இடுகைகள்

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டும் 87 வயது உளவியலாளர் எழுத்தாளர் ரீ குன் ஹூ!

படம்
  இப் யூ லிவ் டு 100 - யூ மைட் ஆஸ் வெல் பி ஹேப்பி உளவியலாளர் ரீ குன் ஹூ பெங்குவின்  கொரியாவில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு - சுபில் லீ பார்க் இந்த நூலை எழுதிய ஆசிரியர் பிறந்த ஆண்டு 1935. ஆமாம். 87 வயதில் இந்த நூலை தனது குடும்பத்தினர் உதவியுடன் எழுதியிருக்கிறார். அப்படி எழுதிய நூலும் அப்படியொரு சாதனையாக விற்கிறது. எப்படி சாத்தியம் ஆகிறது? சாத்தியம்தான். ஏனெனில் எழுத்தாளர் ரீ குன் ஹூ தனது வாழ்க்கையில் பார்க்காத மேடு பள்ளங்கள் கிடையாது. சந்திக்காத துயரங்கள் கிடையாது. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் நம்மைப் போன்றவர்களுக்கு அறிவுரை கூறக்கடாதா என்ன? நூலில் அவர் தான் சந்தித்த அனுபவங்களின் வழியாக தன்னை சுயபரிசோதனை செய்வதாக நாம் கருதலாம்.  ஆரோக்கியமான வாழ்க்கை என்பதை விட நிதானமான வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என்பதை ரீ வலியுறுத்துகிறார். இதற்கு அவர் பல்வேறு அறிஞர்களுடைய மேற்கோள்களை சுட்டிக் காட்டவில்லை. தன்னுடைய வாழ்க்கையை முன்வைத்துப் பேசுகிறார். அவ்வளவுதான். அவர் தன்னுடைய வாழ்க்கையில் கொரிய போர், வறுமை, பிரதமருக்கு எதிரான போராட்டம், அதனால் சிறைவாசம், சிறைவாசம் காரணமாக மருத்துவம...

திராவிடர்களைத் தாழ்த்தி ஆரியத்தை உயர்த்திப் பேசும் கம்ப ராமாயணத்தை எரித்தால் என்ன? - தீ பரவட்டும்!

படம்
  தீ பரவட்டும் சிஎன் அண்ணாதுரை கலைமன்றம், சென்னை விலை.1.00 முதல் பதிப்பு 1943 ஏப்ரல் இந்த நூலில் நால்வர் பேசிய சொற்பொழிவு உரைகள் உண்டு. சி.என். அண்ணாத்துரை, ஆர்பி சேதுப்பிள்ளை, நாவலர் எஸ் சோமசுந்தர பாரதியார், ஈழத்து அடிகள் ஆகியோர் ராமாயணம் பற்றி பேசியுள்ளனர். இதில் திராவிட கருத்துகளுக்கு ஆதரவாக அண்ணாத்துரையார், ஈழத்துஅடிகள் பேசியுள்ளனர். இவர்களுக்கு எதிராக ஆரியர்களுக்கு ஆதரவாக ஆர்பி சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதி ஆகியோர் பேசியுள்ளனர். அடிப்படையில் இவர்களது உரைகளை ஒருவர் கேட்டாலே, அது பிழையுள்ளதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வெறும் வாய்ப்பந்தல் போடுவதாக உள்ளது என்பதை அறிய முடியும்.  சோமசுந்தர பாரதி, இன்னும் ஒருபடி மேலே போய் ராவணன் ஆரிய மன்னன் என்றும், கம்ப ராமாயணத்தை ஒருவர் எரித்தால், எரிப்பவர்களை இந்துகள் எரித்து கொல்வார்கள் என்று ஓரீடத்தில் கூறுகிறார். அவருக்கு இந்து முன்னணி அல்லது ஆர்எஸ்எஸ் உதிரி தீவிரவாத அமைப்புகள் பற்றி தெரிந்திருக்குமா இல்லையா என்று புரியவில்லை. ஆனாலும் அக்கருத்தை அவர் உறுதியாக கூறுகிறார். அண்ணாத்துரை ஏன் எரிக்க வேண்டும் என்ற கருத்தை தெளிவாக முன்வைக்கும்போத...

பெண்களுக்கு எதிரான அநீதிகளை மிரட்டலுக்கு அஞ்சாமல் தட்டிக் கேட்கும் யோகிதா பாயனா!

