இடுகைகள்

எதிர்காலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள முயலும் தீயசக்தி இனக்குழுவின் இளவரசன்!

 அன்ரிவல்டு வில்லன் மங்கா காமிக்ஸ் பேடோ.ஐஓ கொரியாவில் வாழ்பவர் தான் எழுதிய காமிக்ஸில் நுழைந்து துணை பாத்திரமாக மாறுகிறார். அந்த நிலையில் தனக்கு வரும் ஆபத்துகளை முன்னே உணர்கிறார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முனைகிறார். அது சாத்தியமானதா என்பதே கதையின் மையம்.  நாயகன், ஃபர்ஸ்ட் மூன் கல்ட் என்ற இனக்குழுவின் நான்காவது இளவரசன். அதாவது தீயசக்தி இனக்குழு. குடித்துவிட்டு பெண்களை புணர்ந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை லட்சியமாக வாழ்கிறான். திடீரென அவனது உடலுக்குள் புதிய ஆன்மா புகுந்தவுடன் அனைத்தும் மாறுகிறது. எதிர்காலத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பின் வீரன் தாய் என்பவனால் வாளால் வெட்டி கொல்லப்படுவதை அறிகிறான். அந்த சம்பவம் நடக்க பத்து ஆண்டுகளே உள்ளது. அதற்குள் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். நாயகன் உடல் பலவீனமானது. எனவே, அதை வலு செய்ய முயல்கிறான். எதிர்காலம் ஒருவனுக்கு தெரிவது புனைவு கதைக்கு சிறந்த திருப்புமுனை. பிறரை விட புத்திசாலியாக நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆதரவு அணிகளை அமைக்கலாம். எதிரிகளை முன்னமே ஒடுக்கலாம். நட்பை உருவாக்கிக் கொள்ளலாம்.  அந்த வகையில் நாயக...

நாயகனுக்கும் உதவும் துணைப்பாத்திரம், இறுதியில் கதையின் நாயகனாக மாறினால்....

படம்
        ஐயம் போசஸ்டு ஸ்வார்ட் காட் மங்கா காமிக்ஸ் குன்மங்கா.காம் நகரில் உள்ள சிறுவன், காமிக்ஸ் ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறான். திடீரென அந்தக் கதையில் வரும் துணைப்பாத்திரமாக மாறி தொன்மைக் காலத்திற்குச் செல்கிறான். பத்தாண்டுகளுக்குள் தீயசக்தி இனக்குழுவோடு போர் நடக்கவிருப்பது அவனுக்கு முன்னமே தெரியும். அதாவது காமிக்ஸை படித்த காரணத்தால். அதற்கேற்ப நாயகனைக் கண்டுபிடித்து அவனுக்கு உதவி சண்டை போட வைப்பதுதான் கதை. நாயகன் மோ மோயங். நாம்கூங் குலத்தைச் சேர்ந்தவன். சரக்கு அடித்துவிட்டு பிறரை ஒரண்டு இழுப்பதுதான் அவனது வேலை. நகரில் உள்ள சிறுவனின் ஆவி, அவனது சுயநினைவு இல்லாத உடலில் புகுந்தபிறகு மாற்றம் ஏற்படுகிறது. அவனது காலை வெட்ட வந்த நாயகனிடம் மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்கிறான். அதேநேரம், அவனுக்கு உதவி நெருக்கமாகிறான். அதேநேரம், வாள் பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல வலிமை பெறத் தொடங்குகிறான். அவனைப் பற்றி பெற்றோருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. மாமா, மாமா பையன் என யாருக்குமே இவன் உருப்படுவான் என்ற எண்ணமில்லை. இந்த அவநம்பிக்கையை மோ முயோங் மெல்ல மாற்றி துணைப்பாத்திரத்தில் இருந்து மையப் பா...

ஏஐயைப் பயன்படுத்தி வேலையில் சாதிக்கலாம்!

