இடுகைகள்

அகதி வாழ்க்கையின் வலி, வேதனைகளைக் கூறும் கவிதை நூல்!

படம்
  மரண வீட்டின் முகவரி அ சி விஜிதரன் சிந்தன் புக்ஸ் 150 ரூபாய்  இது ஒரு கவிதை நூல். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அகதி முகாமில் வாழும் நிலை ஏற்பட்ட ஒருவர் தனது மனப்புழுக்கங்களை கவிதையாக எழுதியுள்ளார். இந்த நூலில், முகாமின் நிலை, அங்கு அகதிகள் நடத்தப்படும் நிலை, அங்குள்ள அறைகள் எப்படி கட்டப்பட்டுள்ளன, அதிகாரிகள் எப்படி பேசுவதற்கு எழுதுவதற்கு கூட தடை விதிக்கிறார்கள், பெயர்கள் இல்லாமல் எண்களை அடையாளமாக வைத்து மனிதர்களை அழைப்பது, இப்படியான இடம்பெயர்வு வாழ்க்கையில் பிற மனிதர்களுக்கு நடைபெறும் காதல், திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாமல் போவது என நிறைய விஷயங்களை கனமான வலி நிரம்பிய வார்த்தைகளை வைத்து எழுதியிருக்கிறார்.  எக்ஸ் - ட்விட்டரில் சிலர் தேநீர் கவிதைகளை எழுதுவார்களே அதுபோலத்தான் இந்த கொட்டடி கவிதைகள் என புரிந்தகொள்ளலாம். தங்குமிடம் தவிர்த்து, பேனா, பென்சில், பேப்பர் கவிதைகளில் அதிகம் இடம்பிடிக்கிறது.இந்த கவிதை நூல் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை எழுதியவரே உள்பக்க வடிவமைப்பை செய்திருக்கிறார். அட்டை வடிவமைப்பு லார்க் பாஸ்கரன். அட்டை சிறப்பாக உள...

தமிழ் திரையுலகை மிரள வைத்த தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர்!

படம்
Book review  tamil  சாண்டோ சின்னப்ப தேவர் தீனதயாளன் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் ப.176 இந்த நூலில் தீனதயாளன், சாண்டோ சின்னப்ப தேவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு சம்பவங்களை விவரித்துள்ளார். இது ஒருவரின் வாழ்க்கை வரலாறு போலத்தான். ஆனால், இது  கட்டுரை நூல் என்பதை மறக்கும் வகையில் தீனதயாளன் கட்டுக்கோப்பாக நாவல் போல எழுதியிருக்கிறார். நூலில் உள்ள பல்வேறு பக்கங்களிலும் தேவரின் வாழ்க்கை, முருக பக்தி இல்லாமல் அந்த பக்கமே முடியாது. அதேசமயம், தேவரின் முருக பக்தி, நூல் முழுக்க நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதேசமயம் அவர் மதிக்கும் கொள்கைகளில் இருந்து பிறழ்பவர்களை எப்படி எதிர்கொள்வார் என்பதற்கு ஒரு அத்தியாயமாவது கொடுத்திருக்கலாம்.  தீனதயாளன் முழுக்க தேவரின் ஆளுமையை புனிதப்படுத்தவில்லை. சில இடங்களில் கோடு காட்டியிருக்கிறார். குறிப்பாக அவரது தம்பி திருமுகத்திடம் வேலைக்காக கடுமையாக திட்டுவது, தாமதமாக வருபவர்களை வசை பாடுவது, உதவியாளர்களை அடித்து உதைப்பது எல்லாமே உண்டு. கோபத்தில் அப்படி செய்தாலும் கூட மறுபக்கத்தில் அவர் அவர்களுக்கு வீடு வாங்கிக்கொடுப்பது, கைநிறைய கணக...

என் மீது ஒட்டப்படும் லேபிள்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது - ஆப்கன் திரை இயக்குநர் சாஹர் பானு சதாத்