படம்
  யோகிதா பாயனா, வட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி பேசி வருகிற குரல்களில் ஒருவர். பேச்சு மட்டுமல்ல. களத்திலும் செயல்பட்டு ஆதரவாக நிற்பவர். அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் இந்தியா போன்ற மதவாத நாட்டில் வல்லுறவுகள், பாலியல் வல்லுறவு தாக்குதல், சுரண்டல்களுக்கா பஞ்சம்.அதனால் அவருடைய ட்வீட்களைப் பார்த்தால், ஒரு குற்றம் அடுத்த குற்றம் என அப்படியே மாறி மாறி சென்று கொண்டே இருக்கிறது. பார்ப்பன தர்மத்தில் பெண்களுக்கு இடமில்லை என்பதால், அவர்களை அமைப்பு ரீதியாக சுரண்டுவதற்கு அரசு அனுமதிக்கிறது. எனவே, அவர்களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பெண்கள் தொடர்பான வல்லுறவு, தாக்குதல், மிரட்டல் விவகாரங்கள் ஊடகங்களில், அரசின் புள்ளிவிவரங்களில் தவிர்க்கப்படுகின்றன.  யோகிதா பாயனா - பீப்பிள் அகெய்ன்ஸ்ட் ரேப் இன் இந்தியா -பாரி எனும் அமைப்பை நடத்தி வருகிறார். பெண்களுக்கு தெருவில் நடக்கும் தாக்குதல்கள், கணவர் குடும்ப வன்முறைக்கு உட்படுத்துவது ஆகியவற்றையும் கூட வெளியே கூறுமாறு வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வரு...

சிறந்த கண்டுபிடிப்புகள் - டைம் வார இதழ் 2025

 சிறந்த கண்டுபிடிப்புகள் - டைம் வார இதழ் 2025 ப்ரெய்லி டேப்லெட்  அமெரிக்காவில் ப்ரெய்லி முறையில் படிக்க டேப்லெட் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவையான நூல்களை எளிதாக உருவாக்கிவிட முடிவதில்லை. இதற்கு காரணம், அனைத்தையும் ப்ரெய்லி முறையில் உருவாக்கும் செயல்முறை கடினமாக உள்ளதுதான். அதைத்தான் இப்போது மாற்றியுள்ளனர். இந்த டேப்லெட்டில் எளிதாக ஒருவர் வாசிக்க முடியும். கிரேக் ஸ்டில்சன் என்பவர் இதை தயாரித்து உதவியுள்ளார். லீகோ விளையாட்டை அறிவீர்களா, அந்த முறையில் இந்த கருவியை அமைத்துள்ளனர். இப்போதைக்கு இதை 1,100 பிளாக்குகளுடன் வகுப்பறையில் பயன்படுத்தும்படி அமைத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடலாம். அமெரிக்காவில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இருபது சதவீதம் பேர் இதனால் பயன்பெறமுடியும்.  மோதிர ரிமோட் ஊரில் சிலர் தனியார் பேருந்துகளில் போகும்போது தங்களுடை நவீன போனை ரிமோட்டாக பயன்படுத்தி பேருந்திலுள்ள சிடி டிவிடி பிளேயரை நிறுத்துவது, பாடலை மாற்றுவது ஆகிய குறும்புகளை செய்வதுண்டு. அதேதான். தாவல் படேல் என்ன செய்திருக்கிறார் எ...

டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025

 டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025 ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 இந்த ஏர்பாட், பல மடங்கு முன்னே சென்றுள்ளது. வெறும் காதில் இரைச்சலை நீக்குவது மட்டுமன்றி, உங்கள் இதயத்தின் துடிப்பையும் அளவிடுகிறது. கூடுதலாக மொழிபெயர்ப்பு பணியையும் செய்கிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீசு மொழிகளை மொழிபெயர்க்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக சீனமொழி, கொரியன், ஜப்பானிய மொழி ஆகியவற்றை மொழிபெயர்ப்பதாக கூறியுள்ளது. ஆப்பிள் பொருட்கள் சாதாரண விலையில் கிடைப்பதில்லை. எனவே, இதுபோன்ற வசதிகளைக் கொண்ட பொருளின் விலை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஆப்பிள்.காம் போய் தெரிந்துகொள்ளுங்கள்.  யுனிஹெர்ட்ஸ் செல்போன் ஆண்ட்ராய்ட் போன்தான். அத்தனை ஆப்களும் உண்டு.ஆனால் போன், டெபிட் கார்ட் அளவில் இருக்கும். 3 அங்குல திரைதான். எனவே,உங்களது பிரெயின் ராட் ஸ்க்ரோலிங் அதிகம் செய்யமுடியாது. அளவில் சிறியது என்பதால் எளிதாக எடுத்துச் செல்லலாம். சீன நிறுவனம் இந்தப் போனை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது. போனின் பின்புறம் நத்திங் போனில் அழைப்பு வந்தால் விளக்கு எரியுமே? அதே தொழில்நுட்பம் உள்ளது. சீரியல் பல்ப் கட்டியது மாதிரி அழகாக தெரியு...