படம்
  இருப்பதிலேயே குறைந்த கூலிக்கு ஆட்களை வேலைக்கு எடுத்து செக்குமாடு போல வேலைவாங்கும் நாளிதழ் நிறுவனம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு போவது உங்கள் விதியாக இருந்தாலும் ஏஐ பற்றி அறிந்து கொள்வது நல்லது. தெரிந்துகொண்டால் அங்கிருந்து தப்பி நல்ல நிறுவனத்திற்கு வேலைக்குப் போகலாம். உலகம் முழுக்க 300 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏஐ மூலம் பாதிக்கப்படவிருக்கின்றன என மெக்கின்சி ஆய்வு நிறுவனம் தகவல் கூறியுள்ளது. இதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஏஐ பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்டால் நல்லது.  டெக் கம்பெனி அல்லாத நிறுவனத்திற்கு சென்றால் கூட ஏஐ பற்றிய அறிவை பணியாளர் கொண்டிருப்பதை வேலைக்கு எடுப்பவர்கள் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் உதவும் என அவர் நினைக்கலாம். வடிவமைப்பாளராக இருப்பவர்கள், சாட்ஜிபிடி, டால் இ ஆகிய மாடல்களை கற்பது அவர்களின் கிரியேட்டிவிட்டியை உயரே கொண்டு செல்லும். மொத்த வித்தையையும் டிசைனில் இறக்கியிருக்கேன் என காலரை தூக்கிவிட்டுக்கொண்டு முதலாளியிடம் பெருமை பீற்றிக்கொள்ளலாம். உலகளவில் அடிப்படையான ஏஐ பற்றிய படிப்புகள் க...

செயற்கை நுண்ணறிவு, அதன் ஆபத்துகள் என்ன?

படம்
  செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? 1955ஆம் ஆண்டு கணினி வல்லுநரான மார்வின் மின்ஸ்கி என்பவர் முதல்முறையாக கூறினார். அப்போது அதற்கான தீர்க்கமான வரையறை ஏதும் இல்லை. தினசரி பயன்படுத்தும் கால்குலேட்டரை விட சற்று சிக்கலான அமைப்புமுறை என்று புரிந்துகொள்ளலாம். இன்று அப்படி முழுக்க சொல்ல முடியாது. சிக்கலான பிரச்னைகளை தீர்க்க எழுதப்படும் கோடிங் முறை எனலாம். இதை தீர்க்கும் முறை அப்படியே மனிதர்கள் யோசிக்கும் முறையை ஒத்திருக்கும். கணினிகள் தானாகவே யோசிக்காது. ஆனால் தகவல்களைக் கொடுத்து அவற்றை சோதித்து தீர்வுகளை வழங்க செய்யலாம். நிறைய தகவல்களைக் கொடுத்துவிட்டு கேள்விகளைக் கேட்டால் சரியான பதில்களை நாம் பெறலாம். நியூரல் நெட்வொர்க் முறையில் கணினிகளை இன்று உருவாக்கி எந்திர வழி கற்றலை நுட்பமான செயலாக்குகிறார்கள்.  ஏஐ எங்கெல்லாம் பயன்படுகிறது? இன்று போனின் சேவைகளை கட்டண தொலைபேசியில் அழைத்து பெறுகிறீர்களா? அங்கும் ஏஐ பாட்கள் உண்டு அவைதான் உங்களுக்கு வழிகாட்டுகின்றன. இப்போது குரலை அடையாளம் கண்டு பிடித்து பேசவும், உங்களை அழைக்கவும் கூட திறன் பெற்றுள்ளன. நீங்கள் எழுதவேண்டிய மின்னஞ்சலை ஏஐ இலக்கணப் பிழை இ...

