இடுகைகள்

கிராமங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் உள்ள சிறந்த சுற்றுலா கிராமங்கள்!

படம்
      சிறந்த சுற்றுலா கிராமங்கள் - சீனா ஷிதி அன்ஹூய் என்ற பகுதியில் ஹூவாங்சன் என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் 970 ஆண்டுகள் பழமையானது. 2000ஆவது ஆண்டில் யுனெஸ்கோ பாரம்பரிய இடம் என்ற பட்டியலில் இடம்பிடித்தது. ஹூய்சு கலாசார அடையாளம் கொண்ட கோவில்கள், கட்டுமானங்கள் கிராமத்தில் காணப்படுகின்றன. இவை வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொண்டவை. யுகுன் கிராமம் ஸெஜாங் என்ற மாகாணத்தில் அன்ஜி என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றதால் மாசுபாடு அடைந்து உள்ளூர் நிர்வாகத்தால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அழகிய நீர்நிலைகள், மலைத்தொடர்களைக் கொண்ட இடம். ஹூவாங்லிங் கிராமம் வூயுவான் என்ற இடத்தில், ஜியாங்ஸி மாகாணத்தில் அமைந்துள்ளது. சமவெளியில் இருந்து 1,260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி கிராமம். இங்குள்ள மக்கள் மூங்கில்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தினசரி பயன்பாட்டுப் பொருட்களை மூங்கிலில் உருவாக்கி வருகிறார்கள். வரலாற்று ரீதியாக அறுநூறு ஆண்டுகள் பழமையானது. இங்கு செய்யப்படும் வேளாண்மை முறையும் தனித்துவமானது. ஸக்கானா கிராமம் கல் பெட்டி என தி...

டெக் நிறுவனத் தலைவர் இப்போது ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்! - ஶ்ரீதர் வேம்புவின் புதிய ஐடியா!

படம்
        டெக் தலைவர் இப்போது ஆசிரியர் ஜோஹோ கார்ப்பரேஷன் தலைவர் யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருநூறு கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு கொண்ட நிறுவனம் என இதனை போர்ப்ஸ் நிறுவனம் அட்டவணைப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குநர், அண்மையில் தனது நிறுவனத்தை தென்காசிக்கு மாற்றினார். கடந்த ஆண்டு இவர் செய்த இந்த மாற்றம், முக்கியமானது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்கள் செலவுகளை குறைத்து வீட்டிலேயே பணி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவர் கொரானோ பாதிப்பிற்கு முன்னமே இந்த முயற்சியை செய்துவிட்டார். இப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியராகவும் மாறிவிட்டார். தென்காசியிலுள்ள மத்தாளம்பாறை கிராமத்திற்கு நிறுவனத்தை மாற்றியவர், குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கத் தொடங்கினார். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதனை செய்யத் தொடங்கியவர், இப்போது நான்கு ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி 52 மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார். இம்மாணவர்கள் அனைவரும் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்தவர்கள். ''நான் தொடங்கியுள்ள கல்வி  ஸ்டார்ட்அப் இது. கல்வி,உணவு இலவசமாக கொடுத்து பாட...

வங்கிகள் தேசியமயமாக்கம் - உதவிய வங்கிச்சட்டம்!

படம்
வங்கிகள் தேசியமயமாக்கல்! தனியார் நிறுவனங்களாக செயற்பட்டு வரும் வங்கிகளை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் மசோதாவை சட்டமாக்கி, அதனை அரசின் நிர்வாகத்திற்குள் கொண்டுவருவதே, தேசியமயமாக்குதல் எனப்படும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த சொத்துக்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்தியாவில் இதுவரை 20 வங்கிகள் இம்முறையில் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் வங்கி நிறுவனங்கள் சட்டப்படி (“Banking Companies (Acquisition and Transfer of Undertaking) Bill) அரசு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. 1969ஆம் ஆண்டு பதினான்கு வங்கிகளும், 1980 ஆம் ஆண்டில் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. 1894 ஆம் ஆண்டு பஞ்சாப் தேசிய வங்கி கம்பெனிகள் சட்டப்படி உருவாக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய் இந்த வங்கியை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவர். இந்த வங்கி 1969ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. அதேசமயம் இது பொதுத்துறை வங்கியும் கூட. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி, பொதுத்துறை வங்கி. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல. குறிப்பு: தேசியமயமாக்கம் என்றால், அந்த வங்கி பெருநகரம்,சிறு ...