இடுகைகள்

விந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!

படம்
  செக்ஸ் பிரச்னை பெண்களுக்கும் உண்டு! எம்எக்ஸ் பிளேயரில் இந்தி வெப் சீரிஸ் ஒன்று வெளியானது. அதில் விந்து முந்தும் பிரச்னை கொண்ட இளைஞன் ஒருவன் இருப்பான். அவனுடன் உறவு கொண்ட பெண்தோழி,அவனை ஒடைஞ்ச குழாய் என கிண்டல் செய்வாள். இணையத்தில் அவளின் உடலுறவு பற்றிய கிண்டல் பதிவு பகிரப்பட்டு விந்து முந்துதல் பிரச்னை கொண்ட இளைஞனே, அதைப் பார்த்து பதறுவான். இந்த தொடரில் இளைஞனின் பிரச்னையை   காமெடியாக சொல்ல முயன்றாலும், இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்கலாம். உண்மையில் அது தீவிரமான பிரச்னை. உயிரியல் ரீதியாக ஆணும், பெண்ணும் இணைந்திருக்க உடலுறவு முக்கியமான காரணம். உடலுறவு கொண்ட பெண் எந்த மனநிலையில் ஒடைஞ்ச குழாய் என்று இளைஞனை பலரும் பார்க்கும் இணையத்தில் பதிவிட்டு திட்டியிருப்பாள்? உண்மையில், பரஸ்பர ஒத்துழைப்புடன் ஈடுபட்ட உடலுறவில் அவளுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. ‘’ஆணுக்கு உச்சம் எட்டும் நேரம் 5.5 நிமிடங்கள் என்றால் பெண்ணுக்கு 17 நிமிடங்கள் தேவையாக உள்ளது’’ என யூட்யூப்பில் ஆபாசப்பட நடிகர்   ஜானி சின்ஸ் கூறியிருக்கிறார். வெப் சீரிஸில் கூட ஆணை விந்து முந்துதலுக்கு கிண்டல் செய்பவர்கள்,அந்த பெண் இணையத்த

பெண்கள் மீதான அத்துமீறலுக்கு உதவுகிறதா ஹோலி பண்டிகை?

படம்
            ஹோலி கொண்டாட்டம் வேண்டாம் ! - அலறும் பெண்கள் ஹோலி கொண்டாடுவது சந்தோஷமான அனுபவம்தான் . ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் நடைபெறும் வண்ணப்பொடி திருவிழா , தீராத ஏக்கங்களை தீர்த்துக்கொள்ளும் விழாவாக மாறியுள்ளது . இதில் இப்போது கலந்துகொள்ளும் பெண்கள் விலகத் தொடங்கியுள்ளனர் . ஏன் அதில் என்ன பிரச்னை என்கிறீர்களா ? விந்தணுக்களை நிரம்பிய பலூன்களை பெண்கள் மீது வீசுவது , வசதியாக கிடைத்த வாய்ப்பு சிறு பெண்களை அந்தரங்க இடங்களில் தடவுவது , தொடுவது என எல்லை மீறும் அனுபவங்கள் நடந்து வருகின்றன . பொதுவாக இதனைப பற்றி ட்விட்டரில் பதிவு செய்பவர்களை இந்து எதிரிகள் என தேச பக்தர்கள் முத்திரை குத்தினாலும் இந்த சம்பவங்களை பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள் . இதில் பாதிக்கப்படும் பெண்களின் தவறு என்ன இருக்கிறது ? அவர்கள் எதற்கு வெட்கப்படவேண்டும் ? டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் ஹோலி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ஊருக்கு செல்லத் தொடங்கிவிடுவார்கள் . எதற்காக என்கிறீர்களா ? ஹோலி விழா அன்று பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பதால்தான் .

விந்தணுக்களைப் பெருக்கும் மரிஜூவானா!

படம்
truthout மரிஜூவானா குழந்தை பேறுக்கு உதவுமா? ஆம் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். இன்று உலகமெங்கும் சோதனைக்குழாய் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. காரணம், ஆண், பெண் என தம்பதிகள் இருவருக்கும் ஏற்படும் உடலியல் பிரச்னைகள்தான் காரணம். பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி எனில் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சி பெறாமை, விந்து முந்துதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இது உடலுறவில் திருப்தி என்பதைக் கடந்து குழந்தைப் பேற்றிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள டி.ஹெச். சான்ஸ் மையத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. ஆராய்ச்சி நடைபெற்றபோது, அதில் ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா எடுத்துக்கொண்டனர். அதோடு அதனை புகைக்காதவர்களைக் கணக்கிலெடுத்தால் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்த து. உடனே எங்கு கிடைக்கும் மரிஜூவானா என கூகுளிடம் கேட்காதீர்கள். அப்படி புகைப்பது தமிழகத்தில் சட்டவிரோதம். இந்த ஆய்வு நடக்கும்போது, ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா புகைத்தனர். இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. தற்போது உலகின் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட