இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விபச்சாரக்கும்பலில் சிக்கிய காதலியை போலீஸ் காதலன் மீட்கும் கதை! -

படம்
                வீடிக்கி தூக்குடெக்குவா ஶ்ரீகாந்த், காம்னா ஆங்கிலத்தில் வெளியான டேக்கன் படத்தை தெலுங்கு மொழியில் கண்றாவியான ஒளிப்பதிவில் இசையில் எடுத்தால்... அதுதான் 'இவனுக்கு துணிச்சல் அதிகம்' என்ற தெலுங்குப்படம். தெலுங்கு படத்தலைப்பை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க கூடாது. அது தவறு. நாயகனின் பெயரைக் கூட தலைப்பாக வைக்கலாம். கிராந்தி. நன்றாகத்தான் உள்ளது. அப்படியெல்லாம் நடந்துவிடுமா என்ன? படத்தைப் பார்க்க பார்வையாளர்களுக்கு கூடுதல் துணிச்சல் தேவை. நீதி என்பது துப்பாக்கித் தோட்டாக்களால் வழங்கப்படுகிறது என நம்புபவர், கிராந்தி. பணிநீக்கம், கடுமையான விமர்சனம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் குற்றவாளி என தெரிந்தால் அவர்களை பாய்ண்ட் பிளாங்கில் துப்பாக்கி வைத்து சுடுவதுதான் அவரது பாணி. இப்படி செய்தால் சமூகத்தில் குற்றம் குறையும் என நம்புகிறார். கதைப்படி, நாயகனின் இந்த மூடநம்பிக்கையை அவரது மேலதிகாரியும் பெரிதாக புகார் சொல்லாமல் ஏற்கிறார். நாயகன் கிராந்திக்கு ஒரு இளம்பெண் அறிமுகமாகிறார். அவர் வேறு யாருமல்ல. அவரின் பள்ளிக்கால ரவுடித் தோழி. அவரை நாயகன் காதலிக்...

அத்தை மகளை மணம் செய்ய கேபிள் டிவி கம்பெனியைத் தொடங்கும் நாயகனின் கனவு!

படம்
                காஞ்சன மாலா கேபிள் டிவி நெட்வொர்க் ஶ்ரீகாந்த், லட்சுமி ராய்,தேஜ், சுனில், கிருஷ்ண பகவான் வசதியான பணக்கார குடும்பம். பல்லாண்டுகளுக்கு முன்னர், அவர்களின் ஒரே பெண் பிள்ளை காணாமல் தொலைந்து போய்விடுகிறாள். அவள் பெயர்தான் காஞ்சன மாலா. அந்தப்பெண்ணை நேசிக்கும் தாய் மாமன், அவளது பெயரில் கேபிள் டிவி சர்வீஸ் கொடுப்பதைத் தொடங்கி ரூபர்ட் முர்டோக் லெவலுக்கு வளர நினைக்கிறான். இந்த நிலையில் காணாமல் போன அத்தைப் பெண் திரும்ப கிராமத்திற்கு வருகிறாள். நாயகனுக்கும் அவளுக்கும் காதல் தீ பற்றியதா, தொழில் வளர்ந்ததா என்பதே கதை. முழுக்க கிராமத்தில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் நாயகனும், அவனது குழுவும், கிராமத்தினரும் மட்டுமே படத்திற்கு பொருத்தமாக தெரிகிறார்கள். மற்றவர்கள் அனைவருமே குறிப்பாக நாயகி, அவளது தோழி, அவர்களது ஆடைகள், இறுதியாக வரும் மோசடி வில்லன் என அனைவருமே செயற்கையாக தெரிகிறார்கள். படத்தில் வில்லன் கிருஷ்ண பகவான். அவரது பாத்திரம் பொம்பளை சோக்கு பேர்வழி. இதனாலோ என்னமோ, அவரது ஒன்லைன் கவுன்டர்களில் உள்ள சுவாரசியம் பாத்திரத்தின் தன்மையில் இல்லை. டிவி...

