இடுகைகள்

அகதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாய்நாடு திரும்பி அதனோடு பொருந்திக்கொள்ள முடியாமல் தவிப்பவர்களின் வாழ்க்கை!

படம்
    மாயமீட்சி மிலன் குந்தேரா காலச்சுவடு செக் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பிழைத்தவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பி அங்கு வாழமுடியாமல் சூழலுக்கு பொருந்தமுடியாமல் தவிக்கிறார்கள். இதுபற்றிய அனுபவங்களை விவரிக்கிறது மாய மீட்சி நாவல். இரினா, செக் நாட்டைச் சேர்ந்தவள். அவளுக்கு மார்ட்டின் என்பவருடன் அம்மா ஏற்பாட்டின்படி திருமணமாகிறது. திருமணமோ, மணமகனோ இரினாவின் தேர்வல்ல. முழுக்க அம்மாவின் தேர்வு. பிறகு உள்நாட்டில் பொதுவுடமை கட்சி ஆட்சிக்கு வருகிறது. இதனால் இரினாவின் கணவர் மீது ரகசிய போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அங்கு நிலைமை ஒன்றுதான். ஒன்று, பொதுவுடமை கட்சியில் உறுப்பினராக சொத்துகளை அரசின் வசம் ஒப்படைத்துவிட்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வது. அல்லது கட்சியை எதிர்த்து பேசி அரசை விமர்சித்து சிறைப்படுவது. மார்ட்டின் மூன்றாவதாக நாட்டை   விட்டு வெளியேற முயல்கிறார். அவருடன் இரினாவும் செல்கிறாள்.   பிரான்சில் சென்று வாழும்போது, இரினா அந்த நாட்டு வாழ்க்கைக்கு பழகுகிறாள். பிரெஞ்சு சரளமாக பேச பயில்கிறாள். ஆங்கிலம் அவளுக்கு கடினமாகவே இருக்கிறது. இதற்கிடையில் அவளது கணவன் மார்ட்டின

ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே கனவு - டொம்னிக் லோபாலு

படம்
  டொம்னிக் லோபாலு டொம்னிக் லோபாலு தடகள வீ ரர் தெற்கு சூடானில் வாழ்ந்த டொம்னிக், அங்கு நடந்த போரால் வடக்கு கென்யாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்தார். பிறகு அங்கிருந்து தப்பியவர், நைரோபிக்கு தெருவுக்கு வந்தார். அகதிகளின் விளையாட்டுக்குழுவை   அடையாளம் கண்டார். 2017ஆம் ஆண்டு டொம்னிக், ஒலிம்பியன் என்ற அகதி விளையாட்டுக்குழுவில் சேர்ந்தார். பிறகு, அந்த குழுவினர் ஜெனீவாவிற்கு சென்றபோது, அங்கே இருந்து விலகித் தப்பியவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியுமா என முயன்றார். 24 வயதாகும் டொம்னிக் தனது நாட்டுக்காக விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க முயல்கிறார். அவரிடம் பேசினோம். ஏமாற்றம் அடையும்போதும எப்படி நேர்மறையான எண்ணங்களை மனநிலையை தக்க வைத்துக்கொள்கிறீர்கள்? பின்னடைவுகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதுமட்டுமே முடிவு கிடையாது. நான் எனது கனவுகளைப் பின்தொடர்ந்து வருகிறேன். விளையாட்டு வீரராக உங்கள் கனவு என்ன? ஒலிம்பிக் அல்லது உலக போட்டிகள் ஏதாவது ஒன்றில் கலந்துகொண்டு பதக்கம் வெல்வதுதான். விரைவில் ஏதாவது போட்டிகளில் பங்கேற்பேன் என நினைக்கிறேன். பதக்கம் வெல்வதை எனது கன

அகதிகளை சிறையில் அடைக்கும் இங்கிலாந்து அரசு!

