இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோனம் வாங்சுக் எனும் கல்வியாளர் லடாக்கை எப்படி மாற்றினார்? - லடாக்கில் உதிக்கும் சூரியன்

படம்
லடாக்கில் உதிக்கும் சூரியன் தன் அறிவைக் கொண்டு சமூகத்திற்கே புதிய பாதை அமைக்கும் மனிதநேய மனிதர்களுக்கு மகுடம் சூட்டி உச்சிமுகர்ந்து பாராட்டும் ரோலக்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி(லாஸ் ஏஞ்சல்ஸ் 2015) அது. கண்கவர் மேடையில் இந்தியாவிற்கான தனித்துவ கனவை தன் மூளையில் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தார் சிறிய மனிதரொருவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள லடாக்கின் ப்பே என்ற கிராமத்தைச் சேர்ந்த அம்மனிதர், பாரம்பரிய உடையில் மக்கள் பங்களிப்புடன் தான் கட்டிவரும் சுற்றுச்சூழலுக்குகந்த பல்கலைக்கழகம் பற்றிக் கூறியது அங்கிருந்த பலரது புருவத்தையும் உயர வைத்தது. கண்டுபிடிப்பாளர் சோனம் வான்சுக் என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் 3 இடியட்ஸ் ஹிந்தி திரைப்படத்தின் அமீர்கான் கேரக்டரான புன்சுக் வாங்குடுவின் அசல் இவர்தான் என்றால் உங்களுக்கும் புரிந்திருக்குமே! 1988 ஆம் ஆண்டு லடாக்கில் அப்பகுதி மாணவர்களுக்காக செக்மோல்(Student's Educational and Cultural Movement of Ladakh(SECMOL)) என்ற பள்ளியை தொடங்கி நடத்திவரும் சோனம் வாங்சுக், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டதாரி. பட்டம் பெற்றவுடன் அமெரிக்கா செல்ல விசாவுக்காக க்யூவில் ந...

உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள்

படம்
  உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள் ஆண் பெண் என இருவரும் திருமணம் செய்வது குடும்பம் என்ற அதிகாரப்பூர்வ அமைப்பிற்குள் வருவதற்கு உதவி புரிகிறது. அதேசமயம், காதலித்து பழகி பிறகு திருமணம் செய்வது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. டேட்டிங் என்பது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பலரும் அதை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக செயல்படுத்த முயல்கிறார்கள். நேரடியான சந்திப்பு என்பது காதலில் நுழைபவர்களுக்கான வாசல். அதற்கு முன்னதாக டின்டர், பம்பிள் என ஆப்கள் மூலம் பேசி அறிமுகமாகி பிறகு டேட் செய்து காதலித்து மணந்தவர்களே புதிய தலைமுறையினர்.  இணையத்தின் வசதியால் சிலர் தங்களது ஆளுமையை, முழுமையான குண இயல்பை மறைத்துக்கொள்ள முடியலாம். ஆனால், நேரடியான சந்திப்பில் அது சாத்தியமில்லை. டேட் செய்வது திருமண வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி என்றே வைத்துக்கொள்ளலாம்.  எப்படி டேட் செய்வது, அதற்கென ஏதாவது வயது தகுதி உண்டா என்று எல்லாம் கேள்வி வருகிறது.  இன்று கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களும் கூட டேட் செய்கிறார்கள். டேட் செய்வது பற்றி இது சரி இத...

இந்திராகாந்தி சொன்னவை....

படம்
 இந்திராகாந்தி சொன்னவை.... 1.சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. 2.இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. 3.மக்கள் மீது வரம்பற்ற நம்பிக்கை கொண்டுள்ள பாரம்பரியத்தை மகாத்மா காந்தி மற்றும் என்னுடைய தந்தை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வழியில், இந்திய மக்கள் எனக்கு வலிமை, நம்பிக்கையைத் தருகிறார்கள்.  4.நம் முன் உள்ள சவால்களை நேரடியாக எதிர்கொள்வோம். நாம் செய்த தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிக்கல்களைத் தீர்ப்போம். 5.வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி மட்டுமே நமது நாட்டின் உணவு பிரச்னையைத் தீர்க்க முடியும்.  6. கண்டுபிடிப்பு, மேம்பாடு, சூழலுக்கு பொருத்தம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே நமது நாட்டின் வளர்ச்சி அமையும். 7.அடிப்படை தொ...

ஜவகர்லால் நேரு சொன்னவை....