விளம்பரம் - ஆரா பிரஸ் நூல்கள்

படம்
          ஆரா பிரஸ் நூல்கள் 1.ஜனநாயக இந்தியா தமிழில் நேருவின் உரைகள் ச.அன்பரசு-வின்சென்ட் காபோ 2. நெ.1 சமூக தொழில் அதிபர் சமூகத்தை மேம்படுத்தும்  தொழில்களை தொடங்குவது பற்றிய நூல் அன்பரசு சண்முகம் 3. நட்பதிகாரம் புனைவு கடிதங்கள் அரசு கார்த்திக் - கா சி வின்சென்ட் 4. பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் ஹூவாய் (சீனா) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரலாறு அன்பரசு சண்முகம் 5. அசுரகுலம் -1(தொடர்வரிசை நூல்) கொலைகாரர்களின் கதை வின்சென்ட் காபோ 6. மயிலாப்பூர் டைம்ஸ் அனுபவக் கட்டுரைகள் லாய்ட்டர் லூன் 7. உதயமாகும் பேரரசன் ஆனந்த் மகிந்திராவின் வெற்றிக்கதை அன்பரசு சண்முகம் 8. நீரெல்லாம் கங்கை கடிதங்கள் அன்பரசு 9. பன் பட்டர் ஜாம் அரசியல் பகடி விக்டர் காமெஸி - ரோனி 10. அசுரகுலம் -2 குற்றங்களின் முன்கதை வின்சென்ட் காபோ 11. ஒவ்வாமை ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு நூல் அரசு கார்த்திக் 12. டியர் ரிப்போர்டர் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூல் அன்பரசு சண்முகம் 13. பேராசை பூதம் (இரண்டு பகுதிகள்) பங்குச்சந்தையில் அதானி செய்த விதிமீறல்களைப் பற்றி விவரிக்கும் நூல் முருகானந்தம் ...

ப்ரீடெர்ம் (preterm) குழந்தைகள் இறப்பு!

படம்
                 மருத்துவம் ப்ரீடெர்ம் என்றால் என்ன? தாயின் வயிற்றிலுள்ள குழந்தை 37 வாரங்களுக்கு முன்பாகவே பிறப்பதை ப்ரீடெர்ம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் குழந்தைகள் உயிரோடு இருந்தாலும், அவர்களை பாதுகாப்பது நெடிய போராட்டமாகவே இருக்கும். குழந்தை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக பிறப்பது ஆபத்தானது. அதில் சில பிரிவுகள் உள்ளன. அதீதம் இருபத்தெட்டு வாரங்களுக்கு குறைவாக பிறப்பது அபாயம் இருபத்தெட்டு வாரங்களில் பிறப்பது. மத்திமம் முப்பத்தி இரண்டு அல்லது முப்பத்து ஏழு வாரங்களில் பிறப்பது இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கணக்குப்படி 13.4 மில்லியன் குழந்தைகள் முழுமையாக பிரசவகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே பிறந்துள்ளன. அதாவது பத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. 2019ஆம் ஆண்டு மட்டும் ஒன்பது லட்சம் குழந்தைகள் முன்கூட்டியே பிறந்து பிறப்பு சிக்கல்களால் இறந்து போயுள்ளன. காரணம் என்ன? அடுத்தடுத்த கர்ப்பங்கள், குழந்தை திருமண கர்ப்பம், நோய்த்தொற்று, நீரிழிவு, ரத்த அழுத்தம், மரபணு பிரச்னைகள், மோசமான ஊட்டச்சத்து நிலை

மனைவியை முன்னாள் காதலனுக்கு விட்டுத்தர முயலும் கணவன்!

