இடுகைகள்

கருத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா?

படம்
  ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா? நீங்கள் அரிசி ஆலையில் வேலை செய்கிறீர்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ப்ளுஸ்கை ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். அதில் உங்கள் மனதிற்கு பிடித்த படித்த பதிவுகளை போடுகிறீர்கள். பொதுவாக ஒருவர் தனக்கு பிடித்தாற்போன, மனசாட்சிப்படி சொல்லும் எழுதும் கருத்துகள் நிறையப்பேரை போய்ச்சேரும். பலருக்கும் பிடித்ததாக இருக்குமோ இல்லையோ, சிறு வட்டார ஆட்களேனும் அந்த எழுத்துக்களை படிக்க கூடுவார்கள். இதில் அரிசி ஆலை அதிபர் பெரிதாக தலையிட ஒன்றுமில்லை. வேலை நேரத்தில் போனை நோண்டினால் தவிர. ஆனால், அதுவே தனிநபர், சமூக வலைதளத்தில் பிராண்டு போல தனிப்பட்ட ஆளுமையை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவரை டிவி நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. அப்போதும் அந்த தனிநபர் முன்னைப்போலவே சுதந்திரமாக சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர முடியுமா? அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே நடைமுறை உண்மை.  அண்மையில் வார இதழில் வேலை செய்யும் மூத்த நிருபர் ஒருவரிடம் பேசினேன். அவர் நிறைய இலக்கிய நூல்களைப் படிப்பவர். ஆனால், அதைப்பற்றி பேசுபவர்,இணையத்தில் எழுத ...

ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

படம்
  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்  ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார்.  இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன.  நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...

ரோனி சிந்தனைகள்!

படம்
    தினமணி கதிரில் சுவாமிநாதன் என்ற ஆயுர்வேத பேராசிரியர், குஷ்டம் நோயைப் பற்றி கூறும்போது, தொடக்க பத்தியில் பிறரை சித்திரவதைப்படுத்துவது, முன்னோர்களது சாபம் என்றெல்லாம் கூறி அதன் காரணமாக வந்த நோய் என குறிப்பிடுகிறார். அதாவது சுருக்கமாக கர்மா. இப்படி சொல்லி மருத்துவம் பார்த்தால் அந்த நோயாளி, மருத்துவத்தை ஏற்பானா? திரிதோஷ அடிப்படையில் மருந்துகளை கூறினாலே போதுமே? எதற்கு இந்த இழிவுபடுத்தல்கள் பேராசிரியரே? செருப்பால் அடித்துவிட்டு சோறு போட்டால் நாய் வேண்டுமானாலும் சோறு தின்னும், மனிதர்கள் அப்படி செய்வார்களா? ஒருநாள் உடல்நலம் குன்றிய உறவினரை விசாரித்துவிட்டு தின்பண்டம் கொடுத்துவிட்டு, வந்து இரண்டே நாட்களில் சாமி பூசைக்கு காசு குடுக்கலீனா, சாமி கொன்னுடுமான்னு கேட்டவன்தான் அவன் என ஒருவர் பேசினால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? இரட்டை முகம் என்றா, இல்லை மனச்சிதைவுள்ள ஆள் என்றா? இன்று ஊழல் எல்லாம் பிரச்னை கிடையாது. கையூட்டு தவறும் கிடையாது. கையூட்டு கொடுத்தும் கூட வேலை செய்யமாட்டேன்கிறார்களே இந்த கேடுகெட்ட அரசாங்கத்தான்கள் என்பதுதான் வேதனையும் புலம்பலுமாக உள்ளது. ஆத்திக நம்பிக்கையிலிருந்த...

கூ சமூக வலைத்தள நிறுவனம் மூடப்பட்டதன் காரணம்!

