒருவரே பின்னாளில் அதை ஒன்றாக சேர்க்க முயல்கின்றார் ஒருவர். அவ்வளவே கதை. வடக்கு, கிழக்கு என இரு குடும்பங்கள் முதலில் சுவர்களே இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. இரண்டு குடும்பங்களுமே மூடநம்பிக்கை கொண்ட ஆணாதிக்க வாதி குடும்பங்கள்தான். தங்கள் குடும்பத்திற்குள் திருமண உறவு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் கிழக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தபிள்ளைக்கு, ஏற்கெனவே ஒரு காதல் இருக்கிறது. ஆனால்,அவரது அப்பா சொன்னதால் அவரது பேச்சையும் உடனே தட்டமுடியவில்லை. டௌரி பணமாக பத்து லட்சத்தையும் பெண் வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் ராஜன் என்ற கல்யாண மாப்பிள்ளை, சுசீலன் என்பவரிடம் டௌரிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, வடக்கு குடும்பத்திடம் பணத்தை சேர்க்குமாறு சொல்லிவிடுகிறார். பிறகு, கல்யாண வீட்டிலிருந்து தப்பி, தனது காதலியோடு ரயிலில் ஏறப்போகிறார். இவர்களது காதலை அறிந்து ராஜனுக

விவாகரத்தான ஆசிரியையைக் காதலிக்கும் மாணவன்! - கிறிஸ்டி - மேத்யூ, மாளவிகா மோகனன்

படம்
  கிறிஸ்டி 2023 மலையாளம் கிறிஸ்டி இயக்கம் ஆல்வின் ஹென்றி திரைக்கதை – பென்யாமின், ஜிஆர் இந்துகோபன் மாணவன் தன் ட்யூசன் ஆசிரியையைக் காதலிக்கும் கதை. பூவார் எனும் கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. கதை, ராய் என்ற மாணவனின் பார்வையில் நடைபெறுகிறது. இதனால் அவனது பார்வையில்தான் ட்யூஷன் ஆசிரியையை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.   சுமாரான படிப்பு, அதிக நேரம் நண்பர்களுடன் விளையாட்டு, நடனம் ஆடுவது என சுற்றுவதுதான் ராயிற்கு விருப்பம். ஆனால் தேர்வில் வெல்ல கொஞ்சமேனும் படிக்கவேண்டுமே? ஜாலி, கேலி மட்டுமே போதாது அல்லலவா? எனவே, பெற்றோர் அவனுக்கு ட்யூஷன் சொல்லித்தர கிறிஸ்டி என்ற ஆசிரியையை ஏற்பாடு செய்கிறார்கள். ராய்க்கு முதலில் கிறிஸ்டி ஜோசப்புக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக தோன்றுகிறது. பிறகு மெல்ல அவள் சொல்வதைக் கேட்டு படிக்கிறான். பரீட்சையிலும் படித்து வெல்கிறான். அதேசமயம் கிறிஸ்டி சேச்சியுடன் அவன் பழக்கமும் தொடர்கிறது. அவன், அவள் தேர்வுக்குச் செல்ல, உறவினர் திருமணத்திற்கு செல்லவென பல்வேறு உதவிகளைச் செய்கிறான். அவள் சிரிப்பதை, நட்பாக பேசுவதை காதலென நினைத்துக்கொள்கிறான். கிறிஸ்டிக்கு மாலத்தீவில் ஆசிர

செய்யும் அனைத்து விஷயங்களிலும் கிக் தேடும் ஆள்- கல்யாண் - கிக் 1 - இயக்குநர் சுரேந்தர் ரெட்டி

படம்
  கல்யாண் -கிக் (தெலுங்கு) ரவிதேஜா இயக்குநர் – சுரேந்திர ரெட்டி வாழ்க்கையை சாதாரணமாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் சாதாரண வாழ்க்கைதான் என்று விடாமல்,   அதை சற்றேனும் சாகசமாக வாழ நினைக்கும் ஆட்கள் சிலர் உண்டு. தேடுவதற்கு சற்று அரிதானவர்கள்தான். ஆனால் கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் கல்யாண். கல்யாணைப் பொறுத்தவரை சுவாரசியமாக சவாலாக இருந்தால்தான் ஒன்றைச் செய்வது.. இல்லையென்றால் அதை தூக்கிப் போட்டுவிட்டு ஜாலியாக அடுத்த வேலைக்குப் போய்விடுவதுதான் பிடிக்கும். பொதுவாக கிணற்றில் மூச்சை தம் கட்டி உள்ளே இருப்பது, சைக்கிளில் கைவிட்டு ஓட்டுவது என சில விஷயங்களை பலரும் முயற்சி செய்திருப்போம். ஆனால் கல்யாண் வேறுபடுவது எங்கே? வாழ்க்கையின் ஒவ்வொரு இன்ச்சிலும் சாகசம் இருக்கவேண்டும் என நினைப்பதுதான் வேறுபாடு. பார்க்க மற்றவர்களுக்கு திகிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் கல்யாணுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது. உளவியலைப் பொறுத்தவரை இந்த வகையில் சாகச அனுபவங்களை நாடி குற்றங்களைச் செய்பவர்களை மனநலகுறைபாடு கொண்ட நோயாளிகளாகத்தான் பார்க்கிறார்கள். கிக் படத்தில் கல்யாணை சாகச அனுபவங்களை சமூ

பணமும், அறிவுக்கூர்மையும் ஒரே இடத்தில் இருந்தால்.... - காதல்கவிதை (விஷ்வா)