படம்
              தில் பசந்த் வெப் சீரிஸ் இன்ஃபினிட்டம் இயக்கம் பிரசாத் பெஹ்ரா நடிப்பு பிரசாத் பெஹ்ரா, எப்சிபா எப்சிபா, ஒரு இளைஞனைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவனுக்கோ வேலை இல்லை. வேலை தேடிக்கொண்டு வந்தால், என் அப்பாவிடம் பேசலாம் என்று கூறுகிறாள். ஆனால் எதிர்பார்த்தது போல வேலை கிடைக்கவில்லை. அதேசமயம், எப்சிபாவுக்கு, சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஒருவரோடு மணமாகிறது. எப்சிபாவுக்கு அதில் விருப்பமில்லை. இருந்தாலும் அவளது அப்பாவுக்கு வேலை இல்லாத காதலனுக்கு மணம் செய்து தர விருப்பமில்லை. இப்படியான சூழ்நிலையில், அப்பாவியான அரசு ஊழியன் வாழ்க்கை என்னவானது, எப்சிபாவின் காதல் திருமணத்திற்குப் பிறகு என்னவானது என்பதை தொடர் விவரிக்கிறது யூட்யூபில் ஒருமணிநேரமாக தொடர் மாற்றப்பட்டுள்ளது. அதைப் பார்த்துவிடலாம். பிரசாத், அப்பாவியான அரசு ஊழியராக நடித்துள்ளார். சாதிப்பற்று கொண்ட அதேநேரம் அவரது வேலையில் நியாயமான ஆள். ஆபீசுக்கு வேலையாக வருபவர்களிடம் கூட பெண் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் அளவுக்கு, திருமணத்திற்கு துடிப்பவர். அப்படி இருப்பவருக்கு எப்சிபா மணமுடித்து வைக...

இந்தியா - சீனா ஒப்பீடு

படம்
              இந்தியா - சீனா ஒப்பீடு இரு நாடுகளுக்கும் எந்த பொருத்தமும் இல்லை. அனேகமாக மக்கள்தொகையில் மட்டுமே இந்தியா சற்று முன்னிலை பெறுகிறது. ஆசியாவில் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்துள்ள வல்லரசு நாடான சீனாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இரு நாடுகளிலும் 1.4 பில்லியனுக்கும் அதிக மக்கள் உள்ளனர். இப்போதைக்கு இந்தியாவே பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது. ஐ.நா மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, சீனாவில் 116 ஆண்களுக்கு 100 பெண்கள் உள்ளனர். இந்தியாவில் 100 பெண்களுக்கு 110 ஆண்கள் உள்ளனர். உலக வங்கி அறிக்கைப்படி, 2022ஆம் ஆண்டில்  சீனாவில் உள்ள மக்களின் தோராய ஆயுள் எழுபத்தொன்பதாக உள்ளது. இந்தியாவில் மக்களின் ஆயுள் அறுபத்தெட்டாக உள்ளது. சீனாவின் பொருளாதாரம் 18 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு. இந்தியா பொருளாதார வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பொருளாதார அளவு 3.7 ட்ரில்லியன் டாலர்கள். சீனாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் உண்டு. இந்தியாவில் 820 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர்...

அடிமைகளை விட கேவலமானவர்களைக் கொண்ட நாடு!

படம்
              சீன நாட்டோடு இந்திய மக்கள் தம்மை இணைத்துக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஆனால், சில தற்செயலான தொடர்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்துகொள்ளலாம். பௌத்த மதம் இந்தியாவில் உருவானது. அதை, இந்து மதத்தில் இருந்து உருவானது என அரசு அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்துத்துவ முட்டாள்களும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார்கள். கூடவே, அரசில் இணைந்து இன அழிப்பு செய்து பிற சிறுபான்மையினரை அழிக்க முயல்கிறார்கள். சர்க்கரை தயாரிப்பு, பட்டு ஆடைகள் உற்பத்தி, சீன மொழியில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமொழி சொற்கள் ஆகியவை இந்தியாவுடனான தொடர்பை உறுதி செய்கிறது. சீனாவின் யுன்னானிலுள்ள டாய் எனும் சிறுபான்மை மக்கள் ராமாயணத்திற்கான தனித்த வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். 1636-1912 காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் சீனாவுக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது பிரிட்டிஷ் படையில் பெருமளவில் இருந்தவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்கள். இவர்கள் ஹாங்காங், ஷாங்காய், ஹாங்கூ ஆகிய பகுதிகளில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக படுகொலைகளை செய்தனர். எனவே, அன்று தொடங்கி சீனாவில், இந்தியா என்றால் அட...