படம்
            நிறுவனம் தோற்கலாம், நிறுவனர்கள் தோற்பதில்லை இப்படியொரு வாசகத்தை ஒருவர் எதற்கு சொல்லவேண்டி வரும்? கடையை அடைக்கும்போதுதானே? கூ என்ற ட்விட்டரை உல்டா செய்து உருவாக்கப்பட்ட இந்திய நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைசியாக நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மாயங்க் பிடாவட்கா ஆகியோர் மேற்சொன்ன செய்தியை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு  ஒன்றை உருவாக்க பெரிதாக ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை. பணம் வீண் பாருங்கள். பெரும்பாலும் மக்களிடம் வெற்றி பெற்ற அயல்நாட்டு வணிக வடிவத்தை அப்படியே எடுத்து செப்பனிட்டு தாய்மொழியான வடமொழி அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடங்கிவிடுவார்கள். அப்படி நிறைய நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களாக உருவாகின. அதுவும் இந்தியாவில் சீன நிறுவனங்கள், ஆப்கள் தடை செய்யப்பட்டபோது, நகல் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியது. அப்படி இயங்கினால் கூட கூகுள், மெட்டா, அமேசான் போல எந்த நிறுவனங்களும் உருவாகவில்லை. உருப்படியாக நின்று சாதிக்கவில்லை. தனித்துவம் இல்லாமல் உள்ளூர் மொழி என்று மட்டும் ஆப் ஒன...

தனிநபர்கள் சமூகத்தை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றிய உளவியல் ஆய்வு - செர்ஜ் மாஸ்கோவிசி

படம்
  உளவியல் ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான். ஆனால் இதில் பொதுமக்களின் கருத்துகள் பற்றிய அக்கறையே இல்லையே என அங்கலாய்த்த உளவியலாளர்கள் உண்டு. அவர்கள் என்ன கூற நினைத்தார்கள் என்பதைப் பார்ப்போம்.  ஒரு விஷயத்தைப் பற்றி பிறர் கூற அல்லது இணையத்தின் வழியாக கேள்விப்படுகிறோம். உடனே அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள நினைக்கிறோம். அப்படி தெரிந்துகொண்ட விஷயங்களை ஏற்கெனவே தெரிந்தவற்றோடு அல்லது அனுபவத்தோடு இணைக்கிறோம். இப்படி தெரிந்துகொண்ட அனுபவங்களை ஒருவர் உரையாடல் வழியாக பிறருக்கு கடத்துகிறார். பகிர்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு நட்பு, உறவுகள், சமூக வலைத்தளங்கள், மக்கள் பங்கேற்கும் டிவி நிகழ்ச்சிகள் உதவுகின்றன. நிறைய மக்கள் ஒன்றாக அமர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அங்கு கற்பதும், பெறுவதும் நடக்கிறது. இதன்வழியாக சமூகத்தின் மதிப்புகள், ஈடுபாடு தெரிய வருகிறது. மக்கள் உரையாடுவதன் வழியாக ஒருவர் மிகுந்த மேம்பாடு கொண்ட அறிவை அடைகிறார்கள் என்று கூற முடியாது. அது உரையாடலின் லட்சியமும் அல்ல. கலந்துரையாடலின் வழியாக சமூகம் தனக்கான தொலைநோக்கு பார்வையை, பாதிக்கும் விஷயங்களை எப்படி...

தனிநபர் சுதந்திரத்திற்கு மதிப்பளித்த உளவியலாளர் சாலமன் ஆச்!