மதவாத கலவரத்திற்காக, முஸ்லீம்களை தேசதுரோகிகளாக்க அகழ்ந்தெடுக்கப்படும் ஒளரங்கசீப்

ஒளரங்கசீப் ஆட்ரே ட்ரஷ்கெ கிழக்கு பதிப்பகம் தமிழில் ஜனனி ரமேஷ் அமெரிக்க நாட்டில் நியூஜெர்சியில், வரலாற்றுத் துறையில் பணியாற்றி வரும் ஆட்ரே ட்ரஷ்கெ, எழுதியுள்ள நூல். ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு வந்ததை, உடனே உரிமை வாங்கி மொழிபெயர்த்திருக்கிறார்கள். மதக்கலவரத்தை தூண்ட அந்தளவு ஆர்வமா என்று யோசிக்கலாம். இந்த நூல் ஆர்எஸ்எஸூக்கு எதிரான பல்வேறு வரலாற்று ஆய்வுத்தகவல்களை முன்வைக்கிறது. உண்மையில் நிறைய கட்டுக்கதைகளை, புனைசுருட்டுகளை பொய் எனக் கூறுகிறது. சிவாஜி என்பவர் பற்றி வரும் பகுதியைக் கூறலாம். மராட்டியத்தில் இந்துக்களுக்கான நாட்டை உருவாக்கியவர் என்று அவரைக் கூறுவார்கள். இந்த இந்துக்கள் யார் என்றால் ராஜபுத்திரர், மராட்டியர், பார்ப்பனர் ஆகியோர்தான். சூத்திரர்கள் மனிதர்கள் அல்லர், அவர்கள் விலங்குகள் வரிசையில் வருவதால் சேர்க்கப்பட மாட்டார்கள். சிவாஜி போன்ஸ்லேதான் மாவீரன் சிவாஜி என்று அழைக்கப்படுபவர். உண்மையில் ஒளரங்கசீப்போடு மாவீரத்தையெல்லாம் காட்டவில்லை. கெரில்லா முறையில் போர் செய்து முகலாய படைகளுக்கு சேதம் விளைவிக்கிறார். அதேசமயம், ஒளரங்கசீப் ர...

ஆராய்ச்சி இல்லாத ஆயுர்வேத முறையை நிதியளித்து ஊக்குவிக்கும் இந்திய அரசு!

படம்
  போலி அறிவியலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு! பார்க்க குங்குமம் வார இதழின் கட்டுரைத் தலைப்பு போல அமைந்தாலும், அதை எழுதியதில் உண்மை இருக்கிறது. வலதுசாரி பார்ப்பன மதவாத கட்சி ஆட்சிக்கு வந்த பதினொரு ஆண்டுகாலம் இந்திய வரலாற்றில் இருண்டகாலம் என்றே கூறவேண்டும். அந்தளவு பல்வேறு அம்சங்களில் விவகாரங்களில் நாம் கற்காலத்திற்கே சென்றுவிட்டோம். அரசியலமைப்பை சடங்குக்கு வணங்கி பிறகு, அதை தூக்கி எறிந்துவிட்டு மனுஸ்மிருதியை கையில் எடுத்துக்கொண்டனர். ஒரே நாடு ஒரே கலாசாரம் என்ற பார்ப்பன தீவிரவாதத்தின் இன்னொரு அழிவுத்திட்டம்தான் ஆயுஷ். தமன்னா பாட்டியா வருவாரே அந்த சோப் பிராண்டு அல்ல. இது ஒரு துறை. பாரம்பரிய மருத்துவத்துறை. புதிய ஆராய்ச்சியெல்லாம் ஏதும் கிடையாது. பழைய கேள்வி ஞானத்தை வைத்து அப்படியே ஓட்ட வேண்டியதுதான்.  இதற்கு அண்மையில் 9வது முறையாக நிதிநிலை அறிக்கையை உருவாக்கி வாசித்த நி.சீ, ஆயுஷ் துறைக்கான பட்ஜெட்டை 66 சதவீதம் உயர்த்தி இருக்கிறார். 4,408 கோடி ரூபாயாக ஒன்றிய அரசின் தொகை உள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து இப்படி ஆயுஷ் துறைக்கு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் என்ன பயன் என்று யாரும...

