உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா
உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா இந்தியாவிற்குள் நுழைய எலன் மஸ்க் முயன்று வருகிறார். அவரின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை குறைந்த விலைக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதையும் கெடுக்க, குஜராத்தி தொழிலதிபர்கள் தேசபக்தி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். நான் முதலில் நானே முதலில் என பேராசை கொள்பவர்களை அரசும் ஆதரிப்பதால், இந்தியா முன்னேற்றமடைவது கடினம். ஆக்கப்பூர்வ செயற்கைக்கோள் வணிகத்தைப் பார்ப்போம். இன்று புவிவட்டப்பாதையில் பத்தாயிரம் செயற்கைக்கோள்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வானில் செயற்கை நட்சத்திரங்கள் போல மாறிவருபவை செயற்கைக்கோள்கள் என்றால் நம்மில் பலரும் நம்பமாட்டார்கள். உலகம் முழுக்க நடைபெறும் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைப் பற்றிய தகவல்களை சிஹெச்ஜிசாட் கண்டுபிடித்து வருகிறது. இந்த நிறுவனம், மான்ட்ரியலில் இயங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு, செயற்கைக்கோள் நிறுவனம் முதல் செயற்கைகோளை விண்ணில் ஏவியது. இப்போதுவரை டஜன் கணக்கிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் இருந்து பூமியில் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைக் கண்டுபிடித்து தடுக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்களின் செயற்கைக்கோள்