படம்
  தனிநபர் சுதந்திரம்  வெளிநாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக மதிப்புண்டு பிற மூன்றாம் உலக நாடுகளை விட அங்கு கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கிறார்கள். ஆனால் அதேசமயம் மறைமுகமாக கண்காணிப்பும் களையெடுத்தலும் உண்டு. இன்று வலதுசாரிகளின் தலையெடுப்பால் கண்காணிப்புச் சட்டங்களும், சர்வாதிகார நிர்வாக முறைகளும் என நிலைமை வெகுவாக மாறிவருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கருத்து சுதந்திரம் சார்ந்த பாதைக்கு வந்து சேர பலநூறு ஆண்டுகள் பிடித்தன இந்த நாடுகளில் குழுக்களை விட தனிநபர்களுக்கே அதிக மதிப்புண்டு. ஜப்பான், ஆப்பிரிக்கா, ஃபிஜூ ஆகிய நாடுகளில் குழுக்களுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்புண்டு.  தொடக்க கால அமெரிக்காவில், கம்யூனிசம் பேசினால் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து சித்திரவதை செய்வது வழக்கம். சொந்தகருத்துகளை பேசியவர்களை, மனித உரிமைக்கு குரல் கொடுத்தவர்களை தேசதுரோகி என்று கூறிவிடுவார்கள். இப்படி மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படையாக பேசும் தனிநபர்களை குறிப்பாக கம்யூனிஸ்டுகளை கைது செய்யும் வழக்கத்தை தொடங்கியவர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான ஜோசப் மெ...

தனிநபர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக செல்வாக்கும், அழுத்தங்களும்!

படம்
  மக்கள் கருத்தே நமது கருத்து இயக்குநர் ஷங்கர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனால் அவரது படங்களில் பிராமணர்கள் விதியை மீறாத அப்பாவிகளாக நல்லவர்களாக வருவார்கள். ஆனால் கருப்பாக இருப்பவர்கள் சேரியில் இருப்பவர்கள் தவறான செயல்களை செய்பவர்கள் என காட்சிரீதியாக வலுவாக மக்களது மனதில் பதிய வைக்க முயல்வார். கூடவே ஊழல் என்றால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் லஞ்சம் வாங்குபவர்களாக, நேர்மை இல்லாதவர்களாக காட்டப்படுவார்கள். மிக மேலோட்டமான அரசியல் பார்வை கொண்ட படங்கள் அவை. மக்கள் கருத்துகளின்படி அரசு இயங்குவதாக காட்டுவார்கள். இதன் பின்னணி பற்றிய உளவியல் ஆய்வைப் பார்க்கலாம்.  பொதுவாக ஒருவரின் செயல்பாடு என்பது காலத்தை கடந்ததாக இருந்தால், அதை அடையாளம் கண்டு அங்கீகரிப்பவர்கள் மிக குறைவானவர்கள்தான். தொலைநோக்காக யோசித்து புதுமை செய்பவர்களை சமூகம் எப்போதும் கேலியும் கிண்டலும் அவமரியாதையும் செய்து வந்திருக்கிறது. புதிய செயலை செய்கிறோம் என்றால், அதை செய்யும்போது அதில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் தனிப்பட்ட கருத்து, அதைப்பற்றிய மக்களின் பொதுக்கருத்து  என நிறைய விஷயங்கள் உள்ளே வரும். முன்னர் சினிம...

பதற்றக் குறைபாடுகளுக்கான சிகிச்சை முறையை உருவாக்கிய பால் சால்கோவ்ஸ்கிஸ்!

படம்
  இருபதாம் நூற்றாண்டின் அரைபகுதியில் மருத்துவ உளவியலில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று, மனநல குறைபாடுகளுக்கு அதுவரை பயன்படுத்திய தெரபி முறைகளை மாற்றத் தொடங்கினர். 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலுள்ள பல்வேறு உளவியலாளர்கள் ஃப்ராய்டிய முறையை மாற்றி உளவியலாளர் ஆரோன் பெக் கண்டறிந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினர். பின்னாளில், காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி சிபிடி என்று அழைக்கப்பட்ட சிகிச்சை முறையை பால் சால்கோவ்கிஸ் என்பவர் கண்டறிந்தார்.  இதை ஆண்டுக்கு ஆண்டு உளவியலாளர்கள் மாற்றி மேம்படுத்தி வந்தனர். சிபிடியைப் பயன்படுத்தி அப்செசிவ் கம்பல்சிவ் டிசார்டர் குறைபாட்டிற்கு சிகிச்சை செய்தனர். ஆனால் இப்படி ஒரு குறைபாடு தோன்றுவதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்று தெரியாமல் தவித்தனர்.  எதிர்காலத்தில் அப்படி நடக்குமோ, இப்படி நடந்துவிடுமோ என்று மனதி்ல் எழுதும் கருத்துகள் வலிமையாகும்போது அப்செசிவ் குறைபாடு உருவாகிறது என பால் கண்டறிந்தார். இப்படியான மனக்கருத்துகளுக்கு எந்த அடிப்படையும் இருக்காது. அவருக்கு ஏதாவது துக்கம் அல்லது நோய் வந்திருக்கும். ஆனால் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு எ...