இழந்த அலுவலக வேலையைப் பெற நாயகன் செய்யும் அதீத சோதனைகள்!

படம்
            மிஸ்ஸம்மா நீலகண்டா சிவாஜி, லயா, பூமிகா தனியாக தொழில்நிறுவனம் தொடங்கி நடத்தக்கூடிய திறமை உள்ள நாயகன், நண்பர்களால் மோசடிக்கு உள்ளாக்கப்பட வேறு வழியின்றி ஒரு நிறுவனத்தில் கணக்காளனாக வேலை செய்கிறான். அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர், ஒருநாள் அவனது நிறுவனத்திற்கு வருகை தருகிறார் அப்போது, தனது வணிக திட்டங்களைக் கொடுத்து பொதுமேலாளர் பதவியைப் பெற நினைக்கிறான். இயக்குநரோ, அவனை பணிவிலக்கி, வினோதமாக சோதனைகளை செய்யச் சொல்கிறார். அதனால், நாயகனின் குடும்பவாழ்க்கை, தொழில்வாழ்க்கை என அனைத்துமே சிதைந்து போகிறது. உண்மையில் அந்த இயக்குநரின் நோக்கம் என்ன? நாயகனின் வணிக கனவு என்னவானது என்பதே மீதிக்கதை. படத்தில் வணிக ரீதியான கவர்ச்சிப் பாடல்கள் சில உண்டு. இதையெல்லாம் தாண்டி படத்தில் பூமிகா சாவ்லா சிறப்பாக நடித்திருக்கிறார். மிகச்சில பாத்திரங்கள்தான். கதையும் பெரிதாக எங்கும் நகரவில்லை. அதில் சுவாரசியம் சேர்க்கவே பல்வேறு சோதனைகள் என்பதை சேர்த்திருக்கிறார்கள். பூமிகா பாத்திரத்தை தொடக்கத்தில் எதிர்மறையாக தொடங்கி பிறகு நேர்மறையாக முடித்திருக்கிறார்கள். வினோத சோதனையில் நா...

மூன்று பெண்களுடன் தீராத காதல் விளையாட்டு!?

படம்
                    சுக்கல்லோ சந்துருடு ஏஎன்ஆர், சித்தார்த், சார்மி, சலோனி, சதா தீராத விளையாட்டு பிள்ளை கதைதான். நாயகன், அவன் தாத்தா ஜெர்மனியில் வாழும் தெலுங்கு ஆட்கள். பாட்டி திடீரென இறந்துபோகிறார். அவரது ஆசை, பேரனுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்பது... சொத்துக்கு பஞ்சமில்லை. ஆனால், பேரனுக்கு பிடித்தது போல பெண் அமைய வேண்டும். வம்சம் விருத்தியாகவேண்டும் என நினைத்து நினைத்து ஏங்கி தூக்கத்தில் இறந்துபோகிறார். நாயகனுக்கு காதல் திருமணத்தில் பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது. அவனது பெற்றோர் காதலித்து மணந்தவர்கள்தான். ஆனால் விபத்தில் ஒன்றாக இறந்துபோகிறார்கள் இதனால், தனியாகவே வாழலாம் என நினைக்கிறான். அவனது தாத்தா அவனது கருத்தை எதிர்க்கிறார். இதற்காக, தனது பூர்விக கிராமத்திற்கு கிளம்பிச் செல்கிறார். பேரனுக்கு தாத்தாவை எங்கு தேடுவது என தெரியவில்லை. பிறகு எப்படியோ தாத்தா விட்டுச்சென்ற தடயத்தை கண்டுபிடித்து கிராமத்திற்கு வந்து சேர்கிறான். திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுக்கிறான். அதன்படி, தனது நண்பன் சுனிலை சந்தித்து பேசுகிறான். பள்ளிக்கா...

