இடுகைகள்

ஓட்டுநர்களை ஒருங்கிணைக்கும் பிளாக்பக் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40

படம்
    பிளாக்பக் நிறுவனர்கள், ராஜேஷ், ஹிருதயா ஆகியோருடன் நிறுவன இயக்குநர்.   ராஜேஷ் யாபாஜி,34 சாணக்யா ஹிருதயா,33   துணை நிறுவனர்கள், பிளாக்பக்.   ராஜேஷ், ஹிருதயா என இரண்டுபேரும் இணைந்து சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கான தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தளத்தில் ஒருவர் தனக்கு தேவையான வாகனங்களை பதிவு செய்துகொள்ள முடியும். வாகனம்   சென்று கொண்டருக்கும் இடம், அதன் நிலை   பற்றி எளிதாக அறியலாம். தொடக்கத்தில், ஐடிசியில் விநியோகப் பிரிவில் ராஜேஷ், ஹிருதயா என இருவரும் வேலை செய்தனர். அப்போது, பொருட்களை விநியோகம் செய்ய சரக்கு போக்குவரத்து வாகனங்களை ஏற்பாடு செய்வது கடினமாக இருந்திருக்கிறது. இதை நாம் எளிமையாக்கி டிஜிட்டல் செய்தால் வேலை எளிதாக இருக்குமே என இருவருமே எண்ணினர். அதன் அடிப்படையில் வாகன ஓட்டுநர்களிடம் பேசி, அவர்களை திட்டத்தில் இணைத்து பிளாக்பக்எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது.   இந்த நிறுவனத்தின் சேவை முழுக்க சிறுகுறு நிறுவனங்களுக்கானது. லாரி ஓட்டுநர்களில் இருபது சதவீதம் பேர்தான், ஸ்மார்ட்போனை வைத்திருந்தார்கள் என்பது நிலையை சிக்கலாக்கியது. தாங்கள் என்ன செய்கிறோம் என இவர்களிட

அதிக கட்டண உயர்வால் பயணசேவை நிறுவனத்தை தொடங்கியவர்! - ஈஸி மை ட்ரிப் - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நிஷாந்த் பிட்டி, ஈஸி மை ட்ரிப் நிஷாந்த் பிட்டி, 36 இயக்குநர், ஈஸிமை ட்ரிப் ஈஸி மை ட்ரிப் என்ற பெயரைக் கேட்டதும் முடிவுசெய்திருப்பீர்கள். ஆகாய விமானத்தில் பயணம் செய்வதற்கான முன்பதிவை செய்துகொடுக்கும் நிறுவனம். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொண்டு வணிகம் செய்கிறார்கள். ஈஸி மை ட்ரிப், விமான நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு இயங்கி வருகிறது. 3,716 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 106 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, 1,800 கிளைகளை நடத்தி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த நிஷாந்த் தொடங்கிய நிறுவனம்தான் ஈஸி மை ட்ரிப். அவரது அப்பா, நிலக்கரியை தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். டெல்லியில் இருந்து குவகாத்திக்கு நிலக்கரியை க் கொண்டு செல்லவேண்டும்.   தந்தை வேலை காரணமாக குவகாத்திக்கு சென்றுவிட நிஷாந்தும் அங்கே செல்ல வேண்டிய நிலை. போகும்போது விமான டிக்கெட் விலை சல்லிசாக இருந்தது. ஆனால், திரும்பி வரும்போது நிலைமை அப்படியில்லை. டிக்கெட் விலை அதிகரித்து இருந்தது. நிஷாந்தின் முகவர், கு

அழகு மற்றும் ஆடைகளை விற்கும் மசாபா குப்தாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  மசாபா லவ் சைல்ட் லிப்ஸ்டிக் வடிவமைப்பாளர் மசாபா குப்தா மசாபா குப்தா நிறுவனர் ஹவுஸ் ஆஃப் மசாபா   ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் மசாபா குப்தா. அவரின் நிறுவனம்தான் ஹவுஸ் ஆஃப் மசாபா. இந்த நிறுவனம், லவ் சைல்ட் என்ற பெயரில் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்கிறது. இந்த பொருட்கள் சல்பேட், பாரபீன் போன்ற வேதிப்பொருட்கள் கலப்பில்லாதவை. வீகன் முறையில் தயாரிக்கப்படுபவை. 75 நாடுகளுக்கு மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஹவுஸ் ஆஃப் மசாபா கடைகளில், லவ் சைல்ட் அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கடைகளில் வாங்க முடியாதவர்கள் இணையத்தில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். லவ் சைல்ட் பிராண்டில் அடுத்ததாக நிறைய பொருட்கள் வெளியாக உள்ளன. மும்பையில் தனது கடையைத் தொடங்கவுள்ள மசாபாவுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் கைகொடுத்துள்ளது. இந்த நிறுவனம், மசாபாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதனால், மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகளை ஆதித்ய பிர்லாவின் கடைகளிலும் பெற முடியும். 2022இல் நெட்பிளிக்ஸில் வெளியா

