பன்மை கலாசாரத்தை விரும்பும் இந்தியன் நான்! - சத்யா நாதெள்ளா
infinityleap சத்யா நாதெள்ளா , மைக்ரோசாப்ட் இயக்குநர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையைத் தாண்டி , புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாதித்த சாதனைகள் அதிகம் . மைக்ரோசாப்டின் குறைகளை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு அந்நிறுவனப் பிரிவுகளை ஒருங்கிணைத்து நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சத்யா . அவரிடம் டெக் துறை , வளர்ச்சி , இந்தியா பற்றி பேசினோம் . செயற்கை நுண்ணறிவு பற்றி நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள் . அதாவது , அத்துறைக்கான விதிகளை வகுக்குமாறு பேசியிருந்தீர்கள் . டெக் நிறுவனங்கள் பயனர்களின் பிரைவசி விஷயங்களை சரியாக கடைபிடிக்கின்றனவா ? தொழில்நுட்பம் என்பது ஒரேமாதிரிதான் . ஆனால் அதனை கடைப்பிடிக்க சில விதிமுறைகள் தேவைப்படுகின்றன . உணவுபாதுகாப்புத் துறைக்கு விதிகள் இருப்பது போலவே , விமானத்துறைக்கும் விதிகள் உண்டு . அதேபோல செயற்கை நுண்ணறிவு துறைக்கும் தனியான விதிகள் இயற்றப்படவேண்டும் . பயனரின் அந்தரங்கம் என்பது அவரின் உரிமை . அது பாதுகாக்கப்படவேண்டும் . நாங்கள் ஐரோப்பாவின் விதிமுறைகளை உலகம் முழுக்க பின்பற்றுகிறோம் . கடு