இடுகைகள்

வழிகாட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறிய விஷயங்களைச் செய்வதால் மாறும் வாழ்க்கை!

படம்
      12 டினி திங்க்ஸ் ஹெய்டி பார் சுயமுன்னேற்ற நூல் எழுத்தாளர் ஹெய்டி, இந்த நூலில் பனிரெண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு அதன் வழியாக மனித வாழ்க்கையில் ஏற்படும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். வெளிப்படையாக சொன்னால், இவரது கட்டுரைகளை படித்து புரிந்துகொள்வதை விட நூல் நிறைவுற்றபிறகு, பின்புறமாக கொடுத்துள்ள சில அறிவுறுத்தல்களை படித்தாலே நமக்கு நிறைவான தெளிவு கிடைத்துவிடும். பனிரெண்டு விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா, இதில் இடம், வேலை, ஆன்மிகத்தன்மை, கிரியேட்டிவிட்டி, உணவு, நாகரிகம், இயற்கை, இனக்குழு, வீடு, உணர்வு, கற்றல், தகவல்தொடர்பு என பல அம்சங்கள் கூறப்பட்டு, அவை விளக்கப்படுகின்றன. இந்த விஷயங்களைப் படித்துமுடித்தபிறகு சில கேள்விகளை நூலாசிரியர் கேட்கிறார். அதற்கான பதில்களை வாசகர்கள் வழங்கவேண்டும். அதன் வழியாக தெளிவு கிடைக்கலாம். இதில் கூறப்படும் விஷயங்கள் முழுக்க புதுமையானவை அல்ல. ஆனால், நாம் மறந்துபோனவையாக அதிகம் உள்ளது. உணவை கவனம் கொடுத்து மணம், சுவையை அனுபவித்து உண்பது, உடற்பயிற்சி செய்வது, சில நாட்கள் எதையும் செய்யாமல் அமைதியாக சிந்தனைகளை குறைத்து இருப்பது, இ...

வாழ்க்கை, தொழில் என இரண்டிலும் வாகை சூடுவதற்கான வழிகாட்டி நூல்!

படம்
  ரியோ ஒகாவா நூல் வாகை சூடும் சிந்தனை ரியோ ஒகாவா ஜெய்ஹோ தமிழாக்கம் – மிஸ்டிக் ரைட் நிறுவனம்     நான் நன்றாக இருக்கிறேன் என்ற புத்தகம் ரியோ எழுதியதுதான். பக்கம் 85. நூல் சற்று சிறியது. கருத்துக்களும் அதனால் சிறியதோ என்று தோன்றும்படி நூலை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த நூலோடு ஒப்பிடும்போது வாகை சூடும் சிந்தனை சொல்லும் கருத்துகள் அடிப்படையில் சற்று மேம்பட்ட சுய முன்னேற்ற நூல் எனலாம், ஹேப்பி சயின்ஸ் ஆன்மிக மத தலைவர் ஆற்றிய நான்கு உரைகளை தொகுத்து ‘வாகை சூடும் சிந்தனை’ என நூலாக்கியிருக்கிறார்கள். இப்படி நூலாக்குவதில் உள்ள நுட்பம் பற்றியும் ரியோ, பேசியுள்ளார். ஆனால், அது எந்தளவு சரி என்பதை வாசகர்கள்தான் படித்து புரிந்துகொள்ளவேண்டும். பானாசோனிக் நிறுவனத்தின் நிர்வாக முறை. குழாய் தண்ணீர் தத்துவத்தை எப்படி கடைபிடித்து நிறுவனம் மின்சாதனங்களை விற்றது என்பது படிக்க நன்றாக இருந்தது. இன்று அந்த தத்துவத்திற்கு என்ன மதிப்பு என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுத்திய காலம் முக்கியமானது. குறிப்பிட்ட பதவி, அதிகாரம் கிடைத்தபிறகு நாம் எப்படி செயல...