2053ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பங்கள்! - போன், கார், உயிர் பிழைக்கும் தொழில்நுட்பம், டிவி

படம்
  2053ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் போன் உங்கள் கையில் உள்ள போனைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? இதில் செய்யவேண்டிய அனைத்தையும் 99 சதவீதம் செய்துவிட்டோம் என்றுதானே? இதுபற்றி ஆராய்ச்சியாளர் நீல் ஷா, எதிர்காலத்தில் போன் என்பது ஹெட்செட்டாக காதில் அல்லது மூளையில் பொருத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார். வீடு, அலுவலகம், சாலை என பல்வேறு டிஜிட்டல் கருவிகளோடு இணைந்திருக்கும். இதனால் அடுத்தடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை போன் அறிந்து இருக்கும். போன் என்பது குறிப்பிட்ட நீள அகலத்தில் திரை கொண்டதாக இருக்காது. போனுக்கான சர்க்கியூட் போர்ட்டைக் கூட நீரில் கரையும் தன்மை கொண்டதாக தயாரிக்க வாய்ப்புள்ளது. சோபி சராரா டிவி இன்று டிவி சேனலின் இடத்தை இணையம் எடுத்துக்கொண்டுவிட்டது. ஆனால் டிவி என்பது வீட்டில் ஹாலில் வைத்திருப்பது என்பதைக் கடந்ததாக மாறிவிட்டது. உள்ளங்கை அளவு கொண்டதாக போனை மடித்துவைத்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும் காரில் உள்ள திரைகளை டிவியாக கருதலாம். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை, ஜெஃப் பெஜோசிஸின் ப்ளூஒரிஜினல்ஸ் டிவி சேவை ஆகியவை எதிர்காலத்தில்...

ரோபோட்டுகளால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாது! - டாக்டர் கேட் டார்லிங்

படம்
              டாக்டர் கேட் டார்லிங் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்     நாம் ரோபோக்களைப் பற்றி யோசிப்பதில் தவறு ஏதேனும் உள்ளதா ? நாம் எப்போது் மனிதர்கள் , செயற்கை நுண்ணறிவை ஒரே தட்டில் வைத்து சோதித்து வருகிறோம் . இந்த ஒப்பீடு , நமது கற்பனையை கட்டுப்படுத்துகிறது . இதில் விலங்குகள் எப்படி தொடர்புடையவையாக உள்ளன ? நாம் வீடுகளில் வளர்க்கும் விலங்குகள் நமக்கு பயன்பாடு உள்ளவை . இவற்றையும் ரோபோக்களையும் தொடர்புடையதாக கூற முடியாது . ஆனால் மனிதர்கள் ரோபோக்களுக்குமான தொடர்பில் விலங்குகள் முக்கியமானவை . இவற்றின் உடல் அசைவுகள் ஆராய்ச்சிக்கு முக்கியமானவை . பெரும்பாலான நிறுவனங்கள் மனிதர்கள் இல்லாமல் செயல்படக்கூடிய இயந்திரங்களைதயதாரித்து வருகிறார்கள் உதாரணத்திற்கு தானியங்கி கார் , ட்ரோன் டெலிவரி என . இதில் விலங்குகளின் தன்மைகளில் உருவாக்கப்படும் ரோபோக்கள் , ஆராய்ச்சி மனிதர்களுக்கு உதவுமா ? மனிதர்களின் வேலைக்கு பாதிப்பு உள்ளது உண்மைதான் . ஆனால் அது ரோபோட்டுகளால் உருவாக்கப்படவில்லை . அதை தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் அரச...

எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

படம்
              எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம்...