யுனிலீவரை பீதியடையச் செய்த மாமா எர்த் நிறுவனம் ! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நடிகை ஷில்பா, நிறுவனர்கள் வருண், கசல், மாமாஎர்த் கசல் ஆலாக் 34 வருண் ஆலாக் 38 மாமா எர்த்   குழந்தைகளுக்கான வேதிப்பொருட்கள் இல்லாத அல்லது அளவில் குறைந்த சோப்புகளை, ஷாம்பூகளை தயாரிப்பதும், சந்தைபடுத்தி வெற்றி பெறுவதும் கடினம். மாமாஎர்த் நிறுவனம், இந்த விஷயத்தில்தான் மகத்தான வெற்றி பெற்று யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது. கடந்த ஆண்டில்தான், டவ் பிராண்டில் குழந்தைகளுக்கான சோப்புகள், ஷாம்புகள் அறிமுகமாகி உள்ளன. இந்த பிராண்ட், பல்வேறு உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு போட்டிபோட்டு விளம்பரம் செய்து வருகிறது. குறிப்பாக, மாமாஎர்த். யுனலீவரின் முதலீட்டாளர் ஒருவர், நிறுவனத்திடம் மாமாஎர்த்தோடு போட்டியிட்டு வெல்ல திட்டங்கள் இருக்கிறதா என வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் மாமாஎர்த் நிறுவனம் தொடங்கி ஏழு ஆண்டுகள்தான் ஆகிறது. 2016ஆம் ஆண்டு ஆறு பொருட்களை விற்றது. இந்த நிறுவனத்தின் பொருட்கள், நாடெங்கும் 50 ஆயிரம் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மொத்த நிறுவன வருவாயில் 35 சதவீதம், மேற்சொன்ன கடைகளிலிருந்து கிடைக்கிறது. ‘’நாங்கள் போட்டியாளர்களைப் பா

கணிதம் கற்றுத்தரும் க்யூமேத் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40 தொழிலதிபர்கள்

படம்
  மனன் குர்மா மனன் குர்மா 37 க்யூமேத் கணக்கு என்றால் மாணவர்கள் பலருக்கும் தடுமாற்றமாகவே இருக்கிறது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் எப்படி தடுமாறுமோ அதேபோல்தான் கணக்கும் நகர, கிராம வேறுபாடின்றி பிரச்னையாக உள்ளது. இதை மனன், தான் கணக்கை கற்றுத்தரும்போதே உணர்ந்தார். அதற்காக தொடங்கியுள்ள நிறுவனம்தான் க்யூமேத். இந்த நிறுவனத்தில் ஒரு ஆசிரியர் நான்கு மாணவர்களுக்கு (ஒரு குழு) என பிரித்து வைத்து கணக்கை சொல்லித் தருகிறார். க்யூமேத் வலைத்தளத்தில் 2 லட்சம் பயனர்கள் உள்ளனர். இவர்களுக்கு கற்றத்தர 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். உலகம் முழுக்க 80 நாடுகளில் க்யூமேத் செயல்பட்டு வருகிறது. நான்கு மணி நேரத்தில் கணக்கை சிறப்பாக கற்க முடியும் என நிரூபித்ததோடு, வருமானத்தையும் ஈட்டி வருகிறது. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட க்யூமேத், விளையாட்டு மூலம் கணக்குகளை கற்பதை அடிப்படையாக கொண்டது. ஜினா கிருஷ்ணன் ஃபார்ச்சூன் 

அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

படம்
  எப்போதும் பசி அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம். ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.  சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஊட

இடைவேளை விட்டுத் தொடரும் உண்ணாவிரதம் - உடல் எடையை கணிசமாக குறைக்கிறது!

படம்
  உடல் எடையைக் குறைக்கும் உண்ணாவிரதம் ஒருவர் மூன்று வேளை உணவு உண்டாலும் மாதம் ஒருமுறை மூன்று வேளை உணவுகளில் ஒருவேளையை தியாகம் செய்து உண்ணாவிரதம் கடைபிடிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பயன்கள், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறுவது, அடுத்து உடலின் செரிமான மண்டலம் சீராவது. ஒருவர் முழுநாளும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அது சற்று கடுமையானது. அதற்கென பயிற்சி செய்து அதைக் கடைபிடிக்கலாம். இன்டர்மிட்டர் ஃபாஸ்ட் எனப்படும் உண்ணாவிரதம் பதினாறு மணிநேரம் தொடங்கி சில நாட்கள் வரை நீள்கிறது. இதில் உணவு என்பது முழுமையாக நீக்கப்படுவதில்லை. அதற்குப் பதில் திரவ ஆகாரங்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ணலாம். பிறகு உண்ணாவிரதத்தைத் தொடரலாம். மூன்று வேளை உணவுண்டு பழகியவர்களுக்கு இந்த முறை ஏற்றது.   அமெரிக்கர்கள் மத்தியில் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் தீவிரமாகி வருகிறது. வெறுமனே டிரெண்டிங் என்பதாக அல்ல. அதில் பயனும் கிடைக்கிறது. எந்த டயட்டைக் கடைபிடித்தாலும் இடைவேளை விட்டுத் தொடரும்  உண்ணாவிரதம் மூலம் அவர்களுக்கு எடை குறைகிறது என்று கூறுகிறார்கள்.  நீரிழிவு நோயாளிகளுக்கும் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் உதவுகிறது என்பது ஆச்சரியமான சமாச்ச