படம்
  ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இங்கிலாந்து அரசு, தனது நாட்டுக்கு வந்து குடியேற விரும்பும் மக்களை போர்ட்லேண்டில் உள்ள பிபிஸ்டாக்ஹோம் எனும் மிதக்கும் சிறையில்(கப்பலில்) அடைத்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாடுகளில் இருந்து உயிர்பிழைக்க சிறு படகுகளில் தப்பித்து வருபவர்களை இப்படி கடல் நடுவில் கட்டுமானத்தை உருவாக்கி தங்கச் செய்யலாமா, இது அவர்களது உடல், மனநிலையை பாதிக்கும் என மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் அகதிகளை வெறுக்கும் வலதுசாரித்துவத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருகிறது. மகத்தான இந்திய வம்சாவளி பெருமை கொண்ட பிரதமர் ரிஷி சுனக், அகதிகள்   இங்கிலாந்து நாட்டிற்கு வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான், இப்படி வரும் மக்களை குடும்பமாக 500 படுக்கைகள் கொண்ட மிதக்கும் சிறையில் அடைத்து வைப்பது. அடுத்து, அகதிகளுக்கு வேலை கொடுக்கும், தங்க இடம் கொடுக்கும் உள்நாட்டு மக்கள் மீது அதிகளவு அபராதம் விதிப்பது ஆகிய அரிய செயல்களை முன்னெடுத்து தனது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.   கடந்த ஆண்டு அகதிகளை ஹோட்டலில் தங்க வைத்த வகையில் அரசுக்கு, 2.4 பில்லி

அமெரிக்க, ஐரிஷ் மக்களுக்கு இடையிலான அதிகாரப்போர்! - கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் - மார்ட்டின் ஸ்கார்சி

படம்
  கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் மார்ட்டின் ஸ்கார்ஸி 2002 அமெரிக்கத் திரைப்படம். கருப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் நடைபெறுகிறது. அங்கு, வாழும் அமெரிக்கர்களுக்கும் புதிதாக குடியேறும் ஐரிஷ் மக்களுக்குமான யார் நிலம் இது என்ற சண்டைதான் படம்.  நியூயார்க் நகரில் ஃபைவ் பாய்ண்ட்ஸ் குடிசைப்பகுதியில் வாழும் பில் என்பவர்தான் ஐரிஷ் மக்களை எதிர்க்கும் குழுவுக்கான தலைவர். இவருக்கு தொழிலே பன்றிக்கறி வெட்டுவதுதான். அப்படியே பன்றியை குத்தி இறுதியில் மனிதர்களை குத்திப்போடும் ரவுடி ஆகிறார். இவருக்கென தனி குழுவே உருவாகிறது.  நகரில் நடக்கும் அனைத்து தண்டால், வழிப்பறி, கொள்ளை என அனைத்துக்குமே கமிஷன், பர்சென்டேஜ் வந்தே ஆகவேண்டும். அப்படி வராதபோது கோடாரி சம்பந்தப்பட்ட ஆளின் முதுகில் பதிந்திருக்கும் அல்லது குறுவாள் வயிற்றில் குத்தியிருக்கும். இந்த நிலையில் சில பல ஆண்டுகளுக்கு முன்னர், ஐரிஷ் மக்களுக்காக ஒரு தலைவர் - பிரிஸ்ட் வாலன் போராடி சாகிறார். அவரை பில் தான் கொல்கிறான். அதற்குப் பிறகே அந்த பகுதியில் முழுக்க பில்லுக்கு அடிபணிகிறார்கள். ஐரிஷ் ஆட்கள் வேறுவழியின்றி பில்லை ஏற்க

அமெரிக்காவிற்கு சாகச பயணமாக இடம்பெயர்ந்த வங்கதேச மனிதரின் கதை!

படம்
  விவேக் பால்ட் ஆவணத் திரைப்பட இயக்குநர் இன் சர்ச் ஆஃப் பெங்காலி ஹர்லேம் என்ற படத்தை அண்மையில் உருவாக்கியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எப்படி அமெரிக்காவிற்கு வந்து பிழைக்கிறார் என்பதை சொல்லும் படம். படத்தின் உதவி இயக்குநரான அலாவுதீன் உல்லா என்பவரின் தந்தை பற்றிய கதை இது.  அகதி ஒருவரைப் பற்றிய கதையை எப்படி எடுத்தீர்கள்? 1999ஆம் ஆண்டு அலாவுதீனின் தனிக்குரல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். நிகழ்ச்சிக்குப் பிறகு என்னை சந்தித்த அலாவுதீன், தனது தந்தை பற்றிய கதையை சொல்லி அதை படமாக்க கேட்டார். அந்த கதை இதுவரை நான் அறிந்த விஷயங்களை மாற்றிப்போட்டது. 1965ஆம் ஆண்டு வரையில் கூட அமெரிக்காவில் வெளிநாட்டினர் வந்து குடியேற முடியாத நிலையை சட்டம் உருவாக்கியிருந்தது. ஆன்டி ஆசியன் இமிகிரேஷன் என்பதுதான் அதன் பெயர். ஆனால் 1920ஆம் ஆண்டில் அலாவுதீனின் தந்தை அமெரிக்காவிற்கு வந்து புவர்டோ ரிகோ பகுதியைச் சேர்ந்த பெண்ணை மணந்து வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமான கதைதான். இப்படி இடம்பெயர்ந்த மனிதர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் இதுவரையில் இல்லை.  இவர் இப்படி அமெரிக்கா சென்றது விதிவிலக்கான செயல் என நினைக்கிறீர்களா? கல்கத்

ஜெர்மனியின் அம்மா! - ஏஞ்சலா மேர்கல்

படம்
  ஏஞ்சலா மேர்கல் ஏஞ்சலா மேர்கல் முன்னாள் ஜெர்மனி அதிபர் தமிழ்நாட்டில் அம்மா எப்படியோ ஜெர்மனிக்கு ஏஞ்சலாதான் அம்மா. அந்தளவு செலவாக்கு பெற்றவர். ஐரோப்பிய யூனியன் என்ற அடையாளத்திற்கு ஜெர்மனியின் ஏஞ்சலாவும், பிரான்சின் மேக்ரானும்தான் தூதுவர்களாக இருந்தார்கள்.  1954ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று ஏஞ்சலா மேற்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் என்ற இடத்தில் பிறந்தார். 2005ஆம் ஆண்டு ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர்.  இவரது பெற்றோர் பெயர் ஹார்ஸ்ட், ஹெர்லிண்ட் காஸ்னர். கணிதம், ரஷ்யமொழி ஆகியவற்றில் தேர்ந்தவர். கார்ல்மார்க்ஸ் பல்கலையில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றார். 1986ஆம் ஆண்டு பிசிக்கல் கெமிஸ்ட்ரி பாடத்தில் முனைவர் பட்டம் வென்றார். 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் டெமோக்ரடிக் அவேக்கனிங் என்ற கட்சியில் சேர்ந்தார். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று, பண்டேஸ்டாக் எனும் நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார்.  பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான துறையின் அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு ஏஞ்சலாவுக்கு சூழல் அணு பாதுகாப்பு துறையில் பதவ

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

காலனித்துவம், அகதிகளின் பிரச்னை பற்றிப் பேசிய எழுத்தாளர்! - இலக்கிய நோபல் 2021

படம்
  தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா என்ற எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியுள்ளனர்.  எந்த சமரசமும் செய்யாமல் அகதிகளின் பிரச்னைகளையும் காலனித்துவ பாதிப்புகளையும் அப்துல்ரசாக் பதிவு செய்துள்ளார் என நோபல் கமிட்டி கூறியுள்ளது.  குர்னா, தனது இருபது வயதிலிருந்து எழுத தொடங்கியுள்ளார். இதுவரை பத்து நாவல்களை பதிப்பித்துள்ளார். நிறைய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் பிரிட்டனுக்கு அகதியாக வந்து குடியேறியவர்.  1987இல் மெமரி ஆப் டிபார்ச்சர் என்ற நூலை முதலில் வெளியிட்டார். பிறகு 1990இல் பில்கிரிம்ஸ் வே என்ற நூலை வெளியிட்டார்.  அகதிகளின் பிரச்னைகள், இனவெறி, அடையாளம் சார்ந்த பிரச்னைகளை நூலில் பேசியுள்ளார் குர்னா.  1994ஆம் ஆண்டு பாரடைஸ் என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் உலகப்போரின்போது ஆப்பிரிக்கவில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிறது. இந்த நாவலை புக்கர் பரிசு தேர்வுப்பட்டியலில் வைத்திருந்தனர். இறுதியில் ஸ்காட்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் கெய்மன் புக்கர் பரிசை வென்றார்.  கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நான் எழுப்பிய கேள்விகள் புதிதானவை கிடையாது. மன்னர் ஆட்சி, மக்கள் இடம்பெய

