இடுகைகள்

பக்கவிளைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்பிடிப்பதை கைவிடுவது எப்படி?

படம்
  புகைப் பிடிக்காதீர்! மேலே சொன்னது போல அரசு அல்லது தனிநபர் என யார் சொன்னாலும் சங்கடம்தான். ஆனால் புகைப்பிடிப்பது பிரச்னை என அதை பின்பற்றுபவர் நினைத்து கைவிட்டால் தான் உண்டு. இப்போது இதுதொடர்பான விஷயங்களைப் பார்ப்போம்.  இந்தியாவில் புகைப்பிடிப்பதை கைவிட நினைப்போரின் அளவு 55 சதவீதம். அதில், சரியான ஆதரவு கிடைக்காமல் புகைப்பிடிப்பதை பலரும் கைவிட முடியாமல் தவிக்கின்றனர். 4 சதவீதம் பேர் தான் மனவலிமையால் புகைப்பிடிப்பதை கைவிட்டு அதன் பக்கவிளைவுகளை எதிர்கொண்டு வெல்கின்றனர்.  புகையிலை தொடர்பாக ஏற்படும் நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 27.5 பில்லியன் டாலர்கள்  புகையிலை பயன்படுத்தி உயிரிழப்போரின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும். ஏழு சதவீதம் என்று கூறலாம்.  பெருந்தொற்று காலத்தில் மூன்றில் இருவர் அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை கைவிட முயன்றிருக்கின்றனர். இத்தகவலை ஸ்மோக் ஃப்ரீ வேர்ல்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.  அறிவியல் என்ன சொல்கிறது? நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, கௌன்சிலிங், வெரெனிகிலின், பூபுரோப்லான்  என இரு மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி புகைப்பிடிப்பவர்களை காப்பாற்ற முயல்கிற

அலர்ஜிக்கான மருந்துகளும், இயற்கை மருத்துவ முறையும்!

படம்
  மாஸ்ட் செல் ஸ்டேபிலைசர்ஸ்  உடலில் வீக்கத்தை குறைத்து ஹிஸ்டாமைனின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். மூக்கில் அதிக சளி உருவாவதை தடுக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. குரோமோலின், நெடோகுரோமில், லோடோஸாமினா ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மருந்துகளாகும். இவற்றை மூக்கில் இன்ஹேலர் வழியாக உறிஞ்சலாம். அல்லது கண்ணில் மருந்தாக பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை இரண்டு வாரம் பயன்படுத்தினால் போதும். பயன்களை பார்க்க முடியும். தூக்கம், அரிப்பு, கண்களில் கண்ணீர் அதிகம் வருவது, எரிச்சல் ஆகியவை இந்த மருந்தை பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளாகும்.  ஆன்டிலியோகோட்ரைன்ஸ் இந்த மருந்து மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. இந்த மருந்து ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களின் நுரையீரலில் உள்ள நீர்மத்தை குறைக்கிறது. இவை மூக்கில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.  புரோன்சோடிலேட்டர்ஸ் ஒருவருக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிற மருந்து இது. இதனை காப்பாற்றும் மருந்து என்று அழைக்கின்றனர். அறிகுறி தெரிந்தவுடனே

தடுப்பூசி பற்றிய தகவல்களை முறைப்படி மக்களுக்கு தெரிவிப்பதே அரசின் கடமை! - வைரஸ் ஆராய்ச்சியாளர் ஷாகித் தமீல்

