இளைஞர்கள் அரசியலைப் புரிந்துகொள்ள உதவும் அமைப்பு! -YPP
தமிழ்நாட்டில் அரசியல் என்பது அனைத்து இடங்களிலும் உண்டு. தேவையில்லாத கலவரங்களை தடுக்க சில டீக்கடைகளில் அரசியல் பேசக்கூடாது என கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்று நிறைய இடங்களில் இளைஞர்கள் அரசியல் பார்வை கொண்ட இயக்கங்களை கட்டி எழுப்பி வருகிறார்கள். அப்படி ஒன்றுதான் யங் பீப்பிள்ஸ் ஃபார் பாலிடிக்ஸ் . அண்மையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மேற்சொன்ன இளைஞர் இயக்கத்தின் மாநாடு நடைபெற்றது. நூலகத்தில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை. ஒய்பிபி இயக்கம், பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகளை வழங்க கௌரவித்தது. விருது பெற்றவர்களும் இந்த வகையில் முதல் முறையாக விருதுகளை பெறுவதலால் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளில் இருந்து வந்தவர்களை விருதுகளைப் பெற்றனர். ஒய்பிபி இயக்கம், இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட இடத்திலிருந்து தலைவர்களாக உருவானவர்களை கௌரவிக்கின்றனர். ஒய்பிபி இயக்கத்தின் நிறுவனர், ராதிகா கணேஷ். எங்களது இயக்க உறுப்பினர்கள் அனைவருமே பன்முகத்தன்மை கொண்ட இனக்குழுவிலிருந்து வந்தவர்கள்தான். நிறைய விஷயங்களை முதல்முறை என்று கூறுவதற்கான வ