கிழக்கத்திய ஞானத்தை உளவியலுக்கு கொண்டு சென்று ஆராய்ந்த உளவியலாளர் ஜோன் கபாட்ஸின்!

படம்
  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் கிழகத்திய ஆன்மிக கருத்துகளை, பாடல்களை இலக்கியங்களை நாடத் தொடங்கின. இந்த வகையில் பௌத்த மதத்தின் தியானம், உடற்பயிற்சிகளை வெளிநாட்டினர் ஆராயத் தொடங்கினர். அப்போது பெரிதாக அதன் ஆய்வுப்பூர்வ நிரூபணத்தை கூற முடியவில்லை. ஆனால் பின்னாளில் அதன் பலன்களை அடையாளம் கண்டு கொண்டனர்.  அமெரிக்க உயிரியலாளர், உளவியலாளரான ஜோன் கபாட்ஸின் என்பவர், மைண்ட்ஃபுல்னஸ் என்ற மன அழுத்தம் குறைக்கும் முறையை உருவாக்கினார். இதில் தியானம் முக்கியமான பங்கு வகித்தது.  ஒருவர் கூறும் கருத்துகளை, செய்யும் செயல்களை முன்முடிவுகள் இன்றி அதை ஏற்பது, அந்த செயல்பாடுகளில் இருந்து தன்னை பிரித்து வைத்து இயங்குவது, மையமாக இன்றி தனித்த இருப்பது ஆகியவற்றை ஜோன் இதில் முக்கியமாக கருதினார். அதாவது, உடல் அப்படியே நிலையாக இருக்க மனம் என்ன சிந்திக்கிறது என்பதை கவனமாக பார்க்குமாறு சூழலை உருவாக்கினார். இந்த முறையில் சிந்தனைகளை எந்த கட்டுப்பாடும் செய்யாமல் அப்படியே உருவாக விடுவது, அதைப்பற்றிய எந்த முடிவும் கூறக்கூடாது.  நான் தோற்றுப்போனவன், வாழ்க்கை எனக்கு இல்லை என எந்த முடிவுக...

மனிதர்களைப் பற்றிய கருத்துகளை வலிந்து உருவாக்கும் சமூகம்!

படம்
  பள்ளி, கல்லூரி, சமூகம், குடும்பம், இணையம் என பார்த்தால் ஒருவரின் மனதிலுள்ள கருத்தை எந்த அம்சம் உருவாக்குகிறது என கண்டுபிடித்துவிடலாம். இன்றைய காலத்தில் இணையம் குறிப்பிட்ட கருத்துகளை வலிந்து உருவாக்குகிறது. அதை வைத்து சமூகத்தில் உள்ள ஒருவரை எளிதாக அவதூறு செய்து கீழிறக்கமுடியும். குடும்பம், அலுவலகம், இணையம் ஆகிய இடங்களில் இதுபோல நச்சை உருவாக்குகிற இயல்பு கொண்ட மனிதர்களை ஒருவர் எளிதாக சந்திக்கலாம். இந்த மனிதர்கள் தனக்கு அங்கீகாரமும் , அதிகாரமும் வேண்டும் என பேராசை கொண்டிருப்பார்கள். அதை அடைய பல்வேறு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்வார்கள். தன்னை மட்டுமே மையப்படுத்திய சிந்தனை கொண்டவர்கள், நடைமுறை பிரச்னையில் தீர்வு கண்டுபிடிக்க முடியாமல் நச்சு பிரசாரங்களை செய்வார்கள். தங்களின் தகுதியின்மை, திறனின்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  அவர்களும் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.  வரலாற்றில் மிக மோசமான நேரத்தில் பணவீக்கம் வருகிறது, வருமானம் போதவில்லை எனும்போது ஒருவர் பொன்னியின் செல்வன் நூலை எடுத்து வைத்து படித்து கனவில் ஆழ்வதைப் போன்ற குணம் மனிதர்களுக்கு உண்டு. அன்றைய கா...