படம்
              ஷாகீத் தமீல் நோய் தடுப்பியலாளர் , அசோகா பல்கலைக்கழகம் எதற்காக தடுப்பூசியை தேசவிரோதம் என்று கூறுகிறார்கள் ? நான் தேசவிரோதி என்று கூறப்பட்டு வருபவர்களில் ஒருவன் . நான் இதற்கு என்ன பதில் சொல்லுவது ? எங்களை தேசவிரோதிகள் என்று கூறுபவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல தகுதியானவர்கள் . நாங்கள் சில எச்சரிக்கைகளை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் . நாங்கள் நீங்கள் இதனை கருத்தில் கொள்ளவில்லையென்றால் அதனால் ஆபத்துதான் நேரும் . நோய்தடுப்பியலாளராக பறவைக்காய்ச்சலை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? பறவைக்காய்ச்சல் எப்போதும் பனிக்காலத்தில்தான் ஏற்படும் . 2006 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 25 முறை பறவைக்காய்ச்சல் 15 மாநிலங்களைத் தாக்கியது . அது வானிலிருந்து விழவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் . கோவிட் காலம் என்பதால் மக்கள் பதற்றமாக இருக்கிறார்கள் . பறவைக்காய்ச்சல் என்பது மிகவும் அரிதாகவே மனிதர்களைத் தாக்குகிறது . இந்த பாதிப்பை நம்மால் தீர்க்க முடியும் . இதற்கான மருந்துகள் உள்ளன . தடுப்பூசியை இவ்வளவு வேகமாக கண்டுபிடிக்கவேண்டிய அவசியம்

இசட் டிரக்ஸ் - தூக்கமாத்திரைகளை ஒழுங்குமுறை செய்வதன் அவசியம் என்ன?

படம்
          இசட் டிரக்ஸ் தூக்கமின்மைக்கு மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை இசட் டிரக்ஸ் என்று அழைக்கின்றனர் . ஸோல்பைடம் , ஸோபிகுளோன் , ஸால்ப்ளோன் ஆகிய மருந்துகள் ஆம்பியன் , இன்டர்மெஸோ , சோனாடா என்ற பெயரில் விற்கப்படுகின்றன . 1980 களில் இம்மருந்துகள் புகழ்பெறத்தொடங்கின . பென்ஸோடியாஸ்பைன்ஸ் போன்ற வகையில் இசட் மாத்திரைகள் வேலை செய்கின்றன . ஒருவகையில் உடலில் வேகமாக செயல்படும் திறன் கொண்டவை . தினசரி களைப்பை குறைத்து உற்சாகம் அளிக்கிறது . ஆனால் இம்மாத்திரை அடிமைத்தனம் ஏற்படுத்துவதில் குறைவான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர் . கோடைன் , பென்ஸோடயாஸ்பைன்ஸ் ஆகிய மருந்துகளைப் போலவே இவையும் பயன்படுத்துவர்களை மெல்ல அடிமையாக்கும் குணம் கொண்டவை . இந்த மருந்துகளை ஒருவர் குறைந்தகாலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் . அதாவது ஒருமாதம் என்ற கால அளவிற்கு . இன்சோம்னியா ஏற்படுவதற்கு மனநிலைக் கோளாறுகளான பிளவாளுமை , பிடிஎஸ்டி , மன அழுத்தம் ஆகியவையும் முக்கிய காரணம் . இம்மருந்துகளைப் பயன்படுத்தி பாதிப்பு ஏற்படுவது பற்றிய புரிதல் மருத்துவர்களுக்கு இல்லை என்கிறார் மருத்துவர்