இந்தியாவின் எல்லைகளைப் பிரித்த ராட்கிளிப்! - இந்தியா 75

படம்
  1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி. நள்ளிரவு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. விதியுடனான சந்திப்பும் கூட நடந்தது. ஆனால் அதில் முக்கியமான பிரச்னை ஒன்று இருந்தது. இந்தியா எங்கே முடிகிறது, பாகிஸ்தான் எங்கே தொடங்குகிறது என்ற எல்லைப் பிரச்னைதான்.  அப்போதைய ஆட்சியாளரான மவுண்ட் பேட்டனுக்கு இருந்த பிரச்னை பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகளும் எல்லைக்காக மீண்டும் குற்றம்சாட்டி சண்டை போடக்கூடாது என்பதுதான். அவர் இதற்காக எல்லைகளை பிரிப்பதற்கான யோசனையை உருவாக்கினார்.  இந்திய அரசுக்கு, அமைதியான முறையில் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதற்கான காலத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்கெனவே இழந்துவிட்டது.  1942ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் கமிஷனும் தோல்வியுற்றது. 1946ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியும் இரு நாடுகளை பிரிப்பது அவசியம் என்று கூறிவிட்டது. இதில் முக்கியமாக எழுந்த பிரச்னை, துணைக்கண்டத்தை எப்படி பிரிப்பது என்பதே.  எல்லைகளை பிரிக்க அழைக்கப்பட்டவர் ஒரு வழக்குரைஞர். இவர் பெயர் சிரில் ராட் கிளிப். 48 வயதானவர் அதிக நாடுகள் பயணித்தது கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எ

அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை!

படம்
  அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை! உலகமெங்கும் நடந்துவரும் உள்நாட்டுப்போர், மத அடிப்படைவாதம் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வாழ வழியின்றி பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2010-15 காலகட்டத்தில் தீவிரமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியான Proceedings of the National Academy of Sciences ஆய்விதழில் அகதிகளின் எண்ணிக்கையை கணிப்பது குறித்து துல்லியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.  அகதிகளின் எண்ணிக்கையை பெரும்பாலான நாடுகள் கணிப்பது  தோராயமான அளவீடுகள் மூலமாகத்தான். வாஷிங்டன் பல்கலைக்கழக(UW) ஆராய்ச்சியாளர்கள் சூடோ பேய்ஸ்(Pseudo bayes) முறை மூலம் கணிக்கின்றனர். இதன்படி தொண்ணூறுகளிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில்  1.3 சதவிகிதம் என அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் அகதிமக்களில் 45 சதவிகிதம் பேர் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளதும் முக்கியமான ஆய்வறிக்கைத் தகவல்.  "இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக ஆய்ந்தறிவது சாதாரணமான காரியம் அல்ல. அரசு இம்முயற்சியில் இறங்காதபோது அகதிகளுக்கான வசதிகளை முழுமையாக வழங்கமுடியாது" என்கிறார் புள்ள

சிறந்த கதை நூல்கள் 2020! டைம் இதழில் பரிந்துரைக்கப்பட்ட நாவல், சிறுகதை நூல்களின் பட்டியல்!

