வாசனை முகரும் திறன் - சில சுவாரசியங்கள்
கோவிட் வந்தபிறகு ஒருவருக்கு வாசனை உணரும் திறன் போய்விட்டாலே அருகிலிருப்பவர் உடனே அலுவலகத்தில் மனிதவளத்துறை மேலாளருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு மாநகராட்சி வார் ரூமுக்கு போன் செய்து சொல்லிவிடுகிறார்.அந்தளவு மரணபயத்தை கோவிட் -19 ஏற்படுத்திவிட்டது. யாராவது இருமுறை தும்மினாலோ, இருமினாலோ கூட அவர் பாக்கெட்டில் கையைவிட்டு ஸ்ரீ ராம் மெடிக்கலில் போய் டாபர் ஹனிடசை வாங்கி வந்து கொடுத்து கூட காப்பாற்றிவிடுவார்கள். அந்தளவு பாழும் பயம் மனதை பாடாகப் படுத்துகிறது. எதுவாக இருந்தாலும் சரி, நாம் இங்கு வாசிக்கப்போவது வாசனை பற்றி மட்டும்தான். கோவிட் -19 வந்தவர்களை கண்டுபிடிக்க காய்ச்சலை சோதிப்பது கூட ஒருகட்டத்தில் குறைந்துபோய் வாசனை சோதனைகளை செய்திருக்கின்றனர். அதுவும் அறிகுறிகளில் ஒன்றுதானே என்பதுதான் காரணம். நோய்த்தாக்கம் குறைந்தபிறகு வாசனைகளை முகரும் திறன் மெல்ல இயல்புக்கு மீண்டு வந்திருக்கிறது. வயதாகும்போது இயல்பாகவே வாசனைகளை முகரும், இனம் கண்டுபிடிப்பது குறைந்துவிடும். செல்கள் அழியத் தொடங்குகிறது அல்லவா? அதனால்தான். வாசனை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பது குறைந்து வந்தால் அதனால என்னப்பா என ச