படம்
  ஜவகர்லால் நேரு சொன்னவை.... 1.நான் மதவெறியை விரும்பாதவன். அது பலவீனமடைந்து வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். வகுப்புவாதம் எந்த வடிவில் அல்லது உருவத்தில் வந்தாலும் அதையும் நான் விரும்பாதவன்.  2.எந்தக் கொடியைச் சுற்றி நீங்கள் திரண்டு நிற்கிறீர்களோ, நீங்கள் வணக்கம் செலுத்துகிறீர்களோ, அந்தக் கொடி எந்த சமூகத்தையும் சேர்ந்ததல்ல. இது தாய்நாட்டின் திருக்கொடி.  3.நான் சோஷலிஸ்டு, ஒரு குடியரசுவாதி என்பதை மறைக்காமல் கூறவேண்டும். அரசர்கள், மன்னர்களைக் கொண்ட அமைப்பை அல்லது தொழில்துறை அரசர்களை உருவாக்குகின்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4.பண்டைக்கால அரசர்களைக் காட்டிலும் தொழில் அரசர்கள் மக்களின் வாழ்க்கையையும் விதிகளையும் நிர்ணயிப்பதில் மிகவும் அதிகமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்கார முறைகளையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.  5.சிறுபான்மையினருடைய பண்பாட்டிற்கும் மரபுகளுக்கும் ஆபத்து ஏற்படாது என்று நமது பேச்சு மற்றும் செயல்கள் மூலம் முழுமையாக உறுதியளிக்க வேண்டும் என்பதை மட்டும் நான் மீண்டும் வலியுறுத்துவேன். 6. யாருடைய நன்மைக்காக தொழில் நடைபெறவேண்டும், யாருடைய ந...

யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன் - வங்கி சொன்ன அறிவுரை - உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்...

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன்  உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்... ஒன்றாக சேர்ந்து நாம்.... என தலைப்பு கொண்டுள்ள வங்கிதான் நான் பத்தாண்டுகளாக கணக்கு வைத்துள்ளது. தொடங்கியபோது எப்படியோ இன்றுவரை அப்படியேதான் உள்ளது. மாற்றம் என்னவென்றால், நிறைய கட்டுப்பாடுகள் பெருகியுள்ளன. பணம் பிடுங்குதலையும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நிதானமாக கணினியை தட்டி செய்கிறார்கள். அதையும் கூட 120 ரூபாயை இழந்துதான் கற்றுக்கொண்டேன். பொதுவாக வங்கிகளுக்கு புகார் அளித்து அதன் வழியாக இழந்த தொகையை பெறுவது பிரம்ம பிரயத்தன முயற்சி. பெரும்பாலும் காசு கிடைக்காது. ஏன் காசு கிடைக்காது என்பதற்கு ஈகுவிட்டி பங்கு விளம்பரம் போது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என வேகமாக இரண்டு பத்தியை ஒரு குரல் படிக்குமே... அந்த ரீதியில் விதிகளை காரணம் காட்டுவார்கள்.  வங்கியில் இருந்து ஏடிஎம் வழியாக பணம் பெறுவதைப் பற்றியும் அதன் கட்டுப்பாடுகளையும் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒன்றாக சேர்ந்து... வங்கி மாதம் ஐந்து முறை இலவச வாய்ப்புகளை தருகிறது. அதைப் பயன்படுத்தி ஒருவர் தினசரி 25 ஆயிரம் என்ற வகையில் ஒரு லட்சத்து...

ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா?

படம்
  ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா? நீங்கள் அரிசி ஆலையில் வேலை செய்கிறீர்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ப்ளுஸ்கை ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். அதில் உங்கள் மனதிற்கு பிடித்த படித்த பதிவுகளை போடுகிறீர்கள். பொதுவாக ஒருவர் தனக்கு பிடித்தாற்போன, மனசாட்சிப்படி சொல்லும் எழுதும் கருத்துகள் நிறையப்பேரை போய்ச்சேரும். பலருக்கும் பிடித்ததாக இருக்குமோ இல்லையோ, சிறு வட்டார ஆட்களேனும் அந்த எழுத்துக்களை படிக்க கூடுவார்கள். இதில் அரிசி ஆலை அதிபர் பெரிதாக தலையிட ஒன்றுமில்லை. வேலை நேரத்தில் போனை நோண்டினால் தவிர. ஆனால், அதுவே தனிநபர், சமூக வலைதளத்தில் பிராண்டு போல தனிப்பட்ட ஆளுமையை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவரை டிவி நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. அப்போதும் அந்த தனிநபர் முன்னைப்போலவே சுதந்திரமாக சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர முடியுமா? அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே நடைமுறை உண்மை.  அண்மையில் வார இதழில் வேலை செய்யும் மூத்த நிருபர் ஒருவரிடம் பேசினேன். அவர் நிறைய இலக்கிய நூல்களைப் படிப்பவர். ஆனால், அதைப்பற்றி பேசுபவர்,இணையத்தில் எழுத ...