இரண்டு முறை திருமணம் நின்றுபோக.. பிரசாத் கல்யாணத்தில் கரை சேர்ந்தாரா இல்லையா?

படம்
          பெல்லி வரமண்டி இயக்கம் பிரசாத் பெஹ்ரா நடிப்பு பிரசாத் பெஹ்ரா, விராஜிதா இன்ஃபினிட்டம் மீடியா பிரசாத்திற்கு திருமணம் உறுதியாகிறது. ஆனால் திருமணத்தன்று மண்டபத்தில் இருந்து ஒருமுறை அல்ல இருமுறை பெண்கள் ஓடிப்போய்விடுகிறார்கள். இதனால் திருமணத்தின் மேல் வெறுப்போடு இருக்கிறார். அதேநேரம் அவரது காதலி கஞ்சன் என்பவர், தனது நண்பரை மணம் செய்துகொள்வதைக் கேட்டு பொறாமைப்படுகிறார். கஞ்சனை திரும்பவும் காதலிக்க முயல்கிறார். பிரசாத்திறகு மணமானதா இல்லையா என்பதே வெப்சீரிஸின் கதை. யூட்யூபில் வெளியாகும் தெலுங்கு வெப்சீரிஸூக்கு பெரிதாக பட்ஜெட் கிடையாது. அலுவலகம், வீடு என இரண்டே இடங்களில்தான் படம்பிடிக்கிறார்கள். இதற்கு முன்னர் சிவாஜி ராஜா, விராஜிதா நடித்த வெப் சீரிஸைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறோம். வெப்சீரிஸில் சிவாஜி ராஜா தனியாக போராடி காமெடி செய்திருப்பார். தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் ஒருகட்டத்தில் அவருக்கு துணையாக அல்லது எதிராக கவுன்டர் கொடுக்க யாருமே இல்லாத நிலையில் சலிப்பு தோன்ற ஆரம்பித்தது. பிரசாத் பெஹ்ராவின் எழுத்து இயக்கத்தில் பெல்லி வரமண்டி வேறு விதமாக அனுபவத்...

சீனாவின் காலனி நாடாக மாறும் இந்தியா!

படம்
                    வணிகத்தின் நடைமுறையில் கவர்ச்சிகர வாசகங்களுக்கு இடமில்லை!   உலகமயம், தாராளமயம் என கொள்கைகள் மாறிவிட்டன. இந்தக்காலத்தில் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பல பொய்யான சுலோகன்களை ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் அவை நடைமுறையில் பெரிய பயன்களைத் தருவதில்லை. தற்சார்பு என்பதும் அதில் ஒன்று. வெற்று பேச்சுகள், நாட்டை ஆபத்தில் தள்ளும் என்பதை கிடைக்கும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவிற்கு எல்லை ரீதியாக நிறைய பிரச்னைகள் உண்டு. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக எல்லையில் தொல்லை தரும் நாடாக சீனா உள்ளது. எல்லை விவகாரம் தனி, வணிக விவகாரம் தனி என சீன அரசு கூறி செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முக்கிய வணிக கூட்டாளிகள் அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, ரஷ்யா நடப்பு ஆண்டில் வணிக அளவு அமெரிக்கா - 118. 4 பில்லியன் டாலர்கள் சீனா - 119.3 பில்லியன் டாலர்கள் அமீரகம் - 84 பில்லியன் டாலர்கள் சௌதி அரேபியா - 66 பில்லியன் டாலர்கள் ரஷ்யா - 43 பில்லியன் டாலர்கள் இந்தியா, 2020ஆம் ஆண்டு தொடங்கி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை கு...

சூரிய வெப்பத்திலிருந்து மக்களைக் காக்க சன்ஸ்க்ரீன் மாத்திரைகள்!