படம்
  ஆப்கானிஸ்தான், அங்கு முதலில் அமெரிக்கா,இந்தியா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்தனர். பிறகு, பல்வேறு திட்டங்களை செய்த பிறகு என்ன நினைத்தார்களோ, தாலிபன்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இருநாடுகளும் தங்கள் நாடு வந்து சேர்ந்துவிட்டனர். தாலிபன்கள் முட்டாள் மூர்க்கர்கள். மதச்சட்டப்படிஆட்சி நடத்தக்கூடியவர்கள்.  அமெரிக்க, இந்திய நாடுகளில் ஆதரவில் ஆப்கனில் பெண்களின் முன்னேற்றம் மேலேறி உயர்ந்து வந்தது. கல்வி கற்க, விரும்பிய உடையை உடுத்த, வெளியே வேலைக்கு செல்லக்கூடிய, பேசக்கூடிய அடிப்படை விஷயங்கள் நடைபெற்றன. இப்போது மீண்டும் அவர்கள் கற்காலத்திற்கே சென்றுவிட்டனர். அண்மையில், இந்தியா வந்த தாலிபன்கள், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்களை மட்டுமே கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதற்கு பெண்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்கள் கண்டனம் தெரிவித்தது குறைவுதான்.  இப்போது சில நாட்களுக்கு முன்னர் ஆப்கனின் மற்றொரு சட்டம் வந்திருக்கிறது. குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் அது. அதாவது, கணவர் மனைவியை அடிக்கலாம். ஆனால், எலும்பு முறியும் காயம் ஏற்படக்கூடாது....

தமிழ் இலக்கிய முன்னோடிகளை அறிமுகப்படுத்தும் நூல் - பழுப்பு நிற பக்கங்கள்(1) - சாரு நிவேதிதா

படம்
  பழுப்பு நிற பக்கங்கள் -1 சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் ஜீரோ பப்ளிஷிங் கட்டுரைகள் இந்த நூலில் மொத்தம் 18 முன்னோடி எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம், தினமணி கதிரில் தொடராக வந்திருக்கிறது. பிறகு, அதை எழுத்து பிரசுரம் நூலாக மாற்றியுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்கள். நூல் ஒவ்வொன்றும் 400 ரூபாய் வருகிறது. காசுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். காசில்லாதவர்கள், வாங்கியவர்களிடம் இரவல் வாங்கி வாசிக்கலாம். அறியாமைத் திமிர் உள்ளவர்கள் நூலை தவிர்க்கலாம்.  நூலைத் தொடங்கி வைப்பது சார்வாகன். இவர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஊனத்தை சரி செய்யும்அறுவை சிகிச்சை முறையைக் கற்றவர். அதற்காக பத்மஶ்ரீ வாங்கியவர். இயற்பெயர் ஶ்ரீனிவாசன். எழுதியுள்ள கதைகள் பார்த்தாலும் சிறப்பாகவே உள்ளன. இவர்தான், பாகம் ஒன்று நூலைத் தொடங்கி வைக்கிறார். பிறகு, அப்படியே திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் - தி.ஜ.ர, கு.அழகிரிசாமி, திரு.வி.க என்று நீண்டு செல்கிறது. தி.ஜ.ர பற்றி எழுதியுள்ளது ஆர்வமூட்டுவதாக உள்ளது. கட்டுரைகளுக்கு முக்கிய பங்களித்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ...

கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு -2030இல் 70 சதவீதம் ஒழிக்கப்பட வாய்ப்பு

படம்
  கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு  கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிற சூழலில் விரைவில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கிறது. நாடே மூடநம்பிக்கையில் எது நடந்தாலும் ஆட்சித்தலைவரை ஏதும் சொல்லக்கூடாது என்ற பக்தியில் காலை நக்கிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் உள்ளன. தி இந்துவும் அப்படியான பத்திரிகைதான். தமிழ்நாடு முதலமைச்சரின் செய்தி அருகே, எல் முருகன் என்ற பட்டியலின பொறுக்கித் தின்னும் அமைச்சர் ஒருவரின் செய்தி இடம்பெறுகிறது. இதை அனுமதிக்கிறவர்கள் மனநிலை எப்படியானது என புரிந்துகொள்ளலாம். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மனநிலைதான். இருந்தாலும் தி இந்துவில் ஆச்சரியப்படுத்தும் சில கட்டுரைகளை எழுதும் அதிசய பத்திரிகையாளர்களும் உண்டு. அப்படி ஒருவர் எழுதிய கட்டுரையின் அடிப்படைச் சாரம் மட்டும் இங்கே...  தமிழ்நாட்டில் கொத்தடிமை முறை இப்போதும் இருக்கிறது. இந்த முறை இப்போது கல்குவாரி, செங்கல் சூளை மட்டும் இல்லாமல் ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட், பல்லடுக்கு வணிக மால்கள், கட்டுமான இடங்கள், ஹோட்டல்கள், ரிசார்டுகள் என பரந்துள்ளது. எனவே, கொத்தடிமையாக உள்ளவர்களை கண்டுபிடித்து மீட்...

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டும் 87 வயது உளவியலாளர் எழுத்தாளர் ரீ குன் ஹூ!

