இடுகைகள்

வங்கி இணைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்!

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்! இந்திய அரசு, பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்காக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதன் வணிகம், கடன் வழங்கும் திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைள்    முழுமையடைய    தோராயமாக ஓராண்டு பிடிக்கும். வங்கிகள் இணைப்பால் வங்கிகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? 1.பயனர்களின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படலாம். ஒன்றிணையும் இரு வங்கிகளில் வெவ்வேறு கணக்கு எண்களை வைத்திருப்பவர்களுக்கு, ஒரே எண் அளிக்கப்படும். தொலைபேசி எண் மேம்படுத்தும் அறிவுரை கூறப்படலாம். 2.வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி எண் ஆகியவையும் கூடுதலாக மாற்றப்படும். வங்கியில் அளிக்கப்பட்ட செக் புத்தகம், கடன்தொகை    தவணை ஆகியவை மாற்றத்தைச் சந்திக்கலாம். 3. வங்கிகள் இணைக்கப்படுவதால், வங்கிக் கிளைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இணைக்கப்படும் வங்கிகள் ஒரே பகுதியில் இரண்டு இருந்தால், சிறிய வங்கியின் கிளைகள் மூடப்படும். ஏடிஎம் வசதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. முன்னர் இணைக்கப்பட்ட விஜயா, தேனா, பரோடா வங்கிகளின் ஏடிஎம்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றன. 4. கட...

யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள்

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள் இன்றைய காலத்துக்கு இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசு நிறுவனங்களும் நேர்மையாக இயங்குவதில்லை. அப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும் நினைப்பதில்லை. அந்தளவு சட்டம், விதிமுறை, நெறிகள் என அனைத்தும் காவி நிறத்தால் மூடப்பட்டு வருகிறது. வலிமை உள்ளவர் அதாவது, அதிகாரம், பணம் கொண்டவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை ஆற்றல் இல்லாத ஏழை எளியர் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பதே சொல்லாமல் சொல்லும் பாடமாக உள்ளது. அந்த வகையில் இந்திய ஒன்றிய வங்கியின் கதை அமைகிறது. இந்த வங்கி வடக்கு நாட்டிலுள்ளது. அங்கு நிறைய கிளைகளைக் கொண்டுள்ளது போல. இரண்டு காந்தங்களை எதிரெதிரே பிடித்தது போல லோகோ அமைந்திருக்கும். அதன் அர்த்தம் தொடக்கத்தில் புரியவில்லை. பின்னே அதில் கணக்கு வைத்துள்ள மக்களின் பணத்தை இழுத்து பிடித்து கவர்ந்து ஈர்க்கத்தான் என பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது.  தொடக்கத்தில் எனக்கு சம்பள கணக்கை, பச்சை நிறம் கொண்ட பெருநிறுவன வங்கி என்ற வங்கியில் தொடங்கி கொடுத்தனர். அந்த வங்கிக்கு பெரியளவு ஏடிஎம் வசதிகளோ அல்லது பெரிய புகழோ, பெயரோ எதுவும...