படம்
                சிறந்த கதை நூல்கள் ஐ ஹோல்ட் எ வோல்ஃப் பை தி இயர்ஸ் லாரா வான் டென் பெர்க் அனைத்தும் பெண்களை மையமாக கொண்ட சிறுகதைகள் . நிஜ வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்படும் பெண்களின் கதைகளை நகைச்சுவையும் , வலியும் கலந்து படைப்புகளாக்கியுள்ளார் . பர்னிங் மேகா மஜூம்தார் ஒரு முஸ்லீம் பெண் தவறுதலாக தீவிரவாதி என குற்றம் சாட்டப்படுகிறாள் . அவளுக்கு எதிராக அனைத்து சாட்சிகளும் உருவாக்கப்படுகிற நிலையில் எப்படி அவளின் வாழ்க்கை பயணிக்கிறது என்பதை இந்தியாவின் அரசியல் நிலையை அப்படியே கண்ணாடி போல காட்டும் படைப்பு இது . வேர் த வைல்ட் லேடீஸ் ஆர் அயோகா மட்சுதா ஜப்பானிய பேய்கதைகளை பெண்ணிய பார்வையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் . இங்கு பேசப்படும் சூழல்கள் அனைத்தும் தினசரி வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திப்பதுதான் . பிரெஸ்ட் அண்ட் எக்ஸ் மீகோ காவகாமி   ஜப்பானிய நாட்டில் வாழும் அக்கா , தங்கை , அவர்களுடைய உறவுப்பெண் ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பு . ஹோம்லேண்ட் எலிஜீஸ் அயத் அக்தர் அக்தர் , தனது பாகிஸ்தானிய பரம்பரை வழி அவரது பெயர

கொரோனா பீதியால் விரட்டப்படும் மக்கள்! - இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலம்

படம்
toi வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற வட இந்திய மக்கள் இப்போது தம் மாநிலங்களுக்கு வேகமாக திரும்பி வருகின்றனர். காரணம், கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு இடங்களிலும் வேலை இல்லை. அதற்காக பசியோடு கிடக்க முடியுமா? அரசு மக்களுக்கு பயண ஏற்பாடுகள் செய்கிறதோ இல்லையோ அவர்கள் நடக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது பல்வேறு சோதனைகள் செய்யாமல் அவர்களை கிராம மக்கள் உள்ளே அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்து அவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மக்கள் பலரும் ஊர் நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களை ஊருக்குள் விடாமல் கிராம மக்கள் தடுத்து வைத்துள்ளனர். ராஜஸ்தானின் தகவல்லி கிராமத்தைச் சேர்ந்த இடம்பெய்ரந்து சென்ற மக்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையாக சோதனைகள் நடைபெறாத நிலையில் மூன்று நாட்களுக்கு மேலாக கிராமத்திற்கு வெளியில் காத்திருக்கின்றனர். ”கேரளம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த மக்களை சோதித்த பிறகே கிராமத்திற்கு அனுமதிக்க அரசு உத்தரவு. அரசின் உத்தரவுக்கு முன்னர் அங்கு சென்றவர்களையும் அங்கு

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துகிறதா கொரில்லா?

படம்
கொரில்லா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இலங்கையில் நடப்பது என்ன? அங்கு அமைதிப்படை தமிழ் மக்களுக்கு வழங்கியது என்ன? இதில் அரசியலின் பங்கு பற்றி எண்ணற்ற கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு இதில் பதில் கிடைக்கிறது. நூல் யாகோப்பு அந்தோணி தாசன் பிரான்ஸ் அரசுக்கு அகதி விண்ணப்பத்தை எழுதி அளிப்பது போல தொடங்குகிறது. அதிலே பகடி தொடங்கிவிடுகிறது. அதில் எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு புலிகள் இயக்கம் எப்படி சாவுமணி அடிக்கிறது என்று பல்வேறு சம்பவங்கள் வழியாக கூறும் சம்பவங்கள் பீதியூட்டுகிறது. ரொக்கிராஜ் என்பவரின் முழு வாழ்க்கைதான் கதை. அவர் எப்படி குஞ்சன் வயலிலிருந்து இயக்கத்திற்கு செல்கிறார், அங்கு பயிற்சி எடுப்பது, பின் ஊருக்கு காவலாக வருவது, இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறை ஆகியவற்றை இந்த நாவல் அப்பட்டமாக பேசுகிறது. இதனால்தான் நூலை விமர்சிக்கையில் சாருநிவேதிதா விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நூல் என்று கூறியிருக்கிறார். அதை அவர் படித்துவிட்டு சொல்லியிருக்கும் தன்மைக்கு மதிப்புக்கொடுத்து அதனை பிரசுரித்திருக்கிறார்கள். இந்த த