எழுத்தாளர்களின் கதையில் வரும் குழந்தைகளின் பாத்திரங்கள் - கதைகளில் பேசும் குழந்தைகள்

படம்
கதைகளில் பேசும் குழந்தைகள்  செந்தில் ஜெகன்நாதன் அகரம் ஃபவுண்டேஷன் விலை ரூ.150 ப.136 மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்ட எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் எழுதியுள்ள கட்டுரை நூல். இந்த நூல், யாதும் என்ற இதழில் வெளிவந்து பிறகு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. தொடராக வருவது, பிறகு அதை நூலாக தொகுப்பது என இரண்டுமே முக்கியமான பணிகள். தொடராக வரும்போது கூறிய தீபாவளி வாழ்த்துகள் கூட நூலில் நீக்கப்படாமல் இருக்கிறது. நூலின் அட்டைப்படமோ, நூலின் உள்பக்க கட்டமைப்போ, புகைப்படங்களோ பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. மிகவும் சுமாராக அலட்சியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரத்தை எடுத்து நூலை உருவாக்கியிருந்தால், நூல் நன்றாக வந்திருக்கும். பெரிய ஆறுதல், எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனின் எழுத்துகள் மட்டுமே. நூலுக்கு கொடுக்கும் காசை எழுத்துக்கு மட்டுமே நம்பி கொடுக்கலாம். அந்தளவு முக்கியமான எழுத்தாளர்கள் சிறுகதைகளில், குறுநாவல்களில் வரும் குழந்தை பாத்திரங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.  மொத்தம் 31 எழுத்தாளர்கள். இதில் நான்கு மேற்கத்திய எழுத்தாளர்கள் உண்டு. மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகள் அனைத்துமே சிற...

சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை!

படம்
 சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை! சாணக்கியர் என்றதும் அவர் கூறிய அரசியல் நெறிமுறைகள், குரூரமான செயல்பாடுகள் கண்முன்னே வந்துபோகும். ஆனால், அதை எழுதியது யாரோ, அதை ஏன் சாணக்கியர் பெயரில் பிரசாரம் செய்தார்களோ தெரியாது. உண்மையில் சாணக்கியர் என்ற மனிதர் வாழவே இல்லை என்று செய்திகள் தெளிவாக உள்ளன. இன்றுமே கூட இந்தியாவில் மௌரிய வம்சத்துக்கு வழிகாட்டியவர் என்று சாணக்கியரைக் கைகாட்டுவார்கள். சாணக்கிய தந்திரம் பற்றியும் நூல்களை ஆயிரக்கணக்கில் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் வெற்று பிரசாரமே ஒழிய வேறில்லை. ஏனெனில் சாணக்கியர் ஒற்றைக் குடுமியோடு பார்ப்பனராக இருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பார்ப்பனர்கள் அதிகார வெறிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எப்படிப்பட்ட புரட்டையும் பேசுவார்கள், எழுதவார்கள், பரப்புவார்கள். அதை இன்று இந்தியாவே பார்த்து வருகிறது.  பொதுவாக பார்ப்பனர்கள் அழிக்கப்பட்டவர்களில் மௌரிய அரசரான அசோகரும் உண்டு.ஆனால் ஆரிய பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள்தான் அரசை வழிகாட்டி நடத்தினோம் என்று கூறுகிறார்கள். கி.மு 300இல் மௌரிய அரசுக்...

பெண்களின் காதல் வழியாக மூவேந்தர்களின் வீரம் வெளிப்படும் படைப்பு -- முத்தொள்ளாயிரம்

 முத்தொள்ளாயிரம் - மூலமும் உரையும் நாராயண வேலுப்பிள்ளை 100க்கும் அதிகமான பாடல்கள் நன்றி - இரா மோகனவசந்தன் முத்தொள்ளாயிரம் நூலில் மூவேந்தர்கள் பற்றிய பாடல்கள் உள்ளன. அவையும் அக்காலத்திற்கேற்ப காதல், போர், ஆட்சி, படைத்திறன், அறம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இந்த பாடல்களை ஒருவர் வாசிக்கும்போது தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்களுக்கு வழங்கி வந்த  பெயர்கள் பற்றியும் அறியலாம். அதோடு, மன்னரை காதலித்த பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த எதையெல்லாம் உவமையாக கொள்கிறார்கள் என்பதும் கூட ஆச்சரியப்படுத்தும்.  பழந்தமிழ் வார்த்தைகள் வாசிக்கும்போதே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் ஒரு பாடலில் சேரனைப் புகழ்ந்து வருகிறது. அதில் பெண், தனிக்கதவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மன்னர் மீதுள்ள மகளின் காதலை அறிந்த தாய், ஊரார் தூற்றுவார்களே என்று அஞ்சி வீட்டின் வாயில் கதவை அடைத்துவிடுகிறார். அந்த கதவுதான் தனிக்கதவம் என பாடலில் சுட்டப்படுகிறது. இப்படி கதவை மூடிவிட்டால், வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்களா என்று தோழியிடம் கேட்கிறார்....