ஆரா பிரஸ் நூல்கள் - அமேசான் வலைத்தளம் மற்றும் கோமாளிமேடை

  ஆரா பிரஸ் நூல்கள்  - அமேசான் வலைத்தளம் 1.ஜனநாயக இந்தியா தமிழில் நேருவின் உரைகள் ச.அன்பரசு-வின்சென்ட் காபோ 2. நெ.1 சமூக தொழில் அதிபர் சமூகத்தை மேம்படுத்தும்  தொழில்களை தொடங்குவது பற்றிய நூல் அன்பரசு சண்முகம் 3. நட்பதிகாரம் புனைவு கடிதங்கள் அரசு கார்த்திக் - கா சி வின்சென்ட் 4. பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் ஹூவாய் (சீனா) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரலாறு அன்பரசு சண்முகம் 5. அசுரகுலம் -1(6 தொடர்வரிசை நூல்) கொலைகாரர்களின் கதை அசுரகுலம் 2 குற்றங்களின் முன்கதை அசுரகுலம் 3 ரத்தசாட்சி அசுரகுலம் 4 மனமெனும் இருட்குகை அசுரகுலம் 5 ரகசிய நரகம் அசுரகுலம் 6 உயிர்வேட்டை வின்சென்ட் காபோ  6. மயிலாப்பூர் டைம்ஸ்  அனுபவக் கட்டுரைகள்  லாய்ட்டர் லூன் 7. உதயமாகும் பேரரசன் ஆனந்த் மகிந்திராவின் வெற்றிக்கதை அன்பரசு சண்முகம் 8. நீரெல்லாம் கங்கை கடிதங்கள்  அன்பரசு 9. பன் பட்டர் ஜாம் 1,2 அரசியல் பகடி  விக்டர் காமெஸி - ரோனி அஜித் - ஆசாத்  10. ஒவ்வாமை ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு நூல் அரசு கார்த்திக் 11. டியர் ரிப்போர்டர் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூ...

நோக்கத்திற்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது - இந்திராகாந்தி உரை

படம்
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஆயிரக்கணக்கானோர் சுதந்திரநாள் வாக்குறுதியை ஆன்ம பூர்வமாக கூறினர். அந்த வரலாற்று நிகழ்வின்போது பல்லாயிரம் பேர்களில் ஒன்றாக என்னுடைய குரலும் ஒலித்தது. 1947ஆம் ஆண்டு, எடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜனநாயகம், மதச்சார்பற்ற புதிய வளர்ச்சி பெறும் சக்தி உருவானதை உலகம் அறிந்துகொண்டது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாத்து முதலடியை எடுத்து வைத்தோம். இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. அமைதியோடு பல்வேறு நாடுகளுக்கு இடையில் நட்புணர்வை பிரசாரம் செய்து ஒத்திசைவை உருவாக்கும் விதமாக இந்தியா செயல்பட்டு வந்துள்ளது. திரு. லால்...

பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!

 பௌத்த வேட்கை தர்மானந்த கோசம்பி தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன் காலச்சுவடு வெளியீடு தன் வரலாற்று நூல். NIVEDAN by Dharmanand Kosambi First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK © 2011 Meera Kosambi பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார்.  இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெ...

வங்கி ஓடிபியில் பணியாளருக்கு ரேட்டிங்கை வழங்குவது எப்படி? பத்து நிமிட வழிகாட்டி கட்டுரை

