திறந்தவெளி சிறைகள் ஏன் தேவை?
மனிதர்களை சுதந்திர பறவையாக்கும் திறந்தவெளிசிறைகள்! ஆங்கிலேயர் காலகட்ட வெளிச்சம் வராத, துண்டுதுக்கடா இடத்தில் மூட்டைப்பூச்சிகளுடன் வாழ்ந்த பரிதாபம் இனி கைதிகளுக்கு கிடையாது. கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றம், பெருமளவு திறந்தவெளி சிறைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய அரசியலைப்பு சட்டப்படி, தண்டனைக் குற்றவாளியை சிறைவைப்பது, தவறை உணர்ந்து திருந்தி சமூகத்திற்கு திரும்பி வரச்செய்வதே தவிர, தவறுசெய்தவரை ஒழித்துக்கட்டுவதல்ல. காலனியாதிக்க சட்டங்களில் மரணதண்டனை இன்னும் இந்தியாவில் இருந்தாலும் அவை ஒருவருக்கு விதிக்கப்படுவது அரிதானவையே. திறந்தவெளி சிறைச்சாலை என்ற கான்செப்ட் நமக்கு புத்தம் புதிதான ஒன்றல்ல. 1957 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான Do Aankhen Barah Haath. எனும் திரைப்படத்திலேயே திறந்தவெளி சிறை கருத்து பெரும் புகழ்பெற்றது. கௌரவ் அகர்வால் என்ற வழக்குரைஞரின் பொதுநலவழக்கில்தான் திறந்தவெளி சிறை குறித்த அறிவுறுத்தலை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது 63 திறந்தவெளி சிறைகள் செயல்பட்டு வருகின்றன. எதற்