இடுகைகள்

ஒருபக்க கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழையாத விருந்தாளி! - ஒரு பக்க கதை

கேசவன், பிரமாண்டமான தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தான். அறைக் கதவைத் தட்டியதும், கம் இன் என்ற கம்பீரக்குரல் கேட்டது. மருத்துவர் ஜீவா என பெயர் பலகை கூற, நெற்றியில் சுருக்கங்களோடு வெள்ளை உடை அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார். ''நீங்க, கேசவன்தானே?, ஐம் ரைட். உங்களுக்கு கை கால்ல இருக்கிற விறைப்புத் தன்மை, வலி, வீக்கம் பத்தி டெஸ்ட் பண்ணோம். முடிவு, ஒரே நோயைத்தான் குறிக்குது'’ ''என்ன நோய்ங்க சார்?’’ ''சுருக்கமா ஆர்ஏ. முடக்குவாதம். துரதிர்ஷ்டவசமா இதைக் குணப்படுத்த முடியாது. ஆனா, நோயோட தீவிரத்தைக் குறைக்க மருந்து இருக்கு. இது, மரபணு ரீதியாக வர்ற நோய்’’. அதிர்ந்த கேசவன், தழுதழுத்த குரலில் ''இந்த நோய், என்னோட குழந்தைக்கும் வருமா?’’ ''வாய்ப்பு இருக்கு. குழந்தைக்கும் உங்கள மாதிரியே 30 வயசுக்கும் மேல வரலாம். ட்ரீட்மென்டை எப்ப தொடங்கலாம்னு சொல்லுங்க’’, என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு மருத்துவர்,மற்றொரு நோயாளியைப் பார்க்க விடைபெற்று சென்றார். மனைவி பூங்கொடிக்கு கருப்பை நீர்க்கட்டி காரணமாக கரு தங்கவில்லையே என்ற மனக்குறை மறைந்து நிம்மதியும் பரவ, தளர்வாக பை...

மீண்டும் பத்து ரூபாய்! - 1page story

  மீண்டும் பத்து ரூபாய் ! அண்ணாச்சி , மல்லித்தூள் ஐம்பது கிராம்ல ஒண்ணு போட்டுருங்க என்று சொன்ன சங்கர் , சாமான் பையை வாங்கிக் கொண்டு திரும்பினான் . பைக்கில் பையை மாட்டிவிட்டு பில்லியனில் அமர்ந்தான் . அப்போது முன்னே நடந்து சென்ற பிச்சைக்காரர் , கையில் இருந்த பத்து ரூபாயை கீழே தூக்கிப்போட்டுவிட்டுப் போவதைப் பார்த்தான் . வேறு யாராவது பணத்தைப் பார்க்கிறார்களா என்று ஓரக்கண்ணில் பார்த்தான் . உடனே , நடந்து சென்று , கசங்கலாக இருந்த பத்து ரூபாயை எடுத்து பர்சில் இருந்த ஐநூறு ரூபாயோடு வைத்தான் . பத்துரூபாய் லாபம் என சந்தோஷப்பட்டான் சங்கர் . வீடு வரும் வழியில் கறிக்கடையைப் பார்த்தான் . பிள்ளைகள் ஞாபகம் வர , உள்ளே நுழைந்தான் . ஒரு கிலோ எவ்வளவுங்க என்று கேட்டுவிட்டு , பர்சிலிருந்து பணத்தை எடுக்க முயன்றான் . ஐநூறு ரூபாயைக் காணவில்லை . கண்டெடுத்த பத்துரூபாய் மட்டுமே இருந்தது . சங்கருக்கு உள்ளூர பீதியானது . கடையில் இருந்து வெளியே வந்தவன் , பர்சை எடுத்து மேலும் கீழுமாக பார்த்தான் . பர்ஸில் எந்த கிழிசல் , ஓட்டையும் இல்லை . அப்புறம் வெச்ச ஐநூறு ரூபாய் எங்கே ? என சங்கர் யோசித்தவாறே பைக்கை கிளப்பினான் . ...