இடுகைகள்

அசைவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதவாத சமூகம் புறக்கணித்த தலித்துகளின் சமையலறை!

படம்
 தலித் கிச்சன்ஸ் ஆப் மராத்வடா சாகு படோல் ஆங்கிலம் ஹார்பர் கோலின்ஸ் இந்த நூலில், எழுத்தாளர் சாகு படோல் மும்பையில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கை, சாதிமுறை, கொண்டாடும் பண்டிகைகள், நம்பிக்கை, உணவுமுறை, அதை செய்வது எப்படி என ஏராளமான தகவல்களைக் கொண்டு விளக்கியுள்ளார். பெரும்பாலும் அசைவ உணவுகள்தான். சைவ உணவு செய்முறைகளும் இறுதியில் உள்ளன. அதை தவிர்த்துவிடுவோம். அசைவ உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதே நம்மை பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறது. அசைவ உணவு செய்முறைகளில் பலவும் மிகச்சில பொருட்களை வைத்தே செய்கிறார்கள். நிறைய அசைவ பொருட்களை சமைக்க நீர் கூட பயன்படுத்தப்படுவதில்லை. சட்டியில் கறியை போட்டு அதை சூட்டில் வறுப்பதே பெரும்பாலான உணவு செய்முறையாக உள்ளது. விலங்கின் ரத்தத்தை ஊற்றி அதை வேக வைக்கும் முறை தொடங்கி, தலித்துகளின் உணவுமுறை பற்றிய வியப்பு தொடங்குகிறது. மும்பையில் உள்ள சாதிமுறை, சாதி மேலாதிக்கம், தெய்வ வழிபாடு பற்றியும் விரிவாக கூறியுள்ளார். அவர்களின் வழிபாட்டில் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் தெய்வ கதைகளும் உள்ளன. சாதிமுறையில் தலித்துகளுக்கும் நிறைய பிரிவினைகள் உள்ளன. நூலில், மக...

அசைவம் உண்ணுபவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டுமா?

படம்
 சைவர்களின் பெருமையும், ஆணவமும்! சைவம், அசைவம் இரண்டில் எது உயர்ந்தது? இன்றைய இந்தியாவில் இது முக்கியமான விவாதப்பொருள். இதுபோன்ற விவாதங்களை சைவ உணவுபழக்கத்தினர்தான் உருவாக்கி வாதிட்டு வருகிறார்கள். சைவ உணவுமுறைதான் மனிதர்களுக்கானது என்று அவர்களே வாதிட்டு வென்று வருகிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பே தேவையில்லை என்று கூறலாம். அசைவ உணவுப்பழக்கத்திற்கு சைவ உணவுப்பழக்கத்திற்கு உள்ளது போன்ற விவாதம் செய்யும் நபர்கள் இல்லை. ஆனாலும் கூட அசைவம் உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைவர்கள், அதிகரித்து வரும் அசைவர்கள் பற்றி அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நாளிதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணைய வலைதளங்கள் மதம், ஆன்மிகம் பற்றிய நிகழ்ச்சிகளை எழுதி ஒளி(லி)பரப்பிவழங்கி வருகின்றன. இவற்றிலும் சைவ உணவு கோஷம் தீவிரமாக உள்ளது. அதை பாராட்டியும் பேசி வருகிறார்கள். சைவ உணவுப்பழக்கம் அந்தளவு புகழ்மிக்கது, பயன்மிக்கது என்றால் எந்த விளம்பரம், பிரசாரம் இன்றியே அசைவ உணவுப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது எப்படி? பல்வேறு சாதி, ம...

பிரியாணி மவுசு பெற்றது எப்படி?

படம்
              அனைத்து காலங்களிலும் கலக்கும் பிரியாணி ! தமிழகத்தின் தவிர்க்க முடியாத உணவு என்றால் எதனைக் குறிப்பிடுவீர்கள் ? வேறு சாய்ஸே கிடையாது பிரியாணிதான் . அனைத்து தடைகளையும் தாண்டி தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது . பிரியாணி . எண்ணெய்யில் வறுக்கப்படும் உணவு என்பதுதான் இதற்கான அர்த்தம் . இறைச்சி , முட்டை கலந்த பிரியாணி அனைத்து இடங்களிலும் கிடைப்பதோடு , ஒருவருக்கு அல்லது ஒரு கூட்டத்திற்கே என்றால் கூட தாக்குப்பிடிக்கும் திருப்தி படுத்தும் உணவாக மாறியுள்ளது . அடிப்படையில் பிரியாணி என்பது பெர்சியா நாட்டு உணவு . மொகலாயர்களின் இந்திய வருகையின்போது இங்குள்ள மக்களுக்கு இந்த உணவு அறிமுகமாகிறது . பெரு நகரங்களில் சமைக்கப்படும் பிரியாணி , இடத்தைப் பொறுத்து மாறுபடும் . மதுரையில் சீரக சம்பா அரிசியில் அதிக கறியுடன் சமைக்கப்படும் பிரியாணி சென்னையில் பாஸ்மதி அரிசியில் பெரும்பாலும் சமைக்கப்படுகிறது . எப்படி அனைத்து மக்களிடமும் பிரியாணி வெற்றி பெற்றது என்றால் , கறி , முட்டையுடன் கூடிய சத்தான உணவு . முழு சைவ சாப்பாட்டை விட குறைந்த விலை...