அகதிகளை க்ரீசில் அடித்து உதைக்கின்றனர்.! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

படம்
நேர்காணல் பில் ஃபிரெலிக், அகதிகள் மறுவாழ்வு இயக்கத்தின் தலைவர் அண்மையில் க்ரீஸ் தனது நாட்டிற்குள் அகதிகள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே நேரத்தில் துருக்கி அகதிகளை அனுமதிக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. க்ரீசில் உள்ளே வரும் அகதிகளை அடித்து நொறுக்கி வெளியே வீசி எறிய ஆட்கள் தயாராக ஆயுதங்கள் உள்ளனர். அங்குள்ள நிலைமை பற்றி பில் நம்மிடம் பேசினார். நீங்கள் முன்னர் வந்ததற்கும் இப்போதைக்கும் லெஸ்போஸ் தீவில் என்ன மாதிரியான நிலைமை உள்ளது? நான் இத்தீவிற்கு 2016ஆம் ஆண்டு வந்தேன். அப்போது காணப்பட்ட நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. அது சட்டதிட்டங்களே இல்லாத நிலமாக இன்று மாறியுள்ளதைத்தான் சொல்லவேண்டும். முதலில் அங்குள்ள மொரியா கேம்பின் அளவு 3 ஆயிரம் மக்களைத்தான் தங்க வைக்க முடியும். ஆனால் இன்று அங்கு 20 ஆயிரம் பேரைத் தங்க வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை மெல்ல அதிகரித்து வருகின்றனர். இது அநீதி அல்லவா? ஐரோப்பிய யூனியன் கண்காணிக்கும் பகுதியில் இந்த நிலைமை. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீவுக்கு சுற்றுலா வருவது வாடிக்கை. அத்

பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா? - என்ஆர்சியில் மாட்டும் குழந்தைகள்!

படம்
reddit என்ஆர்சி திட்டத்தில் உங்களை இந்தியர் என நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் தேவை என இந்திய அரசு கூறியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பிறப்புச்சான்றிதழை வாங்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் இன்னொரு பிரச்னை உள்ளது. அதாவது படிக்கும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கும். அதனை காட்டித்தானே பள்ளியில் வயதை சொல்லி சேர்ப்பார்கள். ஆனால் பழங்குடி, பட்டியலின மக்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்கே செல்வதில்லை. அவர்களிடம் எப்படி மேற்சொன்ன அரசு ஆவணங்கள் இருக்கும். 2005க்குப் பிறகு பிறந்தவர்கள் பெரும்பாலும் பிறப்பு சான்றிதழை வைத்திருப்பார்கள். காரணம், அந்தளவு அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய காலத்தவர்கள் பிறப்பு சான்றிதழை பார்த்திருப்பது கடினம். அது முக்கியமான ஆவணமாக முதல் வகுப்பு சேரும்போது இருந்திருக்கும். அதற்குப்பிறகு பள்ளியில் கொடுக்கும் ஆவணங்களை பிற வகுப்புகளுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இன்று 63 வயதாகும் பெற்றோருக்கும் பிறப்பு சான்றிதழ்கள் தேவை, அவர்களின் பெற்றோர் வயதாகி இருந்தாலும் அவர்களுக்கும் பிறப்ப

அமெரிக்கா உலகப் பிரச்னைகளில் தலையிடவேண்டும்!