படம்
  இப் யூ லிவ் டு 100 - யூ மைட் ஆஸ் வெல் பி ஹேப்பி உளவியலாளர் ரீ குன் ஹூ பெங்குவின்  கொரியாவில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு - சுபில் லீ பார்க் இந்த நூலை எழுதிய ஆசிரியர் பிறந்த ஆண்டு 1935. ஆமாம். 87 வயதில் இந்த நூலை தனது குடும்பத்தினர் உதவியுடன் எழுதியிருக்கிறார். அப்படி எழுதிய நூலும் அப்படியொரு சாதனையாக விற்கிறது. எப்படி சாத்தியம் ஆகிறது? சாத்தியம்தான். ஏனெனில் எழுத்தாளர் ரீ குன் ஹூ தனது வாழ்க்கையில் பார்க்காத மேடு பள்ளங்கள் கிடையாது. சந்திக்காத துயரங்கள் கிடையாது. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் நம்மைப் போன்றவர்களுக்கு அறிவுரை கூறக்கடாதா என்ன? நூலில் அவர் தான் சந்தித்த அனுபவங்களின் வழியாக தன்னை சுயபரிசோதனை செய்வதாக நாம் கருதலாம்.  ஆரோக்கியமான வாழ்க்கை என்பதை விட நிதானமான வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என்பதை ரீ வலியுறுத்துகிறார். இதற்கு அவர் பல்வேறு அறிஞர்களுடைய மேற்கோள்களை சுட்டிக் காட்டவில்லை. தன்னுடைய வாழ்க்கையை முன்வைத்துப் பேசுகிறார். அவ்வளவுதான். அவர் தன்னுடைய வாழ்க்கையில் கொரிய போர், வறுமை, பிரதமருக்கு எதிரான போராட்டம், அதனால் சிறைவாசம், சிறைவாசம் காரணமாக மருத்துவம...

திராவிடர்களைத் தாழ்த்தி ஆரியத்தை உயர்த்திப் பேசும் கம்ப ராமாயணத்தை எரித்தால் என்ன? - தீ பரவட்டும்!

படம்
  தீ பரவட்டும் சிஎன் அண்ணாதுரை கலைமன்றம், சென்னை விலை.1.00 முதல் பதிப்பு 1943 ஏப்ரல் இந்த நூலில் நால்வர் பேசிய சொற்பொழிவு உரைகள் உண்டு. சி.என். அண்ணாத்துரை, ஆர்பி சேதுப்பிள்ளை, நாவலர் எஸ் சோமசுந்தர பாரதியார், ஈழத்து அடிகள் ஆகியோர் ராமாயணம் பற்றி பேசியுள்ளனர். இதில் திராவிட கருத்துகளுக்கு ஆதரவாக அண்ணாத்துரையார், ஈழத்துஅடிகள் பேசியுள்ளனர். இவர்களுக்கு எதிராக ஆரியர்களுக்கு ஆதரவாக ஆர்பி சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதி ஆகியோர் பேசியுள்ளனர். அடிப்படையில் இவர்களது உரைகளை ஒருவர் கேட்டாலே, அது பிழையுள்ளதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வெறும் வாய்ப்பந்தல் போடுவதாக உள்ளது என்பதை அறிய முடியும்.  சோமசுந்தர பாரதி, இன்னும் ஒருபடி மேலே போய் ராவணன் ஆரிய மன்னன் என்றும், கம்ப ராமாயணத்தை ஒருவர் எரித்தால், எரிப்பவர்களை இந்துகள் எரித்து கொல்வார்கள் என்று ஓரீடத்தில் கூறுகிறார். அவருக்கு இந்து முன்னணி அல்லது ஆர்எஸ்எஸ் உதிரி தீவிரவாத அமைப்புகள் பற்றி தெரிந்திருக்குமா இல்லையா என்று புரியவில்லை. ஆனாலும் அக்கருத்தை அவர் உறுதியாக கூறுகிறார். அண்ணாத்துரை ஏன் எரிக்க வேண்டும் என்ற கருத்தை தெளிவாக முன்வைக்கும்போத...

பெண்களுக்கு எதிரான அநீதிகளை மிரட்டலுக்கு அஞ்சாமல் தட்டிக் கேட்கும் யோகிதா பாயனா!

