இடுகைகள்

மைக்கேல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தந்தையும் மகனும் சேர்ந்து கொலைகார இணையராக மாறிய வினோதம்!

படம்
  ஜோசப், மைக்கேல் அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்தவர். 1936இல் பிறந்தார். சிறுவயதில் ஆஸ்திரிய அகதிகளான ஸ்டீபன், அன்னா கலிங்கர் ஆகியோருக்கு   தத்து கொடுக்கப்பட்டார். பெற்றோரால் கடுமையாக அடித்து துவைக்கப்பட்ட பால்யத்தைக் கொண்டவர். 1944ஆம் ஆண்டுமூத்த சிறுவர்களால் கத்தி முனையில் வல்லுறவு செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் விளைவாக கையில் கத்தி வைத்துக்கொண்டு சுய இன்பம் அனுபவித்து கைத்தொழில் மன்னனாக மாறினார். பதினேழு வயதில் திருமணம் செய்துகொண்டார். இந்த உறவுமூலம் பத்து குழந்தைகள் பிறந்தன.பிறகு, ஜோசப்பின் மனைவி இன்னொருவரோடு இணைந்து வாழச் சென்றுவிட்டார். இதற்குப் பிறகுதான் ஜோசப்பிற்கு விபத்து ஏற்பட்டது. அதில், தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு சோதனை செய்து பார்த்து, சைக்கலாஜிகல் நெர்வஸ்   டிசார்டர் என்ற பிரச்னையைக் கண்டுபிடித்தனர்.   தனது பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும் அடுத்த திருமணம் பற்றி கவலைப்பட்டவர், திருமணத்தை செய்வோம் ஆண்டவன் அனுகிரகிப்பான் என மணம் செய்துகொண்டார். தான் வாழ்ந்த வீட்டையோ என்ன காரணத்தாலோ தீ வைத்தார். அதற்கு காப்பீடாக 1,600 டாலர்கள் கிடைத்தது.மனநல பிரச்னைகளால்,

கொலைக்கரத்தால் தடுமாறும் ஜானி நீரோ, ஸ்டெல்லா - முத்து காமிக்ஸ்

படம்
  கொலைக்கரம்  முத்து காமிக்ஸ்  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசப்பற்றுக் கதை. கதையில், பெரிய நினைத்து வியப்படையும் சண்டைக்காட்சிகள் ஏதும் கிடையாது. கதையில் ஆச்சரியப்படுத்துவது ஜானி நீரோ அல்லது ஸ்டெல்லா அல்ல. வில்லனான மைக்கேல்தான். அவரின் திறமைதான் கொலைக்கரம் என தலைப்பு வரக்காரணம். இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றுபவரின் கைகள் எஃகு போன்றவை. ஆயுதமே இல்லாமல் ஜெர்மன் படை வீர ர்களை கழுத்தை உடைத்து புகழ்பெற்றவர். நாட்டிற்காக இப்படி உழைத்தாலும் அவரது குடும்பத்தை அயர்லாந்து நாட்டிற்கு சுதந்திரம் கேட்டதற்காக இங்கிலாந்து அரசு சுட்டுக்கொல்கிறது. அவர்களின் செயல்பாடுகளை தேசதுரோகி என்ற ஒற்றை வார்த்தையில் பேசி முற்றுப்புள்ளி வைக்கிறது., இதனால் மைக்கேல் விரக்தி கொள்வதோடு, இங்கிலாந்தை பழிவாங்க முடிவு செய்கிறார். இதற்காக தக்க சமயத்திற்காக காத்திருக்கிறார். அப்படி ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கிறது. அறிவியல் விஞ்ஞானி ஒருவர் மேக உடைப்பு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் கருவி ஒன்றை உரு வாக்கியிருக்கிறார். இந்த கருவி ஒரு நகரில் கூடும் அதிக மேகங்களை, மேக கூட்டங்களை கலைக்கும் திறன் கொண்டது. இதனால் நகரம