இடுகைகள்

ஶ்ரீகாந்த்மேகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கதேச தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தப் போராடும் ஊழல் கறைபடிந்த போலீஸ் அதிகாரி

படம்
      டெரர் ஶ்ரீகாந்த்மேகா, நிகிதா, நாசர், பிருதிவிராஜ், கோட்டாசீனிவாசராவ் தெலுங்கு மற்றுமொரு தேசபக்தி படம். இதில் தீவிரவாதிகள் பாக்கிலிருந்து வரவில்லை வங்க தேசத்திலிருந்து வருகிறார்கள். இந்தப்படத்தை இப்போது வெளியிட்டால், வலதுசாரி மதவாத கட்சி ஆளும் ஆந்திரத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் கலவரம் செய்து களிக்கலாம். அந்தளவு வெறுப்பு விஷத்தை மதம் வழியாக கக்கியுள்ள படம். எல்லாமே முஸ்லீம் தீவிரவாதம் என்ற கிளிஷேதான். ஒரே டெம்பிளேட். ஒரே நடைமுறை. பதினைந்து நாட்களில் ஆந்திரத்தின் ஹைடெக் சிட்டியில் மாநில முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. அதை உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்கிறார். இதை நாயகன் விஜய் அறிந்துகொள்கிறான். அவனால் முதல்வர், விழாவிற்கு வரும் மக்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே கதை. நாயகன் விஜய், தீவிரவாத தாக்குதல்களை கண்காணிக்கும் பிரிவில் மாற்றப்பட்டு வேலை செய்கிறான். இதற்கு முன்னர் நன்றாக வேலை செய்தவன். இடையில் அவனது மேலதிகாரி, சில அரசியல் தலைவர்கள் செய்த சூழ்ச்சி, சதியால் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொள்கிறான். பணியில் சற்று தாழ்ந்த நிலை...

மறுவாழ்வுக்கு முயலும் ரௌடியை தடுக்கும் அதிகார சக்திகள்!

படம்
        நகரம் ஶ்ரீகாந்த், ஜெகதிபாபு, காவேரி ஜா இயக்கம் சிசி சீனிவாஸ் இசை சக்ரி தமிழில் தெலுங்குப்பட மோகம் கொண்ட சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தின் ரீமேக். ரைட் என்ற முன்னாள் ரௌடி தனது நண்பன் இறந்தபிறகு திருந்தி வாழ நினைக்கிறார். ஆனால், அதை தடுக்க காசிம்பாய், இன்ஸ்பெக்டர், அரசியல் தலைவர் ஆகியோர் முனைகிறார்கள். இறுதியில் என்னவானது என்பதே கதை. முஸ்லீம் என்பவர் மாஃபியா தலைவராக, கொலை, கொள்ளை, கடத்தலை செய்பவராக இருக்கிறார். இதெல்லாம் எண்பதுகளில் வந்த படத்தின் அடையாளம். அதேதான். பெரிய மாறுபாடு இல்லை. ஒருவரிடம் வேலை செய்பவன், சுயமாக யோசித்து தன் இஷ்டப்படி இருப்பதாக கூறுவது சற்று வினோதமாக உள்ளது. நாயகனுக்கு, காசிம் பாயின் மகனுடன் விரோதம் உருவாகிறது. நாயகன் கொலை செய்யும் உத்தி, திறமை காசிம் பாயின் மகனுக்கு வருவதில்லை. அவனது திறமை சூழ்ச்சி, சதி. அதை நம்புகிறான். நாயகனைப் பொறுத்தவரை தனது குழுவினர் அனைவரையுமே திட்டத்தில் ஈடுபடுத்தி கொலையை கூட்டுத்திட்டமாக மாற்றுகிறான். அனைவருக்கும் கொலையில் முறையான பங்களிப்பு இருக்கிறது. படத்தில் வரும் தொடக்க காட்சி கொலை, உத்வேகம் தரக்கூடியது. ஆனால...