படம்
  யோகிதா பாயனா, வட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி பேசி வருகிற குரல்களில் ஒருவர். பேச்சு மட்டுமல்ல. களத்திலும் செயல்பட்டு ஆதரவாக நிற்பவர். அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் இந்தியா போன்ற மதவாத நாட்டில் வல்லுறவுகள், பாலியல் வல்லுறவு தாக்குதல், சுரண்டல்களுக்கா பஞ்சம்.அதனால் அவருடைய ட்வீட்களைப் பார்த்தால், ஒரு குற்றம் அடுத்த குற்றம் என அப்படியே மாறி மாறி சென்று கொண்டே இருக்கிறது. பார்ப்பன தர்மத்தில் பெண்களுக்கு இடமில்லை என்பதால், அவர்களை அமைப்பு ரீதியாக சுரண்டுவதற்கு அரசு அனுமதிக்கிறது. எனவே, அவர்களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பெண்கள் தொடர்பான வல்லுறவு, தாக்குதல், மிரட்டல் விவகாரங்கள் ஊடகங்களில், அரசின் புள்ளிவிவரங்களில் தவிர்க்கப்படுகின்றன.  யோகிதா பாயனா - பீப்பிள் அகெய்ன்ஸ்ட் ரேப் இன் இந்தியா -பாரி எனும் அமைப்பை நடத்தி வருகிறார். பெண்களுக்கு தெருவில் நடக்கும் தாக்குதல்கள், கணவர் குடும்ப வன்முறைக்கு உட்படுத்துவது ஆகியவற்றையும் கூட வெளியே கூறுமாறு வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வரு...

சிறந்த கண்டுபிடிப்புகள் - டைம் வார இதழ் 2025

 சிறந்த கண்டுபிடிப்புகள் - டைம் வார இதழ் 2025 ப்ரெய்லி டேப்லெட்  அமெரிக்காவில் ப்ரெய்லி முறையில் படிக்க டேப்லெட் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவையான நூல்களை எளிதாக உருவாக்கிவிட முடிவதில்லை. இதற்கு காரணம், அனைத்தையும் ப்ரெய்லி முறையில் உருவாக்கும் செயல்முறை கடினமாக உள்ளதுதான். அதைத்தான் இப்போது மாற்றியுள்ளனர். இந்த டேப்லெட்டில் எளிதாக ஒருவர் வாசிக்க முடியும். கிரேக் ஸ்டில்சன் என்பவர் இதை தயாரித்து உதவியுள்ளார். லீகோ விளையாட்டை அறிவீர்களா, அந்த முறையில் இந்த கருவியை அமைத்துள்ளனர். இப்போதைக்கு இதை 1,100 பிளாக்குகளுடன் வகுப்பறையில் பயன்படுத்தும்படி அமைத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடலாம். அமெரிக்காவில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இருபது சதவீதம் பேர் இதனால் பயன்பெறமுடியும்.  மோதிர ரிமோட் ஊரில் சிலர் தனியார் பேருந்துகளில் போகும்போது தங்களுடை நவீன போனை ரிமோட்டாக பயன்படுத்தி பேருந்திலுள்ள சிடி டிவிடி பிளேயரை நிறுத்துவது, பாடலை மாற்றுவது ஆகிய குறும்புகளை செய்வதுண்டு. அதேதான். தாவல் படேல் என்ன செய்திருக்கிறார் எ...

டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025

 டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025 ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 இந்த ஏர்பாட், பல மடங்கு முன்னே சென்றுள்ளது. வெறும் காதில் இரைச்சலை நீக்குவது மட்டுமன்றி, உங்கள் இதயத்தின் துடிப்பையும் அளவிடுகிறது. கூடுதலாக மொழிபெயர்ப்பு பணியையும் செய்கிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீசு மொழிகளை மொழிபெயர்க்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக சீனமொழி, கொரியன், ஜப்பானிய மொழி ஆகியவற்றை மொழிபெயர்ப்பதாக கூறியுள்ளது. ஆப்பிள் பொருட்கள் சாதாரண விலையில் கிடைப்பதில்லை. எனவே, இதுபோன்ற வசதிகளைக் கொண்ட பொருளின் விலை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஆப்பிள்.காம் போய் தெரிந்துகொள்ளுங்கள்.  யுனிஹெர்ட்ஸ் செல்போன் ஆண்ட்ராய்ட் போன்தான். அத்தனை ஆப்களும் உண்டு.ஆனால் போன், டெபிட் கார்ட் அளவில் இருக்கும். 3 அங்குல திரைதான். எனவே,உங்களது பிரெயின் ராட் ஸ்க்ரோலிங் அதிகம் செய்யமுடியாது. அளவில் சிறியது என்பதால் எளிதாக எடுத்துச் செல்லலாம். சீன நிறுவனம் இந்தப் போனை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது. போனின் பின்புறம் நத்திங் போனில் அழைப்பு வந்தால் விளக்கு எரியுமே? அதே தொழில்நுட்பம் உள்ளது. சீரியல் பல்ப் கட்டியது மாதிரி அழகாக தெரியு...