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - பலவித அனுபவங்கள்  நான் கணக்கு வைத்துள்ள வங்கி விவசாயிகளுக்கானது. இப்போது மெல்ல படித்த வர்க்கத்தினருக்காக கட்டாயமாக மாறி வருகிறது. படிக்காத வாடிக்கையாளர்களைக் கூட மிரட்டி கட்டாயப்படுத்தி கடன் அட்டையை திணித்து அதன் வழியாக பணத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான சேவைக் கட்டணம் அவர்களுக்கு முக்கியமானதாக படக்கூடும். ஊழியர்களுக்கு ஆண்டு இலக்கு கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். இந்தவகையில் அதுவரை வழங்கப்படாத கடன் அட்டை நிறைய பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பெண்கள் அனைவருமே கல்வியறிவற்றவர்கள். அதுவரை படிவத்தில் காசு வேண்டுமென்றால் அதை வங்கியிலுள்ள சீருடை தரித்த பெண்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்துத்தான் பெறுவார்கள். ஆனால், படிவம் எழுதுகிறவர்களைக் கூட, இன்று கட்டாயப்படுத்தி கொடுத்த கடன் அட்டை இருக்கிறதல்லவா, அதைப் பயன்படுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் கூச்சலிடுகிறார்கள்.  மாற்றங்கள் இந்திய சமூகத்தில் மெதுவாகத்தான் வரும் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. இதுபற்றி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். நூலகம் ஒன்ற...

தமிழ் முருகன் என்பவன் யார்?

 தமிழ் முருகன் கவிஞர் அறிவுமதி தர்மலிங்கம் அறக்கட்டளை பதிப்பகம் இந்த நூலுக்கான விமர்சனத்தை வெளியிடும்போது அநேகமாக ஒரு வார இதழில் அதன் ஆசிரியர் முருகன் தொடரை சில வாரங்கள் எழுதியிருப்பார் என நினைக்கிறேன். பதிலுக்கு போட்டியாக இன்னொரு வார இதழின் ஆசிரியர் கருப்பண்ணசாமியின் வரலாற்றை எழுதியிருப்பார்.. போட்டி மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நல்ல விஷயத்தைக் கொண்டு வரக்கூடும். இதெல்லாம் ஒருவித நம்பிக்கை அவ்வளவுதான்.  அறிவுமதி, நூலில் ஓரிடத்தில் தமிழ் முருகன் தொடரில் கூறும் விஷயத்தை தனிப்பட்ட சாதி, மதம் சார்ந்து பயன்படுத்தவேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், அப்படி பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது.  நூலைப் பார்ப்போம். நூலில், முருகன் என்பது முருகன் என்பது மட்டுமே, அவன் போர்வீரன், அரசாண்ட மன்னன் என்று கூறப்படுகிறது. இதற்கான இடைச்செருகலையும் விளக்குகிறது. சிவன், பார்வதியின் பிள்ளை கந்தன் என்ற புனைகதைகளை நூல் ஏற்கவில்லை. முருகன் வேறு, கந்தன் வேறு என்று நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். தமிழ் இனத்தின் அடையாளமாக ஒற்றை கடவுளாக முருகனை கூறுவதோடு, அர்த்தமற்ற நெல் தூவுதல் தமிழர் ...

நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்!

 நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்! தாராபுரத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று நண்பரை சந்தித்து வருவது வழக்கம். அந்த நகரில் உள்ள நண்பர், இலக்கியங்களை வாசிக்க கூடியவர். அதோடு பல்வேறு ஊடகங்களில் தேசிய கட்சி சார்ந்து விவாதிக்க கூடியவர். அந்த கட்சி சார்ந்த ஆதரவு நிலை எனக்கு கிடையாது. நூல்களை வாசிக்க கூடியவர் என்பதால் பலமுறை நூல்களை இரவல் வாங்கி வந்திருக்கிறேன். தான் வாசித்த நூல்களை இரவல் கொடுத்தவர், சிலமுறை பழைய நூல்களை அன்பளிப்பாக வைத்துக்கொள்ளவும் கொடுத்திருக்கிறார். கடன் வாங்கி பிறரது தலையில் மசாலை அரைக்கும் மூத்த சகோதரர் வழியாக அறிமுகம் கிடைக்கப் பெற்றவர்.  கிளம்பும் நாளன்று அதிகாலையில் எழுந்தால், அப்போதே தந்தையார் தனக்கான சமையலை தொடங்கியிருந்தார். இரண்டரை மணிக்கு எழுந்து சமையல் செய்துவிட்டு நடைபயணத்தை ஒரு கி.மீ.அளவுக்கு அமைத்துக்கொள்பவர், தேநீர் அருந்த செல்வார். பிறகு, நான்கு மணியைப் போல திரும்ப வீட்டுக்கு நடந்து வருபவர், டிவியை ஓடவிட்டு பாடல்களைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு அதை ஐந்து மணிக்கு அமர்த்திவிட்டு மோட்டார் விட்டு வீட்டின் வெளியே உள்ளே வாழை, கொய்யா...