படம்
        சூரியனின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் இறந்தும் வருகிறார்கள். இதற்கு என்ன செய்வது? சூரிய கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் க்ரீம்களை வாங்கி தடவலாம். சந்தையில் க்ரீம், லோஷன் என நிறைய விற்கிறது. இப்போது சூரியவெப்பத்திலிருந்து ஒருவரைக் காக்க மாத்திரைகள் கூட வந்துவிட்டது. இந்த மாத்திரைகளை அமெரிக்காவின் ஃஎப்டிஏ அங்கீகரிக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அங்கீகாரம் எல்லாம் தேவையில்லை. இனாம் கொடுத்தால் கிடைத்துவிடும். தடை செய்தால் கூட மாத்திரைகளை வாங்கிக்கொள்ள முடியும் வசதி, நம் தாய்நாட்டில் எப்போதும் உண்டு. மாத்திரை வசதிகளைப் பார்ப்போம். மாத்திரை ஆய்வில் இருக்கிறது. ஆன்டிஆக்சிடன்டுகளான பாலிபோடியம் லியுகாடமோஸ், பீட்டாகரோட்டின், அஸ்டாசாந்தின் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கின்றன. தோலுக்கு பாதுகாப்பு தரும் மெலனின் நிறமிகளை ஊக்கப்படுத்தும் பகுதிப்பொருட்களும் உள்ளன. க்ரீம்களில் ஜிங்க் ஆக்சைடு, டைட்டானியம் டையாக்சைடு ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை மாத்திரைகளை விட பயன்தரக்கூடியவ...

தூக்கத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு! - என்ன செய்யலாம்?

படம்
        தூக்கத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன் போன்களை எந்த நேரத்தில் பயன்படுத்துவது என்பதை வரையறை செய்துகொள்ளலாம். இதற்கென ஆப்கள் சந்தையில் கிடைக்கின்றன. போனைப் பயன்படுத்தும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில உடற்பயிற்சிகளை செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக நேரம் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை வாசித்து நிலைமையைப் புரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட்போன்களில் வெல்பீயிங் என்ற வசதியை கூகுள் வழங்குகிறது. அதை சோதித்தால் எவ்வளவு நேரம் எந்த ஆப்பை பயன்படுத்தினோம் என்ற தகவலைப் பெறலாம். போனை அணைத்துவைத்துவிட்டு குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழே விளம்பரம் செய்து வருகிறது. உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம். வீட்டு வேலைகளைச் செய்யலாம். இனி தூக்கம் பற்றி அறையை இருட்டாக்கி, அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும். சற்று குளுமையாக இருப்பது கூடுதல் நன்மை தரும். அப்போது தூக்கம் வருவது எளிதாக இருக்கும். தூங்கும்போது, சற்று முன்னதாக படுக்கைக்கு வந்து உடலை நீட்டி நெகிழ்த்தி தி...

வணிக நடைமுறைகளை நகல் செய்தால் வெற்றி பெற முடியாது! - ஷி ச்சின்பிங்

படம்
ஒ ருமுறை நாம் பறக்கத் தொடங்கி கடலைத் தாண்ட முயன்றால் தட்பவெப்பநிலை, உலக நாடுகளின் சந்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் போராடி பிழைத்து சமாளித்து நிற்க வேண்டும். வணிகத்திற்கு ஏற்ற மாதிரி நிங்டே, ஷியாபு, ஃபுவான், ஃபுடிங் ஆகிய பகுதிகள் உள்ளன. இதில், முதல் இரண்டு பகுதிகள் மட்டுமே வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள இரண்டு பகுதிகளும் வணிகத்திற்கு ஏற்ப தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றன. நிங்டே, ஷியாபு ஆகிய இருபகுதிகளும் நாம் செல்லவேண்டிய திசையைக் காட்டுகின்றன. அந்த வழியில் நாம் செல்லவேண்டுமெனில், அதற்கு நம் உழைப்பு தேவைப்படுகிறது. சூழலின் அவசரத்தைப புரிந்துகொண்டு நிலையை அங்கீகரிப்பது அவசியம். வணிகத்திற்காக பின்தங்கியுள்ள பகுதியை திறந்து வைப்பது என்பது எளிதல்ல. காலம், இடம், உற்பத்தி சார்ந்த சிக்கல்கள், வணிக மாதிரிகள் என நிறைய சவால்கள் உள்ளன. திறந்த முறையைப் பின்பற்றும் பிற நகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அப்படியே நகல் எடுப்பது உதவாது. நம்முடைய நடைமுறை சார்ந்த சூழல்களைக் கருத்தில் கொண்டு வணிக முறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வணிகத்திற்காக ஒ...