அப்பாவை அம்மா காதலிக்க வைக்க போராடும் மகனின் போராட்டம்! - பேக் டூ தி ப்யூச்சர்

படம்
                பேக் டூ தி ப்யூச்சர் முதல்பாகம் . Director: Robert Zemeckis Produced by: Bob Gale, Neil Canton Writer(s): Robert Zemeckis, Bob Gale இதில் மார்டி தனது நண்பரும் ஆராய்ச்சியாளருமான எம்மட் தயாரித்த கால எந்திரத்தில் விபத்தாக பயணிக்கிறார் . அதுவும் கூட தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்கத்தான் . இந்த கால எந்திரம் சிறப்பாக பயன்பட்டிருக்கிறது . எப்படியென்றால் , குறிப்பிட்ட மெஷின் என்றால் அதனை பயன்படுத்துவது கடினமாக இருக்கும் . ஆனால் படத்தில் அதனை காராக பயன்படுத்தி விட்டார்கள் . இதனால் வேறு காலத்திற்கும் அதனால் பயணிக்க முடியும் . இதனால் லாஜிக் பெரிதாக இடிக்கவில்லை . மார்ட்டியின் அப்பா கோழையாக இருக்கிறார் . அவரை அவரது உடன் படித்த நண்பர் பல்வேறு வகையில் ஏமாற்றுகிறார் . மார்டிக்கு தனது அம்மா எப்படி அப்பாவை திருமணம் செய்தார் என்பதே புரியமாட்டேன்கிறது . அந்தளவு அசடாக இருக்கிறார் அவரது அப்பா . 1985 லிருந்து ் 1955 ஆம் ஆண்டுக்கு செல்லும்போது அப்பா , அம்மாவுக்கு இடையிலான காதலை கண்டுபிடிக்கிறார் . இவர் அவர்களது காதல் நடை...

எதிர்கால நோய் தீர்க்கும் மருத்துவமுறைகள்! - ஸ்டெம்செல், பாக்டீரியா, டிஎன்ஏ

படம்
          cc       எதிர்கால மருந்துகள், மருத்துவ முறைகள் முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து அவருக்கென மருந்துகளை தயாரிக்கலாம். இதனால் மருந்து வீணாகாமல் அவரின் உடலைச் சென்று அடையும், நோய் குணமாகும். இதனால் மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கும் மருத்துவர்கள் கூட தடாலடியாக இந்த பிராண்டு மருந்து சிறப்பாக வேலை செய்யும் முடிவெடுத்து மருந்துகளை வழங்க வாய்ப்புண்டு. முன்பே நோயைத் தடுக்கலாம். இதுவும் கூட மரபணு ஆராய்ச்சியில் பெறும் பயன்தான். இதில் ஒருவரின் தந்தைக்கு ஏற்படும் நீரிழிவுநோய், உடல்பருமன், புற்றுநோய் ஆகிய விஷயங்கள் ஏற்படுமா என்று பார்த்து அதை தடுக்கும் முயற்சிகளை செய்யலாம். புற்றுநோய் ஏற்படுபவர்கள் எந்தெந்த பாகங்களில் நோய் தாக்கும் என்று பார்த்து அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கி வருகிறார்கள். அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக வாழ்பவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டெம்செல் தெரப்பி இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி கொஞ்சம் காசு கூடியதாக இருக்கலாம். ஆனால், இதனை முயன்றால் பல்வேறு பிறப்பு குறைபாடுகளை முடிந்...

ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பெரு நகரங்கள் அடைந்தால் .......

படம்
    cc       தற்போது 50 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். 2100ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரிக்கும். ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பெரு நகரங்கள் அடைந்தால் என்னென்ன விஷயங்கள் மேம்படும் என்பதைப் பார்ப்போம். போக்குவரத்து நெரிசல் இப்போது சீனாவில் தெரு விளக்குகள் ஏறத்தாழ மக்களைக் கண்காணிக்கும் சென்சார்களைக் கொண்டுள்ளன. இதே பாணியில் நகரங்களில் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து நெருக்கடி ஆகியவற்றை பதிவு செய்து தலைமை கணினிக்கு அனுப்பும் வசதி உருவாகியிருக்கும். எனவே விபத்து ஏற்பட்டால் யாரும் போன் செய்யாமலேயே உதவிகள் கிடைக்கும். போக்குவரத்து நெருக்கடிகளை விரைவில் தீர்க்க காவல்துறையினரும் அங்கு வருவார்கள் அல்லது அதனை தீர்க்க ரோபோக்கள் செயல்பாட்டுக்கு வரும். வண்டி நிறுத்தங்கள் வண்டி நிறுத்தங்கள் எங்கே உள்ளன என்பதை திறன்பேசி செயலி மூலம் அறிய முடியும். இதனால் இடத்தை தேடி அலையாமல் திறன்பேசி மூலமே இருந்த இடத்திலேயே அறியலாம். இதனை தெருவிளக்கில் பொருத்தப்பட்ட ரேடார்கள் கண்காணித்து இத்தகவலை திறன்பேசியிலுள்ள செயலிக்கு அனுப்புகிறது. மக்கள் சக்தி இதன் அர்த்தம் அவர்கள் ந...

