இடுகைகள்

அம்மன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன் குடும்பத்தை நிர்மூலமாக்கியவர்கள் பஞ்ச பூதங்கள் மூலம் கொல்லும் நாயகனின் கதை! - சாட்சியம் - ஸ்ரீவாஸ்

படம்
  சாட்சியம் தெலுங்கு  பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ், வெண்ணிலா கிஷோர் தலைப்பில் சொன்னதுதான். கிராமத்தில் சகல சௌக்கியங்களோடு வாழும் சரத் குமார். பசுக்களை அடித்து பிடித்து வாங்கி கறிக்கடைக்கு விற்கும் ஜெகதி பாபு சகோதரர்களை பகைத்துக்கொள்கிறார். பசு ஒன்றையும், அதன் கன்றுக்குட்டியையும் காப்பாற்றுகிறார். இதன் விளைவாக முழு குடும்பத்தையும் ஜெகதி பாபு வெட்டிக்கொல்கிறார். இதில் பிழைப்பது ஒரே ஒரு குழந்தை மட்டுமே. அதனை கன்றுக்குட்டி ஒன்று காப்பாற்றுகிறது. அந்த குழந்தை சிவன் கோவிலில் கிடக்கிறது. அதை குழந்தையில்லாத தம்பதியினர் எடுத்து வளர்க்கிறார்கள்.  பிறகு கதை அமெரிக்காவில் நடைபெறுகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிதாகிறது அதுதான் நாயகன் பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ்.  ஜெகதி பாபு சகோதரர்களின் குற்றங்கள் நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனை எதிர்ப்பவராக உள்ளவர் ஊரில் ஒருவர்தான். அவர்தான் ராவ் ரமேஷ். அவரையும் லாரி மூலம் மோதி கொல்வதற்கான முயற்சி நடைபெறுகிறது. அதிலும் அவர் பிழைக்கிறார். அவரின் மகள் தான் நாயகி. நாயகியை சந்திப்பதற்காக நாயகன் கிராமத்திற்கு வர வில்லன்களை சந்திக்கிறார். அப்போதும் கூட அவரது