ஷெட்யூல்டு டிரக் என்றால் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி ஷெட்யூல்டு டிரக் என்று சிவப்பு நிறத்தில் ஆயின்மென்டுகளில் பிரின்ட் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு என்ன பொருள்? ஷெட்யூல்டு டிரக் என்பதற்கு தமிழில் பட்டியலிடப்பட்ட மருந்துகள் என்று பெயர். இதிலுள்ள மருந்துகள் அடிமையாக்கும் தன்மை கொண்டவை, பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவை. தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளவை என அடையாளம் காணப்பட்டு அரசு மூலம் இவை பட்டியலிடப்பட்ட மருந்துகள் என கூறப்படுகின்றன. மருந்துகள் என்றால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் சேர்மானம் என்று பொருள் கொள்ளுங்கள். அதுவே சரியாக இருக்கும். கீழே கூறுவது அமெரிக்க அரசு விதிமுறைகளின் படி வரும் பட்டியலிடப்பட்ட மருந்துகள் 1 உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகள் இவை. இவற்றை நடப்பு காலத்தில் முறையாக மருத்துவரின் பரிந்துரை இன்றி பயன்படுத்தக்கூடாது என அரசு கூறியுள்ளது. எ.கா - ஹெராயின்,  பியோட்டே , மெத்திலீன் டையாக்சி பீட்டமைன். பட்டியலிடப்பட்ட மருந்துகள் 2 இம்மருந்துகளும் உளவியல் சார்ந்த உடல் சார்ந்த அடிமைத்தனத்தை பாதிப்பை ஏற்படுத்துபவையே. ஆனால் பட்டியல்

மனிதர்களை சோதிப்பதில் ஏன் தடைகள்?

படம்
மேரிலாண்டில் ஆராய்ச்சியாளர் சோதிக்கிறார் அறிவியல் சோதனைகளின் எதிர்காலம்? புற்றுநோய்க்கு எதிராக நடைபெற்ற ஐந்து சோதனைகள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதன் பொருள், ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வில் விரக்தி அடைந்துவிட்டார்கள் என்பதல்ல. மருந்துகளைச் சோதித்துப் பார்க்க நோயாளிகள் முன்வரவில்லை. 1975 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பிழைக்க வாய்ப்பு குறைவு. இன்று அதன் சதவீதம் 36 மாக உயர்ந்துள்ளது. ஆனால் புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தடுமாறி வருகிறார்கள். காரணம், மனிதர்களின் உடல்களில் சோதிக்க சரியான ஏற்பாடுகளை இதுவரையிலும் செய்யவில்லை. இதனால் ஆராய்ச்சிகளை தொடங்கி முன்னேறினாலும் அதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடிவதில்லை. காரணம், விலங்குகளைச் சோதித்து மனிதர்களை சோதிக்கும் நிலையில் நோயாளிகள் ஆய்வுகளுக்குக் கிடைக்கவில்லை. பின் எப்படி மருந்துகள் சந்தையில் கிடைக்கும்? அரசின் விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. எனவே லெவைன் புற்றுநோய் கழகம், புற்றுநோய் ஆராய்ச்சி நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் அமெரிக்காவின் ஃஎப்டிஏவை அணுகி, விதிகளை தளர்த்த கோரியுள்ளன. இந்த ஆண்டு பைடன்

குடிநீரில் மருந்து கலக்கிறார்களா?

படம்
குடிநீரில் மருந்து கலக்கிறார்களா? ஆம். அமெரிக்காவில் நடந்த புவியியல் தொடர்பான ஆய்வில் அங்கு வரும் குழாய் நீரில் 80 சதவீதம் மருந்துகளின் எச்சங்கள் இருப்பது தெரிய வந்தது. இதில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, மனச்சோர்வைக் குறைக்கும் மருந்துகள் உள்ளடங்கும். இது அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் உண்டு. மருத்துவமனைகளிலிருந்து வரும் கழிவுகள், அல்லது கழிவறைகளில் தூக்கி எறியப்படும் மாத்திரைகள் நீர் போக்குவரத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு இது. முதலில் இப்படி கலந்து வருவதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குறைவாகத்தானே இருக்கிறது என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் ஆய்வுகள் சொன்ன உண்மை, இவை அதிக அடர்த்தியில் நீரில் கலந்து வருகிறது என்பதே. மனச்சோர்வை போக்கும் மருந்துகள் நம் மூளையில்  இயக்கத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தில் ந திப்படுகை அருகே வாழும் மக்களை சோதித்தபோது, அவர்களின் உடலில் கருத்தடை மாத்திரைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தது. இது அவர்களின் ஹார்மோன் சுரப்பை மட்டப்படுத்துகிறது. நன்றி: பிபிசி