எலன் மஸ்க் எப்படி சிந்திக்கிறார் என்பதை கண்டுபிடிப்போம் வாங்க!

படம்
  எலன் மஸ்க் எந்தெந்த சமூக வலைத்தள கணக்குகளை தொடர்கிறார்?   சுனக், மேக்ரான், மோடி, வான் டெர் லியான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்க அரசு, இங்கிலாந்து அரச குடும்பம் ஆகிய கணக்குகளை பின்தொடர்கிறார். இதன் அர்த்தம், அவர் அவற்றை பின்தொடர்கிறார் அவ்வளவுதான். இங்கு வெளியிடப்படும் அனைத்து கருத்துகளை ரீட்விட் செய்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நானும் இருக்கிறேன் என்று கூறுகிறார். மற்றபடி இந்த கணக்குகளை அவர் எப்போதாவது எட்டிப்பார்க்கிறாரா என்று கூட தெரியாது. பிபிசி செய்திகளை பின்தொடர்கிறார். அதேசமயம் இதுவரை தனது ட்விட்களில் அதை எந்த கண்டனமும் செய்ததில்லை என்பதையும் நினைவுகூர்கிறேன். டெஸ்லா கார்கள் விற்பனை, பங்கு விலை உயர்வு பற்றிய சந்தோஷமான கருத்துகளை எலன் கவனிக்கிறார். அவற்றை பகிர்கிறார். அவரைப் பொறுத்தவரை நாய்களுக்கு பிஸ்கெட் போடுவதை அதன் உரிமையாளர் எப்படியான மனநிலையில் செய்வாரோ அதேபோன்றதுதான் இதுவும் என கூறலாம். பாலியல் கல்வியை அரசியல்மயப்படுத்துவது, ரஷ்யா – உக்ரைன் போர் பற்றிய கருத்துகள், கோவிட் தடுப்பூசி பற்றிய கருத்துகள் ஆகியவற்றை பற்றிய விஷயங்களை எலன் மஸ்க் தனது ட்விட்டர் க...

பொது விவகாரங்களில் பிரபலங்களின் கருத்து!

படம்
  வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குற்றச்செயல்களை செய்த இளையோர் ஆகியோரைப் பற்றிய செய்திகளை எழுதும்போது கவனம் தேவை. சிறுவர்களைப் பற்றிய செய்தியை எழுதுகிறீர்கள் என்றால் முறையாக பெற்றோர், ஆசிரியர், சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்கலாம். சில குற்ற வழக்குகளில் இளையோர் தொடர்பு இருந்தால் அதில் நீதிமன்றத் தலையீடுகள் இருக்கலாம். எனவே, செய்திக்காக அவர்களின் புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்க கூடாது. அப்படி பிரசுரம் செய்தால், தொடர்புடைய இளையோருக்கு பாதிப்பு நேரிடலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சினிமா பிரபலங்களை, அவர்களின் கருத்துகளை   வெளியிட்டு சம்பாதிக்கும் நிறைய வார, மாத இதழ்கள் உண்டு. இந்த வகையில்   செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அடையாளமே குறிப்பிட்ட பிரபலங்களை தேடிப்பிடித்து பேசியதால் கிடைத்த புகழ்தான். எனவே, இதுபற்றிய செய்தியில்   ஜாக்கிரதை தேவை.   பிரபலங்களைப் பற்றிய தொழில் சார்ந்த செய்திகளால் இதழ் வளரலாம். அதேசமயம் பிரபலங்களின் குடும்பம் பற்றி எழுதும்போது, கவனமாக இருப்பது...