எதிர்காலத்தில் நாம் வாழும் வீடுகளில் இந்த வசதிகள் கண்டிப்பாக இருக்கும்! - என்னென்ன வசதிகள் தெரியுமா?

படம்
        cc         வீடு தூக்கம் என்பது இனி மாறும் . முதலில் சாப்பிட்டுவிட்டு வெளிச்சம் வரும் ஜன்னலின் திரையை இழுத்துவிட்டால் போதும் . ஆனால் இனிமேல் உங்களை தூக்கத்தை ஸ்மார்ட் மெத்தைகளே பார்த்துக்கொள்ளும் . உடலின் தூக்கம் கலையாதவாறு வெளியில் மழை பெய்தால் அதற்கேற்ப படுக்கை வெப்பமாகும் . வறண்ட காற்று வீசினால் படுக்கை அதற்கேற்ப நெகிழ்ந்துகொடுத்து தூங்க வைக்கும் . அறை புழுங்கினால் , படுக்கை குளிர்ந்த தன்மைக்கு மாறும் . படுக்கையில் படுக்கும் தம்பதியர் இருவரின் தூக்கங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும் என்பது சிறப்பு . மேலும் விளக்குகள் சூழ்நிலைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ள முடியும் . படுக்கை அறையை வெளிப்புறத்தில் உள்ள ஒலிகள் பாதிக்காதவாறு சவுண்ட்ப்ரூப் அல்லது இரைச்சல் குறைப்பு வசதிகள் செய்துகொள்ளும் வாய்ப்பும் கூடிவரும் . மேசை நாற்காலிகள் இவை அனைத்திலும் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகள் உண்டு . ஐகியா என்ற நிறுவனம் ஏற்கெனவே இந்த வசதியை செய்து மேசைகளை விற்று வருகிறது . ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது கடைகளில் இந்த வச...

அரசியல்வாதிகள் தம் பொறுப்பை உணர வேண்டும்!

படம்
          ”சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது   அரசியல்வாதிகள்தான்” உலக வங்கியின் சமூக பாதுகாப்பு மற்றும் வேலைகள் ஆகிய பிரிவின் இயக்குநர் மைக்கேல் ருட்கோவ்ஸ்கி. அவரிடம் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி பேசினோம். ஆங்கிலத்தில் - சுரோஜித் குப்தா வேலைவாய்ப்பு சந்தையில்   அரசியல்வாதிகளின் பங்கு என்ன? மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு, செல்வம் ஆகியவற்றுக்கு அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறவேண்டும். அவர்களே இதற்கு பொறுப்பு. உங்களது தாத்தா காலத்து வேலை வாய்ப்புச் சந்தை தற்போது கிடையாது. எதிர்காலத்தில் இந்த சந்தைக்கு மதிப்பும், பாதுகாப்பும் ஏற்படுத்துவது முக்கியம். இவற்றை பிரபலப்படுத்தி தொழில்முனைவோர்களை ஈர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு. எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி நான் நம்பிக்கையுடனே இருக்கிறேன். காரணம் தொழில்நுட்ப பாய்ச்சல் உலகில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளே நுழையும் போது வேலையிழப்பு பற்றிய அச்சம் இருக்கும். ஆனால் பின்னாளில் அதே தொழில்...