இஸ்லாமியர்கள் மீது இந்திய அரசு எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை - முக்தார் அப்பாஸ் நக்வி
முக்தார் அப்பாஸ் நக்வி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அரசு பல்வேறு மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வற்புறுத்தி வருகிறது. இதற்கு அவர்களின் எதிர்வினை என்ன? ரம்ஜான் விழா, இஃப்தார் விருந்து ஆகியவற்றை முடிந்தவரை கூட்டமின்றி கொண்டாட முஸ்லீம் தலைவர்களிடம் வற்புறுத்தியுள்ளேன். வக்பு வாரியம், பல்வேறு மத தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோரோடு உரையாடி, அரசு வகுத்துள்ள விதிமுறைகள்படி செயல்பட வலியுறுத்தி விழிப்புணர்வு செய்து வருகிறோம். அரசு விதிமுறைகளை கடைபிடிக்காதபோது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கு, சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை நான் பல்வேறு மத தலைவர்களிடம் பேசியுள்ளேன். தப்லிக் ஜமாத் மாநாடு பற்றி உங்களுடைய கட்சியில் உள்ளவர்களே வெறுப்புவாத செய்திகளை பரப்புகிறார்களே? கட்சியில் உள்ளவர்கள் சமூக இசைவை, ஒற்றுமையை கலைக்கும் விதமாக செயல்பட்டால் அவர்கள் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இதில் எந்த சமரசமும் இல்லை. தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் நிலைமையை புரிந்துகொள்ளாமல் செய்த செயலால் நோய் பாதிப்பு தீவிரமாகியுள்ளது. இதற்கான