இடுகைகள்

தாயம்மாள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவீன தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டான முதியோர்!

படம்
தாயம்மாள், திருப்பூர் சமூகத்திற்கு சேதி சொல்லும் முதியோர்! சென்னையைச் சேர்ந்த ஜனார்த்தனன் – ஜலஜா ஆகியோருக்கு எந்த பிரச்னையும் இல்லாத வாழ்க்கை. இருவருமே அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். காலையில் சூரிய உதயம், அஸ்தமனத்தை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். ஜனார்த்தனன் பென்சன் பணத்தோடு சேமிப்பும் அவர்களை காப்பாற்றி வந்தது. ஆனால் வயதுக்கான தள்ளாமை யாரை விட்டுவைக்கும்? தங்களின் மனதிருப்திக்காக வைபவ் சேவா ஜேஜே பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையைத் தொடங்கி முதியோர் இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தனர். இதனை இருவரும் தங்களது பணி மூப்புக்கு முன்பே தொடங்கி, நடத்தி வந்தனர். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஜனார்த்தனன் வலது கண் லுக்கோமாவால் பாதிக்கப்பட்டது. ஜலஜா, தவறி விழுந்து முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களால் முதியோர் இல்லத்தைப் பராமரிக்க முடியாமல் போனது. இதனால், முதியோர்களை திரும்ப அவர்களின் பிள்ளைகளிடமே ஒப்படைத்துவிட்டு நொறுங்கிய இதயத்தோடு நின்றனர். இன்றும் தங்களது அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர்க்கு பண உதவிகள் ச