படம்
  விஷ்வா (காதல் கவிதை) பிரசாந்த் தமிழ் இயக்குநர் – அகத்தியன் படத்தின் தொடக்க காட்சியில் விஷ்வா என்பவர், பெட்டிக்கடையில் வந்து நின்று தண்ணீர் கேட்பார்.   காசு கொடுத்து வாட்டர் பாக்கெட் கேட்க மாட்டார். இலவசமாக டம்ளரில் நீர் கேட்பார். ‘காசு கொடுத்தாத்தான் தண்ணீர் ’ என கடைக்காரர் சொல்லுவார். அதாவது, பாக்கெட்டில் கொடுப்பேன் என்கிறார். ஆனால், விஷ்வா தனது சட்டை பாக்கெட்டை காட்டி ‘’பாக்கெட்டில் ஊற்றினால் கீழே கொட்டிடுமே, டம்ளரில் கொடுங்க’’ என கேட்பார். தான் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதுதான் நமக்கே பீதியாகும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என…. முதல் காட்சி தொடங்கி விஷ்வாவின் பாத்திரம் சற்று ரிவர்ஸாகவே பேசிக்கொண்டிருக்கும். விஷ்வா, அப்போதுதான் ஜில்லெட் க்ரீம் போட்டு அதே கம்பெனி ரேஷரில் ஷேவ் செய்துவிட்டு வந்த மாதிரியான பளபளப்பில் இருப்பார். சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டிக் கடைக்கு வரும் சார்லி, சைக்கிளுக்கு ட்ரைவர் வேணும் என விஷ்வாவைக் (பிரசாந்தைக்) கூட்டிக்கொண்டு போவார். பிறகு பீச்சுக்கு செல்வார்கள். அங்கு ஏதோ ஒரு கடையைப் பார்த்துக்கொள்வதாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.

சமூகத்திற்கு தன்னை வெளிக்காட்ட வெடிகுண்டே ஒரே வழி

படம்
  கத்தி, துப்பாக்கி வைத்து கொலை செய்யும் தொடர் கொலைகாரர்கள் உண்டு. ஆனால் வெடிகுண்டு வைத்து பிரமாண்டமான செலவில் கொலை செய்யும் கொலைகாரர்களை குறைவாகவே பார்க்க முடியும்.பொதுவாக,   தொடர் கொலைகார்களுக்கு நிலையான வேலை இருக்காது. எனவே, அவர்களால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிளான் செய்து கொலைகளை செய்ய முடியாது. ஆனால் பாம் வைத்து கொல்பவர்களே இல்லையா என்றால் இருந்திருக்கிறார்கள். இப்போது அவர்களைப் பற்றி பார்ப்போம். 1940-50 காலகட்டத்தில் அமெரிக்காவில் இதுபோல வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லும் சம்பவங்கள் நடந்தன. இதற்கு காரணமானவர், அரசு நிறுவனத்தில் வேலை செய்த ஜார்ஜ் என்பவர். இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. வேலைக்குச் சென்ற இடத்தில் இவரைப் பார்த்து நோய் தொற்றிவிடும் என அனைவரும் பயந்தனர். ஏசினர். தூற்றினர். பலரும் டெய்லி புஷ்ப ஊழியர்கள் போல சைக்கோபயல்கள். இதனால் மனதிற்குள் வைராக்கியம் வளர்த்த ஜார்ஜ், தன்னை   துவேஷித்த ஆட்களை கொல்ல முயன்றார். இவருக்கு அடுத்து தியோடர் என்ற நபரைக் குறிப்பிடலாம். எட்டு மாகாணங்களில் பதினாறு வெடிகுண்டுகளை வைத்தவர். 1995 – 1978 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தியோடர

டீனேஜ் பெண்களை வல்லுறவு செய்து கொல்ல திட்டமிட்ட நண்பர்கள்!

படம்
  லாரன்ஸ் பிடேக்கர்   - நோரிஸ் திட்டக்குழு உருவாக்கி நாட்டிற்கான திட்டங்களை தொலைநோக்காக உருவாக்குவது போல சிலர் உண்டு. இவர்கள், தாங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என திட்டமிட்டு அதற்கான களப்பணிகளை செய்துவிட்டு இறங்குவார்கள். இதனால் அனைத்து விஷயங்களும் நினைத்தபடி கச்சிதமாக நடக்கும் என்று கூறமுடியாது. ஆனால் செய்பவர்களுக்கு செயலில் தீவிரம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்தான் லாரன்ஸ் – நோரிஸ் ஆகிய இரு கொலைகார நண்பரகளும்.. லாரன்ஸ் ஒருவரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறை சென்றார், அங்கு தன் வாழ்நாள் முழுக்க இருக்கப்போகும் நண்பன் ராய் நோரிஸை சந்தித்தார். இருவரும் பேச பேச அவர்களின் சிந்தனைகள் ஒத்துப்போயின. அப்புறம் என்ன? நண்பர்கள் ஆனார்கள். நண்பர்கள் ஆனதே டீனேஜ் பெண்களை கடத்தி வல்லுறவு செய்து கொல்வதற்காகத்தான். திட்டத்தை ப்ளூபிரின்ட் போட்டு வைத்துவிட்டு காத்திருந்தனர். பதிமூன்று தொடங்கி பத்தொன்பது வயது பெண்கள்தான் லட்சியம். லாரன்ஸ் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து வேன் ஒன்றை வாங்கி அதற்கு மர்டர் மேக் என்று பெயர் கூட வைத்து தயார் செய்துவிட்டார். அடுத்த ஆண்டான 1979ஆம் ஆண்டு ஜூனி