முக்கிய பிரச்னைகளில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதைக் கற்பது அவசியம்! - ஷி ச்சின்பிங்

படம்
சீனாவின் பரந்து விரிந்த நிங்டே பகுதிகள், சந்தைக்கு ஏற்றபடி வலிமையானவையாக மாற வேண்டும். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், தற்போதைய நிலையில் அவற்றை பலவீனமாக உள்ள பறவை என்றுதான் குறிப்பிட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தல்படி, கடந்த ஜூன் மாதம் நிங்டேவுக்கு வந்தேன். அதற்குப் பிறகு அடுத்தடுத்த மாதங்களில் எனது சக பணியாளர்களும் வந்து இணைந்துகொண்டனர். தெற்குப்பகுதியில் உள்ள ஸெஜியாங் பகுதியில் உள்ள வென்சூ, கங்க்னன், யூகிங் ஆகிய நிங்டேவின் அண்டைப் பகுதிகளுக்கு சென்று குழுவாக பார்வையிட்டோம். எல்லையற்ற கடலில் மீனை வாழச்செய்வது, பரந்து விரிந்த ஆகாயத்தில் பறவையை பறக்க வைப்பது என்பது போன்ற செயல்தான் இதுவும். வறுமை ஒழிப்பிற்காக பல்வேறு திட்டங்களை யோசித்தோம். நிங்டேவின் பொருளாதாரத்தை உயர்த்தி அதை சிறப்பாக இயங்க வைப்பது எப்படி என அனைவரும் கலந்துரையாடினோம். நிங்டே விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதி. அதுவே தனி உலகம் போல இருந்ததால் உலகிடமிருந்து செய்திகள் ஏதும் அங்கு பெரிதாக வரவில்லை. அங்கு, அதைப்பற்றி கவலையே இல்லாமல் தினசரி பணிகள் நடந்து வந்தன. ஆனால், அங்குள்ள சந்தை பின்தங்கியதாக ...

நூல்களைத் திருத்தி செம்மையாக்க ஆசிரியர் தேவையில்லை - எடிடிரிக்ஸ் ஏஐ போதும்!

படம்
          நூல்களை செம்மையாக்க எடிடிரிக்ஸ் ஏஐ போதும்! ஓராண்டு செயற்கை நுண்ணறிவு புரோகிராமுக்கு உழைத்து கடந்த மே மாதம் 2024 அன்று தனது கண்டுபிடிப்பை எழுத்தாளர், ஆசிரியர் மேரு கோகலே வெளியிட்டிருக்கிறார். இவர், பெங்குவின் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் நூல்களை செம்மையாக்கம் செய்யும் பதிப்பக ஆசிரியராக பணிபுரிந்தவர். பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகள், நூல்கள் என அனைத்துமே நாளிதழ் அல்லது பதிப்பு நிறுவன ஆசிரியரால் பல்வேறு முறை திருத்தி எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியாகின்றன. இதில், திருத்தங்களை செய்யும் நூல் மேம்பட உழைக்கும் ஆசிரியர்கள் பெயர் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் பெயர்களை வெளியிடுகிறார்கள். தமிழில், அதுபோன்ற நடைமுறை குறைவு. உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர வழங்கமாட்டார்கள்.  எடிடிரிக்ஸ் என்ற ஏஐ மூலம் எழுத்தாளர் ஒருவர், நூல்களை எளிதாக திருத்தி, பிழைகளை நீக்கிக்கொள்ள முடியும். உலகம் முழுவதுமே தொண்ணூறு சதவீத எழுத்தாளர்களுக்கு, அவர்களின் நூல்களை செம்மைப்படுத்தி திருத்தி தரும் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. அந்தக்கு...