நீட்ஷேவின் கருத்தால் கொலை செய்ய கிளம்பிய அறிவுஜீவிகள்!

படம்
  நீட்ஷே சினிமா பார்த்து திருடினேன் என்ற வார்த்தைகளை டெய்லி புஷ்பம், தந்தி போன்ற நாளிதழ்களில் சாதாரணமாக பார்த்திருப்பீர்கள். இப்படி சொல்லும் நாளிதழ்கள் அந்த பிரபலங்களை வைத்துதான் சம்பாதிக்கிறார்கள். ஆனால் செய்திகளை குற்றவாளி சொன்னதாகவே வெளியிடுவார்கள். உண்மையில் குற்றவாளியின் மனம் தான் செய்தது சரிதான் என வாதிட இதுபோன்ற புற காரணங்களை எடுத்துக்கொள்கிறது. சினிமாதான் ஒருவரை தூண்டியது, குற்றங்களில் ஈடுபட்டார் என்றால் அதே சினிமாவில் அறம் சார்ந்த உணர்வுகளை ஏற்படுத்தும் படங்கள் ஏகத்துக்கும் உண்டே, அவை குற்றவாளியின் மனதை மாற்றவில்லையா? பொதுவாக மனித மனம் தான் செய்யும் காரியத்திற்கு காரண காரியங்களை எளிதாக உருவாக்கிக்கொள்ளும். இன்று பொதுவெளியிலும் அறியாமை வெளிப்பட தான் சொல்லுவதே உண்மை என்று பேசுகிறார்கள் பாருங்கள். இவர்கள் நவீன குற்றவாளிகள். பின்னணியல் குற்றச்செயல்களை செய்துகொண்டும் இருக்கலாம். இந்த வகையில் நீட்ஷே என்ற தத்துவ அறிஞரைப் பற்றி வாசித்திருப்பீர்கள். இவர் அவர் வாழ்ந்த காலத்தை முன்வைத்து சில கருத்துகளை கோட்பாடுகளை சொன்னார். அதில் ஒன்றுதான், பலவீனர்கள் மீது அதிகாரம் செலுத்தித்தான் ந...

நெருக்கடியான சூழலில் நமக்கு உதவும் காந்தி!

படம்
                      காந்தியை , இந்தியாவில் எப்போது நெருக்கடியான சூழல் வந்தாலும் நினைத்து பார்க்கிறோம் . அவர் எப்படி சூழலை , நிலையைக் கையாண்டிருப்பார் என சிலர் பேசுகிறார்கள் . இடையறாது , தேசிய நாளிதழ்களில் பத்தி எழுதப்படுகிறது . இதற்கு என்ன காரணம் ? நவீன இந்திய சிற்பிகளில் உள்ள பிற தலைவர்களை இப்படி யாரும் எதிர்பார்ப்பதில்லையே ? அதற்கு காரணம் , காந்திக்கு இந்தியா பற்றியும் , மக்கள் பற்றியும் அடிப்படையான உள்ளுணர்வுத்தன்மை இருந்தது . அதனால்தான் காந்தியின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் கூட அறியும்படி தனது உருவத்தை வடிவமைத்துக்கொண்டார் . தகவல்தொடர்பு வேகமாக இல்லாத காலத்தில் கூட காந்தி என்ற பெயர் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது . 1915 ஆம் ஆண்டு காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார் . அப்போதும் அவருக்கு பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை . அதற்கான சக்தியும் அவருக்கு அப்போது உருவாகியிருக்கவில்லை . ஆனால் அதற்கான முயற்சியை அரசியலமைப்பு மூலம் செய்யவேண்டுமென்ற தெளிவு...