இடுகைகள்

ஆதிவாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலம், நீர், காடு நக்சலைட்டுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல - விஜய் சர்மா, துணைமுதல்வர், சத்தீஸ்கர்

படம்
            நேர்காணல் விஜய் சர்மா, துணை முதல்வர், சத்தீஸ்கர் மாநிலம் பேச்சுவார்த்தை மூலம் நக்சலைட் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த முயற்சி எந்த நிலையில் உள்ளது? எதிர்தரப்பிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அவர்கள் நேரடியாக சந்திக்க விரும்பவில்லை என்றால் வீடியோ அல்லது போன் அழைப்பு மூலம் பிரச்னைகளை விவாதிக்க நினைக்கிறேன். கூடுதலாக, சரணடைவது, மறுவாழ்வு ஆகிய திட்டங்கள் பற்றியும் பேச விரும்புகிறேன். இணையத்தில் க்யூஆர் கோட், கூகுள் ஃபார்ம்ஸ், மின்னஞ்சல் வழியாக சில எதிர்வினைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றை நக்சலைட்டுகள்தான் அனுப்பினார்களா என்று முழுமையாக கண்டறியமுடியவில்லை. குடிமை அமைப்புகள், மக்களிடமும் இதுபற்றி கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம். நக்சலைட்டுகள் தவிர்த்து, அவர்களது செயல்பாட்டால் வீடுகளை இழந்தவர்கள், காயமுற்றவர்கள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை சிக்கலானது, கவனமாக புரிந்துகொள்ள முயலவேண்டும். இதில், சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் எங்களது கடமையாக உள்ளது. கடந்த ஆண்...

பாசிசத்திற்கு காவல்துறை, ஊடகம், நீதித்துறை என அனைவருமே ஆதரவாக உடந்தையாக நிற்கிறார்கள் - எழுத்தாளர் ஆல்பா ஷா

படம்
  நேர்காணல் எழுத்தாளர் ஆல்பா ஷா மானுடவியல் பேராசிரியரான ஆல்பா ஷா, அண்மையில் தி இன்கார்செரேஷன்ஸ் - பீமா கோரேகன் அண்ட் தி சர்ச் ஃபார் டெமாக்ரசி இன் இந்தியா என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் சுதந்திர சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பேசியும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இந்த நூலை எழுதுவதற்கு தூண்டியது எது? பீமா கோரேகன் வழக்கு, இந்தியாவில் ஜனநாயகம் சிதைந்துவிட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடிய சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலதரப்பட்ட ஆட்களையும் சந்தித்து பேசினேன். அவர்களின் போராட்டம் ஜனநாயகத்திற்கானது என நம்புகிறேன். பொருளாதாரம், அரசியல், கலாசாரம் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதற்கான போராட்டம் அவர்களுடையது. இப்படி செயல்படுபவர்களை அச்சுறுத்த ஜனநாயகத்தின் தூண்கள் என நம்பப்பட்ட ஊடகம், நீதித்துறை, காவல்துறை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது நீதான் என பட்டியலிடப்பட்டு செயல்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். தெருவில் படுகொலை கும்பல்கள் சுற்றுகிறார்கள் என்றால், இண...

புரட்சி, அரச பயங்கரவாதம் என இரண்டுக்கும் இடையில் உயிர்பிழைக்கப் போராடும் ஆதிவாசிகள்!

படம்
  வாழும் பிணங்களாகிவிட்ட ஆதிவாசி மக்களின் கதை மரணத்தின் கதை ஆசுதோஷ் பரத்வாஜ் தமிழில் அரவிந்தன் காலச்சுவடு பக்கம் 333. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர், தண்டகாரண்யம் ஆகிய காட்டுப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை எப்படி, மரணத்தின் கதையாக மாறியது என்பதை நூல் விரிவாக விளக்குகிறது. இந்த நூல், அபுனைவு வகையைச் சேர்ந்தது. ஆனால் நூலை வாசிக்கும்போது அதை உணர முடியாது. புனைவு நூலின் மொழியில் அபுனைவு நூல் என புரிந்துகொள்ளுங்கள். தமிழில் அரவிந்தன் நூலை சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார். ஆசுதோஷ் பரத்வாஜ், நேரடியாக களத்திற்கு சென்று செய்திக்கட்டுரைகளை எழுதி அனுப்பி பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறார். அதோடு,  ஏராளமான வெளிநாட்டு எழுத்தாளர்களின் மேற்கோள்கள், நூல்களை சுட்டிக்காட்டி கட்டுரை நூலாக தொகுத்து எழுதியிருக்கிறார். அதுவே நூலுக்கு தனித்த தன்மையை அளிக்கிறது. 2000 தொடங்கி 2021 வரை ஆதிவாசிகளின் கிராமங்களுக்கு சென்று வந்த அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். இவர் ஒரு பத்திரிகையாளர் என்றாலும் அதில் நடைபெறும் செயல்கள், துரோகங்கள், நக்சல் பெண்களை இழிவுபடுத்தும் செய்திகள், கிராமத்து செய்தியாளர்...