படம்
அகதிகளை கௌரவமாக நடத்துவதில் கவனம் தேவை அயர்லாந்து அமெரிக்கரான சமந்தா பவர் எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர். இவர், ஐ.நாவில் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றியவர். இவர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தவர். அவரின் பயணம், பணிகள் பற்றிப் பேசினோம் உங்களது சிறுவயது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. உங்களது இன்றைய வாழ்க்கையில் அந்த அனுபவங்கள் செல்வாக்கு செலுத்துகிறதா? நாங்கள் அமெரிக்காவுக்கு வந்தபோது எனக்கு 9 வயது. எனது தம்பிக்கு வயது 5. என் அப்பா, தீவிரமான குடிநோய்க்கு அடிமையாகி இருந்தார். சூழல் எப்படியிருக்கும்? நான் அச்சூழலை மாற்ற நிறைய போராடினேன். குரல் இல்லாதவர்களுக்கு போராடும் எண்ணம் அன்றிலிருந்தே இருக்கிறது. நீங்கள் அமெரிக்க ராணுவத்தின் ஊடுருவல் முயற்சிகளை தீவிரமாக விமர்சித்திருக்கிறீர்கள். மனிதர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அதனைக் குறித்திருக்கிறீர்கள்.  நான் என் நூலில் எழுதியது நீங்கள் கேட்டதற்கு மாறானது. அமெரிக்கா உலகப்பிரச்னைகளில் தலையிடாமல் தள்ளியிருக்கக் கூடாது என்பதே என் எண்ணம். பாரிஸ் ஒப்பந்தம், அணு ஆயுத ஒப்பந்தம், எபோலா நோய்

அகதிகளுக்கு உதவிய பிரேசில் நாடு!

படம்
வெனிசுலா நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் அங்கு வாழ முடியாமல் வெளியேறும் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக கருணை அடிப்படையில் பல்வேறு நாடுகள் அகதிகளை தங்க வைத்து வருகின்றன. பிரேசில் நாடு, ஒரே நாளில் 21 ஆயிரம் வெனிசுலா அகதி மக்களை தன் நாட்டில் தங்க வைத்து சாதனை  செய்துள்ளது. இதற்கு முன்பு 263 பேர்களை மட்டுமே தன் நாட்டில் வாழ அனுமதித்திருந்தது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் பல்வேறு அறிக்கைகள் அடிப்படையில் பிரேசில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெனிசுலாவில் போராட்டக்கார ர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் மீது நிக்கோலஸ் மதுரோ அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு மக்கள் சாப்பிடவும் வழியின்றி தவித்து வருகின்றனர். காரணம், பணவீக்கம். நோய்களுக்கு சிகிச்சை தரும் அமைப்புகளும் செயலிழந்து விட்டதால், மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அகதிகள் மறுவாழ்வு நடவடிக்கையில் மைல்கல் என ஐ.நா அமைப்பு பிரேசில் நாட்டைப் பாராட்டியுள்ளது. இதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் நிறைய

உளவியல் ரீதியாக அகதிகளை மேற்கு நாடுகள் வதைத்து வருகின்றன- அகதியின் குரல்!

படம்
நேர்காணல் இரானிய குர்தீஸ் எழுத்தாளர்  பெருஸ் பூசானி ஆஸ்திரேலியாவிலுள்ள மானுஸ் முகாமில் வசித்து வருகிறார் பெருஸ் பூசானி. அங்குள்ள வாழ்க்கையை தொடர்ச்சியாக உலகின் பார்வைக்கு கொண்டு வருவதில் இவர் முக்கியமானவர். பெரும்பாலான அகதிகளை நாடுகள் குற்றவாளிகள் போலவேதான் நடத்துகின்றன. நீங்கள் என்ன அனுபவங்களைப் பெற்றுள்ளீர்கள்.  சிறையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கென அங்கு சில உரிமைகள் உண்டு. மேலும் எத்தனை நாட்கள் அங்கிருப்பீர்கள் என்பதற்கு ஒரு கணக்கு உண்டு. அகதிகள் முகாமில் அதற்கான வாய்ப்பு இல்லை. போன் பேசக்கூட அனுமதி பெறவேண்டும். இங்கு பல்வேறு உரிமைகள் உங்களுக்கு அளிக்கப்படாது. நேரம் இங்கு செல்வதே கடினம். தீவிரமான உளவியல் பாதிப்பை நீங்கள் எதிர்கொள்வதாக இருக்கும். எப்படி நிலைமையை சமாளிக்கிறீர்கள்? இங்கு நடக்கும் அநீதிகளுக்கு இரண்டு வகையில் பதிலளிக்கலாம். ஒன்று போராட்டம். இரண்டு அதனை எழுத்தாக்குவது. இங்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளோம். இது பொதுவான முறைதான். உடலை ஆயுதமாக்கி போராடுவது புதிதா என்ன? 2015 முதல் 2017 வரையில் நாங்கள் அதிகாரிகளால் நா